En Kadan Pani Seivathey! Thoguthi - 4 Nathineer Prachanaikku Naan Virumbum Theervu
()
About this ebook
Dr. S. Ramadoss is the founder and president of the Pattali Makkal Katchi (PMK), an Indian political party.
Under the leadership of Ramadoss, PMK was able to obtain a significant share of power both in the regional government in Tamil Nadu and the central government, primarily due to coalition pressures.
Read more from Dr. S. Ramadoss
En Kural (Twitter Pathevukalin Thoguppu) Rating: 0 out of 5 stars0 ratingsEn Kadan Pani Seivathey! Thoguthi - 1 Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu Rating: 0 out of 5 stars0 ratingsEn Kadan Pani Seivathey! Thoguthi - 2 Makkalai Kaaka Mathu Vilakku! Rating: 0 out of 5 stars0 ratingsEn Kadan Pani Seivathey! Thoguthi - 3 Ore Theervu - Tamil Eezham Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Kadan Pani Seivathey! Thoguthi - 4 Nathineer Prachanaikku Naan Virumbum Theervu
Related ebooks
J.J: Tamizhagathin Irumbu Penmani Rating: 0 out of 5 stars0 ratingsSindhikka Oru Nodi Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2021 Rating: 0 out of 5 stars0 ratingsSarvam Comedy Mayam Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Melavai Rating: 1 out of 5 stars1/5Sangeetha Yogam Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsDeivangal Ezhuga Rating: 0 out of 5 stars0 ratingsTheerarum Karma Veerarum Rating: 0 out of 5 stars0 ratingsCho Sir Peatti Alithaal Rating: 0 out of 5 stars0 ratingsTharangini Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Kalaiyai Arinthu Kolvom Rating: 0 out of 5 stars0 ratingsUrangum Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2021 Rating: 0 out of 5 stars0 ratingsPathavi Paduthum Paadu Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2018 Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Part - 9 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2021 Rating: 0 out of 5 stars0 ratingsManohara - Parasakthi Puthiya Kaappi Rating: 0 out of 5 stars0 ratingsNaan Kanda China Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Marabukal Rating: 4 out of 5 stars4/5Kanaiyazhi - August 2018 Rating: 0 out of 5 stars0 ratingsSila Ragasiyangal Ragasiyamanavai Rating: 0 out of 5 stars0 ratingsOozhale Un Ver Enge? Rating: 0 out of 5 stars0 ratingsUrimaikku Kural Koduppom! Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for En Kadan Pani Seivathey! Thoguthi - 4 Nathineer Prachanaikku Naan Virumbum Theervu
0 ratings0 reviews
Book preview
En Kadan Pani Seivathey! Thoguthi - 4 Nathineer Prachanaikku Naan Virumbum Theervu - Dr. S. Ramadoss
http://www.pustaka.co.in
என் கடன் பணி செய்வதே!
(தொகுதி-4)
நதிநீர் பிரச்சனைக்கு நான் விரும்பும் தீர்வு
En kadan Pani Seivathey!
(Thoguthi – 4)
Nathineer Prachanaikku Naan Virumbum Theervu
Author:
மருத்துவர் ச. இராமதாசு
Dr. S. Ramadoss
For more books
http://www.pustaka.co.in/home/author/dr-ramadoss
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அரசியல்
1. வீரமணிக்கு வீண்வேலை வேண்டாம்!
2. மதவாத சக்திகளை ஒடுக்க வேண்டும்!
3. ஒரு ரூபாய்க்கு அரிசி - வரவேற்பும், வருத்தமும்
4. சட்டம் ஓர் இருட்டறை!
5. இலங்கைப் பிரச்சனை - கலைஞரின் தடுமாற்றம்!
6. இலங்கை பிரச்சனை - தி.மு.க. செய்தது என்ன?
7. சிதம்பரத்திற்கு சில கேள்விகள்!
8. தி.மு.க.வின் தேர்தல் விதி மீறல்!
9. மக்கள் பாடம் புகட்டுவார்கள்!
10. தேர்தலில் தேவை விழிப்புணர்வு!
11. தேர்தலில் பாயும் பண வெள்ளம்!
12. அராஜகத்திற்குப் பாடம்!
13. பா.ம.க., பீனிக்ஸ் பறவை!
14. மக்கள் தொலைக்காட்சிக்கு தடையா?
15. மீனுக்கு வால் - பாம்புக்குத் தலையா?
16. பா.ம.க., அனைவருக்குமான கட்சி
17. பண பலத்தை ஒழிக்க வேண்டும்!
18. பொது விழாவில் அரசியல்!
19. உண்மையைச் சொன்னால் பாய்வதா?
20. வேளாண்மை மன்றச் சட்டம் நிறுத்தி
வைப்புக்கு வரவேற்பு!
21. கட்டாய வாக்கு - பொது விவாதம் தேவை!
22. இடைத் தேர்தலுக்கு அவசரம் வேண்டாம்!
23. வேண்டாம் ஒப்பந்த பணிமுறை!
24. முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி!
25. அ.தி.மு.க., உறவை முறித்தது ஏன்?
26. தேர்தல்களும் – தேர்தல் ஆணையத்தின் கடமையும்!
27. வாக்குகளை விலைக்கு வாங்க அனுமதிக்கக் கூடாது!
28. வேண்டாம் தூக்குத் தண்டனை!
29. மோனோ இரயில் திட்டத்தைக் கைவிடுக!
30. புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் மருத்துவமனை அமைக்க வரவேற்பு!
31. வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும்!
32. உள்ளாட்சித் தேர்தலை நடுநிலையாக நடத்த வேண்டும்!
33. வாக்கு எண்ணிக்கைக்கு வீடியோ பதிவு!
34. சென்னை மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும்!
35. பா.ம.க.வுக்கு வாய்ப்புத் தாருங்கள்!
36. வாக்கு எண்ணிக்கையை நியாயமாக நடத்த வேண்டும்!
37. தனிமாநிலக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
நதிநீர் பிரச்சனைகள்
38. காவிரிச் சிக்கல் பற்றி விவாதித்த அனைத்துக் கட்சிக் கூட்டம்!
39. அறவழிப் போராட்டம் அடிப்படை உரிமை!
40. கன்னட வெறியர்களை கண்டித்துப் போராட்டம்!
41. கலைஞரின் வினாக்களுக்குக் காலம் பதில்சொல்லும்!
42. பாலாற்றைக் காப்பாற்றுங்கள்
43. ஆற்றுநீர் பிரச்சனைகளைத் தீருங்கள்!
44. இதயங்கள் குளிர இணக்கத் தீர்வு
45. உரிமைக் குரலை நசுக்கும் நடவடிக்கை
46. முல்லைப்பெரியாறு : ஆபத்தை தடுப்போம்!
47. இந்தியாவை ஆளும் மாநிலம் கேரளா!
48. நதிகளைத் தேசியச் சொத்தாக அறிவிக்க வேண்டும்!
49. காவிரிப் பிரச்சனை கைகழுவுகிறார் கலைஞர்!
50. கேரளத்திற்குப் பாடம் புகட்ட வேண்டும்!
51. காவிரி: கடமை தவறக்கூடாது அரசு!
52. கேரளத்துடன் பேச்சு கூடாது!
53. டேம் 999 படத்திற்குத் தடை
54. மாய வலையில் சிக்கக் கூடாது
சமூகப் பிரச்சனை
55. பணிநீக்கம் கூடாது
56. உரவிலையைக் குறைக்கப் போராட்டம்
57. விலை உயர்வைக் கண்டித்துப் போராட்டம்
வணிகம்
58. விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும்
59. சில்லறை வணிகத்தைச் சிதைக்கக் கூடாது!
60. கடையடைப்புக்கு ஆதரவு
அரசியல்
1. வீரமணிக்கு வீண்வேலை வேண்டாம்!
மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக தி.மு.க.வுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சனை அரசியல் ரீதியானது. முதலமைச்சர் கலைஞர் இன்றைக்குக் கூட இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சட்டப்பேரவையில் 18 உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய சட்டப்பேரவையின் பதவிக்காலத்தில், இரண்டாவது முறையாக நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலிலாவது ஓர் இடம் தாருங்கள்
, என்று உரிமையுடன் கேட்கிறோம். ஆனால், காங்கிரசு கட்சி கேட்பது மட்டும் உரிமை என்றும், பா.ம.க.வுக்குத் தருவது வெறும் வாய்ப்பு என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அது உரிமையா? வாய்ப்பா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். தோழமையாக இருக்கிற இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை இது. ஆனால், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார். கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிய வேண்டாம் என்று எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
திராவிடர் கழகம் ஓர் அரசியல் கட்சி அல்ல. அது ஒரு சமுதாய இயக்கம். சுயமரியாதை, பகுத்தறிவு, மனிதநேயம், சமத்துவம் ஆகிய நான்கும் தந்தை பெரியாரின் கொள்கைகள். அந்தக் கொள்கைகளில் தி.மு.க. தலைவர் கலைஞரின் நிலைப்பாட்டிற்கும், என்னுடைய நிலைப்பாட்டிற்கும் முரண்பாடு ஏற்படுமாயின், வீரமணியைப் போன்றவர்கள் இடையில் நுழைந்து கருத்துக்களைத் தெரிவிக்கலாம்; இதில் தவறில்லை. ஆனால், அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளில் தேவையில்லாமல் நுழைந்து, யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்களின் ஏஜெண்டாக மாறிக் கொண்டு, மற்றவர்களை வசைபாடுவதை வீரமணி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நாங்கள் அரசியல் இயக்கமல்ல; சமுதாய இயக்கம் தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு செயல்படுகிறவர், அதற்கான எல்லையை மீறுவது தேவையற்றது மட்டுமல்ல, வரம்பை மீறுவதும் ஆகும். பெரியார் இயக்கக் கொள்கை வரம்பிற்கு அப்பாற்பட்டு, யாரையோ திருப்தி படுத்துவதற்காக, அண்மைக் காலமாகப் பா.ம.க.வை கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகிறார். இப்படிச் செய்வது தந்தை பெரியார் கண்ட இயக்கத்திற்கும், அவரது இலட்சியங்களுக்கும் செய்யும் துரோகம். ஆட்சியில் யார் இருந்தாலும், அவர்களை ஆதரிப்பது என்பது வீரமணிக்குக் கை வந்த கலை. கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக அவர், இந்தக் காரியத்தைச் கச்சிதமாகச் செய்து கொண்டு வருகிறார். இதற்கு நீண்ட வரலாறே இருக்கிறது.
1977 வரையில் தி.மு.க.வை ஆதரித்தார். கலைஞரை புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், அவருக்குத் துதி பாடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். 1980 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியினால், இடஒதுக்கீட்டிற்குக் கொண்டு வந்த வருமான உச்சவரம்பை நீக்கினார் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டின் அளவை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். அவரது இந்த நடவடிக்கைகள் மக்களின் எழுச்சிக்கும், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதை வீரமணி மறுதளித்தார். எம்.ஜி.ஆருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தினார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி அம்மாள் பொது வாழ்வுக்கு வந்து பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி, எல்லோரையும் முந்திக் கொண்டு அறிக்கை வெளியிட்டார். அதன் காரணமாக, தி.மு.க.வின் கடுமையான விமர்சனத்திற்கு இலக்கானார். 23 நாட்களே முதல்வராக இருந்த ஜானகி ஆட்சியில் எவ்வளவு பெரிய காரியங்கள் நடந்தன, யார் யார் எதை எதைச் சாதித்துக் கொண்டார்கள், எது எதற்கு அனுமதி வாங்கிக் கொண்டார்கள் என்பதெல்லாம் மிகப்பெரிய புராணம்.
ஜானகி ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் நடந்த போது அ.தி.மு.க. பிளவுபட்டு இரு அணிகளாகத் தேர்தலைச் சந்தித்தன. அப்போது யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது முக்கியமல்ல; யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம் என்றும் ஜெயலலிதா நிச்சயமாக ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டார். அதுமட்டுமல்ல, அந்தத் தேர்தலின் போது அதுவரை அரசியலில் யாருமே மேற்கொள்ளாத ஒரு விசித்திரமான நிலையை வீரமணி மேற்கொண்டார். சட்டப்பேரவைத் தொகுதிகளை பட்டியலிட்டு, பாதித் தொகுதிகளில் ஜானகி அணிக்கு ஆதரவு, மீதித் தொகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவு என்று இரட்டை நில¬யை எடுத்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. பாதித் தொகுதிகளில் மட்டுமே தி.மு.க.வை ஆதரித்த வீரமணி, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முழுக்க முழுக்க தி.மு.க. ஆதரவாளராக மாறிவிட்டார். 1991 இல் தி.மு.க. ஆட்சி கவிழ்க்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். பதவியேற்றதும், பெரியார் திடலுக்கு வந்தார் என்ற ஒரே காரணத்தைக் கூறி, ஜெயலலிதாவுக்கு ஜெ
என்று முழங்க ஆரம்பித்துவிட்டார். அவருக்கு விழா நடத்தினார். அறக்கட்டளைக்கு அவர் அளித்த நிதியைப் பெற்றுக் கொண்டார். அப்போது, வீரமணியின் இந்தச் செயலை தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்தார்கள் என்பதை நாடறியும்.
69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்தார் என்று சொல்லி தஞ்சை கல்லூரிக்கு அழைத்துச் சென்று சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தைக் கொடுத்து மகிழ்ந்தார். அப்போது அதை விமர்சித்த தி.மு.க.வையும், அதன் தலைவர் கலைஞரையும் கண்டித்து இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் இரட்டை வேடம் போடுகிறார் என்று குற்றம் சாற்றினார். இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் பச்சை அரசியலான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார் என்றும், ஜெயலலிதாவை வீழ்த்த கூட்டணி வியூகம் வகுக்கிறார் என்றும், இதனால் ஏற்பட்டுள்ள வருத்தமும், வேதனையும் தான் என்னால் கலைஞரோடு உடன்பட முடியாத சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என்றும் குமுதம் பேட்டியில் குமுறினார்.
அடுத்து 1996 தேர்தலின்பேபது தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுமே திராவிடக் கட்சிகள் என்றும், அவை ஒன்றாக வேண்டும் என்றும் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், தி.மு.க.வுக்கு எதிரான நிலையை மேற்கொண்டு அ.தி.மு.க.வை மட்டும் ஆதரிக்க வேண்டும் என்று இரகசிய தாக்கீதுகளை இயக்கத்தவர்களுக்கு அனுப்பினார். அவரது இந்த தி.மு.க. எதிர்ப்பை எதிர்த்து அப்போது திராவிடர் கழகத்திலிருந்தே பலர் வெளியேறிச் சென்றிருக்கிறார்கள் என்பதும் வரலாறு.
அடுத்து வந்தத் தேர்தலில் ஜெயலலிதா தோல்வியடைந்தார். மீண்டும் கலைஞர் ஆட்சியில் அமர்ந்தார். 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கொடும்பாவிகளை எரிக்கப் போவதாக அறிவித்தார். வீரமணியையும் மற்றவர்களையும் கலைஞர் அரசு கைது செய்தது. தஞ்சாவூர் பாலிடெக்னிக் இட விவகாரம் வெடித்துக் கிளம்பியது. அதனால் ஆத்திரமடைந்த வீரமணி, நியாயம் கேட்கிறோம் என்று சொல்லி கலைஞரின் அரசையும், அவரையும் மாநிலம் முழுவதும் கடுமையாகத் தாக்கிப் பேசி வந்தார். பிறகு ஆட்சி மாற்ற சக்கரம் சுழன்று 2001 இல் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி. அந்த ஆட்சியில் கலைஞர் கைது செய்யப்பட்டார். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போதிலும், கலைஞர் கைது செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டித்தேன். சிறைச்சாலைக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த வேறு சில தலைவர்களும் கண்டித்தனர். ஆனால், கலைஞர் கைது செய்யப்பட்டது சரிதான் என்று அப்போது தமிழகத்தில் ஆதரித்த ஒரே தலைவர் வீரமணிதான்
இதனை தி.மு.க. மறந்தாலும் தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.
கலைஞர் கைது செய்யப்பட்டதை ஆதரித்தது மட்டுமல்ல; கைது செய்யப்பட்டபோது கலைஞர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டார் என்ற அளவுக்கு விமர்சனம் செய்தவர் வீரமணி. முதிர்ச்சி அடைந்த தலைவர்களுக்கு முக்கிய அடையாளம், அவர்கள் சோதனைக்கும், தொல்லைக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்படும்போது, நிதானத்தை இழக்காமல், கண்ணியத்தோடு நடந்து கொள்வதுதான் என்றும், ஆனால் நான்குமுறை முதலமைச்சராக இருந்த ஒருவர், காவல்துறையினர் கைது செய்ய வரும்போது, ஒத்துழைக்காமல், சண்டித்தனம் பண்ணுவதா?
என்ற அளவுக்கு கலைஞரை விமர்சித்தவர். கலைஞரும், முரசொலி மாறனும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள்
, என்றெல்லாம் பெரியார் திடலில் கூட்டம் போட்டுப் பேசினார் வீரமணி; இல்லை ஏசினார்.
2003 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களின் போராட்டம் நடந்தது. அவர்கள் மீதான அடக்குமுறையை எதிர்க்கட்சிகள் எல்லாம் கண்டித்தன. கலைஞர் கண்ணீர்க் கடிதம் எழுதினார். ஆனால் அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தை அடக்கி ஒடுக்கியதன் மூலம், தனது ஆளுமைத் திறமையை அகில உலகிற்கும் புரிய வைத்துவிட்டார் என்றும், எதிலும் தெளிவு, துணிவு, கொண்ட முடிவினை இமயமே எதிர்வரினும் பின்வாங்கா செயல் திறன் - அனைத்தும் ஜெயலலிதாவின் ஏகபோக சொத்துக்கள் என்றும் வேறு எந்தத் தலைவருக்கும் இப்படிப்பட்ட திடச்சித்தம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் பாராட்டுக் கடிதம் எழுதி மகிழ்ந்தவர் தான் இந்த வீரமணி.
கடந்த ஆட்சியில் ஜெயலலிதாவை புகழ்ந்தவர், இந்த ஆட்சியில் கலைஞரை வானளாவப் புகழ்கிறார். அனைவரையும் அனுசரித்து, அரவணைத்துச் செயல்படுகிறார் என்று பாராட்டுரை வழங்குகிறார். இப்படி ஒவ்வொரு ஐந்தாண்டு காலமும் ஆட்சிகள் மாறியபோதெல்லாம் நிலையை மாற்றிக் கொண்டு, ஆட்சியாளர்களைப்