Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உனக்காக வாழ நினைக்கிறேன்...
உனக்காக வாழ நினைக்கிறேன்...
உனக்காக வாழ நினைக்கிறேன்...
Ebook114 pages40 minutes

உனக்காக வாழ நினைக்கிறேன்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த தெரு ஓரளவு வசதியானவர்கள் வசிக்கும் இடம் என்பது அங்கு அமைந்திருக்கும் வீட்டை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடிந்தது. 

காம்பவுன்ட் சுவருடன் கூடிய தனி தனி வீடுகள். கவர்மென்ட் வேலை பார்த்து ரிடையர்ட் ஆன ராகவன், வேலையில் இருக்கும் போதே லோன் வாங்கி வீட்டை கட்டி விட்டார். சிறுக சிறுக உழைப்பில் சேமித்த சொத்து.

ராஜம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் அவர் நினைவில் வந்து போனது. 

"கடவுள் நம்மை ஆசிர்வாதம் பண்ணி இந்த பூமிக்கு அனுப்பி வச்சுருக்காரு. எந்த குறையும் இல்லாத வாழ்க்கை. நம்ப இனிய இல்லறத்துக்கு அடையாளமாக ஒரு மகன், ஒரு மகள் அவங்களும் நம் சொல் பேச்சு கேட்டு நல்ல பிள்ளைகளாக வளர்ந்து, படித்து, கல்யாணமாகி அவங்கவங்களுக்கு குடும்பமும் அமைஞ்சாச்சு. நம்ப வருமானத்தில் அழகா ஒரு வீட்டையும் கட்டிட்டோம். இனி பேரன், பேத்தியோடு எஞ்சிய காலத்தை வாழ்ந்துட்டு போக வேண்டியதுதான்."

ஆனால் அதற்கு ராஜம் கொடுத்து வைக்கவில்லை. மகன் ரகுவிற்கு நிதின் பிறந்து இரண்டு வயதாக இருக்கும்போது, காய்ச்சல் என்று படுத்தவள்தான், பேரன் முகத்தை பார்த்தபடி இவ்வுலகை விட்டு போய்விட்டாள். 

இப்போது ராகவன்தான் அவள் சொல்லியபடி பேரன், பேத்தி என தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

"விஜி, அப்பா எங்கே... வெளியே போயிருக்கிறாரா" கேட்டபடி ரூமிலிருந்து வெளியே வந்தான் ரகு. 

"மாமாவை இந்த நேரம் எங்கேயும் தேட வேண்டாம் பின் பக்கம் தோட்ட வேலை நடக்குது. பேத்தி ரோஜா பூ கேட்டாளாம். நர்சரியிலிருந்து ரோஜா செடி வாங்கிட்டு வந்து வச்சுட்டு இருக்காரு. கூடவே நதியாவும் தாத்தாவோடு நிற்கிறாரா" 

பின்பக்கம் வருகிறாள். 

"தாத்தா... இந்த செடி எப்ப பூ பூக்கும்" 

மூன்று வயது சிறுமி மழலை மாறாமல் கேட்க, 

"இன்னும் இரண்டு மாசத்தில் அழகா பூக்கும் பாரேன். நீ  தினமும் ஒன்னு உன் தலையில் வச்சுக்கலாம்" 

"தாத்தா எனக்கு சிகப்பு கலர்தான் வேனும்" 

"அதான் தங்கம்... சிகப்பு கலர்தான் வாங்கிட்டு வந்து வைக்கிறேன்" 

"தினமும் எனக்கு இரண்டு பூ வேனும் தாத்தா" 

"நதியா குட்டி, இரண்டு ஜடை போட்டு இரண்டு பக்கமும் வச்சுக்க போறா அப்படிதானே..." 

சிரித்தபடி கேட்க, 

"இல்லை தாத்தா எனக்கு ஒன்னு, பாட்டி படத்தில் வைக்க ஒன்னு... பாட்டிக்கும் என்னை மாதிரி பூ பிடிக்கும்னு நீங்க தானே சொல்லியிருக்கீங்க." 

"ஆமான்டா செல்லம்... என் சமர்த்து குட்டி" 

"அப்பா... தோட்ட வேலை பார்த்தது போதும். உள்ளே வாங்கப்பா... இன்னும் காபி கூட குடிக்கலை... நதியா ஸ்கூலுக்கு கிளம்பனும். நிதின் இன்னும் எழுந்திருக்கலை. உங்க செல்ல பேரனை போய் எழுப்புங்க" 

"அப்பா... சிகப்பு கலர் ரோஜா செடி வாங்கி நானும், தாத்தாவும் வச்சிருக்கோமே..."

சொன்ன மகளை தூக்கி கொண்டு உள்ளே போக, கையை கழுவிய ராகவனும் அவர்களை பின் தொடர்கிறார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 28, 2023
ISBN9798223878193
உனக்காக வாழ நினைக்கிறேன்...

Read more from Parimala Rajendran

Related to உனக்காக வாழ நினைக்கிறேன்...

Related ebooks

Related categories

Reviews for உனக்காக வாழ நினைக்கிறேன்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உனக்காக வாழ நினைக்கிறேன்... - Parimala Rajendran

    1

    அந்த தெரு ஓரளவு வசதியானவர்கள் வசிக்கும் இடம் என்பது அங்கு அமைந்திருக்கும் வீட்டை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடிந்தது.

    காம்பவுன்ட் சுவருடன் கூடிய தனி தனி வீடுகள். கவர்மென்ட் வேலை பார்த்து ரிடையர்ட் ஆன ராகவன், வேலையில் இருக்கும் போதே லோன் வாங்கி வீட்டை கட்டி விட்டார். சிறுக சிறுக உழைப்பில் சேமித்த சொத்து.

    ராஜம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் அவர் நினைவில் வந்து போனது.

    கடவுள் நம்மை ஆசிர்வாதம் பண்ணி இந்த பூமிக்கு அனுப்பி வச்சுருக்காரு. எந்த குறையும் இல்லாத வாழ்க்கை. நம்ப இனிய இல்லறத்துக்கு அடையாளமாக ஒரு மகன், ஒரு மகள் அவங்களும் நம் சொல் பேச்சு கேட்டு நல்ல பிள்ளைகளாக வளர்ந்து, படித்து, கல்யாணமாகி அவங்கவங்களுக்கு குடும்பமும் அமைஞ்சாச்சு. நம்ப வருமானத்தில் அழகா ஒரு வீட்டையும் கட்டிட்டோம். இனி பேரன், பேத்தியோடு எஞ்சிய காலத்தை வாழ்ந்துட்டு போக வேண்டியதுதான்.

    ஆனால் அதற்கு ராஜம் கொடுத்து வைக்கவில்லை. மகன் ரகுவிற்கு நிதின் பிறந்து இரண்டு வயதாக இருக்கும்போது, காய்ச்சல் என்று படுத்தவள்தான், பேரன் முகத்தை பார்த்தபடி இவ்வுலகை விட்டு போய்விட்டாள்.

    இப்போது ராகவன்தான் அவள் சொல்லியபடி பேரன், பேத்தி என தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

    விஜி, அப்பா எங்கே... வெளியே போயிருக்கிறாரா கேட்டபடி ரூமிலிருந்து வெளியே வந்தான் ரகு.

    மாமாவை இந்த நேரம் எங்கேயும் தேட வேண்டாம் பின் பக்கம் தோட்ட வேலை நடக்குது. பேத்தி ரோஜா பூ கேட்டாளாம். நர்சரியிலிருந்து ரோஜா செடி வாங்கிட்டு வந்து வச்சுட்டு இருக்காரு. கூடவே நதியாவும் தாத்தாவோடு நிற்கிறாரா

    பின்பக்கம் வருகிறாள்.

    தாத்தா... இந்த செடி எப்ப பூ பூக்கும்

    மூன்று வயது சிறுமி மழலை மாறாமல் கேட்க,

    இன்னும் இரண்டு மாசத்தில் அழகா பூக்கும் பாரேன். நீ தினமும் ஒன்னு உன் தலையில் வச்சுக்கலாம்

    தாத்தா எனக்கு சிகப்பு கலர்தான் வேனும்

    அதான் தங்கம்... சிகப்பு கலர்தான் வாங்கிட்டு வந்து வைக்கிறேன்

    தினமும் எனக்கு இரண்டு பூ வேனும் தாத்தா

    நதியா குட்டி, இரண்டு ஜடை போட்டு இரண்டு பக்கமும் வச்சுக்க போறா அப்படிதானே...

    சிரித்தபடி கேட்க,

    இல்லை தாத்தா எனக்கு ஒன்னு, பாட்டி படத்தில் வைக்க ஒன்னு... பாட்டிக்கும் என்னை மாதிரி பூ பிடிக்கும்னு நீங்க தானே சொல்லியிருக்கீங்க.

    ஆமான்டா செல்லம்... என் சமர்த்து குட்டி

    அப்பா... தோட்ட வேலை பார்த்தது போதும். உள்ளே வாங்கப்பா... இன்னும் காபி கூட குடிக்கலை... நதியா ஸ்கூலுக்கு கிளம்பனும். நிதின் இன்னும் எழுந்திருக்கலை. உங்க செல்ல பேரனை போய் எழுப்புங்க

    அப்பா... சிகப்பு கலர் ரோஜா செடி வாங்கி நானும், தாத்தாவும் வச்சிருக்கோமே...

    சொன்ன மகளை தூக்கி கொண்டு உள்ளே போக, கையை கழுவிய ராகவனும் அவர்களை பின் தொடர்கிறார்.

    "நிதின் கன்னா எழுந்திருடா ராஜா. மணியாச்சு இல்லையா இன்னும் கொஞ்ச நேரத்தில் ஸ்கூல் வேன் வந்துடும். ஈவினிங் நீ வந்ததும், தாத்தாவும் நீயும் பார்க்குக்கு போகலாம் சரியா"

    பேரனை எழுப்பி ஸ்கூலுக்கு தயார்படுத்துகிறார் ராகவன்.

    மாமா இல்லைன்னா, இவங்க இரண்டு பேரையும் என்னால சமாளிக்க முடியாதுங்க... பசங்க வேலை பாதியை மாமா பார்த்துக்கிறாங்க...

    சொன்னபடி கணவனுக்கு டிபன் வைக்கிறார் விஜி.

    ரகு, அமெரிக்கன் கம்பெனியில் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலை பார்க்கிறான்.

    ரகுவின் தங்கை ரேவதியின் கணவன் முரளி, டாக்டர் கோயமுத்தூரில் இரண்டு பிள்ளைகளுடன் சகல வசதியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    இரண்டு பேரையும் நல்ல முறையில் கரையேற்றியதை நினைத்து, கடவுளுக்கு தினமும் நன்றி சொல்வார் ராகவன்.

    ராகவனின் செந்த ஊர் தஞ்சாவூர் அடுத்து சிறுகம்பட்டி கிராமம். கிராமத்தில் நில, புலன்களுடன் மிராசுதாரராக வாழ்ந்தவர் ராகவனின் அப்பா.

    ஊரில் அவருக்கு மரியாதை அதிகம். ஊர் பஞ்சாயத்திலிருந்து வீட்டில் நடக்கும் பிரச்சனை வரை அனைத்திற்கும் தீர்வு சொல்பவர். எது என்றாலும் கிராமத்து ஜனங்கள் அவரை தேடி தான் வருவார்கள்.

    நல்ல பெயரை சம்பாதித்து வாழ்ந்து மறைந்தார்.

    அப்பாவின் மறைவிற்கு பின் கிராமத்திலிருக்கும் வீட்டை, தன் அக்காவிற்கே கொடுத்து விட்டார் ராகவன்.

    ராகவனின் அக்கா கமலத்தின் கல்யாண வாழ்க்கை நீண்டநாள் நீடிக்கவில்லை.

    அக்காவின் நிலை கண்டு மிகவும் மனம் வருந்தினார் ராகவன். கணவன் இறந்தபின் குழந்தையும் இல்லாததால் தனிமையில் வாழ்ந்த அக்காவை, தங்களுடன் வரும்படி ராகவனும், ராஜமும் அழைத்தார்கள்.

    கமலம் வர மறுத்துவிட்டாள்.

    அப்பா, அம்மா வாழ்ந்த வீட்டில் என் காலம் போகட்டும் ராகவா... தயவுசெய்து என்னை இப்படியே விட்டுடுங்க...

    வருமானத்திற்கு. எந்த குறையும் இல்லை. கணவன் மூலம் கிடைத்த சொத்துக்களை விற்று, பாங்கில் டெபாசிட் செய்தும், அப்பா தன் பெயரில் எழுதி தந்த நிலத்தில் ஆள் வைத்து விவசாயம் செய்தும் தனி மனுஷியாக வாழ ஆரம்பித்தாள்.

    கிராமத்து குழந்தைகளுக்கு படித்த படிப்பு கை கொடுக்க பாடம் சொல்லி தருவது, அவளது பொழுது போக்கு.

    லீவிற்கு ரகு, ரேவதியை அழைத்துக்கொண்டு ராகவன், மனைவியோடு கிராமத்திற்கு வந்துவிடுவார்.

    ரகு, ரேவதியும் அத்தையிடம் மிகவும் பிரியமாக நடந்து கொண்டார்கள்.

    குழந்தை இல்லாத கமலம் அவர்களை தன் குழந்தைகளாகவே நினைத்தாள்.

    ராகவா... இந்த பிள்ளைகளுக்காகவாவது உன்னோடு வந்து இருந்திடலாம்னு தோணுது. பசங்க வந்து பத்துநாள் இருந்துட்டு போனால், அப்புறம் வீடே வெறிச்சோடி போகுது.

    அதனால்தான் நாங்களும் வரச்சொல்லி கூப்பிடறோம். நீதான் வரமாட்டேங்கிறே

    இல்லை ராகவா... இந்த வீட்டில் இருப்பது அம்மா, அப்பாவோடு இருப்பது போன்ற உணர்வு. அது மட்டுமில்லை, இங்கே என் பொழுதுகள் உபயோகமா போகுது. நீ நேரம் கிடைக்கும்போது, பிள்ளைகளோடு வந்து இருந்துட்டுபோ... அதுபோதும்

    மென்மையாக சொல்வாள் கமலம்

    காலங்கள் கடந்து போக, குழந்தைகளும் பெரியவர்களாகி வாழ்க்கையில் செட்டில் ஆக, ராஜமும் அவரை

    Enjoying the preview?
    Page 1 of 1