Thoduvaanam Tholaivil Illai
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Ingu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Deva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsIraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Thisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsSorna Rating: 0 out of 5 stars0 ratingsAvar Enakku Mattumalla Rating: 0 out of 5 stars0 ratingsNisakanthi Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Solli Kutramilai Rating: 0 out of 5 stars0 ratingsYaarai Kolai Seyyanum? Rating: 0 out of 5 stars0 ratingsNee Enathu Innuyir Rating: 0 out of 5 stars0 ratingsVaasalil Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Nee... Rating: 0 out of 5 stars0 ratingsNaga Keeralgal Rating: 0 out of 5 stars0 ratingsVellai Nirathiloru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsAabathe, Arugil Vaa Rating: 4 out of 5 stars4/5
Related to Thoduvaanam Tholaivil Illai
Related ebooks
Verenna... Verenna... Vendum Rating: 5 out of 5 stars5/5Mannil Uthitha Vennila Rating: 0 out of 5 stars0 ratingsPali Malar Rating: 0 out of 5 stars0 ratingsUnnale... Unnale… Rating: 5 out of 5 stars5/5Anal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Uyir Painkili Rating: 0 out of 5 stars0 ratingsEppozhuthum Un Ninaivu! Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Roja Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsAnjana Archana Dhayalan Rating: 5 out of 5 stars5/5Ingeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsNee Thaney En Pon Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Veli Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Amutherdru Per Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Viraivil Vibareetham Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Karpoora Deepamaa..! Rating: 0 out of 5 stars0 ratingsSaatharana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsUn Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsIrubathu Kodi Nilavukal Rating: 0 out of 5 stars0 ratingsMarma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsUrave.. Unai Thedi.. Rating: 5 out of 5 stars5/5Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Vanitha Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thoduvaanam Tholaivil Illai
0 ratings0 reviews
Book preview
Thoduvaanam Tholaivil Illai - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
தொடுவானம் தொலைவில் இல்லை
Thoduvaanam Tholaivil Illai
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
வந்தனா, அன்று வந்த கடிதங்களை குறிப்புப் பதிவேட்டில் பதிந்துக் கொண்டிருக்கிறாரள். அவசரம் என சிகப்பு மையிட்ட கடிதம் இரண்டு அவள் கையில் படபடக்கிறது. தனியார் நிறுவனம் அது. எடுத்துப் போய் சூப்பிரெண்டெண்ட்டிடம் காட்டுகிறாள்.
இதையும் ரிஜிஸ்டரையும் எடுத்துட்டு உங்களை ஆபீஸர் வரச் சொன்னார் வந்தனா.
வந்தனா தன் இருப்பிடத்திற்குத் திரும்புகிறாள். புறாக் கூண்டில் அடைப்பட்ட மற்ற சக எழுத்தர்கள் இவளைப் பார்ப்பதாய்ப்படுகிறது. ஆனாலும் இந்த சூப்பிரெண்டெண்ட்டிற்கு மகா பெரிய தொண்டை, ஒலி பெருக்கியே வேண்டாம்.
அவளால் உற்சாகமாய் இன்று பணியில் ஈடுபட முடியவில்லை. இவள் ஆபீஸ் புறப்படுவதற்கு முன் வந்த கடிதம் இவளை இறுக்கி விட்டிருக்கிறது. நாளை பெண் பார்க்க வரப் போகிறார்கள். இவள் தந்தை இராமனாதனின் நண்பர் திருச்சியிலிருந்து எழுதியிருக்கிறார்.
இவள் தந்தை திரும்பாத பயணத்திற்குப் போய் விட்டபோது இவர்கள் குடும்பத்தை இன்னமும் நட்பினராய் பாவத்துக் கொண்டிருக்கிறது அந்த நல்ல உள்ளம். பூ, பழம், இனிப்பு என எப்படியும் நூறு ரூபாய் வேண்டும். இதுவே செலவென்றால் அப்புறம் திருமணத்திற்கு…!
ஹலோ வந்தனா காலையிலேந்து பார்க்கிறேன். நீங்க ஒரு மாதிரி இருக்கீங்க, உடம்பு சரியில்பையா?
நாகர்கோயிலிலிருந்து மாற்றலாகி போன ஆறு மாதத்திற்கு முன் எழுத்தராய் சேர்ந்திருக்கும் எழிலன் கேட்கிறான். அவளின் மேசைக்கு அடுத்த மேசை அவனுடையது. இரண்டு பேர்களின் கோப்புக்கள் வைக்கும் பீரோக்கள் பக்கம் பக்கம்.
புதிதாய் வந்த போது அவனுக்கு அங்குள்ள வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்க வந்தனாவைத்தான் சூப்பிரெணடெண்ட் நியமித்திருந்தான்.
ஒன்றுமில்லை மிஸ்டர் எழிலன்.
இவளுக்கே தெரிகிறது இவளுடைய தவிப்பும் துடிப்பும், அதை மற்றவர்கள் அறியாமல் மாறக்கப் பார்க்கிறாள். அதை எழிலன் கண்டு பிடித்து கேட்டதும் இவளுக்கு முகம் வியர்த்துப் போகிறது. குறிப்பிட்ட பதிவேடுகளையும் அவசரம் கடிதங்களையும் எடுத்துக் கொண்டு அலுவலர் அறைக்காக மாடியில் ஏறுகிறாள்.
பாவம் அம்மா... இதோடு நான்கைந்து வரன் வந்து போய் விட்டது. பெண்ணைப் பொருத்தவரை அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. அவரவர்களின் எதிர்பார்ப்புக்கள் சிதைத்தபோதுதான் அவர்கள் சிறகடித்து பறந்து விட்டார்கள். இந்த சுமை குறைந்தால் அம்மா நிம்மதி மூச்சு விடுவாள். அது முடியுமா...
குட்மார்னிங் ஸார்.
வந்தனாவின் குரலில் அந்த அலுவலர் தம் கவனத்தைத் திருப்புகிறார். 'அவசரம்’ சிகப்பு மை கடிதங்களை வாங்கிப் பார்த்து தம் மேசையில் இருந்த இரண்டு தந்திகளை எடுத்து அவளிடம் கொடுக்கிறார். எக்ஸ்போர்ட் துணிகள் பற்றிய குறைகள்.
வந்தனா, இதை நாம அவசரமா கவனித்தாகணும். அங்கே நாகர் கோயிலியருக்கும் ஆப்ஸருக்கு உடனே தந்தி குடுங்க. உடனே இன்ஸ்பெக்ட் செய்து நமக்கு ரிப்போர்ட் உடனே சப்மிட் செய்யச் சொல்லுங்க, பரிசோதிச்சு நமக்கு ரிப்போர்ட் செய்யச் சொல்லுங்க, நாம் உடனே வேறு எக்ஸ்போர்ட் செய்தாகணும்.
எஸ் ஸார்.
‘நீ போகலாம்' என்கிற அவரின் பார்வையில் வந்தனா வெளி வத்துவிடுகிறாள். நடுநடுவே நாளை கவரும் வரன் இவர்களின் நிதி நிலைக்குத் தலையசைத்து சம்மதமளிக்குமா? அப்படி நடந்தால் கற்ப வினாயகருக்கு பத்து தேங்காய் உடைப்பதாய் வேண்டிக் கொள்கிறாள். மாப்பிள்ளை வடக்கே என்ஜினீயராம். இப்படி அந்தஸ்துள்ள மாப்பிள்ளையை நினைக்க முடியுமா?
இவள் எல்லா வேலைகளையும் ஒரு வழியாய் முடிக்கையில் மணி ஐந்தரையில் அலுவலகம் கரைந்து கொண்டிருக்கிறது.
வந்தனா, நீங்க புறப்படலையா. மணி ஐந்து நாப்பது.
எழிலன் அவனுக்கே உரித்தான களங்கமற்ற சிரிப்பில் இவள் மேசையருகே நின்று சொல்கிறான்.
கொஞ்சம் வேலையாய் போச்சுங்க எழிலன். இதோ ஆச்சு.
இவள் மேசை பீரோவைப் பூட்டுகையில் மேசை ஓரம் வைக்கப்பட்ட இவளின் டிபன் பாக்ஸை எடுக்கும் எழிலன் பதறிப் போகிறான்.
'மிஸ் வந்தனா, நீங்க சாப்பிடவில்லையா, டிபன் பாக்ஸ் கனக்கிறதே."
தோள்பட்டையில் குடை, பர்ஸ் என அடுக்கிய வந்தனா, டிபன் பாக்ஸைக் கையில் பிடித்தபடி அவனோடு நடக்கிறாள். வராந்தாவில் நிற்கும் பியூன் முனுசாமியிடம், முனுசாமி. இதை ஆயாகிட்ட குடுத்துடுங்க. நாளைக்கு டிபன் பாக்ஸை வாங்கிக்கிறேன்.
என்கிறாள்.
ஏங்க சாப்பிடலை, உடம்பு சரியில்லையா?
மனசு சரியில்லை மிஸ்டர் எழிலன்.
அதற்கு மேல் பேச விரும்பாதவளய் அண்ணாசாலையைக் கடக்கிறாள் வந்தனா. நிலவு போன்ற அவள் முகத்தில் அலுவலக வேலைகளின் களைப்பும் மனச் சுமைகளின் அழுத்தமும் மேகங்களாய் படிந்திருப்பது இவனுக்கு நன்கு தெரிகிறது.
வந்தனா என்கிட்டே சொல்லலாம் என்றால் சொல்லுங்களேன்.
உம்…
தேனாம்பேட்டையிலிருந்து பாரீஸ் போகும் பஸ் ஸ்டாப்பில் மாலை நேர கூட்ட நெரிசல்.
வந்தனா, உங்க வீடு தி. நகர்லதானே இருக்கு. நீங்க எதுக்கு இந்தப் பக்கம். நிக்கறீங்க.
என்னங்க வந்தனா, எதையும் சொல்ல மாட்டேன் எங்கிறீங்க!
நல்ல உயரமான அவன். பஸ்சுக்காக காத்திருக்கும் கூட்டம் கேட்கா வண்ணம் மெல்ல குனிந்து அவள் மட்டும் கேட்கும் வண்ணம் பேசுகிறான்.
ம்... ஒண்ணுமில்ல...
வந்தனா, பிளீஸ்... உங்க கவலையை என்கிட்ட இறக்கி வைக்கிறதா இருந்தா சொல்லுங்க என்னால முடிஞ்ச உதவிய செய்யறேன்.
ஊம்… நாளைக்குப் பெண் பார்க்க வரப் போறாங்க எழிலன். நான் நாளைக்கு விடுப்பு எடுத்திருக்கேன்.
அவள் சொல்லி முடிப்பதற்குள் பாரீஸ் போகும் பஸ் வந்துவிட வந்தனா கூட்டத்தில் கரைந்து பஸ்சினுள் ஏறி விடுகிறாள்.
எழிலனுக்கு யாரோ தன் இதயத்தைக் கிள்ளி விட்டதாக படுகிறது. தன்னைப் போலத்தான் வந்தனாவும் வருந்துகிறாள். அதுதான் காலையிலிருந்து சுரத்தே இல்லாமல் இருக்கிறாள். சாப்பிடவும் இல்லை