Oorariya Oru Maalai
()
About this ebook
திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.
இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.
காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.
இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.
1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.
2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.
Read more from Lakshmi Rajarathnam
Thiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEn Anni - En Manaivi? Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsNavagrahangal Rating: 1 out of 5 stars1/5Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsMarakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Bramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Kaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsArputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5Thanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5En Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Vaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 2 Rating: 5 out of 5 stars5/5Ashtalakshmi Rating: 0 out of 5 stars0 ratingsUravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsPoochudum Naal Paarkkava Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsAbiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5Minnal Pookkal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oorariya Oru Maalai
Related ebooks
Thisai Maariya Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsVinadi Nera Vibareethangal...! Rating: 0 out of 5 stars0 ratingsNila Magan Rating: 4 out of 5 stars4/5Malaikkottai Marmam Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Suduginrathe! Rating: 0 out of 5 stars0 ratingsThevar Koyil Roja! Rating: 0 out of 5 stars0 ratingsMeeravin Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaseegaram Rating: 4 out of 5 stars4/5Azhagin Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsIngeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsM. S. Rating: 0 out of 5 stars0 ratingsElectric Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsஎலக்ட்ரிக் ரோஜாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Jatayu Rating: 0 out of 5 stars0 ratingsPerarignar Annavin Kurunavalgal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsImsaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalil Nee Oru Kaviyam Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Nila Kanniley...! Rating: 0 out of 5 stars0 ratingsMegalaparanam Rating: 0 out of 5 stars0 ratingsUyirvarai Inithaval Rating: 0 out of 5 stars0 ratingsMullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Oru Athikaalai Kolai Rating: 0 out of 5 stars0 ratingsManam Maaratha Poo Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Virkapadatha Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsMarakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsNinaivil Sumanthapadi... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oorariya Oru Maalai
0 ratings0 reviews
Book preview
Oorariya Oru Maalai - Lakshmi Rajarathnam
http://www.pustaka.co.in
ஊரறிய ஒரு மாலை
Oorariya Oru Maalai
Author:
லட்சுமி ராஜரத்னம்
Lakshmi Rajaratnam
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
*****
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
*****
அத்தியாயம் 1
குழந்தைகள் அனைவரும் சேர்ந்து பாடினார்கள். எல்லோருமே பத்து வயசுக்குட்பட்ட பால மலர்கள். மழலையில் பிறந்து சிந்தும் அமுதத் துளிகளாக அந்தக் கூடத்தை நிறைந்திருந்த கானம். மனத்தை மயக்கும் மாயம் இருந்தது அந்த மோகன கானத்திற்கு. இத்தனைக்கும் மிகச்சிறிய கானம்தான். அவர்கள் சுருதி பிசகாமல் வார்த்தைகளைச் சிதைக்காமல் சுரங்களை இடற விழாமல் பாடிய நேர்த்திதான் அங்குள்ளவர்களை அசத்தியது.
அங்குள்ளவர்கள் என்றால் பெரிய ஆடியன்ஸ் என்று அர்த்தமில்லை. தங்கள் குழந்தைகளை அழைத்துப்போக வந்திருக்கும் பெற்றோர்கள்தான் அவர்கள். தாங்கள் பெற்ற மழலைகளின் மேதைத்தனத்தால் நெகிழ்ந்து போயிருந்தார்கள். கண்ணீர் மல்கியது.
அவர்களில் ஒருத்தியாகப் பிரமிப்புடன் அமர்ந்திருந்த மீராதான், அவர்களின் பாட்டு டீச்சர். இத்தனை சிறப்பாகச் சேர்ந்து பாடுவார்கள் என்று அவள் கனவிலும் கருதினாளில்லை. தன்னால் இத்தனை சிறப்பாகக் கற்பிக்க முடிந்ததா...! என்று தன்னையே உரைத்துப் பார்த்துக் கொண்ட பிரமிப்பும், ஆச்சர்யமும் அவள் மனத்தில் துள்ளிக் குதித்தன.
அந்த ஹாலின் நுழைவு கதவருகில் உட்கார்ந்து கொண்டிருப்பவர் வெங்கடேசன் - மீராவின் அப்பா. அவருமே மகிழ்ந்து போய் பிரமித்து உட்கார்ந்து கொண்டதில் கதவருகில் நிற்கும் அந்த அழகான இளைஞனையும், அவனருகில் ரதிபோல் நிற்கும் இளம் பெண்ணையும் கவனித்தாரில்லை.
அவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தபொழுதுதான் திரும்பிப் பார்த்தார்கள்.
அடடா, வா.. வாம்மா...
என்று வெங்கடேசன்தான் வரவேற்றார்.
தன்னை சுதாரித்துக் கொண்ட மீராவும் வா கல்பனா...
என்று வரவேற்றாள்.
மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பலப்பல உபசார வார்த்தைகளைக் கூறிக்கொண்டே கலைந்து போனார்கள்.
கல்பனாவும், அவளுடன் வந்த இளைஞனும் ஹால் சோபாவில் அமர்ந்தார்கள்.
ஏய், மீரா, என்ன பிரமாதமா சொல்லிக் கொடுத்திருக்கே. நீ நல்லாப் பாடறதுங்கறது வேற... டீச்சிங் கப்பாசிட்டி வேற. எனக்கு எப்படிப் பாராட்டறதுன்னே தெரியல்ல
என்றாள் கல்பனா.
அந்த அழகான இளைஞனோ மீராவையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன மனோ, வாயைத் திறந்து பாராட்டக் கூடாதா? ஊமை மாதிரி உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க?
என்று அந்த இளைஞன் பக்கம் திரும்பிய கல்பனா அதட்டினாள்.
ஆ… ஆங்.. எப்படி பாராட்டறதுன்னே தெரியல்ல. நீதான் சொல்லிட்டியே கல்பனா
என்று அவன் சன்னக்குரலில் தடுமாறினான்.
மீரா, காபி, பழரசம் ஏதாச்சும் கொண்டுவாம்மா
என்று வெங்கடேசன், மீராவைப் பார்த்து கூறினார்.
இதோ
என்று எழுந்தாள் மீரா.
நாங்க வந்து உன் வகுப்பை கட் பண்ணிட்டமோ!
என்று உபசாரமாகக் கேட்டாள் கல்பனா.
இல்லை இல்லை கல்பனா. இவங்க தனித்தனியா கத்துக்கிட்டவங்க. இன்னிக்கு சரளி வரிசையிலேர்ந்து கீதம் வரைக்கும் சேர்ந்து பாடணும்னு சொல்லியிருந்தேன். பிச்சு உதறிட்டாங்க. நானே நினைக்கலே இப்படிப் பாடுவாங்கனு
என்றாள் மீரா.
நிமிடத்தில் மின்னலென விரைந்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பழரசத்தை எடுத்து தம்ளர்களில் நிரப்பி தட்டில் வைத்துக் கொண்டு வந்து நீட்டினாள்.
பழரசத்தை நிரப்பும் பொழுதே ஏகப்பட்ட கேள்விகள் அவளுள் எழுந்தன. கல்பனாவுடன் வந்திருக்கும் அந்த இளைஞன் யார் என்ற ஐயப்பாட்டை தவிர்க்க முடியவில்லை. ஆவலைத் தன்னுள் அடக்கிக் கொண்டவளாக கல்பனாவே சொல்லட்டும் என்று எண்ணியவளாகவே பழரசத்தை நீட்டினாள்.
கல்பனா ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டாள். மனோ எடுக்கும் பொழுது மீராவும் அவன் முகத்தை யதேச்சையாக நோக்க, அவனும் நோக்க கண்கள் மின்வெட்டென வெட்டிக் கொண்டன.
வெண்ணெயில் ரோஸ் வண்ணத்தைக் கலந்தது போல ஒரு பளபளப்பு. கண்களில் மை தீட்டினாற்போல இமை முடிகள் அடர்ந்து... அகலமான நெற்றியில் விழும் அடர்ந்த முடிக்கற்றைகள்...
க்ரேப் ஜூஸா மீரா?
என்று கலைத்தாள் கல்பனா.
ஆமாம்... நானே வீட்ல செய்தது
என்ற மீரா, சற்று நாணத்துடன் முகத்தைத் தாழ்த்தினாள்.
இதுக்குக்கூட உனக்கு நேரம் இருக்குதா மீரா
என்று கண்களைச் சிமிட்டியபடி வினவினாள் கல்பனா.
மிடுக்காக முகத்தை நிமிர்த்தினாள் மீரா. கல்பனா பணக்காரப் பெண் நேரத்தைப் பொழுதுபோக்காகச் செலவழிப்பவள். கல்லூரி நாட்களில் வகுப்புகளில் இருந்ததைவிட காண்டீன், சினிமா தியேட்டர், பீச்