En Kadan Pani Seivathey! Thoguthi - 3 Ore Theervu - Tamil Eezham
()
About this ebook
Dr. S. Ramadoss is the founder and president of the Pattali Makkal Katchi (PMK), an Indian political party.
Under the leadership of Ramadoss, PMK was able to obtain a significant share of power both in the regional government in Tamil Nadu and the central government, primarily due to coalition pressures.
Read more from Dr. S. Ramadoss
En Kadan Pani Seivathey! Thoguthi - 1 Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu Rating: 0 out of 5 stars0 ratingsEn Kural (Twitter Pathevukalin Thoguppu) Rating: 0 out of 5 stars0 ratingsEn Kadan Pani Seivathey! Thoguthi - 4 Nathineer Prachanaikku Naan Virumbum Theervu Rating: 0 out of 5 stars0 ratingsEn Kadan Pani Seivathey! Thoguthi - 2 Makkalai Kaaka Mathu Vilakku! Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Kadan Pani Seivathey! Thoguthi - 3 Ore Theervu - Tamil Eezham
Related ebooks
Urangum Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsMaanuda Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsTamil Mozhi Ilakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Paathaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsOru Koorvaalin Nizhalil Rating: 0 out of 5 stars0 ratingsSiddha Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Kamban Kanda Aatchiyil Arasiyal Samoogam Rating: 0 out of 5 stars0 ratingsEngey Pogirom? Rating: 0 out of 5 stars0 ratingsDalit Ilakkiya Arasiyal… Rating: 0 out of 5 stars0 ratingsTamilarin Sangakala Perumai Keezhadi Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Happiness - April 2024 Rating: 0 out of 5 stars0 ratingsMahakavi Bharathiyar - 100 Rating: 0 out of 5 stars0 ratingsPunch Dialogue Thozhirsaalai Rating: 0 out of 5 stars0 ratingsUrimai Meeral Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsItaly Puratchi Veerar Mazzini Rating: 0 out of 5 stars0 ratingsமனித மனம் ஒரு மிருகப் பண்ணை Rating: 5 out of 5 stars5/5Ennangalai Uzhaippakku Rating: 0 out of 5 stars0 ratingsMulvelikku Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8 Rating: 0 out of 5 stars0 ratingsவேலையில்லா பட்டதாரி அரசியல் தலைவராகலாம் Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2022 Rating: 0 out of 5 stars0 ratingsOoradangu Uyiradangu Rating: 0 out of 5 stars0 ratingsIlangaiyil Thuglak Rating: 0 out of 5 stars0 ratingsAangileyarai Athira Vaithavargal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivu Naatkalum Nenjil Alaigalum Rating: 0 out of 5 stars0 ratingsIyandhira Ithayangal Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavugal... Un Kaaladiyil... Rating: 0 out of 5 stars0 ratingsNooru Vayathu Vaazha Nooru Unavugal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for En Kadan Pani Seivathey! Thoguthi - 3 Ore Theervu - Tamil Eezham
0 ratings0 reviews
Book preview
En Kadan Pani Seivathey! Thoguthi - 3 Ore Theervu - Tamil Eezham - Dr. S. Ramadoss
http://www.pustaka.co.in
என் கடன் பணி செய்வதே!
(தொகுதி-3)
ஒரே தீர்வு - தமிழ் ஈழம்
En Kadan Pani Seivathey!
(Thoguthi – 3)
Ore Theervu - Tamil Eezham
Author:
மருத்துவர் ச. இராமதாசு
Dr. S. Ramadoss
For more books
http://www.pustaka.co.in/home/author/dr-ramadoss
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
***
ஒரே தீர்வு - தமிழ் ஈழம்
பொருளடக்கம்
1. கச்சத்தீவை மீட்க வேண்டும்!
2. ஈழத்தமிழர்களுக்கு உணவு!
3. அமைதிப் பேச்சை தொடங்க நடவடிக்கை!
4. ஈழத் தமிழர் நம்பிக்கையைச் சிதைக்க வேண்டாம்!
5. தமிழரைக் காக்கப் பிரதமரிடம் முறையீடு!
6. இலங்கைக்கு நாடாளுமன்றக்குழு
7. போரை நிறுத்த உயர்மட்டக் குழு
8. மனிதச் சங்கிலிக்கு அழைப்பு
9. சீமான், அமீரை விடுதலை செய்யுங்கள்!
10. உணவு போதாது, தீர்வு வேண்டும்!
11. தமிழீழம்: கலைஞர் நிலை என்ன?
12. கலைஞரிடம் ஏன் இந்த மாற்றம்?
13. பொன்சேகாவின் வாய்க்கொழுப்பு?
14. அதிர்ச்சி அளிக்கும் நிலைமாற்றம்!
15. ஐ.நா.விடம் முறையிட வேண்டும்!
16. கச்சத்தீவை மீட்பவருக்கு வாக்கு
17. வேண்டுகோள் வேண்டாம்... எச்சரிக்கை வேண்டும்!
18. தமிழினம் சபிக்கும்!
19. வேண்டாம் உண்ணாநிலை!
20. தந்தி வேண்டாம்... தட்டிக்கேளுங்கள்!
21. தந்தி தராது பயனை!
22. கண்துடைப்பு நாடகத்தின் உச்சக்கட்டம்!
23.ஆறுதல் தரும் அமெரிக்கக் தலையீடு!
24. இலங்கை அரசை கூண்டிலேற்ற வேண்டும்!
25. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மடல்!
26. மாண்புமிகு முதல்வர் கலைஞருக்கு மடல்!
27. கச்சத்தீவு - பரிகாரம் தேவை!
28. கச்சத்தீவு உடன்பாடு - மறுஆய்வு தேவை!
29. துயர்துடைக்க முன் வாருங்கள்!
30. கண்ணியம் மிக்க கடமை
31. அகற்றுங்கள் முள்வேலி முகாம்களை...!
32. அரங்கேறியது நாடகம்!
33. ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவி!
34. கடல் எல்லையைக் காப்பீர்!
35. மீன்பிடி மேலாண்மைச் சட்டம் வேண்டும்!
36. ஈழத்தமிழர்களைக் காக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன?
37. வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்!
38. தமிழகமே வீறுகொண்டு எழு!
39. ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கலைஞர்?
40. என்ன செய்யப் போகிறார் கலைஞர்?
41. இரட்டை ஆபத்தில் ஈழத் தமிழர்கள்!
42. இலங்கைப் போர்: கலைஞரும் ப. சிதம்பரமும் நடத்திய நாடகம்!
43. கச்சத்தீவுப் பிரச்சனையில் கலைஞரின் சறுக்கல்!
44. பார்வதி அம்மாளுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும்!
45. மீனவர்களுக்குத் துப்பாக்கி!
46. திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்டதற்குக் கண்டனம்!
47. இராசபக்சே மீது போர்க்குற்ற விசாரணை!
48. இலங்கை இனச்சிக்கலுக்கு தமிழீழமே ஒரே தீர்வு!
49. மீனவர்களுக்குப் பாதுகாப்பு!
50. இலங்கை மீது பொருளாதாரத் தடை!
51. தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு!
52. போர்க் குற்றவாளிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?
53. கூடாது கூட்டுப்பயிற்சி!
***
1. கச்சத்தீவை மீட்க வேண்டும்!
இலங்கைக் கடற்படையினர் அத்துமீறி வந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருவதை நிறுத்த வேண்டும் என்று எத்தனையோ முறை எச்சரித்தும் அவர்களுடைய அத்துமீறல்களும், அட்டூழியங்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அத்துடன் அண்மைக் காலத்தில் அவர்களது தாக்குதல் இன்னும் அதிகமாகி இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 முறை தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் தாக்கியிருக்கிறார்கள். இதில் 3 தமிழக மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள். இந்தப் படுகொலைச் செயலில் ஈடுபட்ட சிங்களக் கடற்படையின் அட்டூழியத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணைத் தூதரகம் முன்பு தி.மு.கழகம் கண்டனப் பேரணி நடத்துகிறது. இதற்கு அமைச்சர்கள் தலைமையேற்பார்கள் என்றும் அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஆளும் கட்சியான தி.மு.கழகத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
இது போன்ற தாக்குதல்கள் நடைபெற்ற ஒவ்வொரு முறையும் கண்டனப் பேரணிகளை நடத்துவதும், பிறகு நடுவண் அரசிடம் நாம் முறையிடுவதும், அதைத் தொடர்ந்து அவர்கள் எச்சரிக்கை விடுவதும் தொடர் கதையாகி வருகிறது. ஆனால் இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் மட்டும் நின்றபாடில்லை. சிங்களக் கடற்படையினரின் அட்டூழியங்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கும், அதன்மூலம் தமிழக மீனவர்கள் கடலுக்குச்சென்று மீன்பிடித்து பாதுகாப்புடன் திரும்பி வருவதற்கும் நிரந்தரமான தீர்வு என்ன என்பதைச் சிந்தித்துப் பார்த்துச் செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்தியாவிடம் இருந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ஙமததற்குப் பின்னர் தான் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வந்திருக்கிறது. எனவே தமிழக மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு வேண்டுமென்றால், இலங்கைக்கு தாரைவார்த்த கச்சத்தீவை இந்தியா மீண்டும் தன் வசம் எடுத்துக்கொண்டு, இந்தியக் கடற்படையை நிரந்தரமாகக் கச்சத்தீவில் நிறுத்த வேண்டும்.
அத்துடன் சிங்கள அரசைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர்கள் என்றும், இந்தியத் தமிழர்கள் என்றும் பேதம் பிரித்துப் பார்ப்பதில்லை. தமிழர்கள் என்றாலே மூர்க்கத்தனமாகத்தான் தாக்கி அழித்து வருகிறார்கள். எனவே இந்தியத் தமிழர்களான நமது மீனவர்களின் பாதுகாப்பு என்பது ஈழத் தமிழர்களின் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை உணரவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமையைப் பெற்றுத் தந்து அங்கு நிரந்தர அமைதியை ஏற்படுத்த இந்தியா முயற்சிக்க வேண்டும். அதன் மூலம்தான் இந்தியத் தமிழர்களான நமது மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பை ஏற்படுத்தித்தர முடியும். மற்றப் பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஈழத் தமிழர்களின் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட வேண்டும். அதன் மூலம் தனது மீனவர்கள் கடலுக்குச் சென்று பத்திரமாகத் திரும்பி வர வழிவகை காணவேண்டும்.
கச்சத்தீவை மீட்பதும், ஈழத் தமிழர்களின் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதும் மட்டுமே இந்தியத் தமிழர்களான நமது மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பைத் தேடி தரும் என்பதை நடுவண் அரசுக்குத் தமிழகத்தில் உள்ளவர்கள் புரிய வைக்க வேண்டும். தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை உணர்ந்து செயல்பட்டு நடுவண் அரசுக்கும் உணர்த்த முன் வரவேண்டும்.
மீனவர்கள் தாக்குதலுக்கு தீர்வுகாண வலியுறுத்தி வெளியிட்ட அறிக்கை 11.3.2007
***
2. ஈழத்தமிழர்களுக்கு உணவு!
இலங்கையில் போரினால் ஏற்பட்ட துன்பங்கள் தொடர்கின்றன. வானூர்தி குண்டு வீச்சு மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக ஈழத் தமிழர்கள் வீடு, வாசல்களை விட்டுவிட்டு சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மட்டக்களப்பில் மட்டும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் இடம் பெயர்ந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்திருக்கிறது. இடம் பெயர்ந்துள்ள இந்தத் தமிழர்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் இருப்பதாகவும், அவர்களைக் காப்பாற்ற உடனடியாக உணவுப்பொருள்களையும், முக்கிய மருந்துப் பொருட்களையும் அவசரமாக உலக நாடுகள் வழங்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத்திட்ட அமைப்பின் ஆசியப்பகுதி தலைவர் ரொனி பான்பொரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
உலகின் பிற நாடுகள் உதவிக்கரம் நீட்டும் முன் இந்தியா உடனடியாக உணவுப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் அனுப்பி வைக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற நிலைமை உருவானபோது இந்திய அரசு உணவுப் பொருள்களையும், மருந்துப்பொருள்களையும் அனுப்பி வைத்தது. ஆனால் அது பட்டினியில் வாழும் ஈழத் தமிழர்களுக்குப் போய் சேரவில்லை. இந்தியா வழங்கிய முக்கிய தேவைப்பொருட்கள் கொழும்பு துறைமுகம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டதுதான் அதற்கு காரணம்.
எனவே இந்த முறை இந்தியா, உணவுப் பொருள்களையும், மருந்துப் பொருள்களையும் நேரடியாக காங்கேசன் துறைமுகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் அந்த முக்கிய தேவைப் பொருள்களை நேரடியாகத் தமிழ் ஈழப் பகுதியில் உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும், ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத்திட்ட அமைப்பிடம் வழங்க வேண்டும்.
உலக உணவுத் திட்ட அமைப்பின் ஆசியப் பகுதி தலைவர் வெளியிட்டுள்ள இந்த அவசர வேண்டுகோள் பற்றி இன்று (21.3.2007) பிற்பகல் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப் பட்டதும், உடனடியாக முதல்வர் கலைஞருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள ஈழத் தமிழர்களைக் காக்க உணவுப் பொருள்களையும், மருந்துப் பொருள்களையும் இந்தியா அவசரமாக அனுப்பி வைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினேன். நடுவண் அரசிடம் தொடர்புகொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினேன். முதல்வரும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
பட்டினிச் சாவில் வாடும் ஈழத்தமிழர்களுக்கு உணவு வழங்க வலியுறுத்தி வெளியிட்ட அறிக்கை 4.4.2009
***
3. அமைதிப் பேச்சை
தொடங்க நடவடிக்கை!
இலங்கையில் அன்றாடம் விமானத் தாக்குதல்களையும், பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தித் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை அரசும், இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலால் அதிர்ந்து போய் இருக்கிறார்கள், அச்சத்தில் மூழ்கி இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பது இலங்கைக்கு மட்டுமின்றி தெற்காசியப் பிராந்தியத்திற்கே அச்சுறுத்தல் என்று அலரத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கை அரசும், சிங்கள அரசியல் இயக்கங்களும் கூறி வருவதைப் போன்று, விடுதலைப் புலிகளின் விமானங்களால் இந்தியாவுக்கோ அல்லது இதர தெற்காசிய நாடுகளுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதற்கு மாறாக பாகிஸ்தான் இராணுவ ஆலோசகர்களும், விமானிகளும், அவர்கள் அளித்துள்ள போர் விமானங்களும் இலங்கைப் படைவசம் இருப்பதுதான் இந்தியாவுக்குப் பேராபத்து.
நார்வே நாட்டின் முன்முயற்சியுடன் நடந்து வந்த அமைதிக்கான பேச்சுவார்த்தையை தன்னிச்சையாக முறித்துக் கொண்டு, சொந்த நாட்டின் ஒரு பகுதி மக்கள் மீது முப்படைகளையும் கொண்டு தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகிறது இலங்கை அரசு. அத்துடன் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் பிரதான சாலையை மூடி பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி இலட்சக்கணக்கான மக்களை பட்டினி போட்டு சாகடித்து வருகிறது. இன்னும் சில நாள்களுக்குள் சர்வதேச சமூகம் அத்தியாவசியப் பொருள்களை அவசரமாக அனுப்பி வைக்காவிட்டால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்து மடிவதைத் தவிர்க்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு போஸ்னியா மக்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தி, ஓர் இனத்து மக்களைக் கொன்று குவித்த செர்பிய நாட்டின் முன்னாள் அதிபர் மிலோஸ்விக்கின் கொடுங்கோன்மைக்கும், இலங்கை அதிபர் இராசபக்சேவின் நடவடிக்கைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மிலோஸ்விக் எத்தகைய குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரோ அந்தக் குற்றங்களையெல்லாம் புரிந்து வருபவர் இராசபக்சே. எனவே, அவரது உபதேசத்திற்கும், அலறலுக்கும் இந்திய அரசோ, உலக நாடுகளோ செவி சாய்க்கக் கூடாது.
ஈழத் தமிழர்கள் நியாயமான அரசியல் உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். அதற்கு இதுவரையில் அவர்கள் கொடுத்துள்ள விலை போதும். எனவே, இந்தியாவும் சர்வதேச சமூகமும் இனியும் நடப்பது நடக்கட்டும் என்று பார்த்துக்கொண்டு இருக்காமல், சமரசப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். அதன் மூலம் ஈழத் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வதற்கு வழிகாண வேண்டும்.
இலங்கை இனச்சிக்கலுக்குத் தீர்வுகாண அமைதிப் பேச்சுக்களை மீண்டும் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியிட்ட அறிக்கை 28.3.2007
***
4. ஈழத் தமிழர் நம்பிக்கையைச்
சிதைக்க வேண்டாம்!
‘இராணுவத் தாக்குதல்களை நிறுத்துங்கள்; மனித உரிமைகளை மதித்து நடங்கள்; ஈழத் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை வழங்குவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குங்கள்’ என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பொதுச் செயலாளர் முதல் போப்பாண்டவர் வரையில், உலகத் தமிழர்கள் எல்லோரும் இலங்கை அரசை வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நாள்தோறும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்துவரும் சிங்கள இனவாத அரசு, மேலும் மேலும் தன்னுடைய இராணுவத் தாக்குதல்களுக்காகத் தளவாடங்களை வாங்கிக் குவித்துக்கொண்டு வருகிறது.