Maariyathu Nenjam Maattriyathu Yaaro
()
About this ebook
Read more from Parimala Rajendran
Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Kaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Idhayathil Oru Idam Rating: 5 out of 5 stars5/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Uravugal Thodarkathai Rating: 5 out of 5 stars5/5Anbil Vilaintha Paasamalare Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Malarntha Vizhigal Rating: 5 out of 5 stars5/5Vaazhkkai Azhaganathu Rating: 0 out of 5 stars0 ratingsManasellaam NIrainjavane Rating: 4 out of 5 stars4/5Ithayam Oru Kovil Rating: 4 out of 5 stars4/5
Related to Maariyathu Nenjam Maattriyathu Yaaro
Related ebooks
மாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ..? Rating: 0 out of 5 stars0 ratingsIlamjolai Vennilaa Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsPatrathu Patratru Rating: 0 out of 5 stars0 ratingsSaraiyu Kaathirukkiral Rating: 0 out of 5 stars0 ratingsNeruppodu Vilaiyadu! Rating: 5 out of 5 stars5/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Yenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsஏனழுதாய் என்னுயிரே! Rating: 0 out of 5 stars0 ratingsPirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Anbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsGanga Rating: 5 out of 5 stars5/5Kangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 0 out of 5 stars0 ratingsSwarangal Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Nenjin Neruppu Rating: 5 out of 5 stars5/5Thotravan Theerpu Rating: 5 out of 5 stars5/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Idhayam Muludhum Unadhu Vasam Rating: 0 out of 5 stars0 ratingsமாணிக்கத் தொட்டில் இங்கிருக்க... Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Thottil Ingirukka Rating: 0 out of 5 stars0 ratingsUn Manaivi, En Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsKanave Kalaiyadhe! Rating: 5 out of 5 stars5/5Nilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Kankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5கண்களுக்குச் சொந்தமில்லை Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Maariyathu Nenjam Maattriyathu Yaaro
0 ratings0 reviews
Book preview
Maariyathu Nenjam Maattriyathu Yaaro - Parimala Rajendran
12
1
மார்கழி மாத குளிர் காற்று ஜில்லென்று வீச, பனி விலகாத அந்த காலை பொழுது ரம்மியமாக காட்சி தர, ‘ஸ்கீரினை’ விலக்கி பார்த்த துர்கா அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை. கழுத்தில் தொங்கும் மாங்கல்யமே உறுத்தலாக தோன்றியது.
போர்வையை தலைவரை இழுத்து மூடி தூங்கும் கார்த்தியை பார்த்தாள். அப்பாவின் பேச்சை கேட்டு கல்யாணத்துக்கு தலை அசைத்தது எவ்வளவு தவறு. கல்யாணம் நிச்சயம் ஆகி அந்த நான்கு மாதம் அவனுடன் பழகினேனே அப்பொதெல்லாம் இவன் பேச்சு, சிரிப்பு எல்லாமே ரசிக்கும்படியாக, என்னை உள்ளன்போடு விரும்புபவனாகவே தானே தெரிந்தான்.
ஆனால் தாலிகட்டிய இந்த ஆறு மாதத்தில் இவனுடன் இருக்கும் நேரங்கள், எனக்கு ஏன் சோர்வையும், எரிச்சலையும் தருகிறது.
என் எதிர்பார்ப்புக்கு ஏற்றவனாக இல்லை. இவனிடம் இன்னொரு கார்த்தி இருக்கிறான். பெண்களை அடிமையாக நினைப்பவன். கல்யாணம் என்ற பந்தத்தில் பெண்ணை சிறை பிடித்த இறுமாப்பில்... அப்பப்பா... மூச்சு முட்டுகிறது.
அறை கதவை திறந்து பால்கனிக்கு வருகிறாள். கொஞ்ச நேரம் இந்த இயற்கை காற்றை சுவாசிப்போம்.
அங்கிருந்த பாலிமர் சேரில் உட்கார்ந்தவள், கீழ் வீட்டு வசந்தி வாசல் தெளித்து அழகாக கலர் கோலம் போடுவதை பார்க்கிறாள்.
பனிவிழுது பாரு. தலையில் மப்ளர் போடாமல்... என்ன வசந்தி... இது... இந்தா இதை முதலில் மாட்டு, அக்கறையுடன்... கொண்டு வந்து தரும் அவள் கணவன் சங்கர்.
துர்கா மாடிக்கு புதுக்குடித்தனம் வந்து ஆறு மாதங்கள் ஆகிறது. வசந்தி இரண்டு வருடமாக இருக்கிறாள். கல்யாணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. புது வரவுக்கு காத்திருக்கும் மனமொத்த தம்பதிகள்.
சங்கர் காலேஜில் ப்ரொபசர். வசந்தியும் கிண்டர் கார்டன் ஸ்கூலில் வேலை பார்க்கிறாள்.
இவர்கள் இருவரையும் பார்த்தால்தான் - புதிதாக மணமானவர்கள் மாதிரி தெரிகிறது. அவ்வளவு அன்னியோன்யம்.
கார்த்தியிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. ஒளியில்லாத பார்வை. சிரிப்பதற்கே யோசிக்கும் உதடுகள். கல்யாணமாவதற்கு முன் அழகாய் தெரிந்ததெல்லாம் கற்பனையோ என்றுகூட துர்காவுக்கு சில சமயம் தோணும்.
துர்கா பொழுது விடிவதற்கு முன்னால எழுந்து என்ன செய்யறே. குளிர் காற்று அடிக்குது பாரு. கதவை மூடிட்டு வந்து படு.
கார்த்தியின் தூக்க கலக்க குரல்.
அழகை ஆராதிக்க தெரியாதவன். காலை நேர விடியல் பொழுதின் அழகை ரசிக்க ஆர்வமில்லாதவன்...
கோலம் போட்டு எழுந்தவள் முன் காப்பியுடன் வந்து நிற்கிறான் சங்கர்.
என்னங்க இது, வாசலுக்கே வந்துட்டிங்க. நான் உள்ளே வரமாட்டேனா.
இருக்கட்டும், குடி வசந்தி. பனிகாற்று உடம்புக்கு ஆகாது. சொன்னால் கேட்காமல் தினமும் எழுந்து கலர் கோலம் போடற:
கரிசனத்துடன் சொல்கிறான் சங்கர்.
காபியை வாங்கி ரசித்து குடித்தவள்,
"உங்க கையில காபி குடிக்க கொடுத்து வச்சிருக்கணும் சங்கர். டிகாஷன் தூக்கலாக, சீனி குறைவாக, நுரை பொங்கிய பால் ஊத்தி... சூப்பர்.
சரி, என் கோலம் எப்படி சொல்லுங்க?"
சேவலும் கோழியும் நிற்க அருகில் இரண்டு கோழிகுஞ்சுகள்... தத்ரூபமாக இருக்கிறது.
ரொம்பவும் அழகா இருக்கு வசந்தி. உன் கை விரலின் நளினம் கோலத்தில் தெரிகிறது.
இந்த வருஷமாவது அந்த கடவுள் நம் கோழிகுஞ்சை நம்பகிட்டே அனுப்பி வைப்பாரா...?
வசந்தியை பார்த்து கண்ணடித்து சிரிக்க,
நீங்கதானே இரண்டு வருஷம் தள்ளி போடுவோம்னு சொன்னீங்க. இப்ப எக்ஸ்ட்ரா ஒரு வருஷம் ஓடியாச்சு. கட்டாயம் அடுத்த வருஷம் குட்டி கண்ணன் வந்துடுவான்
உதட்டை சுழித்து சிரிக்கிறாள்.
சரி, உள்ளே வா வசந்தி. காய் என்ன வெட்டி தரணும்னு சொல்லு. நான் ரெடி பண்றேன். நீ குளிச்சுட்டு வா
இருவரும் உள்ளே போகிறார்கள்.
துர்காவிடம் பெருமூச்சு வெளிப்படுகிறது.
பார்ப்பதற்கே பொறாமையாகதான் இருக்கிறது. ஒரு நாளாவது கார்த்தி இதை போல எனக்கு காபி கலந்து தந்திருப்பாரா...
கிச்சன் வேலையெல்லாம் எனக்கு அலர்ஜி துர்கா. அதனால தயவு செய்து என்கிட்டே எந்த உதவியும் எதிர்பார்க்காதே. சரியா?
கல்யாணமான புதிதில் தனியாக் கிச்சனில் வேலை பார்த்தவளிடம் சொன்னான் கார்த்தி.
அன்றிலிருந்து இன்று வரை கிச்சன் பக்கமே வந்தவன் இல்லை. சாப்பிட்ட தட்டைகூட எடுக்கமாட்டான்.
உன்னால முடியலைன்னா ‘சர்வண்ட் மெயிட்’ வச்சுக்க துர்கா. எதுக்கு முகத்தை சுளிச்சுக்கிட்டு வேலை பார்க்கிறே.
பரவாயில்லை நானே சமாளிச்சுக்குவேன்.
சரி, ரெண்டு பேர் தானே. அப்படியென்ன பெரிய வேலை இருக்கு. அதுவுமில்லாமல் பொழுதுக்கும் வீட்டில்தானே இருக்கே.
எனக்கு வேலைக்கு போறதில் இஷ்டமில்லை.
நானும் போகச் சொல்லலையே... வாட்டர் ப்ளாண்ட் போட்டிருக்கேன்... அதுவுமில்லாமல் ஹோல் - சேல் பிஸனஸ் பண்றேன். நல்லா போய்ட்டிருக்கு. நீ ஏன் வேலை பார்க்கணும் அவசியமில்லை.
வேலை போறதும் போகாததும் என் இஷ்டம். உங்களுக்கு நல்ல ‘இன்கம்’ இருக்குங்கிறதுக்காக நான் வீட்டில் இருக்கணும்னு அவசியமில்லை.
நான் மட்டும் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன். போ... போய் ஏதாவது வேலை இருந்தா பாரு. இப்படி தொட்டதுக்கெல்லாம் எதிர்வாதம் பண்ணினா பிரச்சனை வரும் துர்கா.
முட்டாள்தனமாக முடிவு பண்ணிவிட்டேன். நான் வேலைக்கு போகாதது தப்போ என தோணுகிறது.
அவனை நம்பி நான் இருக்கிறேன் என்று நினைத்துதான் எதையும் அதிகாரமாக சொல்கிறான்.
நினைவுகள் கோபத்தை தூண்ட, கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தவள், திரும்பவும் படுக்கையில் படுத்து, தலை முதல் கால் வரை போர்த்திக் கொள்கிறாள்.
குளித்துவிட்டு தலையை டவலால் துடைத்தபடி வருகிறான் கார்த்தி.
என்ன டிபன் துர்கா?
இட்லி
ஒற்றை வரியில் பதில்.
உனக்கு இதை தவிர எதுவுமே தெரியாது. ஓ.கே. நான் கம்பெனியில் சாப்பிட்டுக்கிறேன்.
"காலையில் எழுந்து செய்து தருவதே பெரிசு. இதில் என்னால் விதம் விதமாக செய்ய