Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naathasvara Osaiyile
Naathasvara Osaiyile
Naathasvara Osaiyile
Ebook92 pages32 minutes

Naathasvara Osaiyile

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466947
Naathasvara Osaiyile

Read more from Devibala

Related to Naathasvara Osaiyile

Related ebooks

Reviews for Naathasvara Osaiyile

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naathasvara Osaiyile - Devibala

    1

    காலையில் மயங்கி விழுந்து பெரும் பரபரப்பை உண்டாக்கி விட்டாள் தாரா!

    வீட்டில் அம்மா பயந்து விட்டாள்.

    அம்மாவிற்கு ரத்த அழுத்தம் உண்டு என்பதால் அதிகாலை வேளையில் தலைசுற்றல் அதிகமாக இருக்கும். படுக்கையை விட்டு எழுந்திருக்கமாட்டாள்.

    தாராதான் அலாரம் வைத்து எழுந்து வீட்டு வேலைகளைத் தொடங்குவாள். வேகமாக, தரமாக வேலை செய்பவள்!

    ஏழு மணிக்குள் டிபன், சாப்பாடு எல்லாம் தயாராகிவிடும். இன்று அம்மா ஆறரை மணி சுமாருக்கு மெல்ல எழுந்து பாத்ரூமுக்கு போகும் போது தாரா தாளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது!

    திரும்பிவரும் போது அம்மா சமையல்கட்டுக்குள் நுழைந்தாள். நான் பல் தேச்சிட்டேன், காபி குடு தாரா

    பதிலே இல்லை!

    சரி தருவாள் என்று அம்மா உட்கார்த்து விட்டாள்.

    தாரா பாலை இறக்கி டிகாஷனை கலந்து சர்க்கரை சேர்த்தாள்.

    அதை டம்ளரில் வார்த்து டபரா காய வைத்து எடுத்து கொண்டுவரும் போதுதான் தாரா சடாரென மடிந்து அப்படியே மயங்கி விழுந்தாள்.

    காபிடம்ளர் சிதறி, சூடான காபி சமையல்கட்டு முழுக்கப் பரவியது!

    அம்மா அலறி விட்டாள்.

    தாரா மயக்கம் போட்டு விட்டாள் என்று தெரிந்ததும், அம்மா உள்ளே ஓடினாள்.

    ரேவதி எழுந்திருடி! ரேவதி!

    உலுக்கினாள்.

    தூங்க விடமாட்டியாம்மா?

    தாரா மயக்கம் போட்டு விழுந்துட்டாடீ!

    எ... என்னது?

    ரேவதி பதட்டமாக எழுந்து சமையல்கட்டுக்கு ஓடி வந்தாள். முகத்தில் நீர் தெளித்தாள்..

    தெளிவதாகத் தெரியவில்லை.

    அம்மா! நீ பார்த்துக்கம்மா, நான் போய் நம்ம தெருக்கோடி 24 மணி நேர க்ளினிக் டாக்டரைக் கூட்டிட்டு வர்றேன்! ரேவதி ஓடினாள்.

    பத்தே நிமிடங்களில் டாக்டரை கையோடு இழுத்துக் கொண்டு வந்து விட்டாள்.

    பழகின டாக்டர். குடும்பம் பற்றி தெரியும்!

    டாக்டர் பரிசோதித்தார். பல்ஸை பார்த்தார். அதற்குள் சந்திரா எழுந்து வந்தாள். தாராவுக்கும், ரேவதிக்கும் மத்தியில் பிறந்தவள் சந்திரா.

    சமீபத்தில் பிரசவமாகி (முதல் குழந்தை) மூன்றாம் மாதம் ஆகிவிட்டது. அடுத்த வாரம் கணவன் வீட்டுக்கு போகப் போகிறாள்.

    என்னம்மா ஆச்சு?

    தாரா மயங்கி விழுந்துட்டா!

    டாக்டர் நிமிர்ந்தார்.

    சாதாரண மயக்கம்தான். ரேவதி நீ என் கூட வா! மாத்திரைகள் தர்றேன்.

    எப்ப டாக்டர் தெளியும்?

    இன்னும் பத்து நிமிஷத்துல தெளியும்மா! பயப்பட எதுவுமில்லை!

    டாக்டருடன் ரேவதி நடந்தாள்.

    குழந்தை தூளியில் அழ, சந்திரா அதை கவனிக்க ஓடினாள். அம்மா மட்டும் தாராவின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

    ரேவதி டாக்டருடன் வாசலில் இறங்கி நடந்தாள்.

    கொஞ்ச தூரம் வந்ததும் டாக்டர் நின்றார்.

    ரேவதி, ஒரு நிமிஷம்.

    என்ன டாக்டர்?

    இது சாதாரண மயக்கமில்லை

    பின்ன?

    உங்கக்கா தாரா கர்ப்பமா இருக்கா!

    டாக்டர்! ரேவதி அலறிவிட்டாள்.

    உன்னால தாங்க முடியலை இல்லையா? அப்ப உங்கம்மாவுக்கு எப்படி இருக்கும்? இதை வீட்ல வச்சுச் சொல்லி, ஒரு பெரிய கொந்தளிப்பை உண்டாக்க வேண்டாம்னு தான் உங்கிட்ட சொன்னேன்! நீ பக்குவமா சொல்லிக்கோ ரேவதி

    அவர் போய் விட்டார்.

    ரேவதி நிலைகுலைந்து நின்றாள்.

    ‘அக்கா கர்ப்பமா இருக்காளா?’

    ‘கடவுளே! இது எப்படி? யாரால் இது நேர்ந்தது?’

    ‘சமையல்கட்டை விட்டு வெளில வர மாட்டாளே!’

    அவர் எழுதித் தந்த மருந்துகளை வாங்கிக்கெண்டு ரேவதி உள்ளே நுழைந்தாள்.

    தாராவுக்கு மயக்கம் தெளிந்திருந்தது.

    ரேவதி! நீ ஆபீசுக்கு புறப்படு! நேரமாகலையா?

    ம்! நான் குளிச்சுட்டு வர்றேன்.

    ரேவதி பாத்ரூமுக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கெண்டாள்.

    ‘கடவுளே! இதை நான் மறைக்கவும் முடியாது, வெளியே சொல்லவும் வழியில்லை!’

    ‘முதல்ல தாராவைக் கூப்பிட்டுக் கேட்கலாம்! அப்புறமா முடிவுக்கு ‘வரலாம்!’

    ‘இப்ப இந்தப் பரபரப்பில் - தனியா அவகிட்டப் பேச முடியாது. அப்புறம் பார்த்துக்கலாம்"

    ரேவதி தயாராகி புறப்பட்டு விட்டாள்.

    ரேவதி, குழந்தைக்கு பேபி பவுடர் வேணும்!

    சரி என்று சந்திராவிடம் தலையாட்டி விட்டு வாசலில் இறங்கினாள்.

    பைக் வந்து நின்றது.

    இளங்கோ இறங்கினான்.

    சந்திராவின் கணவன்

    அத்தானுக்கு இது தெரிந்தால், குடும்ப கௌரவம் என்னாகும்?

    ரேவதி, லேட்டா போறியா?

    ஆமா அத்தான். இருப்பீங்களா?

    இல்லைம்மா. குழந்தையை பார்த்துட்டுப் போகலாம்னு, வந்தேன். ஒரு மணி நேரம்தான் இருப்பேன்

    நான் வர்றேன்‘ வேகமாக ரேவதி வெளியே வந்தாள். ரேவதிக்கு வயது இருபத்தி ரெண்டு. சந்திரா அவளை விட மூன்று வயது மூத்தவள். 25. தாராவுக்கு இருபத்தி ஏழு!

    தாராவுக்கு இருபது வயதில் கல்யாணம். அந்த சமயத்தில் அப்பா உயிரோடு இருந்தார். அவர் ஓரளவு சம்பாதித்து வைத்திருந்ததால், ரெண்டு பெண்ணுக்கு முழுக்க முழுக்க பணம் இருந்தது. கடைசிப் பொண்ணுக்கு கடன் வாங்கிக் கொள்ளலாம்

    Enjoying the preview?
    Page 1 of 1