Vaishali
()
About this ebook
மனதில் உண்மையான காதலும் நம்பிக்கையும் கொண்ட ஒரு பெண் நினைத்தாள் எத்தகைய உயர்வான மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஏற்ப அலுவலகத்தில் பியூனாக பணிபுரியும் பிரசாத் மீது காதல் கொள்கிறாள் வைஷாலி. அதனால் அவள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? சமூகத்தின் பார்வையில் அவனை உயர்த்துவாளா? காதலுக்காக தன் குடும்பத்தை பகைத்து, காதலன் குடும்பத்தை ஆதரித்து, காதலனை சமூகத்தில் உயர்த்த பாடுபட்ட வைஷாலி தன் காதலில் வெற்றி பெற்றாளா? என்பதை வாசித்து அறியலாம்.
Read more from Vidya Subramaniam
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsMann Bommai Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Aasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Karpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsThodaamal Naan Malarvean Rating: 5 out of 5 stars5/5Aagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solla Vandhean… Rating: 0 out of 5 stars0 ratingsSavithriyin Kathapaathiram Rating: 4 out of 5 stars4/5
Related to Vaishali
Related ebooks
Unakkena Manakoyil Rating: 5 out of 5 stars5/5Karaiyaangal Rating: 5 out of 5 stars5/5Indre Nesiyungal Rating: 0 out of 5 stars0 ratingsIthayam Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsSarayu Kaathirukkiraal Rating: 5 out of 5 stars5/5Vilai Pesi Oru Kolai Rating: 4 out of 5 stars4/5Ezhiloviyam Rating: 0 out of 5 stars0 ratingsRoja Malarae Rating: 0 out of 5 stars0 ratingsமஞ்சள் மத்தாப்பு! Rating: 0 out of 5 stars0 ratingsManjal Maththaappu Rating: 0 out of 5 stars0 ratingsEn Selvam, En Raja! Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Arai Rating: 4 out of 5 stars4/5Kanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsOorengum Poo Vasanai Rating: 0 out of 5 stars0 ratingsYathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsPaasangu Rating: 0 out of 5 stars0 ratingsKathavillatha Veedu Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Kamali Anni Rating: 5 out of 5 stars5/5Sudum Nilavu Sudaatha Sooriyan Rating: 5 out of 5 stars5/5Malathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsNinaivellam Kokila Rating: 0 out of 5 stars0 ratingsAngey Sila Suvadugal Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 0 out of 5 stars0 ratingsMayamaan Rating: 5 out of 5 stars5/5ஐஸ்கிரீம் கனவுகள் Rating: 0 out of 5 stars0 ratingsஏனழுதாய் என்னுயிரே! Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vaishali
0 ratings0 reviews
Book preview
Vaishali - Vidya Subramaniam
https://www.pustaka.co.in
வைசாலி
Vaishali
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
பொழுது சோம்பலாய் விடிந்தது. விழிப்பு வந்தும் எழுந்திருக்க மனமின்றி படுத்துக்கிடந்தாள், வைசாலி. ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த சோம்பேறித்தனம். மற்ற நாட்களின் அலைச்சல்களுக்கும் அலுப்புகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆறுதல். நிதானமாய் கண் விழிக்கலாம். விழித்தபடியே மல்லாந்து படுத்து எதைப் பற்றியாவது யோசிக்கலாம். அவசரக்குளியல் இன்றி ஆற அமர ஐந்தாறு பக்கெட் தண்ணீரில் குளிக்கலாம். அத்தனை பேரும் வட்டமாய் அமர்ந்து அரட்டை அடித்தபடி சாப்பிடலாம். பிற்பகல் வரை உறங்கலாம். தூங்கி எழுந்து டிபன் சாப்பிட்டபடி டி.வியில் தலை வேதனையான ஒரு தமிழ்ப்படத்தை பார்க்கலாம். அல்லது பார்க்காமலும் இருக்கலாம். மற்ற நாட்களில் இவை முடியாது. விடியற்காலம் ஐந்து மணிக்கு எழுந்தால் இரவு படுக்க பதினோரு மணியாகிவிடும். யாரும் யாரோடும் நின்று நிதானித்து பேசிக்கொள்ளக்கூட நேரமிருக்காது.
வைசாலி மணி பார்த்தாள். ஏழு. எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தாள்.
குட் ஆப்டர்நூன்
என்றாள் தங்கை.
கொழுப்பா?
இவ்ளோ நாழி எப்படி தூங்க முடியுது உனக்கு
தூங்கினேன்னு யார் சொன்னா முழிச்சுக்கிட்டே படுத்திருந்தேன்.
வைசாலி பாத்ரூம் சென்றாள். அடுக்களையில் குக்கர் சத்தமிட்டது.
இன்னிக்கு என்ன சமையல்?
முகத்தை துடைத்தபடி அம்மாவிடம் கேட்டாள்.
உனக்கு என்ன வேணும்?
காரக்குழம்பும் உருளைக்கிழங்கு பொரியலும் பண்ணேன்
அதேதான்
வைசாலி அம்மாவின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
ஏய்… விட்றி… இவ ஒருத்தி ஆன்னா ஊன்னா கழுத்தைக் கட்டிக்கிட்டு.
உனக்கு கவுன்போட்டு தலையைப் பாப் பண்ணிவிட்டு பார்க்கணும்மா.
நாயே… என்ன ஆசைடி இது அபத்தமா
அம்மா கரண்டியோடு கை ஓங்க, வைசாலி சிரித்தபடி வெளியில் வந்தாள்.
பதினோரு மணிக்கு சாப்பாட்டுக் கடை விரிந்தது.
நேத்து எங்க ஆபீஸ்ல ஒரு கூத்துப்பா
என்று ஆரம்பித்தாள் வைசாலி.
உங்க ஆபீஸ்ல என்னிக்குத்தான் கூத்து நடக்கல.
தங்கை காஞ்சனா கிண்டலடித்தாள்.
அது ஆபீஸா கூத்தாடிக் கொட்டாயா?
கூத்தாடிக் கொட்டாயேதான்?
ஏதோ ஒண்ணாம் தேதி பொறந்தா சுளையா சம்பளம் வரதே. எப்படி இருந்தா என்ன?
என்ன கூத்துன்னு சொல்லித்தொலை.
பெங்களூர்லேருந்து புது எக்ஸிகியூடிவ் ஆபீஸர் வரார்னு ஒரே பரபரப்பாக இருந்தோம் எல்லோரும். பத்து மணிக்கு வெள்ளை அம்பாசடர் ஒண்ணு சர்ருனு வந்து நின்னதும் எல்லோரும் விழுந்தடிச்சுண்டு எழுந்து நின்னோம். ஒயிட் அண்ட் ஒயிட்ல பிளாக் ஷூ பளபளக்க படு ஸ்மார்ட்டா ஒரு உருவம் உள்ள நுழைஞ்சது. ஆளாளுக்கு ஏத்த இறக்கத்தோட குட்மார்னிங் சொன்னதும் அந்த ஆள் மூஞ்சி ஒருமாதிரி ஆயிடுச்சு. அதுக்குள்ள கெச்சலா கறுப்பா முன்வழுக்கையோட இன்னொரு ஆள் உள்ள நுழைய கடைசில அவர்தான் புது ஆபீஸராம். இவன் அவரோட பியூனாம்.
நல்லா அசடு வழிஞ்சிங்களாக்கும் எல்லோரும்.
ஆபீஸர் மூஞ்சில எள்ளும் கொள்ளும் வெடிச்சதா?
எள்ளும் கொள்ளுமா? பைவ்தவுசண்ட் வாலா பட்டாசே வெடிச்சுது. எல்லோரையும் சுட்டெரிச்சுக்கிட்டே படக்குனு உள்ளே போயிட்டார்.
வைசாலி சிரித்தாள்.
ஆளைப்பார்த்து எடைபோட்டுடக் கூடாதுன்னு. இதுக்குதான் சொல்றது.
அதுக்காக பியூன்னா எண்ணெய் வழிஞ்ச வண்ணம் இருக்கணும்னு கட்டாயமா?
அந்த பியூன் பேரென்னடி வைசாலி?
பிரசாந்த்னு சொன்னான்.
பேரும் நல்லாதான் இருக்கு.
ஆளும் பேரும் நல்லார்ந்து என்ன பிரயோஜனம். கேவலம் பியூன்தானே
அம்மா நொடித்தாள்.
எந்த வேலையும் கேவலமில்லம்மா… என்னப்பா சொல்றீங்க நீங்க?
கேவலமில்லதான். ஆனா இப்பொ எதுக்கு அந்த பியூனைப்பற்றி இவ்ளோ நாழி பேசணும். விட்டுத் தள்ளு. உங்க ஆபீஸ்ல உங்க போர்டு மெம்பர்ஸ் உங்க சம்பளம் கூட்டிக்கொடுக்கறதைப் பத்தி என்ன டிசிஷன் எடுத்தாங்களாம்.
இதுவரை தகவல் இல்ல.
அப்படி அதிகமாக்கினா உனக்கு எவ்ளோ கூட வரும்னு தோண்றது.
இப்பொ அஞ்சு வாங்கறேன். அப்புறம் ஏழு வாங்குவேன்.
யப்பா… ஏழாயிரமா! ஏம்பா உங்க சம்பளம் எவ்ளோப்பா?
கவர்ன்மெண்ட் ஆபீஸ்ல செக்ஷன் ஆபீசர்க்கு எவ்ளோ கொட்டிக் கொடுத்துடப் போறான். இப்போதான் நாலு வாங்கறேன். முப்பது வருஷ சர்வீசுக்கப்புறம். என்ன இருந்தாலும் கம்பெனி கம்பெனிதான்.
ஏங்க… இவளே ஏழு வாங்குவான்னா இவளுக்கு வரப்போற வரன் ஒரு எட்டு பத்து வாங்கறவனா இருந்தாதானே கவுரவமா இருக்கும்.
ஒரு டாக்டர், என்ஜினியர்னு பாருங்கப்பா அக்காக்கு
த பார் உனக்கு வேணும்னா டாக்டர் என்ஜினியர்னு பார்த்து கட்டிவைக்கச் சொல்லு. பக்கத்து இலைக்கு பாயசம் விடச் சொல்ற வேலையெல்லாம் இங்க வேண்டாம்.
அப்பா சிரித்துவிட்டு காஞ்சனாவைப் பார்த்தார்.
வம்பு பண்றாப்பா அவ. நா சாதாரணமாத்தான் சொன்னேன். அக்கா புருஷன் டாக்டர்னா எனக்கும் பெருமைதானே.
டாக்டரோ, என்ஜினீயரோ, பிச்சைக்காரனோ என் மனசுக்கு பிடிச்சாதாம்பா நா கழுத்தை நீட்டுவேன்.
அது சரி, யாராவது கட்டாயக் கல்யாணமா பண்ணப் போறோம்னு சொன்னாங்க. நீங்க தெரிஞ்சவங்ககிட்டல்லாம் ஜாதகம் கொடுத்து சொல்லி வைங்க. இன்னும் அஞ்சாறு மாசத்துல இவ கல்யாணத்தை முடிச்சாகணும். இவ வயசுல எனக்கு மூணாவது பிள்ளை பொறந்து செத்துப் போச்சு.
அதுபோனா போகட்டும்மா. இப்பவும் நீ பிள்ளை பெத்துக்கறதுல எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல
வைசாலி சொல்ல அப்பாவும் காஞ்சனாவும் ‘கொல்’லென்று