Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kollaiadichavan Yengurukkan - Part- 2
Kollaiadichavan Yengurukkan - Part- 2
Kollaiadichavan Yengurukkan - Part- 2
Ebook100 pages39 minutes

Kollaiadichavan Yengurukkan - Part- 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603231
Kollaiadichavan Yengurukkan - Part- 2

Read more from Devibala

Related to Kollaiadichavan Yengurukkan - Part- 2

Related ebooks

Reviews for Kollaiadichavan Yengurukkan - Part- 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kollaiadichavan Yengurukkan - Part- 2 - Devibala

    http://www.pustaka.co.in

    கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்

    பாகம் - 2

    Kollaiadichavan Yengurukkan

    Part- 2

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    முதல் பாகம் கதைச் சுருக்கம்

    கெளரி - உஷா சகோதரிகள். கெளரியும் அவள் கணவனும் சுயநலத்தின் உச்சம்! தீபிகா பி.டெக் முடிக்கும் நிலையில் ஒரு மகள். அவளது எம்.எஸ். படிப்புக்கு முப்பது லட்சம் தேவை! கெளரியின் தங்கை உஷா நல்லவள்! 2 பெண் குழந்தைகள். கணவன் துரை! இவர்களது அம்மா கோதை எப்போதும் உஷாவுடன்.

    இவர்களின் அப்பா கிருஷ்ணமூர்த்தி ரிடையராகி வந்த நேரம் 6 லட்சம் பணமும், 50 ஆயிரத்துக்கு தாம்பரம் பக்கத்தில் குபேரன் நகரில் வாங்கிய ஒரு க்ரவுண்ட் நிலமும், கெளரி பணம் போதும் என பெற்றுக் கொள்ள, நிலம் உஷாவுக்கு! ஆனால் உஷா பேரில் எழுதி வைக்காமல் அவர் இறந்துவிட, அந்த நிலத்தை 15 வருடங்களாக அனைவரும் மறந்து போக, அம்மா கோதைக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதுபட, டயாலிஸிஸ் போக, ஏராள செலவு உஷாக்கு. இந்த நிலையில் மாற்று சிறுநீரகம் பற்றி யோசிக்க, கெளரி டெஸ்ட்டுக்கே வர மறுக்க, உஷா டெஸ்ட் எடுக்க, பொருந்தவில்லை! வெளியில் முயற்சிக்க, பத்து லட்சம் தாண்டும்!

    இந்த நிலையில் நிலம் ஞாபகம் வர, அதைத் தேடிப் போக, அதன் விலை இன்று 75 லட்சம்! வாங்கிக் கொள்ள பில்டர் ரோஷன் தயார். முதலில் டாக்குமென்ட் அம்மா பேருக்கு மாறுகிறது! விற்க வரும்போது, முதல் மகள் கெளரியின் கையெழுத்து வேண்டும் என்க.

    இது கெளரிக்கு தெரியவர, அவள் 75 லட்சத்தில் பாதிப் பங்கு கேட்க, விற்றால்தான் கையெழுத்து! இளையவள் உஷா பேருக்கு நான் எழுதி வைத்த பிறகு, அவள் விற்றுக் கொள்ளட்டும் என அம்மா சொல்ல,

    கெளரி வந்து அம்மா தனியாக இருக்கும்போது ரகளை செய்துவிட்டுப் போக, அம்மா பதட்டமாகி மயங்க, கெளரி வந்த விஷயம் வீட்டாருக்குத் தெரியாது! அம்மா! ஆஸ்பத்திரியில் அனுமதி! ஏற்கனவே உச்சகட்ட சிறுநீரகக் கோளாறு ஐ.சி.யூவில் அம்மா!

    உஷா, கணவன் துரை பதட்டம்!

    அதிகாலையில் அம்மா மரணமடைந்த செய்தியை டாக்டர் தெரிவிக்க, குடும்பமே பதட்டம்!

    அது இயற்கையான மரணமா! அல்ல!

    அது ஒரு கொலை! எப்படி?

    இனி... கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?

    இரண்டாம் பகுதி...

    1

    போன் அடித்தது! ரகு போனை எடுக்க, ராஜப்பாதான் பேசினார்.

    நான் துரை அப்பா பேசறேன்!

    சொல்லுங்கப்பா!

    தங்கச்சி… கோதையம்மா… இறந்துட்டாங்க தம்பி!

    எ… என்னது? என்ன சொல்றீங்க?

    நேத்திக்கே அட்மிட் பண்ணிட்டோம். இப்ப காலைலதான் உயிர் போச்சு! வீட்டுக்கு ஒடம்பை எடுத்துட்டுப் போக துரை ஏற்பாடு பண்றான்!

    ஏன் நேத்திக்கே சொல்லலை? கெளரி! இங்கே வா?

    ரகு அலற, கெளரி ஓடிவர, ராஜப்பா விவரம் சொல்ல, கெளரி கதறி அழ,

    நீங்க நேரா வீட்டுக்கு வந்துடுங்கம்மா!

    சரி மாமா!

    கெளரி திரும்ப, தீபிகாவும் பையனும் ஓடிவர,

    உங்க பாட்டி காலமாயிட்டாங்கம்மா! ரகு அழுதபடி சொல்ல, தீபிகா அப்படியே நின்றாள்.

    என்னங்க! என்னால நிக்கக்கூட முடியலிங்க கண்கள் செருக, கெளரி தடாலென விழ, ரகு வந்து தாங்கிப் பிடிக்க,

    கெளரி! கண்ணைத் திறம்மா! அய்யோ, என்னடீ இது? தீபிகா! தண்ணி கொண்டா!

    முகத்தில் தெளிக்க, கண்கள் திறக்காமல் போக,

    முதல்லே பாட்டியைக் கொன்னே! இப்ப என்னையா?

    என்ன சொல்றே தீபிகா?

    உனக்கு என்னடீ ஆச்சு! ரகு அலற, அக்கம்பக்கம் கூட, ரகு விவரம் சொல்ல,

    உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்க! ஆட்டோ கொண்டு வர்றோம்!

    கெளரி மெதுவாக கண்களைத் திறக்க,

    கெளரி! என்னைப் பாருடி!

    அய்யோ! அம்மா! எங்களை விட்டுட்டுப் போயிட்டியே! நான் உன் முகத்தை உடனே பாக்கணும்! என்னைக் கூட்டிட்டுப் போங்க! இப்பவே கூட்டிட்டுப் போங்க! கதறினாள்.

    பக்கத்து வீட்டுக்காரர், சார்! இந்த நிலைமைல இவங்க அங்கே போகலாமா?

    வேற வழியில்லையே சார்.பெத்த மகளாச்சே! போகாம இருக்க முடியுமா?

    தீபிகா! வீட்டைப் பூட்ட ஏற்பாடு செய்! யாராவது கார் கொண்டு வாங்க!

    அக்கம்பக்கத்தார் துக்கம் கேட்டுவிட்டு கலைந்து போக, தீபிகா அப்படியே நிற்க,

    ஏண்டீ நிக்கற?

    அப்பா! எல்லாரும் போயாச்சு! அம்மா இனிமே நடிக்க வேண்டாம். எதுக்கு கஷ்டம்?

    கெளரி குபீரென எழுந்துவிட்டாள்.

    என்ன கொழுப்பு உனக்கு? யாருடி நடிக்கறாங்க! அவங்க என்னை பெத்த அம்மா! துடிச்சுப் போயிருக்கேன் நான்! இதுக்குமேல ஒரு வார்த்தை நீ பேசினா, உன்னை கொன்னே போடுவேன்!

    ரெண்டாவது கொலையா?

    அதைக் கேட்டதும், ரகு, கெளரி இரண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1