Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maalai Mayakkam
Maalai Mayakkam
Maalai Mayakkam
Ebook110 pages36 minutes

Maalai Mayakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Manimala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466886
Maalai Mayakkam

Read more from R.Manimala

Related to Maalai Mayakkam

Related ebooks

Reviews for Maalai Mayakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maalai Mayakkam - R.Manimala

    1

    "அஸ்வினி! இந்த இட்லியைக் காக்காவுக்கு வச்சிட்டு வந்திடேன்" செண்பகம் சிறிய தட்டில் ஒரு இட்லியை வைத்து மகளிடம் நீட்டினாள்.

    நான் இன்னும் தலைகூட வாரலே. செல்விகிட்டே கொடுத்தனுப்பேன்! ஈரக் கூந்தலில் சிக்கெடுத்தபடி சிணுங்கிய அஸ்வினி, செப்புச்சிலை போல் அழகாயிருந்தாள்.

    அவதான் அவசர அவசரமா பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிட்டிருக்காளே!

    அப்ப எனக்கு மட்டும் காலேஜுக்கு நேரமாகலையாக்கும்?

    "உனக்கென்ன? அமுதாவோட மொபெட்டுல நோகாம போயிடுவே. செல்வி அப்படியா? உனக்கு அமுதா கிடைச்ச மாதிரி, அவளுக்கு ஒரு குமுதா கிடைக்கலியே! பாவம்...

    அவ இடிபட்டு, மிதிபட்டு பஸ்லே இல்லே போக வேண்டியிருக்கு!" அங்கலாய்த்தாள், செண்பகம்.

    எங்க மேலே திருஷ்டி விழ யார் கண்ணும் வேண்டாம். உன் கண்ணே போதும், கொடு இப்படி செல்லமாய்ச் சிணுங்கிக்கொண்டே அம்மாவிடமிருந்து தட்டைப் பிடுங்கி மொட்டை மாடிக்குச் சென்றாள், அஸ்வினி.

    காலையிலே அவளை வம்புக்கு இழுக்கலேன்னா உனக்கு நிம்மதி வராதே! குளித்து முடித்துவிட்டு உடம்பைத் துடைத்துக்கொண்டே மனைவியிடம் வந்தார், சேதுராமன்.

    உண்மையைத்தானே சொன்னேன்?

    நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். ஆனா, அஸ்வினி- அமுதா மாதிரி இணைபிரியாத தோழிகளைப் பார்த்ததே இல்லை.

    நான் இப்பதான் புதுசா இந்த வீட்டுக்கு வந்திருக்கிற மாதிரியில்லே சொல்றீங்க? இதெல்லாம் எனக்குத் தெரியாதா?

    அப்புறம் ஏன்டி கண்ணுப் போடுறே?

    ஆமா... இதுலே எனக்கு வருத்தம் பாருங்க... அதனால கண்ணுப் போடுறேன். ரெண்டு குழந்தைகளையும் பார்த்து நான் எவ்ளோ ஆனந்தப்படுறேன்னு எனக்குத்தான் தெரியும். பெத்தவ கண்ணுபட்டுதான் திருஷ்டி விழுந்திடப் போகுதாக்கும்?

    சரி... சரி... உன்னைப் பேசவிட்டா இன்னைக்கு முழுக்க பேசிக்கிட்டேதான் இருப்பே! எனக்கும் ஆபீசுக்கு நேரமாயிடுச்சு. சாப்பாடு தயாரா?

    தயாராகாமலா காக்காவுக்குக் கொடுத்தனுப்பினேன்?

    பதிலுக்குப் பதில் பேசிட்டிருக்காம முதல்ல எடுத்து வை.

    பேசத் தொடங்கினது நீங்க. பழி என்மேலேயா?

    மன்னிச்சிடு லோகமாதா... முதல்ல சாப்பாடு எடுத்துவை சற்றே எரிச்சலுடன் பேசிவிட்டு அகன்றார், சேதுமாதவன்.

    இவர்கள் பேசுவதைக் கேட்டுச் சிரித்தபடி படியிறங்கினாள், அஸ்வினி.

    என்னடி சிரிப்பு வேண்டிகிடக்கு?

    அம்மா கோபமாய்க் கத்துவது கண்டு அவளின் சிரிப்பு அதிகமானது.

    அப்பாகிட்டே நல்லா வாங்கிக் கட்டினியா?

    இப்ப என்கிட்டே வம்படிக்க மட்டும் நேரமிருக்கா? போ... போய் துணியை மாத்து.

    என்ன... பேச்சு திசைமாறுது? என்றவள், தன்னறைக்குள் நுழைந்தாள்.

    அப்பாவுக்கும், பொண்ணுக்கும் என்னைக் கண்டாலே இளக்காரம்தான்! முணுமுணுத்தபடி உணவை எடுத்து வைத்தாள், செண்பகம்.

    ஆனா, நான் எப்பவும் உன் கட்சிதாம்மா! அம்மாவின் தோளில் வந்து தொற்றிக்கொண்ட செல்வி, பள்ளிச் சீருடையில் கண்களை உறுத்தும் வகையில் சிக்கென்றிருந்தாள்.

    வாம்மா! உட்காரு சாப்பாடு எடுத்துவைக்கிறேன். அதுக்கு முன்னாடி, இந்தா உன்னோட மதியச் சாப்பாடு... முதல்ல பையில வச்சிட்டு வா!

    சரிம்மா என்றபடி அம்மா கொடுத்த சாப்பாட்டை வாங்கிக்கொண்டு சென்றாள்.

    மேசை முன் வந்தமர்ந்த சேதுராமனுக்கும், செல்விக்கும் சாப்பாடு பரிமாறினாள், செண்பகம்.

    எங்கே அஸ்வினி?

    வருவா... துணி மாத்திட்டிருக்கா... நீங்க சாப்பிட்டுக் கிளம்புங்க.

    அப்பா... நானும் வந்தாச்சு அப்பாவின் பக்கத்தில் வந்தமர்ந்தாள், அஸ்வினி.

    செண்பகம் அவளுக்கும் பரிமாற...

    உள்ளே நுழைந்தாள் அமுதா. குறையில்லா அழகிற்கு சொந்தக்காரி.

    அஸ்வினி! என்ன சாப்பிடுறே?

    வழக்கமான இட்லி- சாம்பார்தான்!

    ஆனா, உனக்கு புட்டுதானே ரொம்ப பிடிக்கும். இந்தா... இதை உனக்காக என் வீட்டு சமையல்காரிகிட்டே சொல்லி எடுத்துட்டு வந்தேன். இதைச் சாப்பிடு!

    அமுதா கட்டளையிட, ஆர்வமாய் அவள் நீட்டியதை வாங்கிக்கொண்டாள்.

    ஆனா, எனக்குப் பிடிச்சதென்னவோ மணக்க மணக்க மாமி வைக்கிற இந்த வெங்காய சாம்பாரும், இட்லியும்தான். அது, வீணாப் போயிடக்கூடாது. உன் தட்டை இப்படித் தள்ளு! உரிமையுடன் அவள் தட்டைத் தன் பக்கம் இழுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்.

    அஸ்வினியைத் தவிர, அங்கிருந்த மற்ற மூவரும் அவள் செய்கையை வியப்புடன் பார்த்தார்கள்.

    என்ன மாமி அப்படிப் பார்க்கிறீங்க?

    இல்லே... அவ சாப்பிட்ட எச்சிலை எந்த அசூயையும் இல்லாம எடுத்துச் சாப்பிடுறியே... அதான்! ஆச்சரியம் விலகாமல் கேட்டாள்.

    இதிலே ஆச்சரியப்பட என்ன இருக்கு? நான் வேற, அஸ்வினி வேற இல்லையே?

    கேக்கவே மகிழ்ச்சியா இருக்கும்மா. ஆனா, ஒருத்தர் மேலே ஒருத்தர் இவ்வளவு நெருக்கமா இருக்கீங்களே. உங்களுக்குள்ளே பிரிவுன்னு ஒண்ணு வந்தா எப்படித் தாங்கிக்கப் போறீங்க?

    பிரிவா... எங்களுக்குள்ளேயா? என்னம்மா உளறுறே? என்றாள் கோபமாய், அஸ்வினி.

    இதிலே உளறுறதுக்கு என்ன இருக்கு? நடக்கப்போறதைப் பற்றிதானே பேசுறேன்? ஆண்களோட நட்பாவது கடைசிவரை சாத்தியம். ஆனா, பெண்கள் அப்படியில்லையே! கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆளுக்கொரு மூலையிலே வாழப்போறீங்க. உனக்குன்னு ஒரு குடும்பம், அவளுக்குன்னு ஒரு குடும்பம்னு ஆகிடும். அதுக்குப்பிறகு கணவனையும், குழந்தைகளையும், வீட்டையும் பார்த்துக்கிறதுக்கே நேரம் போதாது.

    செண்பகம் அப்படி சொன்னதும் அமுதாவும், அஸ்வினியும் கலக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்தனர்.

    ‘இப்படியெல்லாம் நடக்குமா?’ என்கிற பரிதவிப்பு.

    சேதுராமனும், செல்வியும் அங்கு நடக்கும் கூத்தை சுவாரசியத்துடன் பார்த்தபடி சாப்பிட்டார்கள்.

    அது... அதெப்படி? எங்களை யாராலும், எந்த உறவாலும் பிரிக்க முடியாது என்றாள், அமுதா, குரல் பிசிறடிக்க.

    ஆளுக்கொரு திசையிலே மாப்பிள்ளை அமைஞ்சா?

    அப்படிப்பட்ட மாப்பிள்ளை எங்களுக்கு வேண்டாம்.

    நீங்க பிரியாம இருக்கணும்னா ஒரே ஒரு வழிதான் இருக்கு!

    என்ன வழி மாமி... சொல்லுங்க? பரபரத்தாள் அமுதா.

    "ரெண்டு பேரும் ஒரே மாப்பிள்ளையைக் கல்யாணம்

    Enjoying the preview?
    Page 1 of 1