Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkey Uyiranen!
Unakkey Uyiranen!
Unakkey Uyiranen!
Ebook95 pages33 minutes

Unakkey Uyiranen!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்பனா - சந்திரன் இருவரும் பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். பெற்றோரின் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற இவர்களின் சபதம் நிறைவேறியதா? இதயம் இல்லா தன் பெற்றோர்களின் இதயத்தை இவர்கள் வென்றார்களா?

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580140608570
Unakkey Uyiranen!

Read more from R. Manimala

Related to Unakkey Uyiranen!

Related ebooks

Reviews for Unakkey Uyiranen!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakkey Uyiranen! - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உனக்கே... உயிரானேன்!

    Unakkey Uyiranen!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    வண்டிகள் வஞ்சனையின்றி டீசல் புகையைக் கக்கிக்கொண்டு விரைந்தோடின. பலதரப்பட்ட மனிதர்கள். விதவிதமான முகங்கள், ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் எப்படி முடிந்தது, பிரம்மனால்? ஒவ்வொரு மனிதனையும் உருவாக்க எங்கேயிருந்து கிடைத்தது அத்தனை மாடல்களும்?

    சந்திரன் டென்ஷனும் கவலையும் போட்டி போட விரைந்த ஆட்டோக்களில் தெரிந்த முகம் தென்படுகிறதா என்று தேடினான்.

    ம்ஹும்!

    இன்னும் கவலை கூடிற்று.

    இடம் - பெரியமேடு பதிவுத் திருமண அலுவலகம்.

    சந்திரனோடு பத்து இளைஞர்களும் நான்கைந்து சுடிதார் யுவதிகளும் நின்றிருந்தனர்.

    மேகமும் சோம்பிக் கிடந்தது. இன்னும் சில மணிநேரங்களில் உறுமலோடு மழை பெய்யும் என்பதில் சந்தேகமில்லை.

    கல்பனாவை இன்னும் காணோமே பிரதீப்? என்றான் சந்திரன்.

    வந்துடுவா. கவலைப்படாதே! என்றான், நம்பிக்கையுடன் பிரதீப்.

    ஒருவேளை வீட்லே மாட்டிக்கிட்டாளோ?

    பயப்படாதே... அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகியிருக்காது. நம்ம ஊரு ட்ராஃபிக் பத்தி தெரியாதா உனக்கு? அதுல மாட்டிக்கிட்டிருப்பாங்க.

    அட்லீஸ்ட் ஒரு போனாவது பண்ணிச் சொல்லலாமில்லே. இப்படி டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்னு...

    அடடா... மாப்பிள்ளை இப்படி ஒரேயடியா டென்ஷன் ஆனா என்னாகறது? ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டா நடுவழியிலே எங்கே இறங்கி போன் பண்ண முடியும்? உளறாதேப்பா... கிண்டலாய்ச் சிரித்தான் ஸ்ரீதர்.

    என் அவஸ்தை உனக்கு உளறலா தெரியுதா?

    கோவிச்சுக்காதே... அதோ உன் ஆள் வந்தாச்சு!

    ஆட்டோவிலிருந்து கல்பனாவும் அவள் தோழிகள் இருவரும் இறங்குவதைப் பார்த்த பின்பே நிம்மதியாய் மூச்சு விட்டான்.

    கல்பனா பட்டுப் புடவையும், தலை நிறையப் பூவும், கழுத்தில் காதில் நகைகளுமாய் மணப்பெண் கோலத்தில் இருப்பதைப் பார்த்து வியந்தான் சந்திரன்.

    வா கல்பனா, ஏன் இவ்வளவு லேட்டு? ரொம்ப பயந்திட்டேன். வீட்லே யாரும் சந்தேகப்படலியே?

    கல்பனா அவன் பதற்றத்தை ரசித்தவாறு மென்மையாய் முறுவலித்தாள்.

    ஒண்ணும் பிரச்னையில்லை! யூஷுவலா காலேஜுக்குக் கிளம்பற மாதிரி கிளம்பினதால யாருக்கும் சந்தேகம் வரலே சித்ராதான் அவளோட ஹாஸ்டலுக்குக் கூட்டிக்கிட்டுப்போய் கல்யாணம்னா இப்படியா இருப்பாங்கன்னு அவளோட புடவை நகைகளை மாட்டி விட்டுட்டா. வர்ற வழியிலே ட்ராஃபிக் வேற. அதான் லேட்டு

    நான் சொன்னேனா இல்லையா? ஒரேயடியா துடிச்சியே! என்றான் பிரதீப்.

    டேய் சும்மாயிருடா, காதலிச்சிருந்தா என் டென்ஷன் தெரிஞ்சிருக்கும்! வீட்டுக்குத் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணியிருந்தா தெரிஞ்சிருக்கும். சாமியாருக்கு என்னடா தெரியும், காதலைப்பத்தி...! கிண்டல் பண்ணினான் சந்திரன்.

    சரி, உனக்குத்தான் அவ்வளவு தில் இருக்கே... உன் கல்யாணத்துக்கு உங்கப்பாவைக் கூப்பிட வேண்டியதுதானே?

    அதானே? பிரதீப்பிற்கு ஒத்து ஊதினான் ஷங்கர்.

    திருட்டுக்கல்யாணம் பண்றதுக்குக் கூட ஒரு தில் வேணும். சும்மா… பேச வந்திட்டானுங்க, சாமியார் பசங்க.

    டேய் மச்சான், கல்யாணமாகப் போகிற தைரியத்துல ரொம்ப ஓவராப் பேசறாரு சாரு. சாட்சிக் கையெழுத்துப் போடறதுக்கு நாங்க வேணும் சார். அதை ஞாபகம் வச்சுக்குங்க. வாங்கடா போகலாம்...

    வெளியேற முயற்சித்த பிரதீப்பைக் கைப்பிடித்து இழுத்தான் சந்திரன்.

    மற்றவர்கள் இந்த விளையாட்டை சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ஒரேயடியா அலட்டிக்காதே... வாடா!

    ஆமாங்க. நேரமாய்டுச்சு. நல்ல நேரம் முடிஞ்சிடப் போகுது! என்றாள் கல்பனா.

    சொன்னதுதான் தாமதம் ஒரே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் ஹோய் என்று உற்சாகமாய்க் கத்தினார்கள்.

    கல்யாணப் பொண்ணு அவசரப்படறாங்க டோய்.

    கல்பனா வெட்கத்தில் முகம் சிவக்கத் தலை கவிழ்ந்தாள்.

    ஏய்... என்ன என் கல்பனாவைக் கிண்டல் பண்றீங்க!

    கல்யாணமே ஆகலே... அதுக்குள்ளே நம்ம சந்திரன் பொண்டாட்டிதாசனா மாறிட்டான் டோய்

    மறுபடியும் ஹோய் என்று உற்சாகக் கூக்குரல்.

    போதும்ப்பா... போதும். வாங்க! சிரித்தபடி தலைக்குமேல் இரு கைகளையும் உயர்த்தினான் சந்திரன்.

    அடுத்த நிமிடம் அந்த இளைஞர் பட்டாளம் பதிவுத் திருமண அலுவலகத்திற்குள் நுழைந்தது.

    பதிவு அதிகாரி முன்பு சந்திரன் தங்கச் சங்கிலியில் கோத்த தாலியைக் கல்பனாவிற்கு அணிவித்தான். பிரதீப் உட்பட இன்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1