Nesam Marakkavillai
By P.M. Kannan
()
About this ebook
இது வரை வெளிவராத குறுநாவல். ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு ஒரே நாளில் இரண்டு அழைப்பிதழ்கள் வருகிறது . இரண்டுக்கும் அந்த ஆசிரியைக்கும் என்ன தொடர்பு?? பின்னோக்கி பாய்கிறது மனம்.ஆசிரியையின் பார்வையில் கதை தொடர்கிறது
Read more from P.M. Kannan
Penn Deivam Rating: 0 out of 5 stars0 ratingsKannigathaanam Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Oru Neethi Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsPavazha Maalai Rating: 0 out of 5 stars0 ratingsThevaanai Rating: 0 out of 5 stars0 ratingsAnnai Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsMannum Mangaiyum Rating: 0 out of 5 stars0 ratingsInba Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsNagavalli Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Madhuvum Rating: 0 out of 5 stars0 ratingsInba Puthaiyal Rating: 0 out of 5 stars0 ratingsNilave Nee Sol Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Nesam Marakkavillai
Related ebooks
Thoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Neer Yetharku Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5மனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsVellam Vadintha Piragu… Rating: 0 out of 5 stars0 ratingsKaaranamilla Kaariyangal Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsAnthikaala Mogam Rating: 0 out of 5 stars0 ratingsMaara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMarabugal Murikindra Nerangal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Konda Nenjam Rating: 5 out of 5 stars5/5Magalukkaga Rating: 0 out of 5 stars0 ratingsMaya Rating: 3 out of 5 stars3/5Gopuramum Bommaigalum Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsKalyanam! Kacheri! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vizhigal Urangidumo…? Rating: 0 out of 5 stars0 ratingsUn Thol Sera Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsMookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Penn Manam Rating: 0 out of 5 stars0 ratingsThayumanavan Rating: 0 out of 5 stars0 ratingsIthuvum Tajmahal Than Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkirean! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuyire Rating: 5 out of 5 stars5/5Un Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsPiraayasitham Rating: 0 out of 5 stars0 ratingsUnarvin Vizhippu Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyum Ivargal Rating: 0 out of 5 stars0 ratingsMulloduthan Muthangala? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nesam Marakkavillai
0 ratings0 reviews
Book preview
Nesam Marakkavillai - P.M. Kannan
https://www.pustaka.co.in
நேசம் மறக்கவில்லை
Nesam Marakkavillai
Author:
பி.எம்.கண்ணன்
P.M. Kannan
For more books
https://www.pustaka.co.in/home/author/pm-kannan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
1
கட்டுரை நோட்டுகள் கைகொட்டிச் சிரித்தன; கணக்குநோட்டுகள் சுணக்கம் செய்தன; பாடபுத்தகங்கள் பல்லிளித்தன; பரீட்சைத்தாள்கள் எரிச்சல் மூட்டின. கட்டுரை நோட்டுகளைத் திருத்தவேண்டும், கணக்கு நோட்டுகளைப் பார்வையிடவேண்டும், பரீட்சைத் தாள்களைப் படித்து முடிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன்தான் அவள் மேஜைக்கெதிரே வந்து நாற்காலியில் உட்கார்ந்தாள். மூன்று நோட்டுகளைத் திருத்தவும்தான் செய்தாள். அப்போதுதான் அந்தக் கடிதங்கள் வந்து ஜன்னல் வழியே உள்ளே விழுந்தன. கௌரியம்மாள்! தபால்!
என்ற குரலைத் தொடர்ந்து வந்து உள்ளே விழுந்த இரண்டு கடிதங்களையும் எடுத்துப் பிரித்துப் பார்த்தாள் அவள். அவ்வளவுதான். மூன்றாவது நோட்டுத் திருத்துவதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. நாலாவது நோட்டு நாடுவாரற்றுக் கிடந்தது.
கையிலிருந்த கடிதங்கள் கண்கண்டு மறைந்து போன கனவுலகத்தை மீண்டும் கண்முன் கொண்டு நிறுத்தின. ஆம்! கனவுலகம்தான். அவள் வரையில் எல்லாமே வெறும் கனவுதான். அவள் வாழ்க்கையே ஒரு வரட்டுக் கனவாக இருக்கும் போது மற்ற எதுதான் அவளுக்கு உண்மையாகத் தோன்றும்?
இரண்டு கடிதங்களும் இரண்டு இன்ப உலகங்களை அவள் கண்ணெதிரே சுழலச்செய்தன! இன்ப உலகங்கள்தான். ஆனால் அந்த இன்ப உலகங்களின் ஊடே ஊடே எத்தனை துன்பக் கேணிகள்! துயர அலைகள்!
ஏன் அந்தக் கடிதங்கள் இரண்டும் என்றுமில்லாமல் இன்று வந்துசேர்ந்தன அவளுக்கு இரண்டும் ஒரு முகமாக ஒரே சமயத்திலா வரவேண்டும்? அவளிடத்திலே இன்ப நினைவுகளை உண்டாக்கவும் சரி, துன்ப எண்ணங்களைக் கொண்டு குவிக்கவும் சரி அவற்றில் ஒன்றே போதுமே? இரண்டுமாகச் சேர்ந்து அவளைச் சித்திரவதை செய்யத் தேவையில்லையே!
தாங்கிகொள்ளத்தக்க வயதா அவளுக்கு? அல்லது அவள் உடலில்தான் வலிமை இருக்கிறதா? நொந்து, வெந்து, தேய்ந்து, மாய்ந்து வந்த அவள் இதயத்திற்கு இந்த வயதிலே ஏன் இந்த அதிர்ச்சி?
இந்தப் பள்ளிக்கூட ஆண்டு முடியும் வரையில்தான் அவள் கடமையாற்றப் போகிறாள். இன்னும் மூன்று மாதமோ நாலு மாதமோதான் இருக்கிறது. அப்புறம் ஓய்வுதான். பரிபூர்ண ஓய்வுதான் அவளுக்கு. முப்பது ஆண்டுக் காலமாக ஒரு பெண் வெட்கத்தை மறந்து, துக்கத்தைத் துறந்து பள்ளி ஆசிரியையாகப் பணி செய்தது போதாதா?
ஆமாம். அப்புறம் என்ன செய்வது? முப்பது ஆண்டுகள் பள்ளிக்கூடத்தோடு பள்ளிக்கூடமாகக் கழித்துவிட்டேன். ‘ரிடையர்’ ஆனால் பொழுதுபோகாதே. பழைய நினைவுகள் மறுபடியும் நெஞ்சை அரிக்கப் பார்க்குமே என்று சில சமயம் அவள் எண்ணுவாள்.
இரும்பு போலிருந்த கௌரியின் இதயக் கபாடம், எண்ணம் என்னும் எரிதீயில் உருகி வெளிவாங்கியது. இரண்டு கடிதங்களையும் இதுவரையில் எத்தனையோ முறை படித்துவிட்டாள் அவள். அந்தக் கடிதங்களைத் திரும்பத் திரும்பப் படித்த நேரத்திலே கணக்கு நோட்டுகளைத் திருத்தித் தீர்த்திருக்கலாம். ஆனால் அவளால் கடிதங்களைப் பார்ப்பதும் எண்ணமிடுவதும் தவிர வேறு எதுவுமே செய்ய முடியவில்லை.
திருமங்கலம் மிராசுதாரர் திருநிறைச்செல்வர் சிதம்பரநாதன் பி.ஏ., பி.எல்., அவர்களுக்கும் அவரது வாழ்வில் சமஉரிமை பெற்று முப்பதாண்டு காலமாகப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்துவரும் திருநிறைச்செல்வி லோகநாயகி அம்மையாருக்கும் அறுபதாண்டுத் திருமணம் - அதாவது சஷ்டியப்த பூர்த்தி வைபவம் - ஜாம் ஜாம் என்று மேளதாளத்துடன் நடக்கட்டுமே!
அதனால் கௌரிக்கு என்ன வந்துவிட்டது?
பூந்தமல்லி வக்கீல் செல்வரங்கம் எம். ஏ., பி.எல்., தமது ஒரே மகள், சீமந்த புத்திரி திருவளர்செல்வி... உம்...ம்... திருவளர் செல்வியாயிருந்து தேய்ந்து மீண்டும் திருவளர்செல்வியாக ஆகவிருக்கும் விமலாவுக்கும், டாக்டர் துரைசிங்கம் எம்.பி.பி.எஸ் - யாரோ கௌரிக்குத் தெரியாது - அவர்களுக்கும் திருமணம் இனிது நடந்தேறட்டுமே,
அதனால் தான் கௌரிக்கு என்ன வந்துவிட்டது?
இரண்டினாலும் தான் கௌரிக்கு எல்லாமும் வந்துவிட்டது.
இரண்டு திருமண வைபவங்களும் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. ஆம். அப்படித்தான் கடிதங்கள் கூறுகின்றன. சிதம்பர நாதன் சஷ்டியப்த பூர்த்தி திருமங்கலம் கிராமத்தில் நடைபெறுகிறது. செல்வரங்கத்தின் மகள் திருமணம் பூந்தமல்லியில் நடைபெறுகிறது.
பார்க்கப் போனால் இரண்டுக்குமே அவள் போக வேண்டியவள்தான். இருவருமே அவளுக்கு உறவினர்கள்தான். ஆனால் அவள் எந்தக் கல்யாணத்திற்குப் போகப்போகிறாள்? அதைப் பற்றி யோசித்துத்தான் மூளையையும் குழப்பிக்கொண்டு வேலையையும் கெடுத்துக்கொண்டு தவித்துத் தண்ணீராய் உருகுகிறாளோ அவள்?
2
ஹூம்! என் இதயத்தின் பளுவைக் குறைத்துக்கொள்ள இப்படி ஒரு யோசனை சொல்லத்தான் யார் இருக்கிறார்கள் எனக்கு? 'கௌரி! உன்னைப் பார்த்தால் பரிதாபமாயிருக்கிறது' என்று ஓர் அனுதாபச் சொல்கூற எந்த மனிதர்கள் இருக்கிறார்கள் எனக்கு? வாயைக் கிளறி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ள எத்தனையோ பேர் முன்வருவார்கள். நெஞ்சைப் பிடுங்கி நெருப்பிலே போட நான் நீ என்று ஓடி வருவார்கள், 'ஐயோ பாவம்! இந்தக் கதியா பெண்ணே உனக்கு' என்று ஒரு சொல் பேச ஒரு பிராணி வரவேண்டுமே!
வேண்டாம். யாரும் வரவேண்டாம். ஏன் வரவேண்டும்? என் தவறுக்குப் பிறர் ஏன் வருத்தப்பட வேண்டும்? நான்தான் வருத்தப்பட வேண்டும்; அழுது புலம்ப வேண்டும். கண்ணீரைப் பெருக்கிக் கதற வேண்டும் நான்.