Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vadakke Oru Santhippu
Vadakke Oru Santhippu
Vadakke Oru Santhippu
Ebook112 pages44 minutes

Vadakke Oru Santhippu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலத்தில் ஏற்பட்ட அநீதிகளில் போகயிருந்த சீதா. அவள் வாழ்க்கையில் மூட பழக்கங்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? காதல் நெடி வீசாமல் மிக உயர்ந்த பாச ரீதியான நட்பை அஸ்திவாரமாக கொண்ட வடக்கே ஏற்பட்ட சந்திப்பை வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateNov 5, 2022
ISBN6580155609211
Vadakke Oru Santhippu

Read more from Lakshmi

Related to Vadakke Oru Santhippu

Related ebooks

Reviews for Vadakke Oru Santhippu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vadakke Oru Santhippu - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வடக்கே ஒரு சந்திப்பு

    Vadakke Oru Santhippu

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    சீரடி யாத்திரைக்குச் சென்னையிலிருந்து கிளம்பிய அவர்கள் கோஷ்டியில் பெண்கள் எட்டுப் பேர், ஆண் துணைக்கு ஒன்பதாவது நபர் ரங்கையா. டாக்டர் ரேவதிதான் கோஷ்டியின் தலைவி.

    ரங்கையா தமது குடும்பத்துடன் கிளம்பியிருக்கிறார். மனைவி, தாயார், இரண்டு பெண்கள் என அவர்கள் ஐவர். டாக்டர் ரேவதி தனது தோழிகளான சரோஜா, மரகதம் இருவருடன் வந்திருந்தாள். தனிமையையே வாழ்நாள் முழுவதும் துணையாக்கிக் கொண்டிருந்த சீதா, தனியாகத்தான் புறப்பட்டிருந்தாள்.

    டாக்டர் ரேவதி ஓய்வு ஒழிவின்றி ஒருவார காலமாக இந்த யாத்திரைக்கு வேண்டிய எல்லா விதமான ஏற்பாடுகளையும் செய்து விட்டிருந்தாள். பகவான் ஸாயிநாதனை தரிசித்த பிறகு, திரும்பி வர டிக்கெட் ரிஸர்வேஷனுக்கு ரயில்வே மூலம் ஆமதாபாத்திற்கு தந்தியடித்து விட்டிருந்தாள். நோயாளிகளைக் கவனித்த நேரம் போக மீதி நேரத்தில் ஒவ்வொருவருக்கும் டெலிபோனில் பேசி, யார்? யார் என்ன கொண்டுவர வேண்டும், எல்லாரும் காலை எத்தனை மணிக்கு எந்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்று முன்னதாகவே எச்சரித்து விட்டிருந்தாள். யாத்திரை கோஷ்டியின் காலை டிபன் விநியோகத்தையும் அவளே ஏற்றுக்கொண்டிருந்தாள்.

    பகல் சாப்பாடு, பங்களூர்க்காரி - மரகதம், ‘பிஸி பேளா அன்னா’வையும், தயிர் சாதத்தையும் பொட்டலமாகக் கொண்டு வருவதாக ஒப்புக் கொண்டிருந்தாள்.

    பிற்பகல் காப்பிக்கு சரோஜா உபயம், மைசூர் பாகு, ஓமப்பொடி.

    சீதா தான் இரவுச் சாப்பாட்டுக்காக, சுக்கா ரொட்டியும் கத்தரிக்காய் துவையலும், பழங்கள், பிஸ்கட்டுகளும் கொண்டு வர ஏற்றுக்கொண்டாள்.

    ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் (கான்) கொதித்து ஆறிய குடிநீரும், கூடவே பிளாஸ்டிக் டம்ளர்களும் கொண்டு வர உத்தரவாகியிருந்தது.

    அவரவர்கள் படுக்க ஒரு ஜமக்காளம், தலையணை, போர்வை (பிப்ரவரி மாதம் என்றாலும் வடக்கே குளிரும்! சில சமயங்களில் பல்லைக்கிட்டும் குளிரும் உண்டு என்பது ரேவதியின் எச்சரிக்கை!) ஒரு கம்பளிச் சட்டையும் எடுத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டது. ரேவதி பலமுறை சீரடிப் பயணம் செய்து பழக்கப்பட்டவள். அவளது உத்தரவிற்கு யாவரும் கட்டுப்பட்டனர்.

    அவரவர்கள் பொருள்களை அவரவர்கள் தூக்கிக்கொண்டு நடக்கத் தயாராக இருக்க வேண்டும்! கூடியவரை, மூன்று புடவைகளுக்கு மேல் தேவையில்லை. துவைத்துக் காயவைத்து உடுத்த சௌகர்யமான மெல்லிய துணிகளாகவே கொண்டு வரவும். ரேவதியின் புத்திமதிகளின்படியே கோஷ்டி நடந்து கொண்டது.

    ரங்கையா குடும்பத்தார் முறுக்கு, அதிரசம், ரொட்டி, பிஸ்கட், பழ வகைகள் எனப் பெரிய மூட்டையையே கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தனர்.

    ரேவதி பெட்டி, படுக்கை, சாப்பாடு மூட்டை இத்யாதிகளுடன் தன் மருந்துப் பெட்டியையும் மறக்காமல் மருந்துகளை நிரப்பி எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்.

    அவளுக்கு எப்போதும் பிறரைப் பற்றிய நினைவு அதிகம்.

    ஓடும் ரயிலில் இரு முறைகள் அவள் வேதனையில் துடித்த பெண்களுக்குப் பிரசவத்தில் உதவி இருக்கிறாள். பறந்த விமானத்திலே பணிப்பெண் திரை பிடிக்க, முதல் வகுப்புப் பகுதிக்குள்ளே ஒரு ஆண் குழந்தை பெறுவதற்கு ஒரு பெண்ணுக்கு டாக்டராகப் பணி புரிந்திருக்கிறாள். இந்த அனுபவங்களின் பயனாக அவள் எங்கே சென்றாலும் சோதனைக் குழாய் மருந்துப் பை சகிதம்தான் பிரயாணம் செய்வது வழக்கம்.

    எழுபத்தைந்து பேர்கள் பகலில் உட்காரவும் இரவில் தூங்கவும் வசதியுள்ள பெட்டிகள் கொண்ட நீண்ட ரயில் அது. ரேவதி கோஷ்டியினருக்கு ஒரு பெட்டியின் நடுப்பகுதியில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஜன்னல் அருகே ஆறு பேர் உட்காரவும் - இரவில் மடிக்கப்பட்டு பின்னால் கிடந்த நடுப்பலகையை நிமிர்த்தி, ஊஞ்சல்போல் மாட்டிவிட்டால், ஆறு பேர் படுக்கவும் வசதியாக இருந்தது. மற்ற இரு பெண்களுக்கு, நடைபாதை அருகே ஜன்னல் ஓரமாக இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. மடித்தால் உட்கார நாற்காலியாகவும் - நீட்டினால் படுக்கையாகவும் மாறும் ஆசனம், மேலேயும் ஒருவர் படுக்க பலகை இருந்தது. பாவம் ரங்கையா! அவருக்குப் பக்கத்துப் பகுதியில் இடம் கிடைத்தது. பாஷையே புரியாத குஜராத்திக் கும்பல் ஒன்றில் வசமாக மாட்டிக் கொண்டிருந்தார் மனுஷன். இவரது பேச்சு அவர்களுக்குப் புரியாது; அவர்கள் பேசுவது இவருக்கு கஸ பிசா போலக் காதுகளில் விழுந்து கொண்டிருந்தது.

    ‘பீச்’ ஸ்டேஷனை விட்டு வண்டி புறப்பட்டது. பெட்டியே இரண்டு படும் அளவு உற்சாகத்தில் பெண்கள் பகுதியில் கூச்சலும் கும்மாளமுமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் நா வறண்டு, அடிவயிற்றைப் பசி புரட்டவே, எல்லாரும் வாயடைத்துப் போய்ச் சாப்பாட்டு மூட்டைகளைப் பரிதாபமாகப் பார்த்தனர்.

    அடுத்த பகுதியில் இருப்புக்கொள்ளாமல், ரங்கையா பலமுறை எழுந்து வந்து அவர்களை எட்டிப் பார்த்தார். முடிவில் ரேவதி கொணர்ந்திருந்த இட்டலி மூட்டையை அவிழ்த்தாள். பஞ்சத்திலே அடிபட்டவர்கள் போல் சீதாவைத் தவிர எல்லோரும் இட்லியிலும் எண்ணெய் குழைத்த மிளகாய்ப் பொடியிலும் எகிறி விழுந்தனர்.

    சீதா ஒரே ஒரு இட்டலியை விழுங்கிவிட்டு பிளாஸ்டிக் டம்ளரிலிருந்த தண்ணீரைக் குடித்தாள். தண்ணீர்கூட நெஞ்சுக்குள்ளே இருந்து கீழே இறங்க மாட்டாது போன்ற இறுக்கமான உணர்வு.

    உம்! சாப்பிடு. என்ன முழிக்கிறே? அன்புடன் டாக்டர் ரேவதி அதட்டினாள்.

    ஒரு வருஷ காலமாகவே இறுக்க உணர்வுதான். மண்டையே வெடித்து விடும் போன்ற ஒரு அழுத்தம். யாரிடமும் சொல்லாமலே பல நாட்களாகத் தன்னுள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தாள்.

    ரங்கையாவின் இரு பெண்களும் காலேஜ் குமரிகள். சீக்கிரம் நல்ல இடத்தில் கல்யாணம் நடக்க வேணும் என்ற பிரார்த்தனை. அதன் பெருட்டு, தாயார், தன் இரு பெண்களையுமே கூடக் கூட்டி வந்திருந்தாள்.

    ரங்கையாவுக்குப் புதிதாக ஆரம்பித்த வியாபாரம் நன்கு தழைத்தோங்க வேண்டுமென்ற கவலை. சீரடி நாதனைத் தரிசித்து அருள் பெற்றுப் போகக் கிளம்பி இருந்தார்.

    அவரது தாயார் எழுபது வயதைத் தாண்டியவர். சமீபத்தில் ஒரு பெரிய அறுவை சிகிச்சையினின்றும் பிழைத்து எழுந்திருந்தார். சிகிச்சையின்போது மேற்கொண்ட வேண்டுதலையை நிறைவேற்றப் புறப்பட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1