Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saathanin Kavithaigal
Saathanin Kavithaigal
Saathanin Kavithaigal
Ebook70 pages23 minutes

Saathanin Kavithaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புனித மரியன்னை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நெருக்கமான ஆறு நண்பர்களில் இரண்டுபேர் பலூன் சிறுவனால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அடுத்தடுத்து பல்லவ்பூரில் ஆறு வயது சிறுவர்கள் கொல்லப்பட்டனர். ஆறு வயது சிறுவர்கள் கொல்லப்படுவதற்கான காரணம் என்ன? யார் அந்த பலூன் சிறுவன். பல்லவ்பூரில் நடக்கும் மர்மம் என்ன?

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580111009237
Saathanin Kavithaigal

Read more from Arnika Nasser

Related to Saathanin Kavithaigal

Related ebooks

Related categories

Reviews for Saathanin Kavithaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saathanin Kavithaigal - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சாத்தானின் கவிதைகள்

    Saathanin Kavithaigal

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    1978 நவம்பர் ஆறாம் தேதி பகல் 11 மணி - பல்லவ்பூர்

    வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த மண்டலம் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தெற்கு தமிழகத்தை நோக்கி தாக்கியது.

    சூரியன் ஏழாம் வானம் போய் ஒளிந்து கொண்டது.

    இரு தேசத்து லட்சக்கணக்கான கறுப்புக் குதிரைகள் எதிர் எதிரே வந்து முட்டிக்கொண்டன. மழை மேகங்கள்.

    ஏற்கனவே பெய்த மழையில் சாலைகளும் கட்டடங்களும் மரங்களும் நனைந்து சொதசொதத்திருந்தன.

    திறந்தவெளி சாக்கடையில் மழை நீர் கரை புரண்டோடியது.

    புனித மரியன்னை மெட்ரிக்குலேஷன் பள்ளி ஊருக்கு ஒதுக்குப்புறமாய் நான்கு மாடி கட்டடமாய் நிமிர்ந்திருந்தது.

    மிகவும் கண்டிப்பான பள்ளி. விடுமுறைகள் மிகக் குறைவு.

    அடாது மழை பெய்து வந்தாலும் அன்றும் பள்ளி இயங்கியது.

    பள்ளியின் நான்கு பஸ்களில் குழந்தைகள் வந்திறங்கியிருந்தன.

    முதல் வகுப்பில்,

    மிஸ் ஆனி அமர்ந்திருந்தாள்.

    அவள் எதிரே நாற்பது குழந்தைகள்.

    நாற்பதில் ஆறு குழந்தைகள் நெருக்கமான நண்பர்கள்.

    சங்கர். சோடா புட்டி கண்ணாடி. நடு வகிடு கேசம். இன்னுமே மழலை மாறாத சிறுவன்.

    சந்தனு. மகா குண்டு.

    ஆனந்த். ஒற்றை நாடி. நீண்ட முகம். கோரை முடி... குளிரிலிருந்து தப்ப உல்லன் தொப்பி; உல்லன் ஸ்வெட்டர் அணிந்திருந்தான் சீருடை மீது.

    சார்லஸ். கழுத்தில் சிலுவை தொங்கும் டாலர். பளபளப்பான கறுப்பு நிறம் நொடிக்கொரு தரம் ‘சேசுவே! சேசுவே!’ என்பான்.

    அன்வர், முஸ்லிம் பையன். வலது கையில் பிராஸ்லட். இடது கையில் டைட்டன் வாட்ச் ஆறாவது தேவசாமி.

    மீண்டும் பெரும் இரைச்சலுடன் மழை ஆரம்பித்திருந்தது. காற்றில் ஈரமும் குளிரும் கலந்து மிதந்தது.

    வானம் கோடிக்கணக்கான கறவை பசுக்களின் பால் காம்புகளாய் மாறியிருந்தது. அனைத்து காம்புகளிலிருந்தும் மழை சர்ரென பீய்ச்சியடித்தது.

    நேரம் ஆக ஆக காற்றின் வேகம் உக்கிரமானது.

    தலைமையாசிரியை அறையில் அவசரக்கூட்டம் நடந்தது. ஒட்டுமொத்த ஆசிரியைகளின் விருப்பப்படி அன்றும் மறுநாளும் விடுமுறையாய் அறிவிக்கப்பட்டன.

    பள்ளிப் பேருந்துகள் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அவரவர் வீட்டுக்கு விட்டுவர புறப்பட்டன.

    ஏறக்குறைய எல்லாக் குழந்தைகளும் போயிருக்க,

    சங்கர், சந்தனு, ஆனந்த், சார்லஸ், அன்வர், தேவசாமி மட்டும் திருட்டுத்தனமாய் மாடிப்படிக்கட்டுக்கு கீழ் ஒளிந்து கொண்டனர்.

    எதுக்குடா சங்கரு எங்கள இங்க ஒளியச்சொன்ன?

    வீட்டுக்குப்போனா போரடிக்கும். எல்லாரும் போய்ட்ட பிறகு ஸ்கூலே காலியா இருக்கும். நாம மட்டும்தான். ஜாலியா இருக்கலாம்!

    அப்றம் எப்டி வீட்டுக்குப் போரது?

    அது பாத்துக்கலாம்டா!

    Enjoying the preview?
    Page 1 of 1