Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pavala Suriya Mayakkam
Pavala Suriya Mayakkam
Pavala Suriya Mayakkam
Ebook237 pages1 hour

Pavala Suriya Mayakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனது ஆரம்பக் கால எழுத்துகளில் உணர்வு ரீதியான காதலை கடத்தும் கவிதை நடை பொங்கும். அப்படி ஒரு கவிதைத்துவம் வழியும் தலைப்புதான் 'பவளச்சூரிய மயக்கம்'. இத்தொகுப்பில் காதல், சமூகம், அரசியல், நையாண்டி, தன்னம்பிக்கை, உறவுச்சிக்கல்கள் எல்லாம் எல்லாமே நிரவிக் கிடக்கும். புதிதாக சிறுகதை எழுத வருபவர்களுக்கு இத்தொகுப்பு ஒரு பாலபாடம். உரையாடல் மூலம் கதையை நகர்த்துவது ஆர்னிகா ஸ்டைல். எந்த இனத்திலும் சிக்காத மக்களின் கதைகள் இவை. படித்து பரவசமடையுங்கள் வாசகர்களே.

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580111010219
Pavala Suriya Mayakkam

Read more from Arnika Nasser

Related to Pavala Suriya Mayakkam

Related ebooks

Reviews for Pavala Suriya Mayakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pavala Suriya Mayakkam - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பவளச் சூரிய மயக்கம்

    (25 சிறுகதைகள் தொகுப்பு)

    Pavala Suriya Mayakkam

    (25 Sirukadhaigal Thoguppu)

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    பொருளடக்கம்

    1. திருவோடு

    2. பூனை ஜோசியம்

    3. தேர்தல் திருவிழாவும் பணகரனும்

    4. வாய்ச்சொல்லில் வீரனடி

    5. திராவிடப் பூங்கா

    6. போலீஸ் தொடர்

    7. மூக்கு மேலே ராஜா

    8. வசந்த கால நதி

    9. குக் வித் ஏமாளி

    10. இரண்டாவது முதலிரவு

    11. தொட்டால் தொடரும்

    12. எல்லாமே உரிய வழியாக...

    13. மனிதம் கொண்டாடு

    14. கேபிள் சாத்தான்

    15. கண்ணாடி கேடயம்

    16. குதிரை வியாபாரம்

    17. யோகா வாத்தியார்

    18. ஆர். யவனராணி

    19. அவரவர்

    20. தென் துருவமும் தென் துருவமும்

    21. ஆண் எழுத்து

    22. துளிர்கள்

    23. நீ நீ நான் நான்

    24. வண்ணத்துப்பூச்சி தோட்டம்

    25. பவளச்சூரியமயக்கம்

    1. திருவோடு

    ஆர்னிகா நாசர்

    அஇகிமுக தலைமை அலுவலகம். முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் மேடைக்கு நடந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டனர். கை குலுக்கிக் கொண்டனர். துணைமுதலமைச்சர் மைக்கின் முன் எழுந்து நின்றார். "அனைத்து எலும்புகளின் எலும்புகளுக்கும் வணக்கம். பாராளுமன்ற பொது தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் இரண்டுக்கும் சேர்த்து தங்கத்தலைவி தெய்வநாயகியின் வழியில் ஆட்சி செய்யும் அஇகிமுக அரசின் 2019 தேர்தல் அறிக்கை இதோ,

    பாராளுமன்ற சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின் நமது மாநிலத்தின் பெயர் ‘விலை இல்லா தமிழ்நாடு’ எனவும் குடிமகனின் பெயர் ‘யாசக குடிமகன்’ எனவும் புதுப்பெயர் மாற்றம் செய்யப்படும்.

    வட்டாச்சிரியர் சான்றிதழ் பெற்ற குடிநோயாளிகள் அனைவருக்கும் வாரம் ஒரு முறை குவார்ட்டர் பிராண்டியும் ஒரு ஊறுகாய் பொட்டலமும் ஒரு லிட்டர் ஆயா குடிநீர் பாட்டிலும் இலவசம்.

    ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஜோடி பன்றிக்குட்டிகள் இலவசமாக வழங்கப்படும். பன்றிகள் வளர்க்கும் முதல் வருடத்திலேயே பன்றிகளை விற்று பெரும்காசு பார்க்கலாம். பன்றி வளர்க்க விரும்பாத முஸ்லிம் குடும்பங்களுக்கு ஒட்டககுட்டிகள் வழங்கப்படும்.

    அசைவ யாசக குடிமக்களுக்கு வாரம் ஒருமுறை கால்கிலோ சிக்கனும் மாதம் ஒருமுறை கால் கிலோ மட்டனும் சைவ யாசக குடிமக்களுக்கு சிக்கன் மட்டன் மதிப்பில் காய்கறிகள் வழங்கப்படும்.

    ‘ஜால்ரா அடித்துக்கொண்டே ஜால்ரா அடிக்கவில்லை என பொய் கூறுவது எப்படி?’ என்கிற புத்தகமும் ‘பேச்சும் மூச்சும் பதவிக்காகதான்’ என்கிற புத்தகமும் ‘விடாதே பிடி கூட்டணி வை’ என்கிற புத்தகமும் யாசக குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

    நீட் தேர்வில் கேள்வித்தாளை விலை இல்லா தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுக்கு முன் வழங்கச் சொல்லி மத்திய அரசை வலியுறுத்துவோம்.

    கிராமத்து பெரியவர்களுக்கு வருடத்துக்கு நான்கு விலை இல்லா லங்கோடு வழங்குவோம். நகரத்து பெரியவர்களுக்கு வருடத்துக்கு நான்கு விலை இல்லா பட்டாப்பட்டி டவுசர்கள் வழங்குவோம்.

    ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் வாங்கும் கடைசி மாத சம்பளத்தையே மாத ஓய்வூதியமாக வழங்குவோம்.

    பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தினம் பாக்கட் மணி ஐம்பது ரூபாயும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு தினம் பாக்கட் மணி நூறு ரூபாயும் வழங்கப்படும். அரசே மெட்ரிமோனியல் ஒன்று ஆரம்பித்து குரங்கு போன்ற ஆண்களுக்கு நயன்தாரா போன்ற பெண்களை மணமுடிப்போம்.

    பருவமடைந்த ஆணும் பெண்ணும் வருடத்துக்கு ஆறுமுறை இலவசமாக ப்யூட்டி பார்லர் போய் தங்களை அலங்கரித்துக் கொள்ளலாம். வருடத்துக்கு நூறு ஆண் பெண்களை குலுக்கல்முறையில் தேர்ந்தெடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

    புதுமண தம்பதியினருக்கு ஒரு ஹனிமூன் டிரிப் இலவசம். அத்துடன் முதல் குழந்தை பிறக்கும் வரை வாரம் ஒருமுறை ஒருமுழம் மல்லிகை பூவும் 100 கிராம் இருட்டுக்கடை அல்வாவும் இலவசம்.

    கல்விக்கடன் நகைக்கடன் தனிநபர்கடன் வாகனக்கடன் கைமாத்து கால்மாத்து அனைத்தும் ரத்து.

    மாதம் 500 யுனிட் மின்சாரம் வரை இலவசம். வருடம் பத்து இலட்சம் வருமானம் வரை வருமான வரி கிடையாது. ஜிஎஸ்டி 0.005 சதவீதமாக குறைக்கப்படும்.

    சிறைசாலைகள் குளிர்பதன மூட்டப்படும். சிறைவாசிகளுக்கு வாராவாரம் மட்டன் பிரியாணி வழங்கப்படும். சிறைவாசிகளுக்கு மாதம் மூன்றுநாள் தங்களின் வாழ்க்கைத்துணைகளுடன் தாம்பத்யம் துய்க்க அனுமதி.

    ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மாதம் ஐந்துகிலோ சீரகசம்பா பிரியாணி அரிசி வழங்கப்படும்.

    நீதிமன்றங்கள் விதிக்கும் மூன்று வருட கடுங்காவல் தண்டனை வரை ரத்து.

    தொடர்ந்து பத்து வருடங்கள் ஒருவர் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தால் அந்த வீடு வாடகை தாரருக்கு சொந்த வீடாக்கப்படும்.

    குலுக்கல் மூலம் ஒரு யாசக குடிமகன் தேர்ந்தெடுக்கப்பட்டு தினம் ஒரு மணி நேரம் முதலமைச்சராக இருக்க வாய்ப்பளிக்கப்படும். குலுக்கல் முறை மூலம் அமைச்சராகும் எம்எல்ஏவாகும் வார்டு கவுன்சிலராகும் மேயராகும் வாய்ப்பும் வழங்கப்படும்.

    இளைஞர் இளைஞிகளுக்கு செல்பி பயிற்சி மையம் மூலம் சிறப்பாக செல்பிகள் எடுக்க பயிற்சி தரப்படும். முகநூலில் லைக்குகளை அள்ளுவது எப்படி என்கிற தொழில்நுட்பமும் கற்றுத்தரப்படும்.

    நம் நாட்டு மீனவர்களுக்கு அண்டை நாட்டு கடல் எல்லைக்குள் திருட்டுத்தனமாக புகுந்து மீன்களை பிடித்து விட்டு அண்டை நாட்டு கடல்படையினரிடம் சிக்காமல் கரை திரும்பும் வித்தை சொல்லித்தரும் கடலோர பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.

    ஆயுட்காலம் முழுக்க நமது கட்சிக்குதான் ஓட்டு போடுவேன் என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி கடிதம் தருபவருக்கு மாதம் இருபதாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

    அரசாங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிவிட்டு ரயில் நிலையங்களுக்கும் பேருந்து நிலையங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் தாத்தா பெயர் அப்பா பெயர் சூட்டி மகிழலாம்.

    டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிப்பது அறவே ஒழிக்கப்படும்.

    பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை பத்துமடங்காய் உயர்த்தி கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து கூட்டணிகட்சிகளுக்கு ஒதுக்கும் இடங்களையும் அதிகரிப்போம்.

    தொட்டில் குழந்தைகள் திட்டம் போல தொட்டில் முதியோர் திட்டம் கொண்டு வருவோம். அரசாங்கத்திடம் தகுந்த பணத்தை கட்டி உரிமம் பெற்று கஞ்சா செடி வளர்க்கலாம்.

    விலை இல்லா தமிழ்நாட்டின் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள யாசக குடிமக்களுக்கு ஹிந்தி டியூஷன் இலவசம். ஹிந்தி கற்போருக்கு உதவித்தொகையும் வடஇந்திய சுற்றுலாவும் உண்டு உண்டு.

    முதல்முறையாக வாக்களிப்போருக்கு ஸ்மார்ட்போனும் ஐந்து வருட நெட் கார்டும் இலவசம்.

    எல்லா வங்கிகளிலும் பெட்ரோல் லோன் வழங்க உத்தரவிடப்படும்.

    குழந்தைகளுக்கு இரவல் தாய்ப்பால் தாய்மார்களை அரசாங்கம் ஏற்பாடு செய்யும்.

    அரசாங்கம் தரும் இத்தனை இலவசங்களையும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஒவ்வொரு யாசக குடிமகனுக்கும் அரைகிலோ எடையுள்ள வெள்ளி திருவோட்டை வழங்கும். திருவோட்டில் அடங்கும் இலவச பொருட்களை திருவோட்டில் பெறலாம். ஒவ்வொரு திருவோட்டிலும் ஆளும்கட்சியின் தேர்தல் சின்னமும் ‘இலவசங்களை பெறும் நாம் நன்றி மறவாதிருப்போமாக’ என்கிற வாசகமும் வாக்காளர் அட்டை எண்ணும் ஆதார் அட்டை எண்ணும் பொறிக்கப்பட்டிருக்கும். திருவோட்டை இன்னொருவருக்கு மாற்றவோ விற்கவோ அனுமதி இல்லை. ஆகவே யாசக குடிமக்களே! அஇகிமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்து இலவசங்களை வாங்கி குவிப்பீராக! ஆயாவுக்கு நாங்கள் போட்ட நாமம் வாழ்க!

    ஒவ்வொருத்தருக்கும் அரைகிலோ வெள்ளி திருவோடு. அதுவே இருபதாயிரம் பெறுமே! இத்தனை நூறு இலவசங்கள் கிடைக்கும் என்றால் திருவோட்டை ஏந்துவதில் தப்பே இல்லை! மக்கள்.

    கிமுக தலைமை அலுவலகம். எதிர்கட்சி தலைவர் ரூஸ்வெல்ட்டிடம் கிரைமுருகன் பாத்தியா தம்பீ! ஆளுங்கட்சிகாரன் தேர்தல் அறிக்கையை... நாம எதாவது பதிலுக்கு செஞ்சாகனுமே?

    அவன்க என்னென்ன இலவசங்கள் குடுக்கிறதா சொல்லிருக்கான்களோ அதை இரட்டிப்பா தருவதாக நம் தேர்தல் அறிக்கையில் அறிவிப்போம். அவன் அரைகிலோ வெள்ளி திருவோடு தரான்னா நாம அரைகிலோ தங்க திருவோடு தருவோம்!

    இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வெள்ளியிலோ தங்கத்திலோ பவளத்திலோ பிளாட்டினத்திலோ திருவோடுகள் தமிழ்நாடு மக்களுக்கு உலகநிச்சயம் வழங்கப்படும். மொத்தத்தில் தமிழ்நாட்டில் எட்டு கோடி யாசகர்கள் உருவாகி விட்டனர்.

    2. பூனை ஜோசியம்

    தமிழ் கார்க்கி

    பழைய வில்லன் நடிகர் அசோகனின் சாயலுள்ள கிரைமுருகன் கி.மு.க தலைவர் ரூஸ்வெல்ட்டிடம் தம்பீ! பந்தி டிவி கருத்துக்கணிப்புல ஒரு மாதிரியும் ஆங்கில சானல்கள் கருத்துக்கணிப்புல வேற மாதிரியும் முடிவு வந்திருக்கு. அஇகிமுக தலைவி தெய்வநாயகி இறந்தவுடனேயே ஆட்சி நம்ம கைக்கு வந்திரும்னு மனப்பால் குடிச்சோம். ஆனா ரெண்டு வருஷம் மழப்பாடி மாரிசாமியும் எஸ்பி தர்மதுரையும் கிஜேபி துணையோட ஆட்சி பண்ணிட்டாங்க. அஇகிமுக கூட எவனும் கூட்டணி வச்சுக்கமாட்டான் எலக்ஷன்ல அன்னபோஸ்ட்டா வந்திரலாம்னு கணக்கு போட்டோம். மாரிசாமியும் தர்மதுரையும் மெஹா கூட்டணி அமைச்சு நம்ம கனவை தரை மட்டமாக்கிட்டாங்க. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோன்னு எனக்கு அல்லு விடுது!

    கவலைப்படாதிங்கண்ணே... நான்தான் அடுத்த முதலமைச்சர்...

    நாம தேர்தல்ல ஜெயிப்போமா இல்லையான்றதை உறுதிபண்ண பூனை ஜோசியம் பாக்கப் போரோம்...

    கீரமணி அண்ணனுக்கு தெரிஞ்சா செம டோஸ் நமக்கு கிடைக்கும்!

    அய்டியாவை குடுத்ததே கீரமணி அண்ணன்தான். நாம பகுத்தறிவு பேசுறது ஊர்மெப்பனைக்காக. சகுனம் பாக்காம நான் வீட்டை விட்டு கிளம்புறதே இல்லை. உங்கப்பாருவே ஜோசியக்காரன் சொன்னதை கேட்டுதான் பரிகார மஞ்சள்துண்டு போட்டார். நமக்கு ஜோசியம் சொல்ற பூனை டென்மார்க்கை சார்ந்தது. இதோட ஜோஸ்யம் உலக பிரசித்தி பெற்றது. டொனால்டு ட்ரம்ப், தெரஸா மே கூட இதுகிட்ட ஜோசியம் பாத்திருக்காங்கப்பா. இங்கிலாந்தில் நடக்கப்போகும் ஒரு நாள் உலககிரிக்கெட் போட்டிக்கு ஜோசியம் சொல்ல இப்பவே பூனைக்கு சொந்தகாரன்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி வச்சிருங்காங்கப்பா...

    நாம பூனை ஜோசியம் பாக்றதை மீடியாகாரன் பாத்துட்டான்னா நம்பள நாறடிச்சிடுவான்!

    ஒரு பயலுக்கும் தெரியாது. பூனை ஜோசியம் உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிஞ்ச இரகசியம்!

    பூனை ஜோசியக்காரனை வரச் சொல்லுங்கண்ணே!

    ‘ராபர்ட்சன்! கம்!

    ஆறடி உயர இளைஞன் ஒருவன் கையில் கூண்டுடன் உட்பட்டான். குட்மார்னிங்!

    கூண்டுக்குள் இருபது கிலோ எடையுள்ள ஒரு பூனை இருந்தது. அது மியாவ்! என்றது.

    மீட் மை பார்ச்சூன் டெல்லர் கேட் டென்னிஸ்!

    டென்னிஸ் கூண்டுக்குள்ளிருந்து தன் முன்னங்காலை நீட்டி கிரைமுருகனின் கையை குலுக்கியது.

    ராபர்ட்சன் 5 சீட்டுக்கு ஒரு எலிபொம்மை 10 சீட்டுக்கு ஒரு எலிபொம்மை என நாற்பது சீட்டு வரை எலி பொம்மைகளை வரிசையாக நிறுத்தினான். 5 சீட்டுக்கான எலி பொம்மையை பூனை கவ்வியதென்றால் கிமுகவுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஐந்தோ ஐந்துக்கும் குறைந்த இடங்களோ கிடைக்கும் என அர்த்தம். 40 சீட்டுகளை குறிக்கும் எலியை பூனை பிடித்தால் கிமுக கூட்டணிக்கு 40 சீட்டு கிடைக்கும் என அர்த்தம்.

    சட்டசபை இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் எத்தனை சீட்டு கிமுகவுக்கு கிடைக்கும் என்பதனை அறிய 2 சீட்டுக்கு ஒரு எலிபொம்மை 4 சீட்டுக்கு ஒரு எலிபொம்மை என 18 சீட் வரை எலிபொம்மைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

    ராபர்ட்சன்! முதலில் பாராளுமன்ற தேர்தலில் எங்க கூட்டணிக்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும் என்பதனை ஜோசியம் பார்!

    ராபர்ட்சன் ஒரு நெய்மீன் கருவாட்டை எடுத்து டென்னிஸிடம் நீட்டினான். டென்னிஸ் கருவாட்டை கரக்முரக் என்று தின்று தீர்த்தது.

    ராபர்ட்சன் பூனை கூண்டை திறந்து விட்டான். வானத்துக்கு இருகைகளை உயர்த்தி அப்ரக்கதப்ரா! பூனையின் கடவுளே! கிமுக அணி பாராளுமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளை ஜெயிக்கும் என்பதனை டென்னிஸ் மூலம் அப்பட்டமாக்கு!

    எட்டு எலி பொம்மைகளை மும்முறை சுற்றி வந்தது. ஒவ்வொரு எலி பொம்மையையும் முகர்ந்து பார்த்தது. சாமி வந்தது போல் உடலை சிலுப்பிக் கொண்டது. டென்னிஸ்! கேட்ச் தி கரக்ட் மவுஸ்!

    நாற்பது தொகுதிகளுக்கான எலிபொம்மையை பிடிப்பது போல பாவனை செய்தது. பின் சரேலென்று 5தொகுதிகளுக்கான எலி பொம்மையை கவ்வியது. அஇகிமுக கிஜேபி கூட்டணி 35 தொகுதிகளை வெல்லும் என டென்னிஸ் 35 தொகுதிகளுக்குரிய பொம்மையை கவ்வி உணர்த்தியது.

    கவ்விய பொம்மையை அறுத்து கொண்டு வந்து கிரைமுருகன் முன் போட்டது.

    ரூஸ்வெல்ட் ஹிஸ்டீரிகலாய் கத்தினார். நா... நா இதை நம்பமாட்டேன்... இது அந்நிய நாட்டு சதி! இந்த பூனையை பிடித்துக் கொல்லுங்கள்!

    கிரைமுருகன் அவசரப்படாதே தம்பீ! சட்டசபை இடைதேர்தல்ல நமக்கு எத்தனை இடம் கிடைக்கும்ன்றதையும் பாத்திரலாம்!

    ராபர்ட்சன் மீண்டும் கூவினான். பூனைகளின் கடவுளே! கிமுகவுக்கு சட்டசபை தொகுதிகள் எத்தனை இடம் கிடைக்கும் என்பதனை டென்னிஸ் மூலம் வெளிப்படுத்து!

    டென்னிஸ்க்கு மீண்டும் சாமி வந்தது. ஒன்பது எலி பொம்மைகளுக்கு இடையே புகுந்தோடியது. மூன்று முறை சுற்றி வந்தபின் ஆறு இடங்களுக்கான பொம்மையை கவ்வியது. பொம்மையை துண்டித்து கொண்டு வந்து கிரைமுருகனிடம் தந்தது.

    பணகரனுக்கு எத்தனை இடம் கிடைக்கும்? நான்கு இடங்களுக்கான பொம்மையை கவ்வியது.

    அஇகிமுகவுக்கு எத்தனை இடம் கிடைக்கும்? எட்டு இடங்களுக்கான பொம்மையை கவ்வியது.

    ராபர்ட்சன் சோடி, மாரிசாமி, தர்மதுரை, பணகரன், கைகோ, விமல், கீமான், ரூஸ்வெல்ட், பாகுல் பொம்மைகளை நிறுத்தினான்.

    Enjoying the preview?
    Page 1 of 1