Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Illatha Naan
Nee Illatha Naan
Nee Illatha Naan
Ebook94 pages32 minutes

Nee Illatha Naan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விசாலத்தின் கணவன் இறந்தபோது உறவை ஒதுக்கிய உறவினர்கள் விசாலத்தின் மகன் குமரன் உயர் உத்தியோகத்தில் இருந்தபோது மீண்டும் உறவைப் புதுப்பிக்க வருவதும் அவர்களின் வேண்டுகோலுக்கிணங்க விசாலம் தன் மகனுடன் தன் அண்ணன் வீடு செல்வதும் அங்கு அண்ணன் மகளை விட்டுவிட்டு அங்கு கணக்கப் பிள்ளையாக இருந்த இராமையாவின் பேத்தி துங்காவை மனை முடிப்பதும், பிறகு திருமணமான ஆறுமாத காலத்தில் குமரன் விபத்தில் சிக்கி இறந்து விடுவதும் சொல்லமுடியாத துக்கத்தை துங்காவும் விசாலமும் மனத்திற்கொண்ட நேரத்தில் விசாலம் தைரியமாக துங்காவைப் படிக்க வைத்து பாங்க் ஒன்றில் வேலை பார்க்கச் செய்வதும், தன் வீட்டின் மாடியில் குடியிருக் கும் பார்வதியின் மகன் கிருபாகரன் விதவைப் பெண் துங்காவை எப்படி மணந்து கொள்கிறானா என்பதையும் நாவலைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704111
Nee Illatha Naan

Read more from Lakshmi Rajarathnam

Related to Nee Illatha Naan

Related ebooks

Reviews for Nee Illatha Naan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Illatha Naan - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    நீ இல்லாத நான்

    Nee Illatha Naan

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    பதிப்புரை

    விசாலத்தின் கணவன் இறந்தபோது உறவை ஒதுக்கிய உறவினர்கள் விசாலத்தின் மகன் குமரன் உயர் உத்தியோகத்தில் இருந்தபோது மீண்டும் உறவைப் புதுப்பிக்க வருவதும் அவர்களின் வேண்டுகோலுக்கிணங்க விசாலம் தன் மகனுடன் தன் அண்ணன் வீடு செல்வதும் அங்கு அண்ணன் மகளை விட்டுவிட்டு அங்கு கணக்கப் பிள்ளையாக இருந்த இராமையாவின் பேத்தி துங்காவை மனை முடிப்பதும், பிறகு திருமணமான ஆறுமாத காலத்தில் குமரன் விபத்தில் சிக்கி இறந்து விடுவதும் சொல்லமுடியாத துக்கத்தை துங்காவும் விசாலமும் மனத்திற்கொண்ட நேரத்தில் விசாலம் தைரியமாக துங்காவைப் படிக்க வைத்து பாங்க் ஒன்றில் வேலை பார்க்கச் செய்வதும், தன் வீட்டின் மாடியில் குடியிருக் கும் பார்வதியின் மகன் கிருபாகரன் விதவைப் பெண் துங்காவை எப்படி மணந்து கொள்கிறானா என்பதையும் நாவலைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.

    1

    வீட்டைத் தாண்டி ஒருத்தி ஆபீசுக்கு நேரத்தோடப் போகக் காத்துட்டிருக்கா. இப்படி வாசலை அடைச்சுட்டு, மதுரை வீரன் கணக்கா நின்னா எப்படி.... மாடி வீட்டும்மா உங்க பையனை உள்ளே கூப்பிடுங்க. எங்க துங்கா ரெடியாயிட்டா...

    அடீ.... எவடி அவ... துடைப்பத்தை வாச நடையிலப் போட்டிருக்கறது. கொஞ்சமாவது புத்தி இருக்கா. உங்களுக்கெல்லாம் என்ன அவசரம்கறேன்? எங்க துங்கா கிளம்பிப் போனதுக்கு அப்புறமா உங்க சாமரத்தைக் கொண்டு வந்து அலங்காரமா வையுங்களேன்.

    அய்யய்யே...ராயர் வீட்டுப் பேரன் தானே அது.... புழக்கடை முழுக்க நாலஞ்சு கக்கூஸ் கட்டி விட்டிருக் கேன். இவனுக்கு மட்டும் எங்க வீட்டுக் கோலத்துலப் போனாத்தான் போன மாதிரி இருக்கும்...

    யாரு... லாண்டிரியா... நேத்து ஏண்டாப்பா வரல்லே? ஒரு மூட்டைத் துணி சேர்ந்திருக்கு... உனக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கேன். சனிக்கிழமை வந்து இஸ்திரி போட்டுக் கொடுத்துட்டுப் போயிருன்னு... 'சரி, சரி' யின்னு பலமாத் தலைய ஆட்டிட்டு, கரெக்டா - திங்கட்கிழமை காலையில - எங்க துங்கா ஆபீசுக்கு கிளம்பற நேரமாப் பார்த்து வந்து நிக்கறியே. போ இன்னும் ஒரு மணிநேரம் கழிச்சு வா...

    ....குரல், கொல்லையோடு வாசல், வெங்கல மணியோசை மாதிரி...

    மாடியிலிருந்து பார்வதியம்மா எட்டிப் பார்க்கிறாள். வாசலில் நின்ற மதுரை வீரன், தன் மகன் தான் என்று தெரிந்ததும், முகம் சிறுத்துப் போகிறது.

    கிருபா... மேல வா சொல்றேன்...

    என்ன வேணும்மா?

    நீ மேல வாயேன்.

    ஆறடி இரண்டங்குல உயரமும், அகன்ற புஜமும், நறுக்கா- மீசையும் கொண்ட கிருபா என்கிற பச்சைக் குழந்தை 'சட்'டெ னத் திரும்பி, மாடியேற முதலடி வைக்க

    நீலகிரி மலையில் மிதக்கும் மஞ்சுக் குவியல் ஒன்றில் மோதினாற்போல, உள்ளிருந்து அவசரமாய் வெளிப் பட்ட பெண்ணின் மீது மோதுகிறான்...

    ஐய்யோ. ஸாரிங்க...

    ப்சு...

    அப்பெண், அவனது மன்னிப்பைப் புறக்கணித்து, இந்த மோதலினால் மண்ணில் விழுந்து வாய் பிளந்த தனது டிபன் பாக்சை ஒருகணம் பரிதாபத்துடன் பார்க்கிறாள்...

    வெள்ளையாய் தயிர் சாதம்... இடையே சிவப்புத் துணுக்குகளாய் சேப்பங்கிழங்குப் பொரியல்.

    அடடா... வெரி ஸாரிங்க...

    அப்பெண் இப்பொழுதும் அவன் முகத்தைக் கவனிக்காது , டிபன் டப்பாவைப் பொறுக்குவதில் முனைகிறாள்... அவள் பின்னாலிருந்து வெங்கல மணி ஓசை தொடருகிறது ....

    என்னது - கொட்டிடுச்சா. நான் அப்பவே நினைச்சேன். ராஜாபாதர் சம்சாரம் சேப்பங்கிழங்கு உரிச்சிட்டிருக்கறப்பவே கண்ணைப் போட்டுட்டுப் போயிட்டா. ஏம்பா மாடி வீட்டு பார்வதியம்மா பிள்ளை தானே நீ?

    கிருபாகரன் தர்ம சங்கடத்துடன் தலையசைக்கிறான்... எதிரே, கணீர் குரலுக்குரியமாது - சக்தியிருந்தால் இவனை அப்படியே பொசுக்கிச் சாம்பலாக்கி விடுவது போலப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.

    இதற்குள் சின்னதும் பெரிசுமாய் வம்பை விசாரிக்கும் ஆவலுடன் சக குடித்தன வாசிகள்...

    "தம்பீ... காலை வேளையில உனக்கு வேணா வேற வேலை வெட்டி இல்லாம

    Enjoying the preview?
    Page 1 of 1