Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuttraroja
Kuttraroja
Kuttraroja
Ebook184 pages1 hour

Kuttraroja

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111002923
Kuttraroja

Read more from Arnika Nasser

Related to Kuttraroja

Related ebooks

Reviews for Kuttraroja

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuttraroja - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    குற்றரோஜா

    Kuttraroja

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    கோடைச்சூரியன் அவசரமாய் வான ஜன்னல் எட்டிப் பார்த்திருந்தான். புழுதி படிந்த மடிப்பாக்கத்தை ஆரஞ்சு வெளிச்சம் குளிப்பாட்டியிருந்தது. அகலம் குறுகிய மண்சாலையில் நகரப் பேருந்துகளும் மண்லாரிகளும் எதிரும் புதிருமாய் பறந்துகொண்டிருந்தன.

    பணிக்குச் செல்லும் ஆண்-பெண் குழுமம் மின் ரயிலுக்கும் நகரப் பேருந்துகளுக்கும் பரபரத்தது. மடிப்பாக்க மக்களுக்கு தான் ஒரு சென்னை வாசி என்கிற எண்ணம் அறவே கிடையாது. பணிமுடிந்து திரும்பிவிட்டால் அவர்களின் சகலமும் மடிப்பாக்கத்துக்கு உள்ளேயேதான்.

    மடிப்பாக்கம் கூட்டுரோட்டில் வலப்பக்கம் சிறிது தூரம் நடந்தால் 'ரெயின்போ ' அபார்ட்மென்ட்ஸ் பார்வையாகும். மொத்தம் ஆறு பிளாக்குகள். ஒவ்வொரு பிளாக்கும் நான்கு மாடிக் கட்டடமாய் அமைந்திருந்தது. ஒவ்வொரு பிளாக்கிலும் 16 ஆடம்பர பிளாட்ஸ்.

    அபார்ட்மென்ட் காம்பவுண்டுக்குள்ளேயே பிள்ளையார் கோயில், கார் பார்க்கிங், செக்யூரிட்டி கார்டு மற்றும் லிப்ட் ஆபரேட்டர் ஓய்வறை, சிறுவர் விளையாடுமிடம் அமைந்திருந்தன.

    -பிளாக் 'ஆ' பிளாட் எண் '13' படுக்கையில் படுத்து வெகு நேரம் உருண்டு கொண்டிருந்த தீபக் மெதுவாகத் தலைதூக்கினான். சுவர் கடிகாரத்தை உன்னித்தான். எழுந்து அமர்ந்தான். முந்தின நாள் இரவு குடித்த போதை பானத்தின் உபயம் தலைகனத்தது. சிவந்த கண்களை மூடித்திறந்தபடி வெறும் வாயை மென்றான்.

    உலகமே போட்டி போட்டுக்கொண்டு அவனை ஏமாற்ற முயற்சிப்பதாக அவனுக்குப் பிரமை.

    மெதுவாக அமர்ந்தபடி எட்டி தலைமாட்டிலிருந்த டீ கோப்பையைக் கவர்ந்தான். ஆடை படர்ந்து டீஜில்லிட்டது. பெட் டீ குடிப்பதில் ஏதேனும் குளறுபடி நடந்துவிட்டால் ருத்ரதாண்டம் ஆடிவிடுவான் தீபக்.

    இப்போதும் ஆட ஆரம்பித்தான். ஏய்கழுதை ரத்னா!

    என்னடி .... இது டீயா? ரத்னாவின் முகத்தில் வீசினான்.

    'ஸ்ப்ளாச்!'

    டீயைத் துடைத்தபடி அழுகுரலில் விளக்கினாள் ரத்னா. ஒரு மணிநேரமா டீயை வச்சிகிட்டு உங்கள் 'எந்திரிங்க! எந்திரிங்க'ன்னு எழுப்பினேன். நீங்கதான் எந்திரிக்கல. இது இரண்டாவது கப் டீ . கொஞ்சம் பொறுங்கள். திரும்ப டீ போட்டுக்கிட்டு வரேன்! நடக்கத் தொடங்கினாள்.

    நில்லுடி. மெதுவா தப்பை என் பக்கம் திருப்பற பாரு... செமசாமர்த்தியம்டீ உனக்கு!

    எதுக்குங்க வாதம்? தப்பு என்மேலத்தான். மன்னிச்சிடுங்க!

    ஹ. பெரிய பொம்பளை புத்தர் இவ. அடுத்தவங்க தப்புக்கு இவ மன்னிப்பு கேக்றா. நீ கேக்ற மன்னிப்புல மறைமுகமான பழிவாங்கல் இருக்குடி!

    என்னங்க இது! இப்படி பேசினா அப்படி, அப்படி பேசினா இப்படின்னு எப்படி பேசினாலும் தப்புக் கண்டுபிடிக்கிறீங்க!

    ஆமாண்டி. அப்படித்தான் தப்புக் கண்டுபிடிப்பேன். இதான் என் பிறவிக்குணம். என் குணம் தெரிஞ்சும் ஏன் என் கூட குடும்பம் நடத்தற? ஒரு குட்டி போட்டுட்ட. இன்னொரு குட்டி வேற போடப்போற. ஓடிரேன். திருவாரூருக்கு ஓடிரேன்!

    அடிச்சாலும் பிடிச்சாலும் மானாங்கனையா திட்டினாலும் உங்க காலடிதாங்க எனக்கு சொர்க்கம். உங்க வேலைப்பளு உங்கள் இப்படி திட்ட வைக்குது. எந்திரிச்சு குளிக்கப்போங்க. புதுசா டீ போட்டுக்கொண்டு வருறேன்!

    இரு நொடி மௌனித்தான்.

    கோப சாத்தான் உறைந்தது.

    மனைவியையே உறுத்தான்.

    உலக கோபத்தில் சூர்ப்பனகையாகத் தெரிந்தவள் தற்சமயம் பாதி தேவதையாகத் தெரிந்தாள்.

    பக்கத்துல வா!

    அவள் எதிர்பார்த்ததுதான்.

    சற்றே முறுக்கிக்கொண்டு போனாள்.

    அமர்ந்தபடி எட்டி அவளை வயிற்றுடன் கட்டிக் கொண்டான்.

    ரத்னா! உனக்கு கோபமே வராதா?

    இம். வரும். நிறைய வரும். காட்டி என்ன பிரயோஜனம்? சின்ன சண்டைதான் பெருசாகும். அதான் அடக்கி வாசிக்கிறேன்!

    கேட்க விரும்பாமல் ஒப்புக்கு ஸாரி ரத்னா! என்றான்.

    சிரித்தாள்.

    ஏன்? ஏன்? ஏன் சிரிக்கிற?

    நமக்குத் திருமணமாகி எத்தன வருஷமாகுதுங்க?

    'அட இந்த கிராமத்துச் சனியன் எதிர் கேள்வியெல்லாம் கேக்குதே!'

    ஏழு வருஷம்!

    இந்த ஏழு வருஷத்ல நீங்க ஏழாயிரம் ஸார் சொல்லியிருக்கீங்க!

    'கள்ளி! இதெல்லாம் உக்காந்து எண்ணுறியாடி?"

    துல்லியமா எண்ணினா இன்னும் கூட வரும்!

    ஊமைக் குசும்புக்காரி!

    'இன்னும் கனிவாகக் கேள்விகள் கேட்டு இவளின் ஆழ்மனதைத் தோண்டிப் பார்ப்போம்!'

    இதுக்கெல்லாம் உனக்கு என்னை பழி வாங்கத் தோணல?

    கணவனை பல நிமிடம் வெறித்து எதிர்மறையாய் தலையாட்டினாள். "இல்ல... அதுக்குத்தான் பிள்ளையார் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன். ரெண்டே வேண்டுதல் தான். ஒண்ணு- சீக்கிரம் செத்துப் போயிடனும். ரெண்டு அடுத்த பிறவில் உங்களுக்கு நான் புருஷனா அமையணும்!'

    'பார்றா... போராசையை!'

    எனக்கு புருஷனா வந்து - நா உனக்கு செஞ்ச கொடுமையெல்லாம் - நீ எனக்கு செய்வியாக்கும்! பழிக்கு பழி! ஆனா பிறவி விட்டுப் பிறவி!

    இல்லைங்க!

    பின்னே ?

    கோபப்படாம - பண்டம் பாத்திரம் உடைக்காம - சந்தேகப்படாம - நல்ல புருஷனா உங்ககூட வாழ்ந்து காட்டுவேன்!

    மமதை ஒழிந்து நெகிழ்ந்தான் தீபக்.

    ஏ அப்பா! இப்படியெல்லாம் உனக்கு பேசவருமா?

    எல்லாம் உங்க வாய் பாத்து கத்தக்கிட்டதுதான். ம்ம். எந்திரிங்க!

    எழுந்தவன் டீ வழிந்த ரத்னா முகத்தை துடைத்து விட்டான்.

    குளிக்க பாத்ரூம் நடந்தான்.

    தேடினான். தன்னுடைய பிராண்ட் டூத் பேஸ்ட்டை மட்டும் காணவில்லை. அவ்வளவுதான்! மீண்டும் சாத்தான் மூளைக்குள் பிரபுதேவா செய்தது.

    காச்மூச்சென்று கத்தினான்.

    குளியலறை பக்கெட்டை உடைத்தான்.

    போர்க்கால அவசரமாய் பேஸ்ட்டுடன் ரத்னா ஓடிவந்தாள்.

    திரும்ப ஆரம்பிச்சிட்டீங்களா?

    பின்ன? இதுவரைக்கும் இந்த பேஸ்ட் எங்க போயிருந்திச்சு? இப்ப எப்படி கை-கால் முளைச்சு வந்துச்சு?

    அவசரப்படாதீங்க. உங்க மகன் மனோஜ்தான் எடுத்து விளையாடியிருந்தான். அவனோட விளையாட்டுக் கூடையிலிருந்து தேடி எடுத்துட்டு வருறேன்!

    "அந்த குட்டிப்பிசாசு எங்க?' 'அடிக்கத் தேடினான்.

    இதோ... எனக்கு பின்னாடி பயந்து ஒளிஞ்சு நிக்றான்! மகனை பாதுகாத்தவாறு கூறினாள்.

    படுவா! இங்க வாடா!

    மனோஜ் பயந்தபடி வெளிப்பட்டான். ஸாரி டாடி!

    செய்யுறத செஞ்சிட்டு என்னடா ஸாரி - பூரி - குப்பத்தொட்டிலாரி!

    அர்த்த புஷ்டியாய் கணவனை ஏறிட்டாள் ரத்னா.

    "நீ செய்றதை செஞ்சுட்டு சொல்றதைத்தான் உன் மகனும் சொல்றான்!' என்றது பார்வை.

    மெளனித்தாள்.

    குளித்தான். புத்தாடைக்கு மாறினான். டியோடரன்ட் அக்குள்களில் பீய்ச்சிக் கொண்டான். காலை உணவு முடித்தான்.

    எழுந்ததிலிருந்து நடப்பு நொடிவரை தீபக் செய்யும் அட்டூழியங்களை காது கொடுத்து கேட்டபடி கண்விரித்து பார்த்தபடி துணிதுவைத்துக் கொண்டிருந்தாள் வேலைக் காரி அம்புஜம். வயது 47 இருக்கும்.

    பணி முடிந்து கிளம்பினாள் அம்புஜம். நாவரேம்மா. இன்னும் நாலு பிளாட் போக வேண்டியிருக்கு!

    இட்லி சாப்ட்டுட்டு போ!

    பசிக்கல தாயீ பொறுமைல நீ பூமாதேவி. காலைலயிருந்து நீ உன் புருஷன் கூட மாரடிக்கிறத பாத்தா எனக்கு பாவமா இருக்கு. உன் புருஷனுக்கு என் புருஷன் எவ்ளவோ தேவல. இப்டியெல்லாம் டீய மூஞ்சில விசிறினா சும்மாவா விடுவேன்! ஊற்றின கையை உடைச்சு அடுப்புல வச்சிடமாட்டேன்?

    விடு அம்புஜம் இந்த பேச்சை. வீட்டுக்கு வீடு வாசப்படி! அம்புஜம் போனவுடன் கணவனிடம் திரும்பினாள் ரத்னா.

    என்ன சொல்லிட்டுப் போறாகிழவி?

    ஒண்ணுமில்லைங்க!

    இவளுகளை நம்பாதே. கோள்மூட்டி விட்றுவாளுக!

    சரி!

    மனோஜ்க்கு ஸ்கூல் திறக்க எத்னிநாள் இருக்கு?

    பதினைஞ்சு நாளிருக்கு!

    வீணா அவனை வெளில விளையாட விடாதே. வெயிலுக்கு வேர்க்குரு போட்ரும். அதோட புதுப்புது கெட்ட வார்த்தைகள் கத்துகிட்டு வந்திருவான்!

    சரி!

    நான் 'பேண்டஸி' கம்ப்யூட்டர் நிறுவனத்துக்குப் போறேன். நிறைய வேலை இருக்கு. எப்படியும் நான் வீடு திரும்ப சாயந்தரம் ஆறுமணிக்கு மேலாகும். மதியம் அங்கேயே சாப்ட்டுக்கிறேன். கதவை மூடிக்க. யார் கதவைத் தட்னாலும் பக்கி மாதிரி கதவைத் திறந்திராத. மேஜிக்ஐ மூலம் பாரு. நா இல்லேன்னா கதவ திறக்காம செவிடு மாதிரி நடி. கேக்றேனேன்னு கோச்சுக்காதே. 'C' அபார்ட் மென்ட்ஸ்ல இருக்கற ஒரு விடலைப் பையன் எப்ப பார்த்தாலும் நம்ம பிளாட்டையே பராக்கு பாக்கறானே... ஏன்? நான் இல்லாதப்ப அவன்கிட்ட பேசுவியா? பேசாதே. அக்கா கொக்கான்னுட்டே வந்து கடைசில 'ஐ லவ்யூ' சொல்வாங்க. எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு கேக்றியா? பாம்பின் கால் பாம்பறியும்! சுற்றும் முற்றும் பார்த்தபடி கிளம்பினான் தீபக்.

    இடி மின்னல் மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது அவளுக்கு தீபக்கின் புறப்பாடு. பெருமூச்சுவிட்டாள் ரத்னா.

    'E' பிளாக்கிலிருந்து இரு கொலைக்காரக்கண்கள் ரத்னாவை விழுங்கின.

    கொலை விருப்பமாய் மரண தேவதை தன்னை நோக்கி பறந்து வருவதை ரத்னா சிறிதும் உணரவில்லை !

    ***

    2

    தரை தளத்திற்கு வந்தான் தீபக். சட்டைப்பையில் டிஜிட்டல் டைரி

    இடுப்பில் பேஜர். முகம் மறைக்கும் ஸ்போர்ட்ஸ் மாடல் ஹெல்மெட்டை தலையில் பொருத்திக் கொண்டான். இடக்கையில் கிட்பேக்.

    ஸுசுக்கி சாமுராயை உசுப்பினான்.

    இரண்டு சக்கர வாகனத்தின் இரைச்சல் கேட்டு பிரதானக் கதவை திறந்துவிட்டு 'விஷ் செய்தான் அபார்ட்மென்ட் காவலாளி.

    வாகனம் செயின்ட் தாமஸ் மெளண்ட், கிண்டி, சைதாப்பேட்டை, உஸ்மான்ரோட், வள்ளுவர் கோட்டம் வழியாக நுங்கம்பாக்கம் ஹைரோட்டை அடைந்தது. 18கி.மீ தூரம். ஹெவி டிராபிக் நேரத்தில் 30 - 40நிமிஷம் பயண நேரம்.

    Enjoying the preview?
    Page 1 of 1