Harshad Mehta Ennum Pana Saathan
By Guhan
()
About this ebook
முப்பது வருடங்கள் கடந்தும்தான் செய்த குற்றத்திற்காக நினைவில் வைத்துக்கொள்ளப்படும் நபர். நடுத்தர குடும்பஸ்தராக இருந்து ஆறு வருடங்களிலேயே இந்தியாவின் நம்பர் 1 வருமான வரி கட்டு நபராக மாறியவரின் உண்மைக் கதை.
Read more from Guhan
RAW Rating: 5 out of 5 stars5/5Musolini Rating: 0 out of 5 stars0 ratingsUlavu Ranigal Rating: 0 out of 5 stars0 ratingsCorporate Saamiyargal Rating: 0 out of 5 stars0 ratingsMuthuramalinga Thevar Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsIruvar: M.G.R vs Karunanidhi Uruvana Kathai Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Cinema Rating: 0 out of 5 stars0 ratingsSherlock Holmessin Ninaivu Kurippugal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSherlock Holmessin Saagasa Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsPeriyar Rasigan Rating: 0 out of 5 stars0 ratingsCinema! Cinema!! - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMarilyn Monroe Rating: 0 out of 5 stars0 ratingsJ.J: Tamizhagathin Irumbu Penmani Rating: 0 out of 5 stars0 ratingsCredit Card Rating: 0 out of 5 stars0 ratingsPena Thirudan Rating: 5 out of 5 stars5/5Hitler - Oru Nalla Thalaivan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Harshad Mehta Ennum Pana Saathan
Related ebooks
Azhagiya Pizhaigal Rating: 0 out of 5 stars0 ratingsTheerarum Karma Veerarum Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Oru Thadavai Rating: 0 out of 5 stars0 ratingsSharegalil Panam Pannalam Rating: 0 out of 5 stars0 ratingsகோலம் இடும் மயிலே! Rating: 0 out of 5 stars0 ratingsMenmaiyaai Oru Vanmurai Rating: 0 out of 5 stars0 ratingsNeengal Innum Yen Kodeesvarar Agavillai? Rating: 0 out of 5 stars0 ratingsNaiyandi Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsAduththa Ilakku Rating: 0 out of 5 stars0 ratingsMaakolam Rating: 0 out of 5 stars0 ratingsMugam paagam 2 Rating: 0 out of 5 stars0 ratingsThedathey! Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsAsathal Thozhilgal 64 Rating: 0 out of 5 stars0 ratingsவேலையில்லா பட்டதாரி அரசியல் தலைவராகலாம் Rating: 0 out of 5 stars0 ratingsPookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Utharayanam Rating: 0 out of 5 stars0 ratingsAlla Alla Panam 2 (Pangusanthai Analysis) Rating: 3 out of 5 stars3/5Poruthathu Pothum Vivek Rating: 5 out of 5 stars5/5Johari Jannal Rating: 0 out of 5 stars0 ratingsகோலாகலம்..! Rating: 0 out of 5 stars0 ratingsMaalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratingsSanthana Malargal Rating: 5 out of 5 stars5/5Kutramum Katru Mara Rating: 4 out of 5 stars4/5குற்றமும் கற்று மற Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsEttavathu Vallal M.G.R. Rating: 0 out of 5 stars0 ratingsNermaiyai Sambathikka Ivvalavu Vazhigala? Rating: 0 out of 5 stars0 ratingsSattapadi Kutramillai! Rating: 0 out of 5 stars0 ratingsMega Chithirangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kappal Muthangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Harshad Mehta Ennum Pana Saathan
0 ratings0 reviews
Book preview
Harshad Mehta Ennum Pana Saathan - Guhan
https://www.pustaka.co.in
ஹர்ஷத் மேத்தா என்னும் பணச் சாத்தான்
Harshad Mehta Ennum Pana Saathan
Author:
குகன்
Guhan
For more books
https://www.pustaka.co.in/home/author/guhan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1.கனவுகளைச் சிதைத்தவன்
2.நடுத்தர வாழ்க்கை
3.என் வழி குறுக்கு வழி
4.வங்கிகளின் ஓசோன் ஓட்டை
5.SGL ரிசிப்ட் - இது ஊழல் அல்ல, புத்திசாலிதனம்
6.Bank Receipt தான் மெயின் வில்லன்
7.இவர்தான் Big Bull
8.ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கை முறை
9.சிங்கப் பெண்ணே!
10.ஹர்ஷத் மேத்தா அர்ஜுனன் அல்ல, கர்ணன்!
11.நஷ்டம், விசாரணை, வழக்கு
12.இரண்டாவது இன்னிங்சிலும் வில்லன் வேஷம்
13.ஹர்ஷத் மேத்தாவின் இறுதி நாட்கள்
14.ஹர்ஷத் மேத்தாக்கள் சூழ் பங்குச் சந்தை
ஹர்ஷத் மேத்தா
என்னும் பணச் சாத்தான்
குகன்
முப்பது வருடங்கள் கடந்தும்தான் செய்த குற்றத்திற்காக நினைவில் வைத்துக்கொள்ளப்படும் நபர். நடுத்தர குடும்பஸ்தராக இருந்து ஆறு வருடங்களிலேயே இந்தியாவின் நம்பர் 1 வருமான வரி கட்டு நபராக மாறியவரின் உண்மைக் கதை.
1.கனவுகளைச் சிதைத்தவன்
இவர் பிறக்கவுமில்லை. மரணிக்கவுமில்லை. நான்பத்தேழு ஆண்டுகள் பூமியில் பயணம் செய்து சென்றிருக்கிறார் என்று சொல்லும் அளவிற்குகெல்லாம் புனித ஆத்மா கிடையாது. எதிர்காலத் திட்டத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவக் கூடிய தகவல் கிடையாது. பள்ளிப்பாடப் புத்தகத்தில் தேர்வுக்காக இவருடைய வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துகொண்டு மதிப்பெண் பெற உதவும் வகையில் வாழ்ந்த உயர்ந்த மனிதன் கிடையாது. சமீப காலமாக பரபரப்பாகப் பேசப்படும் பிரபலமும் கிடையாது. இப்படி எதுவுமே ‘கிடையாது’ என்று இருப்பவர்களைப் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டுமென்று எளிமையாகக் கடந்து செல்லவும் முடியாத சில மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் நமக்குத் தேவையில்லாதவர்களாக இருந்தாலும், அவர்களைப் பற்றி எங்காவது யாராவது குறிப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். என்றோ அவர்கள் செய்து வைத்த சம்பவம், நமக்கு பாடமாக நினைவு படுத்தி கொண்டே இருப்பார்கள். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்கள் செய்த செயலால் ஏற்பட்டுவிடும். எத்தனை வருடங்கள் கடந்தாலும், அந்தச் சம்பவம் ஏற்படுத்திய விளைவுகள் விவாதப் பொருளாகவும் மாறும். இதில் வேடிக்கை என்னவென்றால், அன்று அவர்கள் செய்த செயலால் தண்டிக்கப்பட்டிருந்தாலும், இன்றைய காலத்தில் அவரின் செய்கைக்காகப் பாராட்டப்படுகிறார்கள். இந்த மனிதன் இதை எப்படி யோசித்திருக்கிறார் என்று வியக்கவும் வைத்திருக்கிறார்கள். இப்படித் தெரிந்தோ தெரியாமலோ வரலாற்றின் பக்கங்கள் சிலரை அதிசயமாக நினைவில் வைத்திருக்கிறது.
ஹிட்லர் இனப்படுகொலைக்குப் பெயர் பெற்றவராகத் தெரிந்தாலும், கடனிலிருந்த ஜெர்மனியை எப்படி வல்லரசாக மாற்றினார் என்ற விஷயத்தில் அவர் பிரமிக்க வைக்கிறார். மர்லின் மன்றோ ஹாலிவுட்டில் இன்னுமொரு நடிகையாக இருந்தாலும், குறுகிய காலத்திலேயே எப்படி வளர்ந்து அதிபரையே தனது வலையில் விழ வைத்தாரென்று விஷயத்தில் ஆச்சரியப்பட வைக்கிறார். அமெரிக்காவில் எத்தனையோ கொள்ளை, கொல்லையர்கள் வந்தாலும் பாப்லோ எமிலியோ எஸ்கோபர் போன்ற அரசாங்கத்தை ஏற்படுத்தி வேறு எவரும் கிடையாது. நமது ஊரில் எடுத்துக்கொண்டால், தினமும் எத்தனையோ குற்றவாளிகள் வந்தாலும் சென்றாலும் ஆட்டோ சங்கரும், சந்தனக் கடத்தல் வீரப்பனும் போன்ற க்ளாசிக் கிரிமினல்கள் வேறு யாருமில்லை. பல கதாநாயகிகளும் இன்று கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கிவிட்டாலும் ஒரு பாடலுக்குக் கவர்ச்சி காட்டிய சில்க் சுமித்தா போன்றதொரு கவர்ச்சியான விழிகள் யாருக்கும் இல்லை. இதுபோன்ற காலத்தால் மறக்கமுடியாத ‘க்ளாசிக் மனிதர்கள்’ ஏராளம்.
இப்படிப் பல பழைய கதைகளைச் சொல்வதால் ‘boomerang uncle’ என்று கேலி செய்வது இன்றுள்ள 2K கிட்ஸின் வழக்கமாக இருக்கலாம். ஆனால், இன்றைய தலைமுறையில் இருக்கும் சில சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகளை ஏற்பட்டது அந்த ‘க்ளாசிக் மனிதர்களால் தான். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விருப்பமில்லாதவர்களிடம் இவர்கள் செய்த செயலைச் சொன்னால் போதும். அந்த க்ளாசிக் மனிதரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் பிறந்துவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல விஷயங்களைச் செய்த நபர்களைத் தெரிந்துகொள்வதை விடக் கெட்ட விஷயங்களைச் செய்த நபர்கள் எளிதாக நினைவில் தங்கிவிடுகிறார்கள். ஒருவர் செய்த குற்றங்களுக்காக முப்பது வருடங்களுக்கும் மேலாக அவரை எப்படி நினைவு கொள்ள முடிகிறது? அவர் யாரையும் கொலை செய்யவில்லை. மற்றவர்கள் வீட்டிலோ, வங்கியிலோ கத்தியைக் காட்டித் திருடவில்லை. அவர் அரசியல்வாதி இல்லை. பல கிளைகள் கொண்ட தொழிலதிபர் இல்லை. ஆனால், இந்தியப் பங்குச் சந்தை இருக்கும் காலம் வரை அவருடைய பெயரை யாராலும் நிராகரிக்க முடியாது.
அவர்தான் ஹர்ஷத் மேத்தா. பங்குச் சந்தையின் தரகர். 1992இல் இந்திய பங்குச் சந்தையின் வரலாற்றை மாற்றியமைத்தவர். இன்றைக்கும் SEBI பல சட்டதிட்டங்களைக் கடுமையாக செயல்படுகிறது என்றால் முப்பது வருடத்திற்கு முன்பு இவர் செய்து வைத்த சம்பவம் அப்படி. இன்னும் சொல்லப் போனால், SEBI என்ற அமைப்பு மக்களுக்குத் தெரியத் தொடங்கியதே இவர் செய்த குற்றத்தால்தான். SEBIயால் இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்க முடியுமென்பது இவருக்கு ஏற்படுத்திய விளைவால் பல தரகர்களுக்கும் தெரிந்தது. SEBIக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டது இவருடைய மோசடிக்குப் பிறகுதான். இவரைக் கைது செய்த சமயத்தில் Bhupen Dalal, Hiten Dalal, Ajay Kayan போன்ற மற்ற தரகர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சி.பி.ஐயும் இவர்கள்மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், இவர்கள் யாரும் ஹர்ஷத் மேத்தா அளவுக்கு நினைவில் கொள்ளப்படுவதில்லை.
முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்ட ஒரு குற்றத்தையும், அந்தக் குற்றத்தைப் புரிந்த மனிதரைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம்தான் என்ன? என்று உங்களுக்குத் தோன்றலாம். உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு மேலாகியும் அந்த குற்றம் நம் நினைவில் இருக்கிறது. அந்தக் குற்றத்தால் அது ஏற்படுத்திய விளைவுகளால் எழுதப்பட்ட சட்டங்களும் இருக்கிறது. அதனால், அதன் உண்மைச் சம்பவத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளுவது நல்லது.
இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. கோவிட்-19 தொற்று காலத்தில் இரண்டு மாதத்தில் இந்திய பங்குச் சந்தை மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டது. மீண்டு எழ எப்படியும் ஒரு வருடத்திற்கு மேலாகுமென்று எதிர்ப்பார்த்த போது ஆறு மாதத்தை 52 Week High தாண்டிச் சென்றது. காரணம், கோவிட்-19 தொற்று காலத்தில் 52 லட்சத்திற்கு மேல் DEMAT கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கிறது. பலர் பங்குச் சந்தையில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். லாக்-டவுன் காலத்தில் வீட்டில் அமைதியாக இருக்க முடியாமல் கையிலிருக்கும் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்த்தார்கள். அந்தச் சமயத்தில் Angel Broking, IIFL போன்ற பங்குச் சந்தையின் தரகு நிறுவனங்களின் விலை எகிறியது. பங்குச் சந்தையைச் சார்ந்த பல யூடியூப் சேனல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. Home Tour வீடியோ போல் தாங்கள் தினமும் ட்ரேடிங் செய்யும் வீடியோவைப் பகிர்ந்தனர். முக்கியமாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் தமிழர்களின் எண்ணிக்கை பெருகியது.
பல ஆண்டுகளாக இந்தியப் பங்குச் சந்தை வட இந்தியர்களின் கூடாரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்தின் செய்திகளும் முதலில் அவர்களுக்குத்தான் கிடைக்கும். அவர்கள் போல் லாபங்களை யாராலும் ஈட்ட முடியாது என்பது போன்ற நம்பிக்கையை உடைக்க பலரும் முயற்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதில் ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். பங்குச் சந்தை லாபம் தரும் பன்றிக்குட்டி மட்டுமல்ல. நமது முழு உழைப்பையும் விழுங்கிவிடக்கூடிய முதலையாகவும் இருக்கும். இதில் லாபம் சம்பாதித்தவர்களை விட நஷ்டமடைந்தவர்கள்தான் அதிகம். அதற்கு, முக்கியக் காரணம் பொறுமையின்மை. முதலீடு போடும் நிறுவனத்தைப் பற்றித் தெளிவில்லாத பார்வை. இது எல்லாம் சரியாக இருந்து, நாம் சரியான நிறுவனத்தில் முதலீடு செய்தாலும், பலர் நஷ்டமடையக் காரணம் ‘ஹர்ஷத் மேத்தா’ போன்ற தரகர்கள்தான்.
அவர்களைப் போன்ற தரகர்கள் நினைத்தால் ஒன்றுமில்லாத பங்குகளை வானளவில் உயர்த்த முடியும். நல்ல பங்குகளை எல்லாம் அடிமாட்டு விலைக்கும் விற்க வைக்கும் நிழலை உருவாக்க முடியும். இப்போது, நம்முடைய கண்முன் தரகர்களுக்கெல்லாம் ஒரு அப்பா இருக்கிறார் என்றால் அதுதான் ‘ஹர்ஷத் மேத்தா’.
உங்களுக்குப் பங்குச் சந்தை குறித்த ஆர்வம் இருந்தால் ஹர்ஷத் மேத்தா பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வது அவசியம். இது போன்ற மேத்தாக்கள் இன்னும் பங்குச் சந்தையில் இருக்கிறார்கள். நமது பணத்தை முழுமையாக விழுங்கக் கூடிய சம்பவத்தைச் செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள். எப்போதும் நாம் அபாய மணியோடுதான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பார்கள்.
பல நடுத்தர குடும்பத்தின் மக்களுக்குக் கனவுகள் கொடுத்து, பின்னர் அவர்களை வீதியில்