Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirukanden Pon Meni Kanden
Thirukanden Pon Meni Kanden
Thirukanden Pon Meni Kanden
Ebook80 pages26 minutes

Thirukanden Pon Meni Kanden

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருச்சியில் பிறந்து வளர்ந்து, திருமணத்திற்குப் பிறகு வளைகுடா நாடு ஒன்றில் அரசுப் பணியில் இருந்தார். இப்போது சென்னை வாசி.

சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம். விளையாட்டுகள் எதிலும் அத்தனை திறமை இல்லாததும், இப்போது போல ஊடகங்கள் இல்லாததும் இவரை நிறைய படிக்க வைத்தன போலும். பள்ளி காலத்திலேயே எழுத தொடங்கி விட்டாலும், பத்திரிகைகளுக்கு எழுத துவங்கியது பதின் வயதுகளில்தான். இவருக்கு ஒரு எழுத்தாளர் என்னும் அந்தஸ்து தந்திருப்பது வலையுலகம். நகைச்சுவையாக எழுத வருவது ஒரு வரம். கட்டி இழுக்கும் குடும்ப பொறுப்புகளுக்கு நடுவில் எப்படியோ வலைப்பூவில் எழுதி, இதோ இப்போது மின்னூல் வெளியிடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.

Languageதமிழ்
Release dateDec 8, 2017
Thirukanden Pon Meni Kanden

Read more from Bhanumathy Venkateswaran

Related to Thirukanden Pon Meni Kanden

Related ebooks

Related categories

Reviews for Thirukanden Pon Meni Kanden

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirukanden Pon Meni Kanden - Bhanumathy Venkateswaran

    http://www.pustaka.co.in

    திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்

    Thirukanden Pon Meni Kanden

    Author:

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    Bhanumathy Venkateswaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bhanumathy-venkateswaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆச்சர்யமான அஹோபிலம்!

    கசக்காத வேப்பிலை! மத்தூர் மகிஷாசுரமர்தினி

    தமிழகத்தின் சிறப்பான பிள்ளையார் கோவில்கள்

    தமிழ் நாட்டின் சிறப்பான பிள்ளையார் கோவில்கள் - II

    திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்

    மழையில் நனைத்தபடி மலை நாட்டிற்கு

    வராக நதிக்கரை ஓரம்

    ஆச்சர்யமான அஹோபிலம்!

    அஹோபிலம் என்பதற்கு ஆச்சர்யமான குகை என்று பொருளாம். நிஜமாகவே ஆச்சர்யம்தான் குகை மட்டுமல்ல, அமைந்திருக்கும் இடம் மற்றும் அங்கு நிலவும் தெய்வீக சானித்தியமும்!

    ஜெயஸ்ரீ டிராவேல்சில் அஹோபிலம் அழைத்துச் செல்கிறார்கள் மூன்று நாள்கள் யாத்திரை, நீங்களும் வருகிறீர்களா? என்று என் தோழி பிரமிளா கேட்டதும் அதிகம் யோசிக்காமல் சரி என்று விட்டேன். பிறகு கொஞ்சம் பயம் வந்தது, அஹோபிலம் போனால் அரை சொர்க்கம் போனது போல என்பார்களே... என்று ஒரு சிந்தனையும், ஏதோ பெருமாள் நம்மை அழைக்கிறார் போலிருக்கிறது, போகும் வரை தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணலாம் என்று நினைத்துக்கொண்டாலும் செயல் படுத்தியது என்னவோ ஒரு நாளைக்கு மட்டும்தான்.

    மூன்று நாட்களுக்கு தேவையான உடைகள், ஒரு மெல்லிய போர்வை, டார்ச் லைட், மற்றும் உங்களுக்கு தேவையான மருந்துகள் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சாமான்களின் பட்டியல் தந்தார், டூர் ஆபரேடர். அதோடு செல் சார்ஜெர், காமிரா என்று நான் சேர்த்துக்கொண்டேன். ஆனால் வேறு சிலர் கல்கண்டு, உலர்ந்த திராட்சை, பாதாம் இவைகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொண்டு எல்லா கோவில்களிலும் அர்ச்சனை செய்யும் பொழுது கையோடு கொண்டு வந்திருந்த சிறிய மரபேழையில் இவைகளை போட்டு நெய்வேத்தியம் செய்ய செய்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் கருவறை தீபத்தில் சேர்க்க நெய் கொண்டு வந்தவர்களும் உண்டு. ஒரு மாமி கையோடு அரிசி மாவு கொண்டு வந்து சுவாமி சந்நிதியில் கோலம் கூட போட்டார்.

    நவம்பர் 25 வியாழக்கிழமை தி.நகர் நாதேல்ளாவுக்கு அருகே இரவு ஒன்பது முப்பதுக்கு புறப்பட்ட எங்கள் பேருந்து இரவு இரண்டு மணிக்கு நெல்லூரை அடைந்தது. அங்கு ஒரு கல்யாண சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டோம். காலை ஐந்து மணிக்கு காபிக்குப் பின்னர் அருகில் இருந்த நெல்லூர் ரெங்கநாதர் கோவிலில் விஸ்வரூப தரிசனம்! எங்கெல்லாம் ஆறு இரண்டாக பிரிகிறதோ அங்கெல்லாம் ரெங்கன் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருவார் என்னும் கோட்பாட்டின்படி இங்கு வட பெண்ணை ஆறு இரண்டாக பிரிகிறது நடுவே ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட அரங்கன், அவருடைய தொப்பூழிளிருந்து புறப்பட்ட தாமரையில் பிரம்மா. வடக்கே சிரம் வைத்து தெற்கே பாதம். அழகான திருக்கோலம்! தனி சந்நிதியில் அருள் வடிவான தாயார். கண் குளிர தரிசம் செய்தோம் அதன் பின்னர் அருகிலேயே இருந்த ஸ்ரீதேசிகன் மடத்திலேயும் தரிசனம் செய்தோம். சமீபத்தில் கட்டப்பட்டுள்ள தேசிகன் மடத்தில் பெரிய அளவில் மகாவிஷ்ணுவின்

    விஸ்வரூப கோலம், சக்கரத்தாழ்வார், யோகா நரசிம்மர் சிலைகள் கண்ணைக் கவருகின்றன.

    வடபெண்ணை ஆற்றங்கரையில் பிரேமா மாமி, உஷா மற்றும் நான்

    Enjoying the preview?
    Page 1 of 1