Muthuramalinga Thevar Varalaru
By Guhan
()
About this ebook
Read more from Guhan
RAW Rating: 5 out of 5 stars5/5Musolini Rating: 0 out of 5 stars0 ratingsUlavu Ranigal Rating: 0 out of 5 stars0 ratingsCorporate Saamiyargal Rating: 0 out of 5 stars0 ratingsSherlock Holmessin Saagasa Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsIruvar: M.G.R vs Karunanidhi Uruvana Kathai Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Cinema Rating: 0 out of 5 stars0 ratingsHarshad Mehta Ennum Pana Saathan Rating: 0 out of 5 stars0 ratingsSherlock Holmessin Ninaivu Kurippugal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsPeriyar Rasigan Rating: 0 out of 5 stars0 ratingsCinema! Cinema!! - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMarilyn Monroe Rating: 0 out of 5 stars0 ratingsJ.J: Tamizhagathin Irumbu Penmani Rating: 0 out of 5 stars0 ratingsCredit Card Rating: 0 out of 5 stars0 ratingsPena Thirudan Rating: 5 out of 5 stars5/5Hitler - Oru Nalla Thalaivan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Muthuramalinga Thevar Varalaru
Related ebooks
Narendra Modi Atharavu Petra Oru Kaavi Bayangaravaathiyin Oppuhal Vaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsகனவு மயக்கங்கள் (மாயை) Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Odiyavan! Rating: 0 out of 5 stars0 ratings‘Jaihind’ Shenbagaramanin Veera Varalaaru Rating: 0 out of 5 stars0 ratingsKudiyarasu Thalaivar K.R.Narayanan Rating: 0 out of 5 stars0 ratingsMatha Maattram, Hindu Madham Pattri Gandhiji Enna Solkirar? Rating: 0 out of 5 stars0 ratingsArul Vaakku Rating: 0 out of 5 stars0 ratingsMulvelikku Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsMaanuda Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsArasiyalum Nagaichuvaiyum Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Gramangalil Pen Sisu Kolaigal! Rating: 0 out of 5 stars0 ratingsIndiravin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsKandathai Sollugirean Rating: 0 out of 5 stars0 ratingsUshaar Ulavaali Rating: 0 out of 5 stars0 ratingsEn Jannalukku Veliye - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsஜென் கதைகள் (Tamil) Rating: 4 out of 5 stars4/5Kanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsPazhaiya Paper Rating: 0 out of 5 stars0 ratingsNaan Kanda China Rating: 0 out of 5 stars0 ratingsBookmarks Rating: 0 out of 5 stars0 ratingsPantham - Pavithram Rating: 0 out of 5 stars0 ratingsJawaharlal Nehru Manavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2022 Rating: 0 out of 5 stars0 ratingsPirappum Sirappum Irappum Rating: 0 out of 5 stars0 ratingsHinduthvathin Adipadaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnna Mathiriyana Kaalathil Vazhgirom Rating: 0 out of 5 stars0 ratingsW.P.A Soundrapandian Rating: 0 out of 5 stars0 ratingsYutha Satham Rating: 5 out of 5 stars5/5
Reviews for Muthuramalinga Thevar Varalaru
0 ratings0 reviews
Book preview
Muthuramalinga Thevar Varalaru - Guhan
http://www.pustaka.co.in
முத்துராமலிங்க தேவர் வரலாறு
Muthuramalinga Thevar Varalaru
Author :
குகன்
Guhan
For more books
https://www.pustaka.co.in/home/author/guhan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. நேதாஜியைத் தேடி
2. குழந்தைப் பருவம்
3. தேவரின் வாலிபக் காலம்
4. கை ரேகை சட்டம்
5. தேவரும் காமராசரும்
6. சேவை மனப்பான்மை
7. ஃபார்வர்ட் ப்ளாக்
8. ஃபார்வர்ட் பிளாக் சுந்திரத்திற்கு பிறகு
9. தேவரின் சொற்பொழிவும் கட்டுரையும்
10. முதுகுளத்தூர் கலவரம்
11.கடைசி காலங்கள்
12. தேவர் மறைந்த பிறகு...
1. நேதாஜியைத் தேடி
நேதாஜி உயிரோடு இருக்கிறார்
என்று கல்கத்தாவில் இவர் பேசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், நேருவுக்கு எவ்வளவு பெரிய தலைவலியாக இருந்திருக்கும் என்று பேசியவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
நேதாஜி உயிருடன் இருப்பது நேருவுக்கு தெரிந்திருந்தும் அமைதியாக இருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் விமர்சனம் எழுந்தது. ஒருவேளை நேதாஜி உயிருடன் இருந்தால், தனது மதிப்பு குறைந்து விடும் என்று நேரு பயப்படுகிறார் என்று பேசினார்கள்.
இரண்டாம் உலகப் போரின் குற்றவாளியான நேதாஜியை நேரு மறைக்கிறாரா என்ற சந்தேகம் உலக நாடுகளுக்கு வந்தால் இந்தியாவின் பெயர் கெட்டுவிடும் என்று நேரு பயந்தார். நேதாஜியின் அபிமானிகள் நேதாஜி உயிருடன் இருப்பதாகதான் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘இவர்’ பேசிய பேச்சு இன்னும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.
காரணம், ஒரு பொது கூட்டத்தில் நேதாஜி பத்திரமாக இருக்கிறார். சீனா, திபெத் எல்லையோரமாக இருக்கிற சிக்காங் என்ற இடத்தில் இருக்கிறார். அவரைத் தேடித்தான் நான் போனேன். அவரை நேரடியாகச் சந்தித்தேன்
என்று பேசியிருந்தார். நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை இன்னும் மேலும் வலுவடைந்தது.
நேரு நேதாஜி மரணத்தை பற்றிய செய்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால், ஷா நவாஸ்கான் என்பவரின் தலைமையில் நேதாஜி மரணத்தை பற்றி விசாரிக்க ஒரு கமிஷனை அமைத்தார். அந்த கமிஷனில் அந்தமான் ஹை கமிஷனராக இருந்த மொய்தீன், நேதாஜியின் மூத்த சகோதரர் சுரேஷ் சந்திரபோஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
கமிஷன் அமைத்ததும் முதன் முதலில் அழைத்தது ‘இவரை’தான். அவரும் வந்தார்.
நேதாஜி அவர்கள் உயிருடன் இருக்கிறாரா என்ற செய்தியை விசாரிக்க உங்களை அழைத்தோம்.
நேதாஜி பற்றிய உண்மையை அவ்வளவு எளிதில் உங்களால் வெளியே கொண்டு வர முடியாது. தற்போது பதவியிலிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக் கமிஷன் இருக்க வேண்டும். உலகம் முழுக்க எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் போய் விசாரணை செய்யும் அதிகாரம் கமிஷனுக்கு வழங்கப்பட வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. அப்போதுதான் அது சாத்தியப்படும்.
அது மட்டுமல்ல, நீங்கள் எதிரெதிரான எத்தகைய செய்திகளைக் கொடுத்தாலும் நேதாஜி போஸ் சாகவே இல்லை என்பதுதான் எனது தீர்மானம்
என்று காந்தியடிகள் கூறியதை மேற்கொள் காட்டினார்.
இவர் கூறிய ஆலோசனை விசாரணை கமிஷன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
அதைப் பற்றி எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நேதாஜியை பார்த்ததாக சொல்கிறீர்களே! அவர் எங்கு இருக்கிறார்?
என்று கேட்டனர்.
அதற்கு அவர், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, அமெரிக்க அரசு அறிவித்த போர் குற்றவாளி பட்டியலில் நேதாஜி பெயர் இருக்கிறதா? அப்படி ஒரு வேளை அவர் பெயர் இருந்து, தலைமறைவாக இருக்கும் நேதாஜி, இந்தியாவுக்குள் வந்தால் அவரை அந்த நாடுகளிடம் காப்பாற்ற இந்திய அரசு உறுதியாக இருக்குமா?
என்று கேள்வி எழுப்பினார்.
போர்க் குற்றவாளிகள் பட்டியல் பற்றி இந்த கமிஷனுக்குத் தெரியாது. இந்திய அரசின் சார்பாக கமிஷனால் எந்த உறுதிமொழியும் வழங்கும் அதிகாரமில்லை. ஒரு வார காலத்தில் பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகளிடம் விசாரித்து போர்க் குற்றவாளிப் பற்றிய பட்டியலை சொல்கிறோம்
என்று ஷா நவாஸ்கான் கூறினார்.
நல்லது. நீங்கள் கேட்டு சொல்லுங்கள். அதன் பிறகு எனது சாட்சியத்தைச் சொல்கிறேன்
என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்,
ஒரு வாரக் காலம் டெல்லியில் தங்கியிருந்தார். பிறகு, ஷா நவாஸ்கானே தொலைப்பேசியில் இவரை தொடர்பு கொண்டார்.
நேதாஜியின் பெயர் உலகப் போர் குற்றவாளிகளின் பட்டியலில் இருக்கிறதா? இல்லையா? என்ற விவரத்தை அறிந்துக் கொள்ள முடியவில்லை.
என்றார்.
அப்படி என்றால் என்னால் கமிஷனுக்கு முன்பாக சாட்சியம் அளிக்க முடியாது. மன்னிக்கவும்
என்று சொல்லி தொலைப்பேசி வைத்துவிட்டார்.
கமிஷனின் விசாரணைக்கு உதவவில்லை என்றால் கூட பரவாயில்லை. இந்த விஷயத்தை அப்படியே விடாமல் டெல்லி பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி கொடுத்தார்.
நேதாஜி இறக்கவில்லை. உயிருடன் ஆரோக்கியமாக இருக்கிறார். அவருடன் இன்று வரை எனக்குத் தொடர்பு இருக்கிறது. இந்த விஷயத்தில் பிரதமருக்கு சந்தேகம் இருந்தால், அவரோ அல்லது அவருடைய பிரதிநிதியோ என்னுடன் வந்தால், நேதாஜி அவர்கள் இருக்கும் இடத்துக்கு நான் அவரை அழைத்துப் போகிறேன்.
மேலும், நேதாஜி பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள நமது பிரதமர் நேருவுக்கு நிஜமாகவே அக்கறையும், அபிமானமும் இருக்குமானால், நான் அவரை நேரில் சந்தித்து வேண்டிய விவரங்களைக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறேன்.
என்று கூறினார்.
அடுத்த நாள் டெல்லி பத்திரிக்கைகளில் இவர் கொடுத்தப் பேட்டிதான் தலைப்பு செய்தியாக இருந்தது. ஹிந்துஸ்தான் டைம்ஸ்
என்ற ஆங்கில பத்திரிக்கை ‘இவருடைய’ புகைப்படத்தை போட்டு இந்த விஷயத்தை தலையங்கமாகவே எழுதினார்கள்.
இவர் சொல்கிறபடி, நேரு ஒரு பிரதிநிதியை அனுப்பி, நேதாஜியைப் பற்றிய உண்மையை அறிந்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நேதாஜி விஷயத்தில் நேருவுக்கு அக்கரையில்லை என்று மக்கள் நினைப்பார்கள்.
என்று எழுதியிருந்தனர்.
முற்றுப் புள்ளி வைக்க நினைத்த விஷயத்திற்கு தொடர்கதை போல் தொடர்வது நேருவுக்கு பிடிக்கவில்லை. அதே சமயம், நேருவோ கமிஷனோ இவருடன் எந்த பிரநிதியையும் அனுப்பவில்லை. மற்ற சாட்சிகளை விசாரித்து கமிஷன் அறிக்கையை நேருவிடம் கொடுத்தனர்.
நேதாஜி இறந்தது உண்மைதான்
என்ற அறிக்கையை பார்லிமெண்ட்டில் வைத்து நேரு நிறைவேற்றினார்.
நேதாஜி விவகாரம் அத்தோடு முடியவில்லை. இந்திரா காந்தி பிரதமரானதும் இந்த விவகாரம் பூதமாக கிளம்பியது. நவாஸ்கான் கமிஷன் அறிக்கை நம்ப முடியாத ஒன்று. பிரதமர் மீண்டும் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்
என்று 250 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு கொடுத்தனர்.
1971ல் இந்திரா காந்தி கோஸ்வா கமிஷனை நியமித்தார். அப்போது முக்கிய சாட்சியாக அழைக்கப்பட்ட ‘இவர்’ உயிருடன் இல்லை. இவர் கூறி இருந்த இடங்களான சீனா, திபெத் போன்ற நாடுகளுக்கு போகாமல் உள்ளூரில் இருந்தவர்களை விசாரித்து நேதாஜி இறந்தது உண்மை என்ற அறிக்கையை சமர்பித்தனர். ஒருவேளை இரண்டாம் உலகப் போரில் நேதாஜி தப்பித்து உயிருடன் இருந்தாலும் 1971 வாக்கில் முதுமைக் காரணமாக இறந்திருந்திருக்கலாம்.
இறந்ததாக நம்பப்பட்ட நேதாஜிப் பற்றிய விசாரணை நடத்த இவருடைய பேச்சு இருந்திருக்கிறது. முருகன் பக்தாரான இவர் பெரியாருடன் மேடையில் அரசியல் பிரச்சாரம் செய்திருக்கிறார். கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். நேதாஜி மீது கொண்ட அபிமானத்தில் ‘நேதாஜி’ என்ற பத்திரிக்கை தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். சட்டசபை தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் ஒரே சமயத்தில் வென்றுயிருக்கிறார்.
இன்று இவரை ஜாதி தலைவராக மாற்ற நினைத்தவர்களின் முயற்சிகள் தோல்வி அடைந்து தமிழகத்தின் தலைவராக இருக்கிறார். இன்றைய தேதி வரை அவரை நினைவுகூராமல் தமிழகத்தில் அரசியல் நடத்தமுடியாது.
அபாரமான பேச்சு திறமை, தெய்வ பக்தி, மக்கள் மீதான அக்கரை என்று பொன் போல் ஜோலித்தவர். அவர்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள்.
இவர் வாழ்ந்த காலத்தில் இவரைப் புரிந்துக் கொண்டவர்கள் குறைவு. அப்படிப் புரிந்து கொண்டவர்கள் இவரை புரிந்துக் கொள்ளாதப்படி, தம்மால் முடிந்த அளவிற்கு இடையுறு செய்தனர். அதனாலே தேவரின் முழுமையான ஆளுமை பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் போயிற்று. தேவரைக் கண்டு பொறாமைப்பட்டவர்களும், அவரை எதிர்ப்பவர்களும் அதைதான் விரும்பினார்கள். அவர்கள் விரும்பியப்படி நடந்தது.
அரசியல்வாதி. ஆன்மிகவாதி. மக்கள் தலைவர். விடுதலைப் போராட்ட தியாகி. தொழிலாளர் தலைவர். என்று தேவரைப் பற்றி சொல்ல எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அவரை ஒரு அவதாரப் புருஷராகவே எத்தனையோ பேர் நினைத்து வாழ்கிறார்கள்.
தேவர் தமிழகத்தில் நேதாஜியின் கொள்கையின் பிம்பம். அவரின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வது 1950 - 60 தமிழக அரசியலை தெரிந்துக் கொள்வதுக்கு சமம்.
இன்று, தமிழகத்தில் யாருடன் கூட்டனி வைக்கலாம் என்று யோசிக்கும் காங்கிரஸ் கட்சியை ஒரு காலத்தில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தது. இன்று புதிதாக கட்சி தொடங்கியவர்கள் கூட காங்கிரஸ்யை விமர்சிக்கும் அளவிற்கு ஆளும் கட்சியாக இருக்கும் போது அவர்களை விமர்சிப்பது அவ்வளவு எளிதாக விஷயமில்லை. ஆனால், காங்கிரஸ்யை தொடர்ந்து எதிர்த்து பேசியவர்கள் இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள். இன்னொருவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
பெரியாரும், தேவரும் கருத்தளவில் வேறுபட்டு இருந்தாலும் காங்கிரஸ் எதிர்ப்பில் ஒன்றுப்பட்ட கருத்துடையவர்களாக இருந்துள்ளார்கள்.
முத்துராமலிங்கத் தேவரை தேவர்
என்ற சாதி வட்டத்திற்குள் பார்க்காமல் ஒரு மனிதனாகவும், மக்கள் தலைவனாகவும் நடுநிலையாக அலசுவதே இந்த வாழ்க்கை வரலாற்றின் நோக்கம்.
2. குழந்தைப் பருவம்
பெரியவர்கள் குழந்தைகள் தங்கள் பரம்பரை சொல்லும் செல்வங்களாக பார்ப்பார்கள். ஒரு சில குழந்தைகள் மட்டுமே பரம்பரையின் பெயரை பல தலைமுறைகளுக்கு பேச வைப்பார்கள். தேவர் அவர்கள் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவருக்கு வாரிசில்லை என்று சொல்லுபவர்கள், குழந்தைகள் பெற்றவர்களை எல்லோரையும் இந்த மண் நினைவு வைத்திருக்கவில்லை.
தேவரோடு அவரது வம்சம் முடிந்ததாக கூறுபவர்கள், அடுத்த தலைமுறைக்கும் அவரது குடும்பப் பெயரை கொண்டு செல்லும் அளவிற்கு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். தேவரைப் பற்றி தவறாக பேசுபவர்கள் அன்றைய காலத்தில் தங்கள் அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் பரப்பிய பிரச்சாரத்தை நம்பியவர்கள்தான். தேவரைப் பற்றி முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவரைப் பற்றி புரிந்துக் கொள்ளும் முயற்சியை மேற்கொண்டாலே தேவர் எப்படிப்பட்டவர்கள் என்பது புரியத் தொடங்கிவிடும்.
முத்துராமலிங்க தேவரின் கொள்ளு தாத்தா ஆதி முத்துராமலிங்க தேவர் மிக நன்மதிப்புடன் வாழ்ந்தவர். அவர் இருந்த வீட்டை கிழக்கு வீடு என்று அழைப்பார்கள். அவர் வாழ்ந்த காலத்தில் ராமநாதபுரத்தை ஆட்சி செய்த துரைராஜா என்று அழைக்கப்படும் முத்துராமலிங்க சேதுபதியுடன் நெருக்கமாக பழகக்கூடியவர்.
முத்துராமலிங்க சேதுபதியின் நட்பால், ஆதி முத்துராமலிங்க தேவரின் வீட்டில் செல்வமும், பெயரும் வளர ஆரம்பித்தது. பசும்பொன் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி தேவரின் சகோதரி அருளாயியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சீதையம்மாள், ருக்மணியம்மாள் என்ற இரண்டு பெண் குழந்தைகளும், வெள்ளைச்சாமி தேவர் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. (வெள்ளைச்சாமி தேவரை பின்னாளில் சிறைமீட்ட தேவர் என்று அழைத்தனர்)
ஆதி முத்துராமலிங்க தேவர், மறவர் இனத்தை சாராத ஒரு அனாதை குழந்தையை தத்தெடுத்து வளர்த்தவர். அந்த குழந்தையின் பெயர் குழந்தைசாமி என்கிற வைத்தியம் பிள்ளை. ஆதி முத்துராமலிங்க தேவருக்கு உதவியாக இருந்தவர் வைத்தியம் பிள்ளைதான்.
வெள்ளைச்சாமியின் வாலிப காலத்திலே அவரது அப்பா ஆதி முத்துராமலிங்க தேவர் மிகவும் உயர்ந்த நிலையில்தான் இருந்தார். கிட்டதட்ட முப்பத்திரண்டு கிராமங்கள் அந்த குடும்பத்திற்கு சொந்தமாக இருந்தது. வெள்ளைச்சாமி தேவர் அவருடைய தாய் மாமாவான முனியாண்டி தேவரின் மகள் பொன்னம்மாளைத் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மீனாம்பிகை என்ற பெண் குழந்தையும், உக்கிரபாண்டிய தேவர் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. (முத்தராமலிங்க தேவரின் தந்தை இவர் தான்.
1903ம் ஆண்டு உடல்நல கோளாறால் வெள்ளைச்சாமி தேவர் இறந்துப் போனார். அவரது மகன் உக்கிரபாண்டி தேவர் படித்தவரில்லை. அனுபவ படிப்பு மட்டும்தான். பல சொத்துக்கள் உள்ள குடும்பம். பெயர் பெற்ற குடும்பம். அதை திறமையானவர் நிர்வாகம் செய்ய வேண்டும் என்று உக்கிரபாண்டிய தேவரின் மாமா சவுந்திரபாண்டிய தேவர் நினைத்தார். திறமையானவர் நிர்வாகம் செய்யும் மேலாளராக வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று நினைத்தார்.
அப்போது அவர்கள் குடும்பத்துக்கு நினைவிற்கு வந்தவர் ஆதி முத்துராமலிங்க தேவரின் தத்துப்பிள்ளையான குழந்தைசாமி என்கிற வைத்தியம் பிள்ளை.
உக்கிரபாண்டி தேவருக்கு படிப்பறிவு குறைவு. நீதான் அவனது அருகில் இருந்து எல்லா சொத்துக்களையும் நிர்வாகம் செய்ய வேண்டும்
கிழக்கு வீட்டுக்கு நான் பட்ட நன்றி கடனை அடைக்க சந்தர்ப்பம் வழங்கியதற்கு நன்றி
என்றார் குழந்தைசாமி பிள்ளை.
இனி எல்லாம் உன் பொறுப்பு
என்று சொல்லி எல்லா பொறுப்புகளும் குழந்தைசாமி பிள்ளை கையில் ஒப்படைக்கப்பட்டது.
உக்கிரபாண்டி தேவருக்கு ராணியம்மாள், ரங்கநாயகி என்று இரண்டு அத்தைகள். இருவருக்கும் இந்திராணி, காசிலட்சுமி என்று இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். மறவர் இனத்தில் உறவு விட்டுப் போய்விடக்கூடாது என்று நினைப்பவர்கள். ஆதனால், உக்கிரபாண்டி தேவருடைய இரண்டு பெண் பிள்ளைகளையும் 31.8.1906 அன்று திருமணம் செய்து கொண்டார். திருமணமாகும் போது காசிலட்சுமி பருவமடையாத சிறுமியாக இருந்தாள்.
உக்கிரபாண்டி தேவருக்கும், இந்திராணிக்கும் 29.6.1907 அன்று ஒரு பெண் குழந்தை பிறந்து, அதற்கு ‘ஜானகி’ என்று பெயர் வைத்தனர்.