Nallathoor Veenai
By Lakshmi
()
About this ebook
எதையும் எதிர்த்து வாழும் தைரியமும், திறமையும் பெண்ணிடம் இருக்க வேண்டும். கோழையாக இருந்தால் மேன்மேலும் துன்பத்தை அனுபவிக்க வேண்டும். கோழையாக இருக்கும் அகிலா அனுபவிக்கும் துன்பமென்ன?அதிலிருந்து மீண்டு வந்தாளா? நல்லதோர் வீணையை புழுதியில் எறிந்த கதையை வாசிப்போம்...
Read more from Lakshmi
Malathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsRadhavin Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsEn Veedu Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyumaa? Rating: 0 out of 5 stars0 ratingsPeyar Solla Mattean Rating: 0 out of 5 stars0 ratingsThai Pirakkattum Rating: 0 out of 5 stars0 ratingsNarmatha Yen Pogiral? Rating: 0 out of 5 stars0 ratingsIrandaavathu Amma Rating: 0 out of 5 stars0 ratingsMegala Rating: 0 out of 5 stars0 ratingsIniya Unarvey Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rating: 0 out of 5 stars0 ratingsVelichathai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsNadhimoolam Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Rating: 0 out of 5 stars0 ratingsMogathirai Rating: 0 out of 5 stars0 ratingsSiragu Mulaitha Pinnar Rating: 0 out of 5 stars0 ratingsAval Thaayagiraal Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Pengal Rating: 0 out of 5 stars0 ratingsAthai Rating: 0 out of 5 stars0 ratingsMithila Vilas Rating: 0 out of 5 stars0 ratingsUravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsAthisaya Raagam Rating: 5 out of 5 stars5/5Maayamaan Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Vidava, Ramya Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solli Kondu... Rating: 0 out of 5 stars0 ratingsIvala En Magal? Rating: 0 out of 5 stars0 ratingsKanavan Amaivathellam Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkendru Oru Idam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nallathoor Veenai
Related ebooks
Anbulla Ammavukku Rating: 0 out of 5 stars0 ratingsOru Mudivin Aarambam Rating: 0 out of 5 stars0 ratingsIvarkalum Avarkalum Rating: 0 out of 5 stars0 ratingsயாருக்கு மாப்பிள்ளை யாரோ..? Rating: 0 out of 5 stars0 ratingsUrimai Urangukirathu! Rating: 0 out of 5 stars0 ratingsPeiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsAmmavukku Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsThaimaiyil Kaniyum Iraimai Rating: 0 out of 5 stars0 ratingsUyirum Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal... Yaro... Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Pookkum! Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைச் சரணடைந்தேன்: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 9 Rating: 0 out of 5 stars0 ratingsMadipichai! Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naal Rating: 0 out of 5 stars0 ratingsPoi Kaal Purushan Rating: 3 out of 5 stars3/5Sorkathin Kadhavugal Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyum Manithargal...! Rating: 0 out of 5 stars0 ratingsKashmir Kathi Rating: 0 out of 5 stars0 ratingsKollathey Yaarum Paarthal! Rating: 0 out of 5 stars0 ratings...Endral Aval Rating: 0 out of 5 stars0 ratingsSeerinal Chitra Rating: 0 out of 5 stars0 ratingsGanga Rating: 5 out of 5 stars5/5Ingeyum Saaral Adikkum Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thean Nila Rating: 5 out of 5 stars5/5Mayangum Vayathu Rating: 0 out of 5 stars0 ratingsShyamala... Rating: 5 out of 5 stars5/5Uravai Thedum Paravai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Nallathoor Veenai
0 ratings0 reviews
Book preview
Nallathoor Veenai - Lakshmi
https://www.pustaka.co.in
நல்லதோர் வீணை
Nallathoor Veenai
Author:
லக்ஷ்மி
Lakshmi
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
1
தரையில் கிடந்த பாயின் மீது காய்ச்சலில் முனகியபடி புரண்டான் திலீப்.
தாகமா இருக்கு அக்கா!
- குழறிக்கொண்டு அவன் அருகிலிருந்த அகிலாவின் கரத்தைப் பிடித்துக்கொண்டான். கை நெருப்பாகச் சுட்டது. அவன் நெற்றி மீது கலைந்து விழுந்து கிடந்த முடியை அவள் ஒதுக்கிவிட்டாள். காதோரங்களில் வழிந்து கொண்டிருந்த வியர்வையை ஒரு துணியால் துடைத்தாள். ‘இது ஒரு வகையான ஃப்ளூ. இப்போ எங்கே பார்த்தாலும் பரவியிருக்கு. இந்த மருந்தைக் கொடு. பத்திரமாப் பார்த்துக்கோ’ - தெருக்கோடியிலிருந்த டாக்டர் கணேசன் சொல்லியிருந்தார். முதல் நாள் இரவு முழுவதும் குழந்தை திலீப் கண்களைத் திறக்கவே இல்லை. தலைவலி என்று அரற்றிக் கொண்டிருந்தான். எதிரே அருகில் குறட்டை விட்டு கொண்டு உறங்கிக் கொண்டிருந்த அப்பா ஜகந்நாதன் எழுந்து வந்து ஏன் என்றே கேட்கவில்லை. அவரது நினைப்பும் கனவுகளும் வேறு ஓர் உலகத்திலே சுழன்று கொண்டிருந்தன. மறுநாள் சனிக்கிழமை அரைப்பொழுது மட்டுமேதான் அவர் வேலை செய்வார். காலையில் சாப்பிட்ட கையுடன் டிபனை அவசரமாகக் கட்டி வாங்கிக் கொண்டு கிளம்பினார். வீட்டுச் செலவிற்காக அகிலா வைத்திருந்த அந்தக் கடைசிப் பத்து ரூபாயை அலமாரித் தட்டிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டிருந்தார். இனி அவர் இரவு வெகுநேரம் கழித்துத்தான் வீட்டிற்கு வருவார். இப்படியும் ஒரு தந்தை. தாய் இல்லாத தன் ஐந்து குழந்தைகளைப் பற்றிய சிந்தனையின்றி பொறுப்பே இல்லாமலிருப்பாரா...? ஜகந்நாதன் இருந்தார்.
இரண்டு வருஷங்களுக்கு முன்னர்தான், காச நோயுடன் போராடிக் கொண்டிருந்த அவர் மனைவி பாகீரதி அவர்கள் எல்லோரையும் நிராதரவாக விட்டு விட்டுப் போயிருந்தாள்.
மூத்தவளாகப் பிறந்துவிட்ட தவறு. பதினெட்டு வயதிற்குள் தாய், தமக்கை என்று குடும்பத்தின் பொறுப்பு முழுவதும் அகிலாவின் தலையில் விழுந்துவிட்டிருந்தது. பி.யு.சி. வரையில் அவள் படித்திருந்தாள். டைப்ரைட்டிங்கில் ஹையர் வரை பயிற்சி பெற்றிருந்தாள். அவளுடைய தோழிகளைப்போல் அவளுக்கும் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான். சம்பாதிக்கிறோம் என்ற துணிவில்தானே அவளது தோழிகள் மாதத்திற்கு ஒரு நைலக்ஸ் அல்லது உல்லி உல்லியை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர்! அவள்...? அம்மா விட்டுப் போயிருந்த பழைய புடவைகளைக் கிழித்துத் தனக்கு ஒரு புடவை எடுத்துக் கொண்டது போக, மீதியைத் தங்கைகளுக்குப் பாவாடை தைத்துக் கட்டிக் காலத்தை ஓட்ட வேண்டிய நிர்ப்பந்தம்.
அவை ஏற்கனவே பழைய புடவைகள். சித்ராவும் பானுவும் இரண்டு வருஷங்களில் மிகவும் உயர்ந்து விட்டிருந்தனர். பாவாடைகள் கணுக்காலைத் தாண்டி மேலே ஏறிக்கொண்டு விட்டன. தோய்த்துத் தோய்த்துக் கந்தலாகிக் கொண்டும் வந்தன. இத்தனைக்கும் அப்பா ‘கொடவுன்’ தெருவில் ஒரு மொத்த துணி வியாபாரியின் கடையில் தலைமை கணக்கராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மாதம் அறுநூறு ரூபாய் சம்பளம். பயனென்ன? குதிரைப் பந்தயத்தின் மீது அவருக்கு மகா மோகம். அம்மா உயிருடன் இருந்தபோதே அவள் மேல் இருந்த நகை ஒன்று கூடப் பாக்கியில்லாமல் பந்தயத்திற்குப் பறிபோயின. இப்போது வீட்டில் இருந்த வெள்ளிப் பாத்திரங்கள், நல்ல சாமான்கள் எல்லாவற்றையும் விற்று அப்பா பந்தயத்தை ஒரு கை பார்த்து விடுவதென்ற பிடிவாதத்தில் தீர்த்துவிட்டார். வீட்டையும், குழந்தைகளின் வருங்காலத்தைப் பற்றியும் மறக்கச் செய்துவிட்டிருந்தது அந்த வெறி.
வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது மட்டுமென்ன? அவர் பணம் கட்டிய குதிரை காலை வாரிவிட்டது என்ற ஆத்திரத்தில் தடதடவென்று கதவைப் பிளந்து விடும் வேகத்திலே வந்து தட்டுவார். அக்கம் பக்கத்தவர்கள் எல்லோருக்கும் விஷயம் புரிந்துவிடும். அதை எண்ணும் போதெல்லாம் அகிலாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. தாங்கள் ஏழைகள் - ஒண்டுக் குடித்தனத்தில் அவதிப்படும் கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம்கூட குறையோ, வருத்தமோ, துக்கமோ கிடையாது. அவர்கள் வசித்த அந்த வீட்டில் நான்கு குடித்தனக்காரர்கள் இருந்தனர். அவர்களில் யாரும் ஜகந்நாதன் அளவு சம்பாதிக்கவில்லை. முன் பகுதியில் வசித்த சுந்தரத்திற்கு மாதம் நானூறுதான் சம்பளம். ஆனாலும் ராஜம் மாமி வருஷத்திற்கு ஒரு புதுப் புடவை வாங்கிக் கட்டிக் கொண்டு விடுவாள். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் அவள் தலையில் கட்டுப்பூ - முகத்திலே நிறைவின் மலர்ச்சி. பின் கட்டிலிருந்த வேதாபாட்டியின் பிள்ளைக்கும் அதிகச் சம்பளமில்லை. மகன், அவன் மனைவி, பாட்டி - மூன்று பேர் அடங்கிய குடும்பம். ஆனாலும் தினம் காலையில் அவர்கள் வீட்டில் காப்பிக்கும் டிபனுக்கும் குறைவிருக்கவில்லை. வேலைக்கு போகும் பிள்ளைக்கு வயிறாரச் சாப்பாடு போட்டு கையில் டிபனும் கட்டிக் கொடுத்தனுப்ப அவளால் முடிந்தது. அவளுடைய - மருமகள் வாயில் புடவையானாலும் சுத்தமானதை - கிழியாததைத்தான் - உடுத்திக் கொண்டிருந்தாள். இப்படியே அங்கிருந்த மற்ற எல்லோரும் எப்படியோ வாழ்க்கையின் பற்றாக்குறையைச் சமாளித்துக் கொண்டுதான் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் ஜகந்நாதன் குடும்பத்தில்? இன்று சமைக்க அரிசி இல்லை... காலை காப்பிப் பொடிக்கு எங்கே போவது யாரிடம் கடன் வாங்குவது? சர்க்கரை தீர்ந்துவிட்டதே? ‘இல்லை இல்லை’ என்ற பாட்டுதான்.
ஐந்து குழந்தைகளை வைத்துக்கொண்டு வாடகை அறுபது ரூபாயைக் கொடுத்து இந்த விலைவாசி காலத்தில் நிறைவோடு வாழ்வது சுலபமல்ல. ஆனாலும் பட்டினி கிடந்து பச்சைக் குழந்தைகள் பசி பசி என்று அலறத் தேவையில்லை. இரண்டு ஆழாக்கு அரிசியைப் போட்டு ஒரு வெண்கலப் பானை நிறையக் கஞ்சி வைத்து எல்லோரும் வயிறு நிறையக் குடிக்கலாம். இருக்கிற கந்தைகளைத் தைத்துக் கசக்கி துவைத்துச் சுத்தமாகக் கட்டிக்கொண்டு வாழ்வுடன் எதிர் நீச்சல் போடலாம். அதற்குக்கூட வழியில்லாமல் அவர்களை வதைபட விட்டுவிட்டு அப்பா - பெருமூச்செறிந்தாள் துயரத்துடன் அகிலா.
அக்கா! ரொம்ப தாகமா இருக்கு. சாத்துக்குடி பழம் வாங்கி தரமாட்டியா?
கெஞ்சியபடி தலையைத் தூக்கி அவள் மடி மீது வைத்துக் கொண்டான் திலீப்.
ஒரு சாத்துக்குடி பழம் ஐம்பது பைசா என்றான் மூலையிலிருந்த பழக்கடைக்காரன். டாக்டருக்குக் கொடுத்த பணம் போக மீதியிருந்த பத்து ரூபாயை அவள் பத்திரமாகத்தான் அலமாரியில் வைத்திருந்தாள். அதையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார் அப்பா. அவளிடம் இப்போது ஒரு பைசாக் கூட கிடையாது. தகர டின்களில் மிஞ்சியிருக்கும் அரிசியும் பருப்பும் மாத கடைசிவரை வருமா என்பது சந்தேகம். காஸ் தீர்ந்து போய் மூன்று நாட்களாகிவிட்டிருந்தன. புதிய சிலிண்டரை வரவழைக்க பணமில்லை. அவசரத்துக்கு என்று வைத்து இருந்த ஒரே ஒரு டின் மண்ணெண்ணெய்தான் உதவிக் கொண்டிருந்தது. அதுவும் தீர்ந்து போனால்...
காலடிச் சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். முன் பகுதியிலிருந்த ராஜம் மாமி எட்டிப் பார்த்தாள்.
ஏண்டி அகிலா! குழந்தைக்கு என்ன?...
மணமாகிப் பல ஆண்டுகளாகியும் அவளுக்கு குழந்தைகள் இல்லை. ஜகந்நாதனின் கடைக்குட்டிப் பயல்