Periyar Rasigan
By Guhan
()
About this ebook
கறுப்பு நிற சான்ட்ரோ கார் அண்ணா நகர் வழியாக சென்றுகொண்டு இருந்தது. ஆறுபது வயதில் ஒரு ஆணும், ஐம்பது வயதில் பெண்ணும் பிரயாணம் செய்து கொண்டு இருந்தனர். முகத்தில் அதிக நிம்மதியும், மன அமைதியுடனே அந்த முதியவர் தெரிந்தார். உலகத்தில் நான் தான் அதிக சந்தோஷமுடன் வாழும் மனிதன் என்ற பெருமிதம் அவர் மனதில் நிறைந்து இருந்தது. இந்த நிமிடமே செத்தாலும் பரவாயில்லை. தன் வாழ்க்கையில் எல்லாக் கடமைகளை முடித்த சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.
ஒரு வீட்டுக்குள் மெதுவாக நுழைய, காரில் இருந்து அந்த முதியவரும், பெண்மணியும் இறங்கினர். அந்த முதியவரை பார்த்ததும் வீட்டில் இருந்து மூன்று வயது ஆண் குழந்தை ஆசையாக அவனை நோக்கி ஓடி வந்தது, அவனை “தா...த்தா...” என்றப்படி கட்டி அணைத்துக் கொண்டார்.
தன் கணவர் தண்ணீர் கேட்டபோது அவருக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்ற நினைவே அப்போது தான் அவளுக்கு வந்தது. கையில் மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். அப்போது வெளியே அவர்கள் வீட்டு முன்பு ஒரு பைக் வந்து நிற்கும் சத்தம் அவளுக்கு கேட்கிறது. வண்டி நிறுத்தும் சத்தத்தை வைத்தே சிறுவன் ஆகாஷ் "அப்..பா... வந்தாச்சு” என்று சொன்னான்.
தன் மகனிடம் பேசிக் கொண்டு இருந்ததில் தன் கணவனுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதை அவள் மறந்துவிட்டாள்.
சிவகாமியின் கணவர் தன் கையை நெஞ்சில் வைத்தப்படி சோபாவில் சாய்ந்தார். ரகு, சிவகாமி அழைக்க கூட அவரால் குரல் எழுப்ப முடியவில்லை. அவரின் கண்கள் மெல்ல மெல்ல மூடின. இதய துடிப்பு மெதுவாக குறையத் தொடங்கின.
தன் மாமனார் பேச்சு, மூச்சு இல்லாமல் சோபாவில் மயங்கி கிடப்பதை பார்த்து "ஐயோ மாமா!! என்ன ஆச்சு..?” என்று அலறிய படி சோபாவை நோக்கி ஓடினாள்.
வினிதாவின் குரலை கேட்ட சிவகாமியும், ரகுவும் ஓடினர். தன் தந்தையின் நாடி துடிப்பு மெல்ல மெல்ல குறைந்துக் கொண்டு இருப்பதை ரகு உணர்ந்தான். திடு திடுவென ஓடி செல்போனை எடுத்து தன் மருத்துவ மனையில் இருந்து ஆம்பிலன்ஸை வரவழைக்கிறான்.
தான் ஒரு டாக்டராக இருந்தாலும் தன் உறவுகள் என்று வந்தவுடன் படித்த படிப்பு உதவ முடிந்து முடியாமல் இருந்தது. மனம் பாமரன் போல பயம் சூழ்ந்துக் கொள்கிறது. அப்படி ஒரு நிலையில் தான் ரகு இருந்தான்.
ரகுவின் தந்தை ஐ.சி.யூவில் சேர்க்கப்பட்டு, ட்ரிப்ஸ் ஏத்தினர். ஒவ்வொரு இடத்திலும் ஒரு இயந்திரம் பொருத்தி இருந்தது. மருத்துவரான ரகு இது பழக்கம் என்றாலும் தன் தந்தைக்கு என்று வந்தவுடன் அவனால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. அவனால் தன் தந்தையை இப்படி பார்க்க முடியவில்லை. வேறு ஒரு மருத்துவரிடம் தன் தந்தையை கவனிக்க சொல்லி ஐ.சி.யூவில் இருந்து வெளியே வந்தான்.
ரகுவின் தந்தையின் ரிப்போர்ட் ஒவ்வொன்றையும் பெரிய டாக்டர் புரட்டிப் பார்த்தார். இதற்கு முன்பு அவருக்கு மாரடைப்பு வந்ததில்லை. இது தான் முதல் முறை. அவன் தந்தையின் இதய துடிப்பு குறைந்துக் கொண்டு இருந்ததே தவிர, எந்த முன்னேற்றமும் அடையவில்லை. ரகுவின் தந்தை மரணத்தை நோக்கி சென்றுக் கொண்டு இருப்பதை உணர்ந்தார்.
“மிஸ்டர் ரகு..! ஐ யம் வெரி ஸாரி... இன்னும் இரண்டு மணி நேரம் தான் உங்க அப்பா உயிரோட இருப்பாரு” என்று பெரிய டாக்டர் சொல்ல சொல்ல ரகுவின் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டிக் கொண்டு இருந்தது.
ஒவ்வொரு மனிதன் இறக்கும் முன்பு இரண்டு மணி நேரம் தன் உள்ளுணர்வுடன் பேசிக் கொள்வானாம். தன்னை சுற்றி இருப்பவர்கள் அழுவதை பார்த்து ஏன் அழுகிறார்கள் என்று பேசிக் கொள்வார்களாம். தன்னுடம் பேசிக் கொண்டே மெல்ல மெல்ல உயிர் போகுமாம். இதை உணர்ந்து சொன்னவன் யாருமில்லை. கற்பனை என்று சொன்னாலும் உண்மை என்று நிருபிக்க ஆதாரமில்லை. ஒரு வேளை இது உண்மையாக இருந்தால் தன் தந்தை தன்னை பற்றி என்ன பேசுவார் என்று ரகு தனக்குள் கேட்டுக் கொண்டான்.
“என் மகன் நினைத்தது உண்மை தான். ஒவ்வொரு மனிதன் இறக்கும் முன் தன் உள்ளுணர்வுடன் இரண்டு மணி நேரம் பேசிக் கொள்வான். தன் வாழ்நாளில் கடந்து வந்தவர்களை பற்றி நினைத்துக் கொள்வான். தன் பிரிவால் பாதிக்கப்படுபவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வான். இது வரை வாழ்ந்த நாளை இரண்டு மணி நேரத்திற்குள் நினைவோடையாக ஓட்டிக் கொள்வான். அப்படித் தான் நான் என் நினைவோடையை ஓட்டப்போகிறேன். என் நினைவுகளை நீங்கள் எப்படி புரட்டி பார்த்தாலும் முக்கியமான மூன்று பேர் இருப்பார்கள். அந்த மூன்று பேர்களும் பெண்கள். அந்த மூன்று பெண்கள் தான் என்னை இதுவரை இயக்கியவர்கள். அவர்கள் தான் என்னை வாழ வைத்தவர்கள். நான் வாழ காரணமாக இருந்தவர்கள். இப்போது நான் சாக காரணமாக இருப்பவர்களும் அவர்கள் தான்.”
“அந்த மூன்று பெண்கள் தான் காரணம்.”
இனி கதைக்குள் செல்லுங்கள்
Read more from Guhan
Corporate Saamiyargal Rating: 0 out of 5 stars0 ratingsMusolini Rating: 0 out of 5 stars0 ratingsRAW Rating: 5 out of 5 stars5/5Ulavu Ranigal Rating: 0 out of 5 stars0 ratingsMuthuramalinga Thevar Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsIruvar: M.G.R vs Karunanidhi Uruvana Kathai Rating: 0 out of 5 stars0 ratingsMarilyn Monroe Rating: 0 out of 5 stars0 ratingsCredit Card Rating: 0 out of 5 stars0 ratingsSherlock Holmessin Saagasa Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsSherlock Holmessin Ninaivu Kurippugal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Cinema Rating: 0 out of 5 stars0 ratingsCinema! Cinema!! - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsJ.J: Tamizhagathin Irumbu Penmani Rating: 0 out of 5 stars0 ratingsHitler - Oru Nalla Thalaivan Rating: 0 out of 5 stars0 ratingsPena Thirudan Rating: 5 out of 5 stars5/5Harshad Mehta Ennum Pana Saathan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Periyar Rasigan
Related ebooks
Kaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsUnnidam Mayangukirean Rating: 5 out of 5 stars5/5Nizhalin Kural Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsAngey... Inkey... Enkey? Rating: 0 out of 5 stars0 ratingsParijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsJanakiyin Dairy Kurippugal Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Linga Bairavi Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsEn Murai Vanmurai Rating: 0 out of 5 stars0 ratings23 - m Padi Rating: 5 out of 5 stars5/5Adutha Idhazhil Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsEngeyum Pogavillai Rating: 0 out of 5 stars0 ratingsநான் ராஜா நீ என் ரோஜா! Rating: 0 out of 5 stars0 ratingsMannippom Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Pookal Rating: 5 out of 5 stars5/5Konjum Mainaakkale 2 Rating: 0 out of 5 stars0 ratingsNenjaankoottil Neeye Nirkkirai Rating: 0 out of 5 stars0 ratingsThanithiru! Vizhithiru! Rating: 5 out of 5 stars5/59 Tharavum 9 Giragangalum Rating: 0 out of 5 stars0 ratingsOruvan Manathu Onbathada! Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsUnakku Mattum Solvean Rating: 5 out of 5 stars5/5Karpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsPanama... Pasama... Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsPaathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Periyar Rasigan
0 ratings0 reviews
Book preview
Periyar Rasigan - Guhan
http://www.pustaka.co.in
பெரியார் ரசிகன்
Periyar Rasigan
Author:
குகன்
Guhan
For more books
http://www.pustaka.co.in/home/author/guhan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
பாகம் ஒன்று
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
பாகம் இரண்டு
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
பாகம் மூன்று
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
முன்னுரை
கறுப்பு நிற சான்ட்ரோ கார் அண்ணா நகர் வழியாக சென்றுகொண்டு இருந்தது. ஆறுபது வயதில் ஒரு ஆணும், ஐம்பது வயதில் பெண்ணும் பிரயாணம் செய்து கொண்டு இருந்தனர். முகத்தில் அதிக நிம்மதியும், மன அமைதியுடனே அந்த முதியவர் தெரிந்தார். உலகத்தில் நான் தான் அதிக சந்தோஷமுடன் வாழும் மனிதன் என்ற பெருமிதம் அவர் மனதில் நிறைந்து இருந்தது. இந்த நிமிடமே செத்தாலும் பரவாயில்லை. தன் வாழ்க்கையில் எல்லாக் கடமைகளை முடித்த சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.
காரின் ஜன்னல் வழியே தன் நினைவுகளை பரந்தப்படி அவர் வந்துக் கொண்டு இருந்தார். பக்கத்தில் இருப்பவர்கள் யாருடனும் பேசவில்லை. எப்படி தொடங்கிய தன் வாழ்க்கை இப்போது ஊரே பொறாமைப் படும் படி வாழ்க்கிறோம். இனி தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற ஆணவம் மெல்ல மெல்ல அவர் உள்ளத்தில் குடிபுகத்தொடங்கியது. கறுப்பு நிற சான்ட்ரோ ஒரு வீட்டுக்குள் மெதுவாக நுழைய, காரில் இருந்து அந்த முதியவரும், பெண்மணியும் இறங்கினர். அந்த முதியவரை பார்த்ததும் வீட்டில் இருந்து மூன்று வயது ஆண் குழந்தை ஆசையாக அவனை நோக்கி ஓடி வந்தது, அவனை தா...த்தா...
என்றப்படி கட்டி அணைத்துக் கொண்டார்.
அந்த முதியவரும் சிறுவனை தூக்கியவாரு வீட்டுக்குள் நுழைந்தார். இவர்கள் வருகையை பார்த்து உள்ளே இருந்து எதிர்பார்த்த இருபத்தியைந்து வயது உள்ள ஒரு பெண் வெளியே வந்து வாங்க மாமா... வாங்க அத்தே... பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது...?
என்றாள்.
அந்த முதியவர் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக சிரித்தார். அவருடன் வந்த அவனது மனைவி நல்லா இருந்துச்சு... ரகு வீட்டுல இல்ல...
என்று விசாரித்தாள்.
அவரு வெளியே போய்யிருக்காரு அத்தே... உள்ள வாங்க...
என்று அழைத்தப்படி அவர்கள் கையில் இருந்த பெட்டியை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தாள்.
ஆகாஷ் கண்ணு எப்படி இருக்க... பாட்டி, தாத்தா காணோம்னு தேடுனியா...
என்று தன் கணவன் கையில் இருக்கும் பேரனை கொஞ்சினாள்.
சோர்ந்த நிலையில் அந்த முதியவர் தன் பேரனுடன் சோபாவில் அமர்ந்தார். வயதான பெண்ணும், அவள் மருமகளுடன் பேசியபடி சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
சிவகாமி...! குடிக்க தண்ணி கொண்டுவாம்மா...
என்று தன் மனைவியை அழைத்தார்.
தன் கணவர் தண்ணீர் கேட்டபோது அவருக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்ற நினைவே அப்போது தான் அவளுக்கு வந்தது. கையில் மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். அப்போது வெளியே அவர்கள் வீட்டு முன்பு ஒரு பைக் வந்து நிற்கும் சத்தம் அவளுக்கு கேட்கிறது. வண்டி நிறுத்தும் சத்தத்தை வைத்தே சிறுவன் ஆகாஷ் அப்..பா... வந்தாச்சு
என்று சொன்னான்.
ரகு வீட்டு மணி அடிக்கும் முன்பே சிவகாமி கதவை திறக்கிறாள். அம்மா, அப்பாவின் வரவை எதிர்பார்த்து தான் ரகு வீட்டுக்கு வந்தான்.
வாம்மா... ஊருல்ல ப்ரியா எப்படி இருக்கா...! புது இடம் அவளுக்கு புடிச்சிருக்கா...
என்று வந்தவுடன் தங்கையை பற்றி விசாரித்தான்.
ஏன்டா... இரண்டு நாள் கழிச்சு ஊருல இருந்து வந்திருக்கேன். என்ன பத்தி ஏதாவது கேட்டியா... உனக்கும், உங்க அப்பாவுக்கும் ப்ரியா தான் முக்கியம்...
என்ற செல்லமாக தன் மகனை கடிந்துக் கொண்டாள் சிவகாமி.
நீதான் அம்மா எனக்கு எல்லாமே... புதுசா கல்யாணம் ஆனவ... எப்படி இருக்கா கேட்டா அது தப்பா... இதுக்கு போய் கோபப்படுற...
என்று தன் அம்மாவை சமாதானப்படுத்தினான்.
நம்ப புது மாப்பிள்ள என்ன சொன்னாரு...
என்றான்.
அவருக்கு அண்ணா நகருல ஒரு வீடு வேணும்னு கேக்குறாரு... வாங்கி தரியா...
என்று ஏளனமாக கேட்டாள்.
புதுசா வீடு என்னால வாங்கித் தர முடியாது. வேணும்னா நம்ப வீட்ட எடுத்துக்க சொல்லு. நம்ப ப்ரியாவுக்காக நா வாடகை வீட்டுல கூட இருப்பேன்...
சிரித்தப்படி கூறினான்.
ரகு செயற்கைத்தனமாக சொன்னாலும், தன் தங்கை ப்ரியா மீது அதிக பாசமுடையவன். தங்கை மீது ரகு வைத்திருந்த பாசத்தை பார்த்து சிவகாமி மனதில் பூரிப்படைந்தாள். தன் மகனிடம் பேசிக் கொண்டு இருந்ததில் தன் கணவனுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதை அவள் மறந்துவிட்டாள்.
சிவகாமியின் கணவர் தன் கையை நெஞ்சில் வைத்தப்படி சோபாவில் சாய்ந்தார். ரகு, சிவகாமி அழைக்க கூட அவரால் குரல் எழுப்ப முடியவில்லை. அவரின் கண்கள் மெல்ல மெல்ல மூடின. உதடுகள் பேச முடியாமல் தவித்தன. கால்கள் வளு இழந்து இருந்தன. இதய துடிப்பு மெதுவாக குறையத் தொடங்கின.
ரகு தன் அம்மாவிடம் பேசியதில் தன் தந்தையை கவனிக்கவில்லை. அவளும் தன் கணவனை பற்றி யோசிக்கவில்லை. சமையல் அறையில் இருந்து ரகுவின் மனைவி வினிதா வெளியே வந்தாள்.
தன் மாமனார் பேச்சு, மூச்சு இல்லாமல் சோபாவில் மயங்கி கிடப்பதை பார்த்து ஐயோ மாமா!! என்ன ஆச்சு..?
என்று அலறிய படி சோபாவை நோக்கி ஓடினாள்.
வினிதாவின் குரலை கேட்ட சிவகாமியும், ரகுவும் ஓடினர். தன் தந்தையின் நாடி துடிப்பு மெல்ல மெல்ல குறைந்துக் கொண்டு இருப்பதை ரகு உணர்ந்தான்.
திடு திடுவென ஓடி செல்போனை எடுத்து தன் மருத்துவ மனையில் இருந்து ஆம்பிலன்ஸை வரவழைக்கிறான். ரகு போன் போட்ட பத்து நிமிடத்தில் சைரன் சத்ததுடன் அவன் வீட்டுக்கு முன் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. சிவகாமி கண்ணீர் தளும்ப தன் கணவனை பார்க்கிறாள்.
வினிதா...! நீ அம்மாவையும், பையனையும் கார்ல கூட்டிட்டு வா. நா அப்பாவோட ஆம்பிலன்ஸ்ல போறேன்...
என்று கூறிவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வண்டியில் ஏறினான். தன் தந்தைக்கு வந்தது மாரடைப்பு என்று சிவகாமியிடம் ரகு சொல்லவில்லை. எப்படி காப்பாற்றப் போகிறோம் என்ற பயம் கலந்த பதட்டத்துடன் ரகு வண்டியில் வந்துக் கொண்டு இருந்தான்.
தான் ஒரு டாக்டராக இருந்தாலும் தன் உறவுகள் என்று வந்தவுடன் படித்த படிப்பு உதவ முடிந்து முடியாமல் இருந்தது. மனம் பாமரன் போல பயம் சூழ்ந்துக் கொள்கிறது. அப்படி ஒரு நிலையில் தான் ரகு இருந்தான்.
ரகுவின் தந்தை ஐ.சி.யூவில் சேர்க்கப்பட்டு, ட்ரிப்ஸ் ஏத்தினர். ஒவ்வொரு இடத்திலும் ஒரு இயந்திரம் பொருத்தி இருந்தது. மருத்துவரான ரகு இது பழக்கம் என்றாலும் தன் தந்தைக்கு என்று வந்தவுடன் அவனால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. அவனால் தன் தந்தையை இப்படி பார்க்க முடியவில்லை.
வேறு ஒரு மருத்துவரிடம் தன் தந்தையை கவனிக்க சொல்லி ஐ.சி.யூவில் இருந்து வெளியே வந்தான். அப்போது, சிவகாமியும், வினிதாவும் அவனை நோக்கி வருவதை பார்க்கிறான். என்னடா...! அப்பாவுக்கு எப்படி இருக்கு?
இப்ப தான் ட்ரிட்மென்ட் ஆரம்பிச்சிருக்காங்க... கொஞ்ச நேரம் கழிச்சு தான் எதையும் சொல்ல முடியும்..."
அவர்களின் நல்ல நேரம் பெரிய டாக்டர் ஐ.சி.யூவுக்கு வந்துக் கொண்டு இருந்தார்.
ரகு! இப்ப தான் நர்ஸ் உமா விஷயம் சொன்னாங்க... உங்க அப்பாவ அட்மிட் பண்ணியாச்சா...
.
உள்ள தான் ஸார் இருக்காரு...
"ரகு! நீங்க மட்டும் என் கூட வாங்க...'' என்று ரகுவை அழைத்து உள்ளே சென்றார்.
ரகுவின் தந்தையின் ரிப்போர்ட் ஒவ்வொன்றையும் பெரிய டாக்டர் புரட்டிப் பார்த்தார். இதற்கு முன்பு அவருக்கு மாரடைப்பு வந்ததில்லை. இது தான் முதல் முறை. அவன் தந்தையின் இதய துடிப்பு குறைந்துக் கொண்டு இருந்ததே தவிர, எந்த முன்னேற்றமும் அடையவில்லை. ரகுவின் தந்தை மரணத்தை நோக்கி சென்றுக் கொண்டு இருப்பதை உணர்ந்தார். பெரிய டாக்டர் முகத்தை பார்த்ததும் என்ன நிலைமை என்று யூகிக்க முடிந்தது.
மிஸ்டர் ரகு..! ஐ யம் வெரி ஸாரி... அஸ்யே டாக்டர். நா உங்களுக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை. இன்னும் இரண்டு மணி நேரம் தான் உங்க அப்பா உயிரோட இருப்பாரு
என்று பெரிய டாக்டர் சொல்ல சொல்ல ரகுவின் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டிக் கொண்டு இருந்தது. வெளியே அழுது கொண்டு இருக்கும் அம்மாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்று ஐ.சி.யூ அறையில் இருந்தபடி அம்மாவைப் பார்த்தான்.
ரகு! கன்ட்ரோல் யுவர்செல்ப்... நீங்க இப்ப தான் தைரியமா இருக்கணும். உங்க அம்மாவுக்கு இப்ப நீங்க தான் ஆதரவு. டேக் கேர்...
என்று ஆறுதல் கூறி அந்த இடத்தை விட்டு பெரிய டாக்டர் நகர்ந்தார்.
தன் தந்தை கையை பிடித்தப்படி ரகு அழுது கொண்டு இருந்தான்.
தன் கையை ரகு தான் பிடித்திருக்கிறான் என்று அவன் அப்பாவால் உணர முடிந்தது. அவர்கை ரகுவின் உப்பு கண்ணீரால் நனைந்தது.
ஒவ்வொரு மனிதன் இறக்கும் முன்பு இரண்டு மணி நேரம் தன் உள்ளுணர்வுடன் பேசிக் கொள்வானாம். தன்னை சுற்றி இருப்பவர்கள் அழுவதை பார்த்து ஏன் அழுகிறார்கள் என்று பேசிக் கொள்வார்களாம். தன்னுடம் பேசிக் கொண்டே மெல்ல மெல்ல உயிர் போகுமாம். இதை உணர்ந்து சொன்னவன் யாருமில்லை. கற்பனை என்று சொன்னாலும் உண்மை என்று நிருபிக்க ஆதாரமில்லை. ஒரு வேளை இது உண்மையாக இருந்தால் தன் தந்தை தன்னை பற்றி என்ன பேசுவார் என்று ரகு தனக்குள் கேட்டுக் கொண்டான்.
தன் தந்தை இரண்டு மணி நேரம் நிம்மதியாக இருக்கட்டும் என்று வெளியே வந்தான். இறக்க போகும் தந்தை பற்றி சொல்லி தன் அம்மாவின் நம்பிக்கை கொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அவன் அம்மாவிடம் எதுவும் கூறவில்லை. சிவகாமியின் நம்பிக்கை இரண்டு மணி நேரமாவது உயிருடன் இருக்கட்டும் என்று அமைதியாக இருந்தான்.
என் மகன் நினைத்தது உண்மை தான். ஒவ்வொரு மனிதன் இறக்கும் முன் தன் உள்ளுணர்வுடன் இரண்டு மணி நேரம் பேசிக் கொள்வான். தன் வாழ்நாளில் கடந்து வந்தவர்களை பற்றி நினைத்துக் கொள்வான். தன் பிரிவால் பாதிக்கப்படுபவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வான். இது வரை வாழ்ந்த நாளை இரண்டு மணி நேரத்திற்குள் நினைவோடையாக ஓட்டிக் கொள்வான். அப்படித் தான் நான் என் நினைவோடையை ஓட்டப்போகிறேன். என் நினைவுகளை நீங்கள் எப்படி புரட்டி பார்த்தாலும் முக்கியமான மூன்று பேர் இருப்பார்கள். அந்த மூன்று பேர்களும் பெண்கள். அந்த மூன்று பெண்கள் தான் என்னை இதுவரை இயக்கியவர்கள். அவர்கள் தான் என்னை வாழ வைத்தவர்கள். நான் வாழ காரணமாக இருந்தவர்கள். இப்போது நான் சாக காரணமாக இருப்பவர்களும் அவர்கள் தான்.
அந்த மூன்று பெண்கள் தான் காரணம்.
பாகம் ஒன்று
1
நீங்கள் இதுவரை என்னை ஆகாஷின் தாத்தாவாக, சிவகாமியின் கணவனாக, ரகுவின் தந்தையாக தான் பார்த்துக் கொண்டு இருந்தீர்கள். மனைவி, மகன், பேரன் எல்லாம் வாழ்க்கையின் இரண்டாவது பாதியில் வருபவர்கள். ஆனால், எல்லோருடைய வாழ்கையிலும் முதல் பாதியில் வருபவர்கள் முக்கியமான இருவர் இருக்கிறார்கள். அப்பா, அம்மா. என்னை மட்டுமல்ல இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த காரணமே இந்த இரண்டு பேர் தான்.
என் உள்ளுணர்விடம் பேச வந்த உங்களிடம் என்னை அறிமுகம் செய்யாமல் பேசுகிறேன். என் பெயரை உங்களிடம் சொல்லவில்லையே...!
என் பெயர் சந்திரசேகர். சுருக்கமாக 'சந்திரு' என்று அழைப்பார்கள்.
ஜனவரி 26, 1950 என்று சொன்னவுடன் எல்லோரும் குடியரசு தினம் என்று சொல்வீர்கள். நான் பிறந்த தினமும் இது தான்!! இந்தியாவில் ஜமிந்தார்கள்,