Naveena Suriya Minsakthi
()
About this ebook
சுவாசிக்கக் காற்று இருக்கிறதா என்பதைப் பற்றிக்கூடக் கவலை கிடையாது. ஆனால், வாழ்வதற்கு மின்சாரம் தேவை. இதுதான் இன்றைய நவீன காலத்தின் வாழ்வியல் கோட்பாடு. ஒரு மணி நேரம் தொடர்ந்தாற்போல் மின்சாரம் இல்லை என்றால் இந்த உலகம் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விடும். நிலைகுலைந்து போய்விடும். இதுதான் உண்மை.
தண்ணீர், நிலக்கரி, அணு என்று ஏதேதோ பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்தோம். ஆனால் எதுவும் நமது தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. எனவே இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதைப் பற்றி உலகமே சிந்தித்து வருகிறது. அதைத் தெளிவாக்குவதே இந்நூல்.
Read more from Kundril Kumar
Illuminati Rating: 0 out of 5 stars0 ratingsAachi Manorama Rating: 0 out of 5 stars0 ratingsMaamannan Rajarajan Rating: 0 out of 5 stars0 ratingsBuddha Punitha Kaaviyam Rating: 0 out of 5 stars0 ratingsChennapatina Varalaaru Rating: 0 out of 5 stars0 ratingsMaranathirkku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsUlavuthurai Rating: 0 out of 5 stars0 ratingsDhyanam Rating: 0 out of 5 stars0 ratingsAthira Vaikkum Marmangal Rating: 0 out of 5 stars0 ratingsValamana Vazhvirku Sufi Thathuvam Rating: 0 out of 5 stars0 ratingsMaaveeran Alexander Rating: 1 out of 5 stars1/5Ulaga Madhangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Naveena Suriya Minsakthi
Related ebooks
Prapanja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsSutrupura Soozhal Sinthanaigal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsபிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா Rating: 0 out of 5 stars0 ratingsIyarkkaiyai Seerkulaitha 'Aararivu' Rating: 0 out of 5 stars0 ratingsVinnil Suzhalum Vinthaigal Rating: 0 out of 5 stars0 ratingsHitech Dhadhakkal Rating: 0 out of 5 stars0 ratingsKarkandu Ayutham Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Thuligal Part - 9 Rating: 0 out of 5 stars0 ratingsArockiya Vazhvirku Soorya Namaskaram Rating: 0 out of 5 stars0 ratingsIthu Thadai Seiyapatta Paguthi! Rating: 0 out of 5 stars0 ratingsNavagiragangal - Kalai Kalanjiyam Rating: 0 out of 5 stars0 ratingsவிண்வெளிப் பயணங்களின் வரலாறு Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Athisayangalum Marmangalum Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Thuligal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsBrahmaastram Oru Anu Aayuthamaa? Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Thuligal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsUnavu Ungal Udalukku Yeppadi Sakthiyuttukirathu? Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Thuligal Part - 15 Rating: 0 out of 5 stars0 ratingsMaayalogam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Thuligal Part - 10 Rating: 0 out of 5 stars0 ratingsHindu Madha Noolgalil Veli Ulaga Vaasigalum, Kaalappayanamum Rating: 0 out of 5 stars0 ratingsTamil, Samskirutha Noolgalil Ariya Ariviyal Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsSutrupura Soozhal Sinthanaigal Part - 6 Rating: 0 out of 5 stars0 ratingsSutrupura Soozhal Sinthanaigal Part - 5 Rating: 0 out of 5 stars0 ratingsTamil Ilakkiyathil Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsVignanathai Viyakka Vaikkum Meignanam Rating: 0 out of 5 stars0 ratingsYen? Eppadi? Ariviyal Puthumaigal! Rating: 0 out of 5 stars0 ratingsVingyaana Vaayilgal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsJothidam Unmaiya? Rating: 0 out of 5 stars0 ratingsMisaara Nila Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Naveena Suriya Minsakthi
0 ratings0 reviews
Book preview
Naveena Suriya Minsakthi - Kundril Kumar
http://www.pustaka.co.in
நவீன சூரிய மின்சக்தி
Naveena Suriya Minsakthi
Author :
குன்றில் குமார்
Kundril Kumar
For more books
https://www.pustaka.co.in/home/author/kundril-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
1. சூரிய ஒளி
2. மின் உற்பத்தி
3. சூரிய சக்தி மின்சாரம்
4 சூரிய மின்சக்தியின் பலன்கள்
5. வீடுகளில் சூரிய மின்சக்தி
6. இந்தியாவில் சூரிய மின்சக்தி
7. விவசாயத்திற்கு சூரிய சக்தி
8. சூரிய சக்தியின் பயன்பாடுகள்
9. சூரிய ஆற்றல்
என்னுரை
சுவாசிக்கக் காற்று இருக்கிறதா என்பதைப் பற்றிக்கூடக் கவலை கிடையாது.
ஆனால்...
வாழ்வதற்கு மின்சாரம் தேவை.
இதுதான் இன்றைய நவீன காலத்தின் வாழ்வியல் கோட்பாடு.
ஒரு மணி நேரம் தொடர்ந்தாற்போல் மின்சாரம் இல்லை என்றால் இந்த உலகம் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விடும்.
நிலைகுலைந்து போய்விடும்.
இதுதான் உண்மை.
தண்ணீர், நிலக்கரி, அணு என்று ஏதேதோ பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்தோம்.
ஆனால் எதுவும் நமது தேவையைப் பூர்த்தி செய்யவில்லை.
எனவே இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதைப் பற்றி உலகமே சிந்தித்து வருகிறது.
அதைத் தெளிவாக்குவதே இந்நூல்.
குன்றில்குமார்
1. சூரிய ஒளி
சூரியனில் இருந்து வெளிப்படும் மின்காந்தக் கதிர்வீச்சின் ஒரு பகுதியே சூரிய ஒளி ஆகும். இது அகச்சிவப்பு மற்றும் ஊதா ஒளிக்கதிர்களின் கலவை.
சூரிய ஒளியைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக சூரியனைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.
சூரியன் ஒரு விண்மீன். ஆகாயத்தில் சுமார் ஆயிரம் கோடி விண்மீன்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் சூரியன்.
விண்மீன்கள் நிறைந்து காணப்படும் இந்த ஆகாயம் வான்வெளி என்று அழைக்கப்படுகிறது. மட்டுமல்லாமல் பால்வெளி மண்டலம் என்றும் கூறப் படுகிறது.
நாம் சூரியன்தான் இருப்பதிலேயே மிகப் பெரிய விண்மீன் அல்லது நட்சத்திரம் என்று நினைத்தால் அது தவறு. இதைவிடப் பெரிய விண்மீன்களும் வான்வெளியில் இருக்கின்றன.
சூரியனை உதவியாக வைத்து விண்மீன்களின் வயதைக் கண்டு பிடித்தார் ஒரு விஞ்ஞானி.
அவர் பெயர் சந்திரசேகர்!
நம் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதில் நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். ‘சந்திரசேகர் எல்லை’ என்று அந்தக் கண்டு பிடிப்புக்கு அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
சூரிய மண்டலம் என்று அழைக்கப்படும் புதன், வெள்ளி, செவ்வாய், பூமி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் போன்றவற்றில் மிகப் பெரிய கோள் சூரியன்தான்.
சூரிய மண்டலத்தின் மொத்த எடையில் 99.8 சதவீதத்தைத் தன்னகத்தே சூரியன் கொண்டிருக்கிறது. அதற்கப்புறம்தான் வியாழன் வருகிறது.
சுமார் 109 பூமிகளுக்குச் சமமான நிறையில் இருக்கிறது சூரியன்.
சூரியனுக்குள் என்னென்ன பொருட்கள் உள்ளன என்று பார்த்தால் அதில் முக்கால் பங்கு ஹைடிரஜன் தான் உள்ளது.
பின்னர் ஹீலியம் கொஞ்சம் இருக்கிறது. மட்டுமல்லாமல் 1.69 சதவீதம் கனரக தனிமங்களான ஆக்சிஜன், கார்பன், நியான் மற்றும் இரும்பு ஆகியவை இருக்கின்றன.
இதன் காந்த எல்லைக்குள் மிகச் சூடான பிளாஸ்மா கதிர்கள் உள்ளன. சூரியனின் உட்பகுதி அதிக வெப்பத்துடன் காணப்படு கிறது.
சூரியனில் இருந்து வெப்பமும் ஒளியும் மட்டுமே வரவில்லை. அதிலிருந்து குறைந்த அடர்த்தியுள்ள மின்னூட்டம் செய்யப்பட்ட துகள்கள் பெரும்பாலும் எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் ‘சூரியக் காற்று’ என்ற பெயரில் வீசிக் கொண்டிருக்கிறது.
சூரியனின் ஒளிமண்டலத்திற்கு மேலே உள்ள பகுதிகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக சூரிய வளிமண்டலம் என்றே அழைக்கப்படுகிறது.
பிளாஸ்மா என்ற பொருளால் சூரியன் அமைந்திருந்தாலும் அதன் மேற்பரப்பு எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. சில சமயங்களில் கண்ணைக் கவரும் நெருப்பு வளையங்களும், தீப்பிழம்புகளும் சூரியனுக்கு வெளியே வீசியடிக்கப்படுகின்றன. இவை ‘சூரியப் பிழம்புகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
சூரிய ஒளி பூமியை வந்தடைவதற்கு 8 நிமிடங்கள் 31 நொடிகள் ஆகிறது.
மாலை வேளையில் மறைந்துவிட்ட சூரியனை உணர்வதற்கு நமக்கு எட்டு நிமிடங்கள் ஆகும்.
சூரியனின் மையப் பகுதியில் உருவாகும் இந்த ஒளி ஆற்றல், அதன் மேற்பரப்பினை அடைவதற்கு 50 மில்லியன் ஆண்டுகளுக் கும் அதிகமான கால அளவை எடுத்துக் கொள்கிறதாம்.
சூரியன் வெறும் தீப்பிழம்பு மட்டுமல்ல. இது முழுவதும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களும் நிறைந்துள்ளன. சூரியனின் மையப் பகுதியில் உள்ள வெப்ப அழுத்தம் காரணமாக ஹைட்ரஜனில் இருந்து எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்கள் தனித்தனியாகப் பிரிகின்றன.
இந்த புரோட்டான்கள் ஒன்றோடொன்று மோதி ‘ஹீலியம்’ ஆக மாறிவிடுகிறது. இவை இப்படி மோதுகிறபோது அதன் எடையில் சிறிதளவை இழந்து விடுகிறது.
அவ்வாறு இழந்த எடையானது ஆற்றலாக மாறி நமக்கு வெப்ப ஆற்றல் மற்றும் ஒளி ஆற்றலைக் கொடுக்கிறது..
சூரியனின் கருவில் இருந்து அதன் ஆற்றல் மேற்பரப்பிற்கு வந்து, அங்கிருந்து ஒளியாக வீசுவதற்கு 10 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகலாம்.
இந்த ஒளிதான் பூமியில் பல உயிரினங்களுக்கு இன்றியமையாத ஒளிச் சேர்க்கைக்கு உதவியாக இருக்கிறது.
சூரியனில் இருந்து வெளிப்படும் ஆற்றலில் சுமார் 200 கோடியில் ஒரு பங்கு மட்டுமே பூமியை வந்தடைகிறது. ஆனாலும் இந்தக் குறைந்த ஆற்றல்தான் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் அத்யாவசியமாக இருக்கிறது.
இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சூரியனை சாதாரண நட்சத்திரம் என்றும், அற்பமான வான்கோள் என்றும்தான் வானவியல் புத்தகங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
ஆனால் சூரியன் சாதாரண வான்கோள் என்பதை உறுதியாக மறுக்கிறார் சீயாட்டில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழக வானியல் ஆய்வாளர் சீல்யர்மோ கொன்சாலஸ். ‘சூரியன் மற்ற கோள்களில் இருந்து விநோதமானது’ என்கிறார் அவர்.
‘வானியல் ஆய்வாளர்கள் சூரியனைப் போன்ற தனிச் சிறப்பு மிக்க நட்சத்திரத்திடம் தங்கள் கவனத்தைத் திருப்பினால் மட்டுமே பல உண்மைகளை அவர்களால் கண்டறிய முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பொன்னான நேரத்தை அவர்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று ஆதங்கப்படுகிறார் கொன்சாலஸ்.
சூரியனுக்கு அருகில் இருக்கும் 85 சதவீத நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாகவே இருக்கின்றன. அவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. இவை புவி ஈர்ப்பு சக்தியால் இணைக்கப்பட்டு ஒன்றையொன்று சுற்றி வருகின்றன.
ஆனால், சூரியனோ ஒரேயொரு தனி நட்சத்திரம்.
‘சூரியன் ஒற்றை நட்சத்திரமாக இருப்பது வினோதமானது’ என கைடு டு த சன் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வானியல் ஆய்வாளர் கென்னெத் ஜே.ஹெச். ஃபிலிப்ஸ்.
இவ்வாறு சூரியன் தனித்திருப்பதால், பூமிக்கு நிலையான கோளப்பாதை அமைந்திருக்கிறது. இது பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் கொன்சாலஸ்.
‘சூரியன் உட்பட அதனைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களில் 10 சதவீதம் மெகா சைஸ் நட்சத்திரங்களாக இருக்கின்றன’ என்கிறது நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை.
‘நம் சூரிய மண்டலத்தின் எடையில் 99.87 சதவீதம் சூரியனுடையது. எனவே இது சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற எல்லாவற்றையும் புவியீர்ப்பு சக்தியால் கட்டுப்படுத்துகிறது’ என்கிறார் பிலிப்ஸ் என்ற வானியல் அறிஞர்.
இந்த அம்சம்தான் சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலை வில் உள்ள பூமியை, அதன் பாதையில் இருந்து பின்னோக்கிச் சென்றுவிடாமல்