Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thevaanai
Thevaanai
Thevaanai
Ebook174 pages1 hour

Thevaanai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிராமத்து சிறுவர்கள் கண்ணன், தேவானையின் வாழ்க்கையைப் பற்றிய புதினம்..

கிராமத்தில் வளர்ந்த இவர்களுக்கு, தத்தம் பட்டணத்து வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் மனவியல் போராட்டங்களும் அவற்றின் தீர்வும் சொல்லபட்டிருக்கின்றன.கண்ணன் , தேவானை தவிர இந்திராணி, ரஜினி மற்றும் அந்த நாய் ஜாணியின் பாத்திரப் படைப்பு அனைவரையும் கவரும்.

Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580136205827
Thevaanai

Read more from P.M. Kannan

Related authors

Related to Thevaanai

Related ebooks

Reviews for Thevaanai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thevaanai - P.M. Kannan

    http://www.pustaka.co.in

    தேவானை

    Thevaanai

    Author:

    பி.எம். கண்ணன்

    P.M. Kannan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pm-kannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    தேவானை அமரசிருஷ்டி, காலத்தை எதிர்த்து நிற்கக் கூடிய தமிழ் இலக்கிய பாத்திரங்களில் தேவானைக்கு ஒரு நிரந்தரமான ஸ்தானம் உண்டு. அவள் ராஜாஜி பெற்றுத் தமிழ்நாட்டுக்குத் தந்த கதைச்செல்வி. ஆனால் அந்த அமர சிருஷ்டியல்ல என் தேவானை. இவள் என் கற்பனை எனது நிறைவேறாக் கனவின் நிழலுருவம்.

    என் தேவானை எங்களூர்க்காரி, என்னோடு இளம் பிராயத்தில் பள்ளிக்கூடத்தில் படித்தாள். குத்துக்கல் மேட்டிலும் குளக்கரையிலும் விளையாடினாள். பள்ளிக்கூடத்திற்குப் போகும் போதும் திரும்பி வரும் போதும் தன் பலகை புத்தகங்களுடன் என் பலகை புத்தகங்களையும் சுமந்தாள். அவள் வீட்டு அரிசிப்பொறி என் வாயில் அரைபடும்; என் வீட்டு இட்டலி அவள் வாயைத் திணிக்கும்.

    என் பாட்டி அடே கண்ணு! அந்தக் குட்டி கொடுக்கிறதை வாங்கிச் சாப்பிடாதேடா என்று ஆசாரம் பேசுவாள். நாம் கொடுத்தால் மாத்திரம் அவன் வாங்கித் தின்கிறாளே என்று நான் கேட்டு விடுவேன்.

    எனக்கும் தேவானைக்கும் இடையே இந்த ஆசாரமெல்லாம் எப்போதுமே கிடையாது. தேவானையின் தகப்பனார் திருவேங்கட முதலியார் சுத்த சைவம், தாயார் அன்னம்மாளோ எப்போதும் நெற்றியில் திருநீறும் குங்குமமுமாகக் காட்சியளிப்பாள். இருந்தாலும் எங்கள் இருவருக்குமிடையே வளர்ந்துவந்த அன்பைக் கண்டு அவர்கள் கலங்கவில்லை. தேவானையைப் பாருங்க, எப்பவும் அந்த ஆம்புளைப் புள்ளையோடேயே ஆடிக்கிட்டுக் கிடக்குது என் அன்னம்மாள் எத்தனையோ முறை தன் கணவரிடம் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். திருவேங்கட முதலியார் சிரித்துக்கொண்டே கொழந்தைப் புள்ளைங்க பள்ளிக் கூடத்திலே ஒண்ணாகப் படிக்குதுங்க இல்லையா? அந்தப் பழக்கம் என்று பதில் சொல்லுவார்.

    தேவானைக்கு என் வயது தான் இருக்கும். சின்ன வயதில் நான் சிவப்பாயிருப்பேன் என்று சொல்லுவார்கள். தேவானை என்னை விட நல்ல சிவப்பு, வேலூர் எலுமிச்சம்பழத்தைப் பார்க்கும்போது எனக்கு தேவானையின் மேனி நினைவுக்கு வரும். எங்களுருக்கு அருகாமையிலுள்ள ஆயனேரிக் கரையிலுள்ள நாவல் மரத்திலே பழுத்து உதிரும் ஜம்பு நாவல் பழங்களை ஊதியெடுக்கும் போதெல்லாம் தேவானையின் கருவிழிகள் ஒளி வீசுவது போன்ற உணர்வு தட்டும். பூந்தமல்லி வெற்றிலை, அம்மாக்கண்ணு ரவேசு, துளிர் வெற்றிலை வேணுமா துளிர் வெற்றிலை என்று வெற்றிலைக்காரியின் குரல் வீதியிலே கேட்கும்போதே என் தேவானையின் தளிர்க் கரங்கள் தான் என் சிந்தையைத் தொடும். அம்மாக்கண்ணு ரவேசு எங்கள் வட்டாரத்திலே நல்ல துளிர் வெற்றிலைக்கு இட்டு அழைக்கும் செல்லப் பெயர். கைக்கு அத்தனை மென்மையாயிருக்கும் அந்த வெற்றிலை. வாய்க்கு ருசியாயிருக்கும் அது. அத்தனை மென்மையும் ருசியும் கூடிய ரவேசு வெற்றிலையைவிட 'ரவேசா’யிருக்கும் என் தேவானை உள்ளம்.

    ஐந்தாறு வயது ஆனபோது நான் பள்ளிக்குப் போனேன். மூன்று வருஷகாலம் அந்தப் பள்ளிக் கூட்டத்தில் படித்தேன். அந்த மூன்று வருஷ காலத்திலும் என் இணைபிரியாத் தோழியாக விளங்கினாள் தேவானை. பிறகு தான் படிப்பதற்குப் பட்டணம் வந்து விட்டேன். தேவானை மாத்திரம் ஊரிலிருக்கும் அதே ஜில்லா போர்டு பள்ளிக்கூடத்திலே ஐந்தாவது வகுப்பு வரையில் படித்தாள். அதன் பிறகு அவள் பெற்றோர் அவள் படிப்பை நிறுத்தி விட்டார்கள். நான் பட்டணத்திலிருந்து விடுமுறைகளின் போது ஊருக்குப் போவேன். அப்போதெல்லாம் தேவானையைக் காண்பேன். இருவரும் எப்போதும் போல விளையாடுவோம்.

    தேவானை குளத்தில் இறங்கி நன்றாக நீந்துவாள். ஒரு கரையிலிருந்து மறுகரை வரையில் தண்ணீரின் நடுபாதியைக் கிழித்துக் கொண்டு நீந்திச் செல்வாள். நான் பயந்தபடியே கரைமேல் நின்றுகொண்டு பார்ப்பேன். எனக்கு நீந்தத் தெரியாது. தண்ணீரில் கால்வைத்தால் காலை ஒடித்துவிடுவேன் என்று என் தகப்பனார் ஒரு சமயம் பயமுறுத்தினர் சிறு வயதிலே, காலைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமல்லவா? அதனால்தான் தான் நீந்தக் கற்றுக் கொள்ளவில்லை.

    தேவானை நீந்திச் செல்லும் போது நான் பயந்து சாவேன். தேவானை ரொம்ப தூரம் போகாதே. மூச்சுத் திணறப் போகிறது. திரும்பி விடு! என்று கத்துவேன். நடுக்குளத்திலே நீரை உறிஞ்சிக் கொப்பளித்துக்கொண்டே அவள் சிரிப்பது என்னைக் கேலி செய்வது போலிருக்கும். உனக்கு நீந்தத் தெரியவில்லையே. என்னைப் பார் என்று ஆணவம் பேசுவது போலிருக்கும் அவள் சாகசம், நான் கரை மேலிருந்து ஒரு சிறு கல்லை எடுத்து அவள் தலையைப் பார்த்து எறிவேன். அவள் சடக்கென்று தண்ணீருக்குள் மூழ்கி விடுவாள். நான் எறிந்த கல் தண்ணீரில் போய்த் தொப்பென்று விழும்போது எனக்கே ஏமாற்றமாயிருக்கும்.

    சில விநாடிகள் வரையில் தேவானையைக் காணாமல் நான் தவியாய்த் தவிப்பேன். ஒருகால் மூழ்கியே விட்டாளோ என்று நடுங்குவேன். ஆனால் எங்கேயோ ஒரு மூலையில் நல்ல பாம்பு தலையைத் தூக்குவது போல் தலையைத் தூக்குவாள் தேவானை. கல்லெறிந்த இடத்திலிருந்து அவ்வளவு தூரத்தையும் எப்படித் தான் அத்தனை துரிதமாக நீந்திச் சென்றாளோ என்று திகைப்பேன் நான். அந்தக் கோடியிலிருந்து கூவுவாள் அவள் கண்ணு எதோ இப்போது கல்லெறி பார்க்கலாம் என்று நகைப்பாள். அவளுக்கு நன்றாகத் தெரியும் நான் எறியும் கல் அவ்வளவு தூரம் செல்லாது என்று, இருந்தாலும் நான் கல் எறிவேன். கல் போய்விழும் இடத்தைப் பார்த்தால் கண்ணராவியாயிருக்கும். கல் எங்கேயோ அவன் எங்கேயோ அவள் கைகொட்டிச் சிரிப்பாள், பின்னும் சில விநாடிகளில் எதிர்க்கரையில் ஏறிச் சொட்டச் சொட்ட ஈரத்துடன் நின்றுகொண்டிருப்பாள்.

    தேவானை என் உள்ளத்தைக் கவர்ந்த பள்ளித்தோழி எத்தனையோ பிள்ளைகளும் பெண்களும் தான் அந்தப் பள்ளிக்கூடத்திலே எங்களுடன் படித்தார்கள். எல்லோரும் எங்களுக்குச் சிநேகிதர்கள் தாம். இருந்தாலும் தேவானையிடம் எனக்கிருந்த வாஞ்சையும், என்னிடம் அவள் கொண்டிருந்த அன்பும் அலாதியானவை.

    என் நண்பர்கள் பலர் அப்போதெல்லாம் பரிகாசம் பண்ணுவார்கள். அந்தப் பெட்டைக்குட்டியோடு சுற்றித் திரிகிறான் என்று. ஆனால் அதை நான் பொருட்படுத்தியதே இல்லை. அவளும் பொருட்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. எங்கள் இரு உள்ளங்களிலும் அன்பு நிறைந்திருந்தது. தூய்மை நிறைந்திருந்தது. கள்ளங்கபடு இல்லாத இளம் உள்ளங்களின் இணக்கத்திலே பிறக்கும் இன்பம் எங்கள் இடையே நிலவியிருந்தது.

    எங்கள் உலகம் ஒரு தனி உலகம். காட்டிலும், மேட்டிலும், கழனியிலும், குளக்கரையிலும், கோவிலிலும், மலைச்சரிவிலும் பள்ளிக்கூடத்திலும், விளையாட்டு மைதானத்திலும், தேரிலும், திருநாளிலும் ஏன்? எங்கேயும் வியாபித்திருந்தது எங்கள் உலகம், எனக்கு அதிசயமாகத் தென்படுவதைப் பற்றி நான் தேவானைக்குச் சொல்லுவேன். அவளுக்கும் அது அதிசயமாயிருக்கும். அவளுக்கு ஆச்சரியம் விளைவிக்கும் பொருள் எனக்கும் ஆச்சரியத்தை அளிக்கும்.

    எங்கள் ஜில்லா போர்டு பள்ளிக்கூடத்துக்குப் புதிய ‘ஹெட் மாஸ்டர்' பொன்னம்பல முதலியார் மாற்றலாகிவரும் வரையில் எனக்கும் தேவானைக்கும் இடையே மூன்றுவது பேர்வழி நுழைந்தது கிடையாது.

    *****

    2

    நான் போர்டு பள்ளிக்கூடத்தை விட்டுப் பட்டணத்துக்குப் போவதற்கு ஒரு வருஷம் முன்புதான் ஹெட்மாஸ்டர் பொன்னம்பல முதலியார் எங்களூருக்கு வந்து சேர்ந்தார்.

    எங்கள் கிராமத்திலே அப்போதெல்லாம் ஹெட்மாஸ்டரைப் பெரிய வாத்தியார் என்றுதான் சொல்வது வழக்கம். இப்போதும் பல கிராமங்களில் இந்தப் பெயரிட்டே ஹெட்மாஸ்டரைக் குறிப்பிடுவதைக் காணலாம். பழைய பெரிய வாத்தியார் போய்ப் புதிய பெரிய வாத்தியார் வந்தபிறகு அவரைப் புது வாத்தியார் என்றே சுருக்கமாகக் கூப்பிட்டோம். புதிய பெரிய வாத்தியார் என்று எத்தனை நீளம் சொல்லுவது புது வாத்தியார் பொன்னம்பல முதலியார் என்றால் வாய்க்குச் சுலபமாக இல்லையா? நாங்கள் அவரைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. புது வாத்தியார் என்று மட்டுமே சொல்லுவோம்.

    புது வாத்தியார் பள்ளிக்கூடத்திற்கு வந்தவுடன் எங்கள் வகுப்பிலே அவர் பெண் இந்திராணியும் சேர்க்கப்பட்டாள் இந்திராணி கொஞ்சம் சூட்டிகையான பெண் குறுகுறுப்பான கண்கள். எடுப்பான நெற்றி. சற்றே அகன்ற மூக்கு. மாம்பழக் கதுப்புகள் போன்ற 'குளுப்பை'யான கன்னங்கள். கொஞ்சம் இரட்டை நாடி சாரம், மாநிறமாயிருப்பாள். சீட்டிப் பாவாடையும், ஜாக்கெட்டும் அணிந்திருப்பாள். அவள் வகுப்புக்கு வந்ததும் ஒரு முறை எல்லா மாணவர்களையும் சுற்றி வளைத்துப் பார்த்துக் கொண்டாள். பிறகு தேவானையின் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.

    எங்கள் வகுப்பில் அப்போது இருபது இருபத்தைந்து பிள்ளைகளும், நாலைந்து பெண்களும் இருந்தார்கள். பெண்களுக்காக ஒரு தனி பெஞ்சு போடப்பட்டிருந்தது. அந்தப் பெஞ்சிலே முதல் இடத்தில் உட்கார்ந்திருப்பாள் தேவானை. அந்தப் பெஞ்சுக்கு அடுத்தாப்போல ஆண்பிள்ளைகளுக்கும் பெஞ்சு போட்டிருக்கும். அதில் முதல் இடத்திலே தேவானைக்கு அடுத்தாப்போல் நான் உட்கார்த்திருப்பேன். இந்திராணி எங்கள் இருவருக்கும் மத்தியில் வந்து உட்கார்ந்தாள். தேவானை உட்கார்ந்திருந்த பெஞ்சிலே அவளுக்கும் முன்பாக உட்கார்ந்து விட்டாள் இந்திராணி. தேவானை ஒன்றும் சொல்லவில்லை. பரிதாபமாக என்னைப் பார்த்தாள். நானும் ஒன்றும் பேசவில்லை. அதே மாதிரி அவளைப் பார்த்தேன். வகுப்பு பூராவும் எங்கள் இருவரையும் பார்த்தது, வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக்கொண்டு கேலி செய்தது வகுப்பு எங்களை. வாத்தியார் மௌனமாயிருந்தார். புது வாத்தியார்-அதிலும் புதிய பெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1