Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Annur Arulmigu Manneswarar Thirukkoil Thiruthala Varalaru
Annur Arulmigu Manneswarar Thirukkoil Thiruthala Varalaru
Annur Arulmigu Manneswarar Thirukkoil Thiruthala Varalaru
Ebook61 pages23 minutes

Annur Arulmigu Manneswarar Thirukkoil Thiruthala Varalaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழகம் மிக அற்புதமான காலச் சுவடுகளின் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஈடு இணையற்ற வரலாற்றுப் பொக்கிசங்கள் அனைத்தும் கோயில் கல்வெட்டுக்களில் பொதிந்துள்ளன. கல்வெட்டுக்களை ஆய்வு செய்யாததாலும் கோயில்களின் வரலாற்றை புத்தகமாக எழுதாததாலும், எண்ணற்ற கோயில்களின் அரிய வரலாறு காலப்போக்கில் அழிந்து வருகின்றது. வீழ்ந்து கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் வரலாற்றுச் சான்று மிக்க கோயில்களை ஆய்வு செய்து அதை புத்தகமாக வெளியிடுவதன் மூலம் தமிழகத்தின் தன்னிகரற்ற வரலாற்றை ஓரளவு மீட்டெடுக்க ஏதுவாக இருக்கும். அதன் பொருட்டு,

அன்னியூர் என்னும் அன்னூரின் கண் குடி கொண்டு நம்மையெல்லாம் வாழ்த்தி வழிநடத்தி, அருளாட்சி எனும் இறையாட்சி புரிந்து வரும் எம்பிரான் அருள்மிகு அருந்தவச் செல்வி உடனமர் அருள்மிகு மன்னீசுவரப் பெருமானின் திருத்தல வரலாற்றையும், திருப்பெருமைகளையும் தொகுத்து புத்தகமாக புத்துயிர் கொடுத்துள்ளோம் எழுத்துக்களுக்கு.

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580131905241
Annur Arulmigu Manneswarar Thirukkoil Thiruthala Varalaru

Read more from Umayavan

Related to Annur Arulmigu Manneswarar Thirukkoil Thiruthala Varalaru

Related ebooks

Reviews for Annur Arulmigu Manneswarar Thirukkoil Thiruthala Varalaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Annur Arulmigu Manneswarar Thirukkoil Thiruthala Varalaru - Umayavan

    http://www.pustaka.co.in

    அன்னூர் அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் திருத்தல வரலாறு

    Annur Arulmigu Manneswarar Thirukkoil Thiruthala Varalaru

    Author:

    உமையவன் ராமசாமி

    Umayavan Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/umayavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    கோயில் விளக்கம்

    *****

    கோயில் விளக்கம்:

    கோயில் = கோ+இல், கோ என்றால் தலைவன் அல்லது அரசன் என்றும் இல் என்றால் இல்லம் அல்லது உறைவிடம் என்றும் பொருள். அதாவது தலைவனுடைய இல்லம் அல்லது அரசனின் உறைவிடம் என்று பொருள் உலகத்தின் தலைவனான இறைவன் உறையும் இல்லமே கோயில் ஆகும்.

    அன்னூர் திருத்தல விளக்கம்

    தமிழகம் தன் அகத்தினுள் பல்லாயிரக்கணக்கான கோயில்களின் மணி ஓசையை தன் இதயத்துடிப்பாக கொண்டுள்ளது. திருக்கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. இந்நாட்டு மக்களின் உயிர்துடிப்பையும் இவற்றில் கேட்கலாம். நம் நாட்டின் வரலாறு, பழக்கவழக்கம், பண்பாடு, கலாச்சாரம், கலை, நாகரீகம் என இத்துனை உயரிய செல்வங்களை கல்மேல் பட்ட உளியின் எழுத்துப்போல் உலக நாடுகளுக்கெள்ளாம் வெளிச்சமிட்டு காட்டியவை திருக்கோயில்கல்தான்.

    தமிழகம் என்றால் திருக்கோயில்களின் திருத்தலம் எனக் கூறலாம். அத்தகைய தமிழ்நாட்டின் மேலைப் பகுதியான கொங்குநாடு வரலாற்றுச் சிறப்பும், கலச்சாரமும், பண்பாட்டுப் பெருமையும் தன்னகத்து ஒருங்கே கொண்ட நாடு. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பது நம் பழமொழி மட்டுமல்ல உண்மையின் உயிர் மொழியும் இதுவே.

    இத்தகைய பெருமைக்குரிய கொங்கு நாடு 34 பெரும் பிரிவுகளைக் கொண்டது. அவைகளில் மேற்கு பாகத்தில் உள்ள பிரிவுக்கு ஆறைநாடு என்று பெயர். இதன் விவரத்தைக் கொங்கு மண்டல சதகம் மற்றும் சோழன் பூர்வ பட்டயம் போன்ற நூல்களில் காணலாம். இவ்வாறை நாடு கோயமுத்தூர் மாவட்டத்தில் ஒரு பாகமும், அவிநாசி தாலுக்காவில் ஒரு பாகமும் கொண்டதொரு பகுதி. இவ்வாறை நாட்டில் பல பாகங்கள் உண்டு. அவைகளில் நொய்யல் நதிக்கு வடபுறத்தில் உள்ள பாகத்திற்கு வரபரிசாரநாடு என்று பெயர். இந்நாட்டினைப் பற்றிய செய்தி அவிநாசிப்புராணத்தில் இளையான் கவிராயர் வெகு அழகாகப் பாடியுள்ளார். நமது அன்னியூர் (அன்னூர்) வடபரிசாரநாட்டில் உள்ளதென்று இவ்வூர் கல்வெட்டுகள் பலவும் இதல் திறந்து சான்று கூறுகின்றன.

    வடபரிசார நாடு:

    வடபரிசார நாடு தற்கால அவிநாசி தாலுக்காவின் கீலைப்பாகம் கொண்டதாகும். அந்நாட்டில் அடங்கியிருந்ததாகக் கூறியிருக்கும் ஊர்களின் அமைப்பை நாம் ஆராய்ந்துப் பார்க்கும் போது, அந்நாடு நொய்யல் நதிக்கு வடக்கேயும். கோவை மேட்டுப்பாளையம் இருப்புப் பாதைக்குக் கிழக்கேயும், புளியம்பட்டிக்குத் தெற்கேயும், அவிநாசிக்கு மேற்கேயும் உள்ள எல்லைப் பகுதியைக் கொண்ட பகுதி வடபரிசாரநாடு எனக் கூறலாம்.

    வடபரிசார நாட்டில் உள்ள பல ஊர்களை நாம் கல்வெட்டுகளால் அறியலாம். அவைகளாவன

    மன்னியூர் (தற்கால அன்னூர்)

    கோவில்பாளையம் என்னும் கவயன்புத்தூர்

    இடிகரை

    Enjoying the preview?
    Page 1 of 1