Thevatha
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Unnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Deva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Iraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsIngu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSorna Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsAdichuvadugal Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsKandu Kondren Kandu Kondren Rating: 0 out of 5 stars0 ratingsNee...Nee Vendum Rating: 0 out of 5 stars0 ratingsOru Roja Iru Raja Rating: 0 out of 5 stars0 ratingsPasapinaippugal! Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyum Manithargal...! Rating: 0 out of 5 stars0 ratingsNeruppin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratingsNaga Keeralgal Rating: 0 out of 5 stars0 ratingsKolai Nila Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Iniyaa Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thevatha
Related ebooks
Oliyin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratingsAntha Chinna Pennin Snegam Rating: 1 out of 5 stars1/5Saatharana Manidhan Rating: 0 out of 5 stars0 ratingsThakanam Rating: 0 out of 5 stars0 ratingsAngey Sila Suvadugal Rating: 0 out of 5 stars0 ratingsTheerkkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsIngeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsValar Sirai Maatram Rating: 0 out of 5 stars0 ratingsTheerkka Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solli Vidai Peruvathu... Rating: 0 out of 5 stars0 ratingsVaarayo... Vennilave... Rating: 5 out of 5 stars5/5Tamil Selvi Rating: 0 out of 5 stars0 ratingsMerke Oru Uthayam Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsVidupattavai Viraivil Rating: 5 out of 5 stars5/5Rail Sneham Rating: 0 out of 5 stars0 ratingsKolai, Innoru Kolai! Rating: 0 out of 5 stars0 ratingsMayanizhal Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Thendral... Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsOomai Karu Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Illatha Iravu Rating: 0 out of 5 stars0 ratingsMannil Uthitha Vennila Rating: 0 out of 5 stars0 ratingsGanga Rating: 5 out of 5 stars5/5Vizhikkul Vizhundha Macham Rating: 0 out of 5 stars0 ratingsAdharam Madhuram Rating: 0 out of 5 stars0 ratingsIrattai Naakkugal Rating: 0 out of 5 stars0 ratingsAanandha Geetham Paaduthey Rating: 0 out of 5 stars0 ratingsVaigai Nadhi Orathiley! Rating: 4 out of 5 stars4/5
Reviews for Thevatha
0 ratings0 reviews
Book preview
Thevatha - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
தெவத்தா
Thevatha
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
காலை வெய்யில் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே எழுந்தது. வெய்யிலில் எழுந்த புழுக்கம் பக்கத்தில் குபு குபுவெனக் கொட்டும் பம்ப்ஸெட் நீரால் சில்லென்று குளிர்ந்திருந்தது.
எதிர் வெய்யிலில் தவிட்டு மூட்டை மேல் உட்கார்ந்து கிடாரி கன்றுக்கு மூங்கில் குழாய் வழியாய்க் கஞ்சி புகட்டிக் கொண்டிருந்தாள் எல்லம்மா. ஒரு பக்கம் சேலை சரிய, கூந்தல் பரந்து அவள் கவர்ச்சியான மாநிறமான முகம் முத்து முத்தாக வியர்க்க, உதட்டிற்கு மேல் வியர்வை அரும்பு கட்டியிருந்தது. நேற்று மாலை வைத்த குங்குமம் வியர்வையில் கலைந்து புருவத்தில் வழிந்தது.
கொட்டகையில் கட்டியிருந்த பசு, கன்றுக் குட்டியையும் அவளையும் பார்த்துக் கொண்டே ‘அம்மா…’ என்று குரல் கொடுத்தது.
கொஞ்சம் பொறு… பொறு. இதோ வரேன்.
அந்தப் பசுவை நோக்கிக் குரல் கொடுத்த எல்லம்மா அருகே வந்து தன் கழுத்தை கட்டிப் பிடிக்கும் குழந்தை இளங்கோவை ஒரு கையால் இழுத்து மறுபுறம் தள்ள, அந்த இடைவேளையில் கன்று துள்ளி, கஞ்சி பாதிக்கு மேல் அவள் சேலையிலும் சாணி தெளித்த மண் தரையிலும் கொட்டிவிட்டது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் பம்ப்ஸெட் ஓடுகிறதா என கவனித்துக் கொண்டும் முருங்கை மரத்தடியில் தேங்காய்களுக்கு நார் உரித்துக் கொண்டிருந்தான் தெவத்தா. அவர்கள் வீட்டில் அவன் வேலைக்காரன்-இல்லை, குடும்பத்தில் ஒருவன். குழந்தைப் பிராயம் முதல் அவர்களுடன் வளர்ந்து வருபவன். கையால் முகத்தில் வழிந்த வியர்வையை வழித்து விட்டு மடித்துக் கட்டிய வேட்டியும் அதில் செருகிய பளபளக்கும் அறுவாளும் கரிய பெரிய மேனியுடனும் அவள் அருகே வந்து "உம்... ம்…’’ என்றான் அவன் வாயைத் திறந்து பேசவே மாட்டான். பேசி ரொம்ப நாளாகிறது. அவன் வாழ்க்கையில் பட்ட துக்கம் அப்படி.
உரிக்கப்பட்ட தேங்காய் நார் ஒருபுறமும், மறுபுறமும் உரிக்கப்படாத காய்கள் ஒரு புறம் மரத்தடியில் கிடக்க, அதைச் சுற்றி கோழியும் கோழிக் குஞ்சுகளும் இரை பொறுக்கிக் கொண்டிருந்தன.
என்ன தெவத்தா, நான் செய்யரேங்கறியா. சரி சரி. நீயே புடி… அம்மாடி இது என்ன துள்ளு துள்ளுது.
சேலையை உதறிக் கொண்டு எழுந்தவள், சரியாக மாராக்கைப் போட்டுக் கொண்டு, வைக்கோல் அள்ளினாள்.
வைக்கோல் போடும் அவள் கரத்தை மோதி உராய்ந்தது பசு.
இளங்கோ, தெவத்தாவின் மடியில் ஏறி உட்கார்ந்து அவன் கன்றுக்குக் கஞ்சி புகட்டுவதை வேடிக்கை பார்த்தான்.
நேத்து ராவு போன மனுசன இன்னுங் காணலியே. தெவத்தா, நீயாச்சும் போய் பார்த்துட்டு வாயேன்.
அவள் கணவன் பொங்காலி நேற்று ஊர் நாட்டாண்மைக்காரர், பிரசிடெண்ட், 'ஐயா’ என்றழைக்கப்படும் பெரியண்ணனிடம் கடனை அடைப்பதற்காகப் பணத்துடன் சென்றவன் இன்னும் வரக்காணோம்.
அவள் சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கூந்தலை முடித்துக் கொண்டே சொன்னாள்.
தெவத்தா பதில் சொல்லாமல் மெளனமாகத் தலையை மட்டும் ஆட்டினான்.
ஆங்... மாட்டேங்கறியா. ஒன்னோட இதே பொளப்பாப் போச்சு. அங்கிட்டு போனா என்ன? என்னமோ போ. உன் பெண்டாட்டி போனதும் போனா, நீ பேசறதையே விட்டுட்டே. உம்… இம்மாம் நேரமாச்சு. சாப்பிட வரியா.
எல்லம்மா வீட்டிற்குள் போய்விட்டாள். இளங்கோ அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு தொங்க, அவனை இடுப்பில் இறுக்கிக் கொண்டு, கிணற்றுப் பக்கம் போனான்
நீர்வீழ்ச்சியாகக் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரில் குழந்தையை நிற்க வைத்துத் தேய்த்து ஊற்றினான் குழந்தை கால்வாயில் நின்று கொண்டு கையைக் காலை ஆட்டிக் கொண்டு கும்மாளமிட்டுச் சிரித்தது.
தண்ணி… ஹை… தண்ணி… தெவத்தா… நீயும் குளி,
சிரித்தான் இளங்கோ. கரிய மேனியில் பால் பற்கள் மின்னின.
குழந்தையை வைக்கோலால் தேய்த்துக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த தெவத்தாவின் முகம் லேசாக மலர்ந்திருந்தது. அவனுடைய ஒரே சிரிப்பு அந்த மலர்ச்சியில் மட்டும்தான்.
குழந்தையைத் துடைத்து ஒற்றையடிப் பாதையில் விட்டு உம்... உம்... உம்…
என சைகை செய்து வீட்டிற்கு போகும்படி சொன்னான்.
நான் போகட்டா…. போகட்டா...
கேட்டுக் கொண்டே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நெல் வரப்பில் பிறந்த மேனியாக ஓடினாள் இளங்கோ.
அவன் போவதைப் பார்த்துக் கொண்டே, வாய்க்காலில் இறங்கி அதே வைக்கோல் பிரியால் தேய்த்துக் குளிக்கலானான் தெவத்தா. இடையில் கோவணம் மட்டும் இருக்க, அந்த அழுக்கு வேட்டி கொய்யா மரக் கயிற்றில் தொங்கியது.
அவன் குளித்து வந்து அதே வேட்டியைக் கட்டிக் கொண்டு, பம்ப்ஸெட்டை நிறுத்தினான்.
வீட்டுக்குள்ளார வந்து சாப்பிடுன்னா கேக்க மாட்டே. சரி சாப்பிடு. இன்னிக்கு எம்மா நேரமாச்சு. சந்தைக்குப் போவணும். இந்த மனுசன இன்னும் காணலியே.
எல்லம்மா அங்கலாய்த்துக் கொண்டே எவர்சில்வர் கிண்ணத்தில் உப்பும் தயிரும் போட்டுப் பிசைந்து பழைய சோற்றைக் குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
சட்டை மட்டுமே போட்டிருந்த இளங்கோவின் கையில் ஒரு கோழிக் குஞ்சு நசுங்கிக் கொண்டிருந்தது. அருகே ‘கொர்ர்… கொர்…’ என கறுவிக் கொண்டு ஒரு இறக்கையை மட்டும் விரித்து அருகே அருகே வந்தது தாய்க் கோழி.
அடச்சே… சொம்மா கிட...
துரத்தினாள் எல்லம்மா. கோழி பறந்துவிட்டது. இளங்கோ குஞ்சை விட்டான்.
தெவத்தா, கால்களைத் தட்டிக் காலிலிருந்த மண்ணை உதறிக் கொண்டு, வீட்டுத் திண்ணையில் குத்துக் காலிட்டு அலுமினிய குண்டாவிலிருந்த பழைய சோற்றை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். ஒரு சிறிய அலுமினிய தட்டில் தொட்டுக் கொள்ள உரித்த வெங்காயமும் பச்சைமிளகாயும்.
தெவத்தா, சாப்பிட்டு போயிட்டு வந்துடுறியா. இன்னும் இந்த மனுசன காணலியே.
எல்லம்மாவின் தவிப்பு நேரம் ஆக ஆக அதிகரித்தது. காலையில் எழுந்து குளித்துச் சீவிப் பளிச்சென இருப்பவள் இன்று முகத்தைக்கூடக் கழுவவில்லை.
பல் தேய்த்து வாயைக் கொப்பளித்திருந்தாள். பசியில் வயிறு எரிந்தது.
தெவத்தா நிதானமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவள் தவிப்பையோ பேச்சையோ உணர்ந்தது போல தெரியவில்லை.
ரூவாயைக் குடுத்துட்டு பத்திரத்த வாங்கிட்டு வரவேண்டியதுதானே. இங்கிட்டுதான் பக்கம். சந்தப்பேட்ட கிட்ட தெவத்தா, நீ போய்ப் பாத்துட்டு வாயேன்.
அலுமினிய குண்டானை மாட்டுத் தொழுவத்துப் பக்கம் கழுவிக் கொண்டிருந்த தெவத்தா மாட்டேன் என்பதுபோல் தலையாட்டினான்.
உக்கும்… சொன்னா போவ மாட்டியே. எப்பவோ எதுவோ நடந்து போச்சி. அதுக்காவ… உம்… நான் ஓடி பாக்க முடியுமா? இந்தக் கடன அடைச்ச மாதிரிதான். இனிமே கவல இல்ல. இருக்குது இல்லே, நம்ம வூட்டோட சரி. இந்த மனுசன் வந்து சொல்லாது? இங்க இருக்கிற வூட்டுக்கு ராத் தங்கணுமா?
குழந்தையின் வாயைச் சேலைத் தலைப்பில் துடைத்துக் கொண்டே, மும்முரமாகத் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த தெவத்தாவைப் பார்த்தாள் எல்லம்மா.
ரூவாவோட போயிருக்கேன்னுதான் கவலயாயிருக்கு. மத்தப்படி… எங்கியும் தங்காத மனுசனுச்சே... என்னமோ பத்தரம் வூடு வந்து சேர்ந்தா இந்த குடும்பத்த பிடிச்ச சனியன் ஒழிஞ்ச மாதிரி மனுசனுங்குதான் வளருவாங்க. கடன் கூடவா ரெண்டு தலைமுறையா வளரும்.
பேசாமல் நார் உரித்துக் கொண்டிருந்தான் தெவத்தா.
வீட்டு வாசற்படியில் நின்ற எல்லம்மாவுக்குக் கோபம் வந்தது. காலையிலிருந்து அவள் எத்தனை தடவை சொல்லிவிட்டாள். போய் பார்த்து வரும்படி, மரக்கட்டை மாதிரி நிற்கிறான்.
ஊம்… அவனைச் சொல்லிப் பிரயோசனமில்லை. குழந்தை வெளிக்குப் போன துணிகளைக்கூட கூசாமல் அலசுவானே. எந்த வேலையை அவன் செய்யாமல் விட்டான். சலவைத் துணி வரவில்லை என்றால் அவள் சேலையைக் கூட அலசிப் போடுவானே.
ஏதோ அவனுக்குப் பெரியண்ணன் வீட்டுக்குப் போகப் பிடிக்கவில்லை.
கோபம் குறைந்தவளாக வீட்டிற்குள் நுழைந்தாள் எல்லம்மா. வெளியே வெளிச்சத்தில் இருந்ததால் உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. பாத்திரங்களைச் சமையல் அறையில் வைத்து, கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டாள்.
நெல் மூட்டைகள் பக்கம் ‘மியாவ்’ எனக் கத்திய பூனை இவளைப் பார்த்ததும் பதுங்கியது.
‘நான்தான் போவணும்.’ முனகிக் கொண்டே, நூல் சேலையையும் ஜெர்ஸி சோளியையும் எடுத்துப் புழக்கடைப்புறம் சென்றாள்.
ஊர் நாட்டாண்மைக்காரர், பிரசிடெண்ட் இன்னும் முக்கிய பிரமுகரான பெரியண்ணனுக்கு அவளுடைய மாமனார் ரூபாய் ஐயாயிரம் கொடுக்க வேண்டியிருந்தது. அது அவ்வப்போது அடைக்கப்பட்ட போதும், அவளுடைய கணவன் பம்ப்ஸெட் வாங்குவதற்காக வாங்கிய ஐயாயிரமும் சேர்ந்து இப்போது வட்டியோடு குட்டி போட்டுப் பதினைந்தாயிரத்தை எட்டியிருந்தது.
பொங்காலி வயல் வேலைகள் போக அரிசி வெல்லம் என சந்தை சந்தையாய் எடுத்துப் போனான். யாரையும் ஏமாற்றாமலே லாபம் கை நிறைய வந்தது.
இந்தக் கடனை தீர்த்ததும் அவளுக்குக் கழுத்து அட்டிகை வாங்கத் திட்டமிட்டிருந்தான். பாவம் மணப் பெண்ணாக வரும்போது கழுத்தும் கையும் நிறைய ஐம்பது பவுனைப் போட்டிருந்தாளே. அவையெல்லாம்…
எல்லம்மாவுக்குக்