சூரியன் சுடவில்லை!
By தேவிபாலா
()
About this ebook
ஒரு ரத்ததான முகாமில்தான் பாஸ்கரை சந்திக்கும் வாய்ப்பு ரம்யாவுக்குக் கிடைத்தது.
குறிப்பிட்ட ஒருவகை ரத்தம் கிடைக்கவில்லை என்றதும் அந்த நோயாளியைப் பிழைக்க வைக்க, எப்படியாவது ரத்தம் சேகரித்துக் கொண்டு வர வேண்டும் என ரம்யா பாடுபட, அவளுக்கு பக்கபலமாக பாஸ்கர் நின்று, இருவரும் செயல்பட, எப்படியோ ஆட்களைப் பிடித்து ரத்தம் சேகரித்து விட்டார்கள்.
அந்தப் பெண் உயிர் பிழைத்து விட்டாள்.
அந்தக் குடும்பமே டாக்டருக்கு நன்றி சொல்ல, ‘இவங்க ரெண்டு பேருக்கும்தான் உங்க நன்றிகள் உரித்தாகணும்’ என டாக்டர் கைகாட்ட, அவர்கள் ரம்யா, பாஸ்கரின் காலில் விழுந்து விட்டார்கள்.
ஒரு உணர்ச்சிபூர்வமான சூழ்நிலையில் ஒரு உயிரைக் காப்பாற்றிய நெருக்கடியில் அந்த நட்பு ஆரம்பமானது.
இருவரும் டோனர்கள் - மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரத்தம் தரும் இயல்பு கொண்டவர்கள் - அடிக்கடி ரத்ததான முகாம்களை நடத்துபவர்கள் என பல ஒற்றுமைகள் இருப்பதால், சந்திப்புகள் வளர்ந்து, நட்பு இறுக்கமானது.
குடும்பம் பற்றிப் பேசினார்கள். சொந்த சங்கதிகளை பரிமாறிக் கொண்டார்கள்.
பார்க்காவிட்டால் முடியாது என்ற நிலை உருவானது.
தினசரி தொலைபேசி மூலம் பேசுவது வழக்கமாயிற்று.
ஒருநாள் தாள முடியாமல் கோயிலில் வைத்து பாஸ்கர் தன் மனதை உடைத்து விட்டான்.
“ரம்யா! உன்னை நான் காதலிக்கறேன்னு தோணுது.”
ரம்யா அதிர்ச்சியடையவில்லை.என்ன ரம்யா பேசலை?”
“பேசத் தெரியலை பாஸ்கர். இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை.”
“ரம்யா! நீ எங்கிட்ட கோவப்பட்டாலும் சரி! என் மனசுல உள்ள உணர்ச்சிகளை நான் கொட்டித் தீர்த்துர்றேன். கேட்டுக்கோ!”
“சொல்லுங்க பாஸ்கர்!”
“கல்யாணியை ஒருநாள் பாக்கலைனா கஷ்டம் தெரியலை. உன்னைப் பாக்கலைனா முடியலை. எப்பவும் உன் ஞாபகமா இருக்கு. உன்னை நினைச்சாலே ஒடம்புல ஒரு புது கெமிஸ்ட்ரி உண்டாகுது. ரம்யா! ஒரு அழகான பெண்கிட்ட உண்டாகக் கூடிய பாலுணர்வு இது இல்லை. அந்த மாதிரி அல்பத்தனங்களைக் கடந்தவன் நான். அதுக்கும் மேல உங்கிட்ட என்னவோ இருக்கு. எனக்குப் புரியலை. ஐ யாம் ஸாரி ரம்யா!”
அவள் பேசவில்லை.
“நீ யோசி ரம்யா! இது தப்புனா, உடனே என்னைக் கண்டிச்சிடு. அந்த உரிமை உனக்கு உண்டு.”
“நான் போறேன் பாஸ்கர்!”
வீட்டுக்கு வந்து விட்டாள்.
அன்று இரவு சுத்தமாக உறக்கமே வரவில்லை.
அவனது வார்த்தைகள் கழன்றன.
அதில் ஒன்று கூடத் தப்பாகத் தெரியவில்லை.
ரம்யா கல்லூரியில் படிக்கும் நாளில் அவளிடம் ஜொள் விட்ட கூட்டம் ஏராளம். காதல் கடிதம் தந்து, கலாட்டா செய்து, கெஞ்சி அழுது, ரகவாரியாக அவள் பார்க்காத ஆண்கள் இல்லை. சகலமும் அவளுக்கு வேடிக்கை. அப்போதே மறந்து போவாள்.
ஆனால், பாஸ்கர் விவகாரத்தில் இதை உதற முடியவில்லை.
Read more from தேவிபாலா
கோடையில் பனி மழை! Rating: 0 out of 5 stars0 ratingsதொட்டில் வரை காதலி! Rating: 0 out of 5 stars0 ratingsதான் - தன் சுகம் Rating: 0 out of 5 stars0 ratingsபாப விமோசனம் Rating: 0 out of 5 stars0 ratingsநதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsமனசுக்கு மட்டும்! Rating: 0 out of 5 stars0 ratingsநதிமூலம் Rating: 0 out of 5 stars0 ratingsமனசு ஒரு தினுசு! Rating: 0 out of 5 stars0 ratingsபழைய பாடம் தேவையில்லை! Rating: 0 out of 5 stars0 ratingsவளர்ப்பு Rating: 0 out of 5 stars0 ratingsபாகீரதி Rating: 0 out of 5 stars0 ratingsநீதான் என் காதலி Rating: 0 out of 5 stars0 ratingsபோர்க்களப் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsமயான மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsபிரசாதப் பொட்டலம் Rating: 0 out of 5 stars0 ratingsசொன்னது என்னாச்சு? Rating: 0 out of 5 stars0 ratingsஅழகான ஆபத்து Rating: 0 out of 5 stars0 ratingsபட்டு மாமி! Rating: 0 out of 5 stars0 ratingsபேராசை! Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னோடு ஒரு நாள்! Rating: 0 out of 5 stars0 ratingsகோடைத் தள்ளுபடி Rating: 0 out of 5 stars0 ratingsஎப்பவும் உன் நிழலில்! Rating: 0 out of 5 stars0 ratingsபட்டாசு பட்டம்மா..! Rating: 0 out of 5 stars0 ratingsவா, சுகி வாசுகி Rating: 0 out of 5 stars0 ratingsஇன்று பாதி! நாளை மீதி! Rating: 0 out of 5 stars0 ratingsபனித்திரை Rating: 0 out of 5 stars0 ratingsதானாகத் தெரியும்! Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்சிப் பேசக் கூடாதா Rating: 0 out of 5 stars0 ratingsகேட்டேன் தந்தாய்! Rating: 0 out of 5 stars0 ratings
Related to சூரியன் சுடவில்லை!
Related ebooks
Naal Muzhukka Naadagam Rating: 0 out of 5 stars0 ratingsPaathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsAmma, Amma Rating: 5 out of 5 stars5/5Lakshmi Ramananin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsAva(l) Thaaram Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Nizhalodu Rating: 5 out of 5 stars5/5Kaathil Sollu Kaadhale Rating: 0 out of 5 stars0 ratingsKaathodu Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Karaium Neram Rating: 0 out of 5 stars0 ratingsபோர்க்களப் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னோடு ஒரு நாள்! Rating: 0 out of 5 stars0 ratingsநதிமூலம் Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisham Please Rating: 0 out of 5 stars0 ratingsமனசுக்கு மட்டும்! Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்சிப் பேசக் கூடாதா Rating: 0 out of 5 stars0 ratingsKetta, Enna Thappu? Rating: 0 out of 5 stars0 ratingsVeliyorathil Oru Vellai Poo Rating: 0 out of 5 stars0 ratingsvayulla Oomaigal Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Pradhesangal Rating: 5 out of 5 stars5/5Vanavaasam Rating: 0 out of 5 stars0 ratingsKoottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Kaadhal Rating: 5 out of 5 stars5/5வளர்ப்பு Rating: 0 out of 5 stars0 ratingsIni Oru Piriva Rating: 0 out of 5 stars0 ratingsNeruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsSaharavil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsPathinooravathu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsEppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5Indha Ithazhil Arambamagirathu Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar 2 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for சூரியன் சுடவில்லை!
0 ratings0 reviews
Book preview
சூரியன் சுடவில்லை! - தேவிபாலா
1
"என்னைக் கேக்காம எதுக்காக என் கல்யாண ஏற்பாடுகளை செய்யறீங்க?"
சீறினாள் ரம்யா!
அம்மா அருகில் வந்தாள்.
ரம்யா! உனக்கு வயசு இருபத்தி அஞ்சு. இந்த வயசுல நான் மூணு குழந்தைங்களை பெத்தாச்சு. புரியுதா?
உன் காலம் வேறம்மா!
இதப்பாரு! நாளைக்கு பெண் பார்க்க வர்றாங்க. பரஸ்பரம் புடிச்சாத்தான் எதுவுமே முடிவாகும். ஏன் பதட்டப்படற?
நான் புடிக்கலைனு சொல்லிட்டா?
இதப்பாருடி! உங்கப்பா கோபக்காரர். குடும்பத்துல குழப்பம் வர நீ காரணமா இருக்காதே!
இது என்னோட வாழ்க்கை! நாளைக்கு யாரும் வர வேண்டாம். வந்தா என்னைப் பாக்க முடியாது. நான் ஆபீஸ் போயிடுவேன்.
அவ போகட்டும் மரகதம். விட்டுடு! நீ புறப்படு. நாளைக்கே நீயும் நானும் எங்கியாவது போயிடலாம். இவ எப்படியோ போகட்டும்.
இல்லீங்க! அவ சொல்றதை பெரிசா எடுத்துக்க வேண்டாம்.
நிறுத்தும்மா! நான் சொல்றதுல மாற்றமில்லை.
அப்பா அருகில் வந்தார்.
உனக்கு என்ன பிரச்னை? யாராவது மனசுல இருக்காங்களா? உன் ரெண்டாவது அக்கா காதல் கல்யாணம்தான். நாங்களே நடத்தி வைக்கலையா? சரியான இடமாயிருந்தா, நாங்க தடுக்க மாட்டோம் ரம்யா!
இல்லைப்பா!
பின்ன?
அப்பா! என் உணர்வுகளை மதிக்க முயற்சி பண்ணுங்க. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க.
கையெடுத்துக் கும்பிட்டாள். உள்ளே போய் விட்டாள்.
அப்பா அப்படியே உட்கார்ந்து விட்டார்.
அம்மா அருகில் வந்தாள்.
என்னங்க! அவ திடமா, தீர்மானமா இருக்கா. விட்டுப்பிடிங்க. விருப்பமில்லாம பலவந்தப்படுத்தினா, யாருக்குமே நிம்மதி இருக்காது. கோவப்படாதீங்க. புரிஞ்சுக்குங்க.
இதப்பாருடி! நான் எல்லா ஜோசியமும் தெரிஞ்சவன். எனக்கு ஆயுள் அறுபத்தி ரெண்டு வயசுதான். இப்ப அறுபத்தி ஒண்ணு. ஒரு வருஷத்துல நான் சங்கு புடிச்சிடுவேன்.
அப்படியெல்லாம் சொல்லாதீங்க!
நெருப்புன்னா வாய் வேகாதுடி. மூணு பொண்ணுங்களைப் பெத்தோம். ரெண்டு பேரைக் கரை சேர்த்துட்டோம். இவளுக்கும் ஒரு வாழ்க்கை அமைஞ்சிட்டா, நிம்மதியா சாகலாம்னு பாக்கறேன். இது தப்பா?
நல்லதையே பேசுங்க.
சரி! அந்தக் குடும்பத்துக்கு இப்ப என்ன பதில்?
ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு! நாங்க அவசரமா ஊருக்குப் போறோம். மறுதேதியை நாங்களே சொல்றோம்னு நாசூக்கா தவிர்த்திடலாம்.
சரி! பெத்தவங்க இந்தக் காலத்துல வேஸ்ட்!
சகலமும் உள்ளே இருந்தபடி ரம்யா கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டாள்.
ரம்யா - எம்.காம். படித்து விட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள்.
ஓரளவுக்கு அழகான பெண். புத்திசாலி. கற்பூர புத்தி. மாதம் இருபதாயிரம் வரை சம்பளம். தனக்கென ஒரு வாகனம் வைத்திருக்கிறாள். அதிகமாக யாரிடமும் ஒட்ட மாட்டாள். ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்ற ரகம்.
நிறைய புத்தகம் படிப்பாள்.
ஆழ்நிலை தியானம், யோகா என வகுப்புகளுக்கு விடாமல் போவாள்.
ஏன் பெண் பார்க்க வருபவர்களை தடுக்கிறாய்?
மறுநாள் காலை அலுவலகம் வந்ததும், அவளுக்கு நெருக்கமான ஒரே தோழி மனிஷா கேட்டாள்.
ரம்யா சிரித்தாள்.
இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்? உன் மனசுல யாராவது இருக்காங்களா? அதுக்கும் உங்க வீட்ல தடை இல்லையே? சொல்லிடேன்.
ரம்யா பேசவில்லை.
உன் மனசு ஆழ்கடலை விட மோசம்டி. எங்கிட்டக் கூட சொல்லாம மறைச்சா எப்படி? ஒருநாள் நீ வெளில வந்துதானே தீரணும் ரம்யா?
அதற்கும் சிரிப்பு!
மாலை அலுவலகம் முடிந்ததும் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு ரம்யா புறப்பட்டாள்.
நேராக அந்தத் தனியார் மருத்துவமனையில் கொண்டு வந்து நிறுத்தினாள்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்வாள் ரம்யா. அதனால், டோனர் பட்டியலில் அவளது பெயரும், விலாசமும் உண்டு.
நாளை ஞாயிறு.
ரத்தம் தருவதாக பதிவு செய்து கொள்ள வந்திருந்தாள்.
ரம்யா! நான் இங்கே இருக்கேன்.
குரல் கேட்டுத் திரும்ப, அந்த மனிதன் சிரித்தபடி நின்றான்.
சீக்கிரமே வந்துட்டீங்களா?
பத்து நிமிஷமாச்சு.
சரி! நான் ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்துர்றேன்.
ரம்யா பதிவு செய்து விட்டு வந்தாள். இருவரும் சிரித்தபடி வெளியே வந்தார்கள்.
அவன் காருக்குள் ஏற, நான் என் வண்டில வந்துர்றேன் பாஸ்கர்.
ஒரு உயர்தர உணவகத்தில் இருவர் வண்டிகளும் நிற்க, பூட்டி விட்டு இருவரும் உள்ளே வந்தார்கள்.
ஏஸி இருட்டு மூலையைத் தேர்ந்தெடுத்து, ஒரு சூப்புக்கு சொல்லி விட்டு நிமிர்ந்தார்கள்.
என்னாச்சு உன் கல்யாண ஏற்பாடுகள்?
கிண்டலா? நான்தான் சம்மதிக்க மாட்டேன்னு உங்களுக்குத் தெரியுமே!
ரம்யா! இப்படி எத்தனை நாள் சாக்கு சொல்லுவே?
தெரியலை! இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கும் உண்டு பாஸ்கர்.
கேன் ஐ ஸ்மோக்?
தாராளமா!
ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்