Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neethikku Kaigal Neelam
Neethikku Kaigal Neelam
Neethikku Kaigal Neelam
Ebook78 pages30 minutes

Neethikku Kaigal Neelam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாதர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் சாரதா, பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்பவள். தன் எதிர்வீட்டில் வசிக்கும் மல்லிகாவிற்கு ஏற்படும் கொடுமைகளை இவள் தட்டிக் கேட்டாளா? சாரதாவால் மல்லகாவிற்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதை, 'லக்ஷ்மி'யின், 'நீதிக்குக் கைகள் நீளம்' கதையில் காணலாம்...!

Languageதமிழ்
Release dateMay 20, 2023
ISBN6580155608781
Neethikku Kaigal Neelam

Read more from Lakshmi

Related to Neethikku Kaigal Neelam

Related ebooks

Reviews for Neethikku Kaigal Neelam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neethikku Kaigal Neelam - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீதிக்கு கைகள் நீளம்

    Neethikku Kaigal Neelam

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    சாப்பாட்டறை மேஜையருகே வந்து உட்கார்ந்து கொண்டாள் சாரதா. வேலைக்காரியை அனுப்பி விட்டுத் தன் ஃபிளாட்டுக்குள் நிலவும் தனிமையில் காலை வேளையில் தன் கற்பனைகளில் அழுந்தியபடி, தேநீரைக் கோப்பையில் நிரப்பி மெல்லக் குடிப்பது ஒரு வழக்கமாகி விட்டிருந்தது.

    சமீபத்தில் எவ்வித பரபரப்புமின்றி அவள் வாழ்க்கை நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இது அவளுக்கு மிக்க அலுப்பைத் தந்தது.

    பம்பாயில் அவள் பார்த்துக் கொண்டிருந்த வேலையிலிருந்து ஓய்வு அடைந்ததும், கணவரது மரணத்திற்குப்பின் அங்கிருக்கப் பிடிக்காது சென்னைக்கு வந்தவள்.

    காவேரி நர்மதா மான்ஷன் என்ற கட்டடத்தில், சொந்தமானதொரு பிளாட்டை வாங்கிக் கொண்டு வசிக்கத் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி விட்டிருந்தது.

    அதற்குள் அவளுக்கு எத்தனை அனுபவங்கள்?

    அங்கு குடியேறிய சில மாதங்களிலேயே லாவண்யா என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கர விபத்தில், அவள் தானே தலையிட்டு உதவியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

    பின்னர் பக்கத்தில் உருவாகி விட்டிருந்த மதுரா அபார்ட்மெண்ட் என்ற கட்டடத்தில் குடியேறிய, சீதா கோதண்டராமன் என்ற நல்ல தம்பதிகளுக்கேற்பட்ட கொடுமையான விபத்தைக் கண்டு மனம் துடித்துப் போய், அதில் தலையிட்டு சீதாவுக்கு மறுவாழ்வு தரப் போராடிய அனுபவத்தை சுலபமாக மறந்து விட முடியுமா?

    பின்னர் ஒரு நாள் மாலை இருட்டும்போது அவளது ஃபிளாட்டுக் கதவை அவசரமாகத் தட்டி உள்ளே புகுந்து குமுறி அழுத அந்தப் பெண் குழந்தை அனிதாவுக்கு உதவி, அவளது பெற்றோர்களிடம் கொண்டு சேர்த்த நிகழ்ச்சியை அவள் மறக்கவில்லை.

    ஒவ்வொரு முறையும் மனதில் ஏற்பட்ட திருப்தியிலே அவள் வெகு நாட்கள் திளைத்துக் கொண்டிருந்தாள்.

    ஏதோ நம்மால் ஆன உதவியைச் செய்ய முடிந்ததே என்ற ஆனந்தம். மறுபடியும் வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக காலையில் எழுந்திருப்பது, குளிப்பது, சமைப்பது, சாப்பிடுவது, வெளியே கடைக்குப் போய் விடுவது, பின்னர் தூங்குவது என்றதொரு யந்திரகதியில் போய்க் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்து ஃபிளாட்டுக்காரர்களும் தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்ற ரீதியிலேதான் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

    இப்படியே போனால் பைத்தியம் பிடித்துவிடும். சந்தேகமேயில்லை என்று முணுமுணுத்தபடி கெட்டிலியிருந்த தேநீரை கோப்பையில் நிறைத்துக் கொண்டு மெல்ல சாப்பிட ஆரம்பித்தாள்.

    யாரிடமாவது பேசமாட்டோமா என்ற ஆதங்கம் அவளுக்கு.

    வேலைக்காரிக்குக் கூட நின்று நிதானித்து வேலை செய்யப் பொழுது இருக்கவில்லை. காலையில் பால் பொட்டலத்துடன் கதவைத் தட்டுகிறவள் ஓட்டமும் நடையுமாகத்தான் வேலைகளைக் கவனித்தாள்.

    என்ன மாரியாயி ஏன் இப்படி அவசரப்படறே? பேச்சுக்குத் தூண்டில் போட்டால் கூட அவள் பேசிக் கொண்டு நிற்கமாட்டாள்.

    நாலு வீட்டு வேலை எடுத்துக்கிட்டிருக்கேனே, நாய்க்கு நிக்க நேரமில்லை, தண்ணி குடிக்கப் பொழுதில்லைன்னு இருக்கு என் பொழப்பு பெருமூச்சுடன் வேகமாக தரையைப் பெருக்கத் தொடங்கி விடுவாள்.

    மாடிப்படிகளில் பலத்த காலடி ஓசை கேட்டுத் தேநீர் கப்பை சட்டென்று மேஜைமேல் வைத்தாள் சாரதா. எதிர் ஃபிளாட்டின் கதவுக்கு முன்னால் பிடி! இப்படித் தூக்கு! கீழே போட்டுடாதே என்று பல ஆண்களின் உரத்த குரல். சுவற்றில் தொங்கிய கடிகாரத்தில் மணி பத்தாகிக் கொண்டிருந்தது.

    அந்த வேளையில் அந்தக் கட்டடத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் வேலைக்குப் போய்விட்டிருப்பார்கள். வயசான கிழவர்கள், முன்னறையில் பத்திரிகைகளுடன் சுருண்டு கொண்டிருப்பார்கள். பெண்களுக்கு உள்ளே எத்தனையோ வேலைகள். குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கூடம் போய் விட்டால்... கட்டடமே ஒரு அமைதியில் மூழ்கிக் கிடக்கும்.

    அந்தச் சமயத்தில் இதென்ன கூப்பாடு?

    ஆவலை அடக்கமாட்டாது எழுந்து வந்து படுக்கை அறைக்குள் புகுந்து ஜன்னல் திரையை அகற்றி மெல்ல இடுக்கு வழியே பார்த்தாள்.

    சில மாதங்களாகக் காலியாகக் கிடந்த எதிர்

    Enjoying the preview?
    Page 1 of 1