Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Electric Rojakkal
Electric Rojakkal
Electric Rojakkal
Ebook114 pages1 hour

Electric Rojakkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Electric Rojakkal

Read more from Rajeshkumar

Related to Electric Rojakkal

Related ebooks

Related categories

Reviews for Electric Rojakkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Electric Rojakkal - Rajeshkumar

    23

    1

    ரயில்வே ஸ்டேஷனின் வெளிச்சமான பிளாட்பாரத்திலிருந்து வெளியே வந்தார்கள் மீராவும் கல்பகாகவும், இரண்டு பேரின் முதுகுகளிலும் ஏர் பேக்குகள் ஏறியிருந்தன.

    டைம் எவ்வளவு மீரா? - கேட்ட கல்பகா, வனப்பமாய், உயரமாய் இருந்தாள். மாநிறத்துக்கும் கொஞ்சம் கூடுதலான நிறம், முகத்தில் கண்கள் கூடுதல் மார்க் வாங்கியிருக்க, பல் வரிசையில் கொஞ்சம் தவறியிருந்தாள் நீலப் பூக்கள் இறைத்த மெஜந்தா நிற சுடிதார், உயர்த்திப் போட்ட கொண்டை, கழுத்தில் மெலிதாய் ஒரு தங்கச் சங்கிலி, வலது கையில் ஒரு ஒற்றைத் தங்க வளையல். இடது கையில் செவ்வக வில்லையாய் சிட்டிஸன் வாட்ச்.

    ஏண்டி உன்னோட வாட்ச்க்கு என்னாச்சு...?

    கேட்ட மீராவுக்கு நிஜமாகவே ரோஜா நிறம். ஒடிசலான தேகவாகு என்றாலும் - உடம்பில் எந்தெந்த இடங்களில் புஷ்டியைக் காட்ட வேண்டுமோ... அந்தந்த இடங்களில் நன்றாகவே தேறியிருந்தாள். நீள் வட்ட முகத்தில் ஈரமான ரோஸ்மில்க் நிற உதடுகள் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்க, மூக்கும் கண்களும் ஜப்பானை ஞாபகப்படுத்தின. மூக்கில் பொட்டுத் தங்கம் மூக்குத்தியாய் மாறியிருக்க, காதுகளில் பொன் வளையங்கள் ஆடின. இவளும் சூடிதாரில் புகுந்திருந்தாள். கறுப்பில் மஞ்சள் வரிகள் ஒடிய சூரிதார். வலது கையில் வெள்ளி வளையம். இடது கையில் எச்.எம்.டி. குவார்ட்ஸ்.

    என்னோட வாட்ச்சில் ஸெல் காலாவதி ஆயிடுச்சு... மீரா... ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே நின்னிருக்கு...

    மணி இப்போ பத்தரை...

    ஹோட்டலுக்கு நாம குடுத்திருந்த தந்தி கிடைச்சிருக்குமா...?

    கிடைச்சிருக்கும்...

    ரூம் கிடைக்கலைன்னா என்ன பண்றது?

    எப்படியாவது பேசி ரூமை வாங்க வேண்டியதுதான். இந்த ராத்திரி நேரத்துல ரெண்டு கன்னிப் பெண்கள் மோசமான ஹோட்டல்கள்ல போய்த்தங்க முடியுமான்னு சத்தம் போட வேண்டியதுதான்...

    கல்பகா சிரித்தாள்.

    ஏண்டி சிரிக்கிறே?

    நாமென்ன கன்னிப் பெண்களா? எத்தினி வாட்டி...?

    சரி... சரி... ஸ்டேஷன்ல வர்றவன் போறவனெல்லாம்... உன்னையும் என்னையுமே விழுங்கற மாதிரி பார்த்துட்டு போறான். மொதல்ல ஒரு டாக்ஸியைப் பேசு... ஹோட்டலுக்குப் போய் சேர்வோம்...

    ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்கள்.

    ஆகாயம் மழை பெய்யும் சாத்தியத்தில் இருக்க - வீசிய காற்றில் குளிரின் உக்கிரம் தெரிந்தது.

    மழை வேற வரும் போலிருக்கே...

    டாக்ஸி ஸ்டாண்ட்டை நெருங்கினார்கள். மாலை முரசு படித்துக் கொண்டிருந்த ஒரு டிரைவர் ஓடி வந்தார்.

    எங்கேம்மா போகணும்?

    ஹோட்டல் கனிஷ்கா...

    போலாம்மா... உட்கார்ங்க... டாக்ஸியின் பின் சீட்டைத் திறந்து விட்டார் டிரைவர். கல்பகாவும் மீராவும் டாக்ஸிக்குள் போனார்கள். ட்ரைவிங் சீட்டை ஆக்ரமித்த டிரைவர்... டாக்ஸியின் தொண்டைக் குழிக்குள் சாவியை நுழைத்துக் கொண்டே திரும்பினார்.

    அம்மா ...

    கல்பகா நிமிர்ந்தாள்.

    என்னப்பா?

    ஹோட்டல் கனிஷ்காவிலா தங்கவா போறீங்க?

    ஆமா... ஏன்?

    இதே கோயமுத்தூர்ல வேற நல்ல ஹோட்டலெல்லாம் இருக்கே? கனிஷ்கா ரொம்பவும் காஸ்ட்லிம்மா... இதை விட வேற நல்ல ஹோட்டலெல்லாம் இருக்கு. அலங்கார், சிட்டி டவர், சூர்யா, வைபவ்..."

    சரி... நீ சொல்ற ஹோட்டல்ல தங்கறோம்... வாடகையை நீ குடுத்துடறியா?

    என்னம்மா நீங்க? அசட்டுச் சிரிப்பு சிரித்தார் டிரைவர்.

    மீரா சொன்னாள். கோயமுத்தூருக்கு எத்தினி தடவை வந்திருக்கோம்? எங்களுக்கு எந்த ஹோட்டல்ல தங்கறதுன்னு தெரியாதா என்ன?

    மன்னிச்சுக்குங்கம்மா... ஒரு பேச்சுக்கு சொன்னேன் --- சொல்லிக் கொண்டே டாக்ஸியைக் கிளப்பினார் டிரைவர்.

    டாக்ஸி வேகம் பிடித்து, ஹெட் குவார்ட்டர்ஸ் ரோட்டை தாண்டுவதற்குள் - முன்புறக் கண்ணாடியின் மேல் - முதல் மழைத்துளி வேகமாய் முத்தமிட்டது.

    தொடர்ந்து பல முத்தங்கள்.

    மழை வந்தே வந்துடுச்சு சொன்ன மீராவும், கல்பகாவும் கதவுக் கண்ணாடிகளை மேலே ஏற்றினார்கள்.

    எந்த ட்ரெயின்ல வந்தீங்கம்மா?

    ஐலேண்ட்.

    அது ஒன்பது மணிக்கே வந்துடுமே?

    இன்னிக்கு ரொம்ப லேட்...

    டாக்ஸி ப்ரூக் பாண்ட் ரோட்டுக்குள் நுழைந்த போது - மழையின் கோபம் அதிகமாயிற்று. காற்றைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு - இடி, மின்னலின் ஒலி, ஒளியோடு தரைப் பரப்பை நொறுங்கி விடுகிற மாதிரி பெய்ய ஆரம்பித்து.

    சே! செம மழை!

    கல்பகா மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு – குளிரைத் தாஜா செய்தபடி - மீராவின் உடம்போடு ஒட்டி உட்கார்ந்தாள். மீரா கிசுகிசுப்பாய் கேட்டாள்.

    என்ன வில்லியம்ஸோட ஞாபகம் வந்துடுச்சா?

    ச்சீ! சனியனே!

    பின்னே ஏண்டி ஒண்டறே?

    குளிர்...

    எனக்கும்தான் குளிர்... ஆமா... வில்லியம்ஸுக்கும் உனக்கும் என்ன தகராறு? அவர் முன்ன மாதிரி ஏன் உன்னைப் பார்க்க வர்றதில்லை.

    காரணம்... நிஜமா உனக்குத் தெரியாது?

    தெரியாது...

    சரி... ஹோட்டலுக்குப் போய்ச் சொல்றேன்... இப்ப வாயை மூடிகிட்டு வா... கல்பகா அடிக்குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே - டாக்ஸி - சிந்தாமணி சென்ட்ரல் தியேட்டரைக் கடந்து - லாலி ரோட்டில் நுழைந்தது.

    தொலைவில் மரங்களுக்கு மத்தியில் - இருட்டின் பின்னணியில் ‘ஹோட்டல் கனிஷ்கா’ வெல்வெட் பச்சை நிற நியான் எழுத்துக்கள் மழையில் நனைந்து தெரிந்தது. மழையின் உக்கிரத்தை டாக்ஸி சமாளித்து - ஃபாரெஸ்ட் காலேஜ் குவார்ட்டர்ஸ்களைத் தாண்டிக் கொண்டு - ஜி.சி.டி போகும் ரோட்டில் திரும்பி - நிமிஷ ஓட்டத்திற்குப் பின்னால் ‘திடும்’மென்று எதிர்பட்ட நெட்டுக்குத்தலான ஹோட்டல் கனிஷ்காவைத் தரிசித்து - காம்பௌண்ட் கேட்டுக்குள் நுழைந்தது.

    கார் பார்க்கிங்கில் ஏராளமான கார்கள் ரெயின் பாத் எடுத்துக் கொண்டிருக்க, வர்ண மயமான போர்டிகோவிற்குள் டாக்ஸி நுழைந்தது - ஈரமாய் நின்றது.

    கல்பகாவும் மீராவும் இறங்கினார்கள்.

    டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு - போர்டிகோ

    Enjoying the preview?
    Page 1 of 1