Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Prapanja Ragasiyam
Prapanja Ragasiyam
Prapanja Ragasiyam
Ebook229 pages1 hour

Prapanja Ragasiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபஞ்சம் என்றால் என்ன?

இது ஒரு மிகப் பெரிய கேள்வி. அண்டம் என்பார்கள் அழகு தமிழில் நமது சித்தர்கள். சூரியக் குடும்பமும், இன்னும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், கிரகங்களும் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதைத்தான் பிரபஞ்சம் என்கிறோம்.

இந்தப் பிரபஞ்சம் எப்படி ஏற்பட்டது?

ஒன்றுமே இல்லாத ஒரு நிலைப்பாட்டில் தோன்றிய பெருவெடிப்பை அடுத்தே பிரபஞ்சம் தோன்றியது என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

அந்தப் பெரு வெடிப்பு நிகழ்ந்தது எப்படி?

அத்தேடலுக்கான ஆராய்ச்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. நாம் வாழ்ந்து வரும் இந்தப் பிரபஞ்சத்தைப் போல இன்னும் நிறைய பிரபஞ்சங்கள் இந்தப் பேரண்டத் தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அப்படியானால் பல சூரியன்கள் இருக்கின்றன என்பதே கண்டுபிடிப்பு.

பெரு வெடிப்பு நிகழ்த்திய அதிசயங்களின் உருவாக்கம்தான் பல பிரபஞ்சங்கள். இவ்வாறு பல்வேறு மர்மங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது இந்தப் பிரபஞ்சம். அவற்றைப் பற்றி முடிந்த வரையில் அலசி ஆராயப் பட்டுள்ளது இந்தப் புத்தகத்தில்.

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580156709010
Prapanja Ragasiyam

Read more from Kundril Kumar

Related to Prapanja Ragasiyam

Related ebooks

Reviews for Prapanja Ragasiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Prapanja Ragasiyam - Kundril Kumar

    http://www.pustaka.co.in

    பிரபஞ்ச இரகசியம்

    Prapanja Ragasiyam

    Author :

    குன்றில் குமார்

    Kundril Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kundril-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1 பிரபஞ்சம் என்றால் என்ன?

    2. பெருவெடிப்பு

    3. கருந்துளை

    4. பிரபஞ்சத்தின் மர்மங்கள்

    5. பூமி

    6. உயிர்கள் உருவான விதம்

    7. கடவுளின் துகள்

    8. சூரியனும் பூமியும்

    9. கண்டங்கள்

    10. குமரிக்கண்டம்

    11. பூமியின் கட்டமைப்பு

    12. காலங்கள்

    13 கடவுளும் பிரபஞ்சமும்

    என்னுரை

    பிரபஞ்சம் என்றால் என்ன?

    இது ஒரு மிகப் பெரிய கேள்வி.

    அண்டம் என்பார்கள் அழகு தமிழில் நமது சித்தர்கள்.

    சூரியக் குடும்பமும், இன்னும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், கிரகங்களும் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதைத்தான் பிரபஞ்சம் என்கிறோம்.

    இந்தப் பிரபஞ்சம் எப்படி ஏற்பட்டது?

    ஒன்றுமே இல்லாத ஒரு நிலைப்பாட்டில் தோன்றிய பெருவெடிப்பை அடுத்தே பிரபஞ்சம் தோன்றியது என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

    அந்தப் பெரு வெடிப்பு நிகழ்ந்தது எப்படி?

    அத்தேடலுக்கான ஆராய்ச்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

    நாம் வாழ்ந்து வரும் இந்தப் பிரபஞ்சத்தைப் போல இன்னும் நிறைய பிரபஞ்சங்கள் இந்தப் பேரண்டத் தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

    அப்படியானால் பல சூரியன்கள் இருக்கின்றன என்பதே கண்டுபிடிப்பு.

    பெரு வெடிப்பு நிகழ்த்திய அதிசயங்களின் உருவாக்கம்தான் பல பிரபஞ்சங்கள்.

    இவ்வாறு பல்வேறு மர்மங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது இந்தப் பிரபஞ்சம்.

    அவற்றைப் பற்றி முடிந்த வரையில் அலசி ஆராயப் பட்டுள்ளது இந்தப் புத்தகத்தில்.

    குன்றில்குமார்

    1 பிரபஞ்சம் என்றால் என்ன?

    பிரபஞ்சம் என்பதை அண்டம் என்றும், பேரண்டம் என்றும் அழைப்ப துண்டு. இவ்வாறு அழைக்கப்படும் பிரபஞ்சம் என்றால் என்னவென்று முதலில் நாம் அறிந்து கொள்வது சாலச் சிறந்தது.

    நம்மைச் சுற்றியுள்ள அனைத்தை யும் குறிக்கும் ஒரு சொல்லே பிரபஞ்சம். சூரியன், சூரியனைச் சுற்றிவரும் கோள் கள், நிலவு, பூமி, விண்மீன்கள், விண்மீன் களுக்கு இடையே காணப்படும் விண் துகள்கள், அவற்றின் இயக்கம், வானம், இவை அனைத்தையும் சூழ்ந்துள்ள வெட்டவெளி, கேலக்ஸி போன்ற அனைத்தும் பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த வெளிகள் மட்டுமல்லாமல் காலம் என்பதும் பிரபஞ்சத்தில் அடங்கும்.

    மேலும் பிரபஞ்சமானது வேகமாக விரிவடைந்து வருவதை அண்மையில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது மேலும் வியப்பைத் தருகிறது.

    பிரபஞ்சம் ஆரம்பத்தில் ஒரு அணுவில் இருந்து வெடித்துக் கிளம்பியது. ஒரு பலூனை ஊதி ஊதிப் பெரிதாக்குவதைப் போல பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

    அணுவிலும் அணுவான ஒரு மிகச் சிறிய புள்ளியில் இருந்து இவ்வளவு பெரிய அண்டம் பிறந்ததாகக் கூறப்படுவது பெரும் வியப்பையும், நம்ப முடியாத ஆச்சரியத்தையும் தருகிறது.

    தொடக்க காலத்தில் பூமியைத்தான் சூரியன் உள்ளிட்ட அத்தனை கோள்களும் சுற்றிவருவதாக நம்பினார்கள். பூமி தட்டையானது என்றும் நினைத்தார்கள்.

    ஆனால் பூமி உருண்டையானது என்றும், சூரியனைத்தான் பூமியும், மற்ற கோள்களும் சுற்றி வருவதாகக் கண்டுபிடித்து முதலில் கூறினார் கலிலீயோ.

    அப்போது யாரும் அதனை நம்பவில்லை. ஏற்றுக் கொள்ளவும் மறுத்தார்கள். அவரைக் கிண்டல் செய்தார்கள். அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கினார்கள்.

    என்னவாயிற்று?

    இன்று பூமி தட்டையானது, பூமியைத்தான் சூரியன் சுற்றி வருகிறது என்று சொன்னால், ‘உங்களைப் பைத்தியம்’ என்று எள்ளி நகையாடுவார்கள்.

    ஏனென்றால் பூமி உருண்டை என்பது இப்போது நிரூபிக்கப் பட்டுவிட்டது.

    ஆக, பிரபஞ்சம் என்பது பூமி மட்டுமல்ல, சூரியன் உட்பட பல கோள்களும் சேர்ந்தது என்பது மிகப் பெரிய வியப்புக்குரிய ஒன்றுதான்.

    பூமியின் பிரம்மாண்டமே நம்மை அதிர வைக்கிற ஒன்று. இங்கு காணப்படும் மலைகள், கடல், காடுகள், நதிகள், மணல் வெளிகள் என்று இதுவே மிகப் பெரிய பிரம்மாண்டமாக நம்மை வியக்க வைக்கிறபோது, பிரபஞ்சம் இதே போன்று இன்னும் ஆயிரக்கணக்கான கோள்கள் என்றால் அதன் பிரம்மாண்டம் எப்படி நம்மை ஆச்சரிய அதிசயத்திற்குள் நுழைத்து ஆட்டுவிக்காமல் போய்விடும்?

    சூரியன் என்பது நமது பூமியைப் போன்று பத்து லட்சம் பூமிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய கோள். அவ்வளவு பெரியது! சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் உள்ளன. இதனை சூரியக் குடும்பம் என்று அழைப்பர்.

    பிரபஞ்சத்தின் மூலையில் ஒரு கடுகு போன்ற அளவில் இருக்கிறது சூரியக் குடும்பம். இதில் உள்ள சூரியன் ஒரு நட்சத்திரம் மட்டுமே.

    அண்டத்தில் நட்சத்திரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதாவது பத்தாயிரம் கோடி நட்சத்திரக் கூட்டங்கள் இருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கூட்டங்களில் ஒன்றுதான் சூரியன். நட்சத்திரக் கூட்டத்தின் வெளி விளிம்பின் ஒரு பகுதியில் சூரியக் குடும்பம் காணப்படுகிறது.

    நாம் காணும் சூரியக் குடும்பத்தைப்போல இன்னும் அதிகமான வேறு பல சூரியக் குடும்பங்களும் உண்டு என்னும் உண்மையை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    நாம் வசிப்பதை பால்வெளி மண்டலம் என்பார்கள். பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் மற்றும் நெபுலாக்களைக் கொண்டது பால்வெளி மண்டலம். பூமியும் இதில் அடக்கம்.

    இங்கே நெபுலாக்கள் என்றால் என்னவென்று நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

    சூரியக் குடும்பதிற்கு அப்பால், தூசு, ஐதரசன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான மேகங்களே நெபுலா ஆகும்.

    நெபுலா என்பது லத்தீன் சொல். பனிமூட்டம் அல்லது புகை என்று இதற்குப் பொருள்.

    ஆக, சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியக் குடும்பத்தில் இவை மட்டுமல்லாமல் 167 துணைக் கோள்களும், சிறு கோள்களும், அதிகளவில் வால் நட்சத்திரங்களும், எரி மீன்களும் அடங்கி உள்ளன.

    சூரியக் குடும்பத்தில் ஒன்பது கோள்கள் இருந்தன. ஆனால் ஒன்பதாவது கோளாக விளங்கிய புளூட்டோ, கிரக அளவில் மிகச் சிறியது. இது ஒரு கிரகத்தின் சுற்றுப்பாதையின் இடையே புகுந்து செல்வதால் கிரகம் என்னும் மதிப்பை இது இழந்தது.

    எனவே, புளூட்டோ ஒரு கிரகம் அல்ல; ஒரு மிகச் சிறிய கோள் என்று கடந்த 2006ஆம் ஆண்டு விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்கள் ஒன்பதில் இருந்து எட்டாகக் குறைந்து போயிற்று.

    சூரியக் குடும்பத்தில் உள்ள கடைசிக் கோளான நெப்டியூன் 450 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத் தக்கது.

    சூரியக் குடும்பத்தின் தலைவனாக விளங்குவது சூரியன். சூரியக் குடும்பத்தின் மையத்தில் உள்ளது சூரியன். இதன் ஈர்ப்பு சக்தியே பிற கோள்களை இதனுடன் பிணைத்து வைத்துக் கொண்டுள்ளது.

    தன்னைத் தானே ஒளிரச் செய்யும் குணமிக்கது சூரியன்.

    சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டுக் கோள்களும் தமது அச்சில் சுழல்வதோடு, சூரியனையும் அவை சுற்றி வருகின்றன.

    இவற்றில் பூமி, புதன், செவ்வாய், வெள்ளி ஆகியவை திடக் கோள்கள்.

    வியாழன், சனி, நெப்ட்யூன், யுரேனஸ் ஆகியவை வாயுக் கோள்கள்.

    அனைத்துக் கோள்களும் கடிகாரத்தின் எதிர்த் திசையில் சுற்றி வருகின்றன. இக்கோள்கள் அனைத்தும் தமது பாதையை விட்டு விலகுவதில்லை.

    இவை சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

    புளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹல்மீயே ஆகியவை குள்ளக் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    சந்திரன், பூமியின் துணைக்கோளாக இருக்கிறது. சூரிய ஒளியை இது பிரதிபலிக்கிறது. இரவு நேரங்களில் வானில் வெளிப்படும் ஒளிக்கீற்று ‘எரி நட்சத்திரம்’ என்று கூறப்படுகிறது.

    பனி, தூசு போன்ற பொருட்கள் நிறைந்த பனிப்பாறையை வால் நட்சத்திரம் என்று அழைக்கின்றோம்.

    பல கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுப்பு ‘அண்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

    பல கோடிக்கணக்கான அண்டங்கள் சேர்ந்தது ‘பேரண்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

    பேரண்டத்தில் அடங்கி உள்ள கோடிக்கணக்கான அண்டங்களில் ஒன்று பால்வெளி அண்டம். இது சுருள் போன்ற அமைப்பை உடையது.

    இந்தப் பால்வெளி அண்டத்தில்தான் சூரியக் குடும்பம் உள்ளது. சூரியக் குடும்பத்தில்தான் நாம் வாழும் பூமி உள்ளது.

    சூரியன் அமைந்திருக்கும் பால்வெளி மண்டலத்தில் சூரியனைக் காட்டிலும் பல ஆயிரம் மடங்கு பெரிதான நட்சத்திரங்களும் உள்ளன.

    நாம் இருக்கும் இந்தப் பூமி சூரியக் குடும்பத்தின் ஓர் அங்கம். சூரியக் குடும்பம் வலம்வரும் பால்வெளி அண்டம் என்னும் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம்.

    ஆக, பிரபஞ்சம் என்பது எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை இதற்கு மேலும் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.

    பால்வெளி மண்டலம் வட்ட வடிவில் உள்ளது. இதன் அகலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஒளி ஆண்டுகள். இதன் மையப் பகுதியானது சூரியனில் இருந்து 27 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

    இங்கே ஒளி ஆண்டு என்றால் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.

    பூமியில் தூரங்களை அளவிட கிலோ மீட்டர், மைல் போன்ற அளவுகளைப் பயன்படுத்துவதைப் போல, விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும், கிரகங்களின் தூரங்களை அளவிட ஒளி ஆண்டு என்ற அளவைப் பயன்படுத்துகிறோம்.

    ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து செல்லும் ஆற்றல் படைத்தது ஒளி. அதாவது ஒரு ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் கோடி கிலோ மீட்டர் என்று பொருள்.

    சூரியனுடைய ஒளி பூமியை வந்தடைவதற்கு 8 நிமிடங்கள் ஆகின்றன. சூரியக் குடும்பத்தின் கடைசிக் கிரகமான புளூட்டோவைச் சென்றடைவதற்கு நான்கரை மணி நேரமாகிறது.

    இப்போது பால்வெளி மண்டலத்தின் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு கற்பனை ஓவியம் உங்கள் மனத் திரையில் படமாகி இருக்கும்.

    இந்தப் பால்வெளி மண்டலத்தில் ஏறத்தாழ 40 ஆயிரம் கோடி விண்மீன்கள் இருப்பதாக வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இதன் மையப் பகுதியில் நம்மால் பார்க்கவே முடியாத கரும் பொருள் (dark matter) ஒன்று உள்ளதாக நம்பப் படுகிறது. இதனைச் சுற்றியுள்ள மிகப் பெரிய வட்டப்பாதையில் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள் சுற்றிவருவதற்கு இரண்டாயிரத்து 250 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். இதனைப் பால்வெளி ஆண்டு என்று சொல்கின்றனர்.

    இப்போது விஷயத்திற்கு வரலாம்.

    பால்வெளி மண்டலம் போல ஏறத்தாழ நானூறு அல்லது ஐநூறு கோடி மண்டலங்களைக் கொண்டது நாம் சொல்லும் பிரபஞ்சம். அப்படியானால் பிரபஞ்சம் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கலாம்.

    நிச்சயமாக அது கற்பனைக்கு அடங்காத பிரம்மாண்டமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

    இத்தனை பெரிய அளவிலான பிரபஞ்சம் மிகச் சிறிய, கண்ணுக்கே தெரியாத அணுவில் இருந்து பிளந்து வந்தது என்பது நிச்சயமாக நம்பமுடியாத ஒன்றே. அணுவில் இருந்து அதி விரைவாக விரிவடைந்து வந்ததால்தான் அதை ‘பெரிய வெடிப்பு’ அல்லது ‘பெரு வெடிப்பு’ (Big Bang) என்கின்றனர்.

    இதிலொரு காமெடியான விஷயம் என்னவென்றால் இக் கோட்பாட்டைக் கண்டறிந்த விஞ்ஞானி ‘பெரு வெடிப்பு’ என்னும் வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

    ஆனால் இக்கோட்பாட்டை எதிர்த்துக் கிண்டலடித்த விஞ்ஞானி நக்கலாக ‘பெரு வெடிப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதுவே இன்றளவும் நிலைத்து நிற்கிறது.

    மா வெடிப்பு கோட்பாட்டை நிறைய பேர் எதிர்த்தனர். பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூட ஆரம்பத்தில் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பின்னர் இதன் உண்மைத் தன்மையை உணர்ந்த அவர், தன் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு என்று பெருந்தன்மையாக ஒத்துக்கொள்ளவும் செய்தார்.

    பிரபஞ்சம் என்னும் நாம் இருக்கும் இந்தப் பூமி சூரியக் குடும்பத்தின் ஓர் அங்கம். சூரியக் குடும்பம் வலம்வரும் பால்வெளி அண்டம் என்னும் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம்.

    ஆக, பிரபஞ்சம் என்பது எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை இதற்கு மேலும் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.

    பிரபஞ்சம் என்பதை ஆங்கிலத்தில் யுனிவர்ஸ் (Universe) என்பார்கள். யுனிவர்ஸ் என்பது பழைய பிரெஞ்சு சொல்லான யுனிவர்ஸ் என்பதன் அப்பட்டமான தழுவல்.

    அதற்காக இது பிரெஞ்சு மொழிக்குச் சொந்தமான சொல் என்று தவறாக நினைத்துவிட வேண்டாம். பிரெஞ்சு மொழியும் லத்தீன் மொழியில் இருந்து பெற்றுக் கொண்ட சொல் இது. லத்தீன் மொழியான யுனிவர்ஸம் என்பதில் இருந்து பிரெஞ்சு மொழி இதனை உள்வாங்கிக் கொண்டு யுனிவர்ஸ் என்பதாக மாற்றிக் கொண்டது.

    யுனிவர்ஸம் என்னும் லத்தீன் மொழிச் சொல்லானது அதன் செய்யுள் மொழியான யுன்வோர்ஸம் என்பதில் இருந்து உருவாகியதாக அறியப்படுகிறது.

    இந்த லத்தீன் சொல் லுக்ரிடியஸ் என்பவர் எழுதிய ‘டி ரெரம் நேச்சுரா’ (De rerum natura) என்னும் ‘பொருட்களின் இயல்பு’ பற்றிய புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    யுன்,

    Enjoying the preview?
    Page 1 of 1