ஜெகதா
()
About this ebook
நீ இப்படியே வக்கணையா சமைச்சிப் போட்டு கையிலயும் ரெண்டாள் உயரத்துக்கு டிபன் கேரியர் குடுத்து அனுப்பிக்கிட்டே இருந்தீன்னா வீட்டு வாசலை கூடிய சீக்கிரமே இடித்து தான் ஆல்டர் பண்ணனும்..." சாய்குமார் அலுத்துக் கொண்டான்.
"என்னங்க நீங்க? இந்த நாலு கை பொங்கலுக்கும் ஒரு கை சட்னிக்குமா இவ்வளவு புலம்பல்? ஒவ்வொருத்தர் வீட்டுல போய் பாருங்க. ஒரு நாளைப் போல பிரியாணியும் குருமாவுமா சீர்படுது. வயித்துக்கு வஞ்சனை செய்யாதீங்க.." சிந்தூரி திட்டினாள்.
"நல்லா சொல்லு இந்தப் பயலுக்கு. ஏன்டா என் மருமக புண்ணியத்தில் வாய்க்கு ருசியா சாப்பிட்டுக் கிட்டிருக்கேன். அதைக் கெடுத்திடுவே போலிருக்கே? முப்பது வருஷமா உன் அம்மா சுட்டுப் போட்ட வரட்டி சப்பாத்தியையும் கூழ் மாதிரி சோறும் தண்ணி சாம்பாரையும் தின்னு இம்சை பட்டவன் நான். என் மருமக வந்த ஒரு வருஷமாத்தானேடா இந்த வீட்டுல சமையலறைன்னு ஒண்ணு இருக்கறதும், அங்கே இருந்து ருசியான வாசனை வர்றதும் எனக்குத் தெரிஞ்சிது? இன்னொரு தரம் சாப்பாட்டைப் பத்தி ஏதாவது எனக்கே தெரிஞ்சிது? இன்னொரு தரம் சாப்பாட்டைப் பத்தி ஏதாவது சொன்னே.. தொலைச்சிடுவேன். ஏம்மா சிந்தூரி அன்னிக்கு கேரள பக்குவமா மீன் செய்யறதைப் பத்தி சொன்னியே. இன்னிக்கு செய்யறியா? என்ன மீன் வேணும்னு சொல்லு. இப்பவே போய் வாங்கிட்டு வந்திடறேன்." சப்பு கொட்டிக் கொண்டான் சாய் குமார்.
வேகமாக கார் சாவியுடன் வெளியே போனவனை, "என்னங்க.. சாப்பாட்டுக் கேரியர்.." என்று கத்திக் கொண்டே ஓடிய சிந்தூரியைப் பார்த்து, "ரொம்ப தேங்க்ஸ்மா... என் அப்பா இவ்வளவு சந்தோஷமா பேசி நான் பார்த்ததே இல்லை..." என்றான்.
"உங்க தேங்க்ஸை மறுக்காம நான் வாங்கிக்கறேன். நீங்க வரும்போது மறக்காம நான் குடுத்த லிஸ்ட்ல இருக்கற மளிகை சாமானையெல்லாம் வாங்கிட்டு வந்திடுங்க."அடிப்பாவி. அதையெல்லாம் வாங்கி வாரிக்கிட்டு வரணும்னா.. நாலு லாரி வேணும்டி. நீயும் உன் மாமனாரும் மதியமா போய் அதைச் செய்யுங்க. எனக்கு ஆபீசில முக்கியமான மீட்டிங் இருக்கு. பை.. பை.." என்று சாய்குமார் கையசைத்து விட்டுக் கிளம்பி விட்டான். சிந்தூரி உள்ளே வரும்போது மாமா தருமருக்கும் அத்தை பாஞ்சாலிக்கும் கடுமையான வார்த்தை யுத்தம் நடந்து கொண்டிருந்தது.
"இதோ பாருங்க தரும ராசரே. உங்க மருமகளைப் புகழுங்க. பொன்னாலயே அலங்கரிங்க. நான் வேணாங்கலை. அதுக்காக அவ எதிரில என்னை மட்டம் தட்டற வேலையெல்லாம் வைச்சிக்காதீங்க. இன்னிக்குத்தானேய்யா இந்த புது சமையல்? போன வருஷம் வரை நான் செய்து போட்டதைத்தானே வழிச்சி வழிச்சி தின்னீரு? அப்ப தெரியலியா? அது சப்பாத்தி இல்லை வரட்டின்னு? உம்மையெல்லாம் சுண்ணாம்பு களவாயில வைச்சி சுடணும்யா.." என்று கத்தியபடி முசுமுசு'வென மூச்சு வாங்கும் பாஞ்சாலி அடுத்த வார்த்தை பேசுமுன்னே சிந்தூரி குறுக்கே பாய்ந்தாள்.
"ஐயோ... என்ன அத்தை நீங்க? நான் புதுசா சமைக்கிறதால என் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு மாமா சும்மாங்காட்டியும் இப்படி புகழ்ந்து பேசறாரு. மத்தபடி உங்க அனுபவத்துக்கும் கை பக்குவத்துக்கும் நான் எந்த மூலைக்கு வருவேன்?"
அவள் பணிவாக நின்று பேசியதைக் கேட்ட பாஞ்சாலி மெல்ல புன்னகைத்தாள். "அத்தை நான் உங்களுக்கு மாம்பழ மில்க் ஷேக் எடுத்துக்கிட்டு வரேன்" என்றபடி சிந்தூரி உள்ளே போனாள். கூடத்தில் பாஞ்சாலி பேசுவது கேட்டது.
"அவ என்னவோ நல்லவதான். நீங்க அவளைக் கெடுத்திடாம இருங்க சாமி. புண்ணியவானே."
சிந்தூரி சிரித்துக் கொண்டாள். பாய்ந்து வரும் கோபத்தைக் கூட பொறுமை என்னும் அற்புதமான மாயத்தால் செயலிழக்க வைத்து விடலாம் என்று அம்மா சொல்லிக் கொடுத்தது எத்தனை நிஜம்? புது மனிதர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதும் அம்மா சொல்லிக் கொடுத்ததுதான். எத்தனை பெரிய படிப்பு படித்தாலும் வேலையில் இருந்தாலும் சமைக்கவும் வீட்டு வேலைகள் செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அம்மாதான் வற்புறுத்தி எல்லாமே சொல்லிக் கொடுத்தாள். அன்றைக்கு கோபமும் எரிச்சலும் வந்ததுஇன்று அம்மாவுக்கு மனதுக்குள் கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டு இருப்பது தான் நிஜம்.
"ஏம்மா சிந்தூரி... மாம்பழம் பறிக்க சேலத்துக்குப் போயிட்டியா?" கூடத்திலிருந்து தர்மர் கூப்பிடுவது கேட்டது. இரண்டு டம்ளர்களில் மாம்பழக் கலவையையும், ஒரு தட்டில் முந்தின நாள் செய்து வைத்திருந்த முந்திரி பக்கோடாவையும் வைத்துக் கொண்டு போனாள். "மாமா... இதைச் சாப்பிட்டுக்கிட்டே இதையும் குடிங்க. அத்தையும் நீங்களும் மலரும் நினைவுகளுக்கு போயிட்டு வாங்க. நான் மத்த வேலையெல்லாம் முடிச்சிட்டு வரேன்."
"கொண்டா. கொண்டா.. இதை எப்ப ரகசியமா செய்தே? வாயிலப் போட்டாலே கரையுதே. பாஞ்சாலி சாப்பிடு.." தர்மர் தலைகால் புரியாமல் கத்தினார்
Read more from Megala Chitravel
அமுத கீதம் Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் ஒருவனை கை பிடித்தே... Rating: 0 out of 5 stars0 ratingsமழை வில்! Rating: 0 out of 5 stars0 ratingsசந்தனமலர் சிரித்தது! Rating: 0 out of 5 stars0 ratingsமஞ்சள் மத்தாப்பு! Rating: 0 out of 5 stars0 ratingsசின்னஞ்சிறு கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsகாதலடி நீ எனக்கு..! Rating: 0 out of 5 stars0 ratingsசந்தன மின்னல்... Rating: 0 out of 5 stars0 ratingsமதுர நிலவே, மதுரா..! Rating: 0 out of 5 stars0 ratingsஎல்லே... இளங்கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsகனாக் கண்டேன் தோழி! Rating: 0 out of 5 stars0 ratingsஅம்மும்மா சொல்லும் அமுதகதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsபோய் வா சினேகிதி..! Rating: 0 out of 5 stars0 ratingsவிட்டு விடுதலையாகி... Rating: 0 out of 5 stars0 ratingsஆற்றோட்டத்துப் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsநிலவும் நீலமலர்களும்... Rating: 0 out of 5 stars0 ratingsமுத்தழகி Rating: 0 out of 5 stars0 ratingsவானமடி நீ எனக்கு... Rating: 0 out of 5 stars0 ratingsசெவ்வரளிப்பூ... Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை பட்டாம்பூச்சிகள்... Rating: 0 out of 5 stars0 ratingsசொர்ணப் புறா! Rating: 0 out of 5 stars0 ratingsநெஞ்சத்தில் நீ... Rating: 0 out of 5 stars0 ratingsநகுலனின் மாதங்கி..! Rating: 0 out of 5 stars0 ratingsநதியே பெண் நதியே Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to ஜெகதா
Related ebooks
Jegatha Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Rating: 4 out of 5 stars4/5என் உயிரே! Rating: 0 out of 5 stars0 ratingsதாய்ப் பறவை Rating: 0 out of 5 stars0 ratingsThaai Paravai Rating: 5 out of 5 stars5/5Nesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Putham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsAsaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Ragasiyam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Indriravu Unnai Rating: 5 out of 5 stars5/5Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Manathil Amarntha Mayile... Rating: 0 out of 5 stars0 ratingsNilavondru Kandean... Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsVendatha Varam Rating: 0 out of 5 stars0 ratingsKarpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsKal Vadiyum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsDowry Tharatha Gowri Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsEnkengum Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsஎங்கெங்கும் உன் வண்ணம் Rating: 0 out of 5 stars0 ratingsPerukku Oru Manaivi! Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsஏனழுதாய் என்னுயிரே! Rating: 0 out of 5 stars0 ratingsAnbe Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsSevvaralip Poo Rating: 0 out of 5 stars0 ratingsசெவ்வரளிப்பூ... Rating: 0 out of 5 stars0 ratingsEn Veedu Rating: 0 out of 5 stars0 ratingsPenmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Muththazhagi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for ஜெகதா
0 ratings0 reviews