Thevai Oru Snegithi
()
About this ebook
சமூக நாவல்கள் எழுதுவதில் தான் எத்தனை இடுகுகள், சிக்கல்கள்! தேவை ஒரு சினேகிதி
பூமி நாதனின் உடன்பிறந்த சகோதரிகள் ஆறு பேர்களையும் பெற்று அத்தனை பளுவையும் அவன் தலையில் சுமத்திய தாயின் பக்கம் பரிந்து பேசும் நிலைக்கு மாறாக கடைசி தங்கை விஜி தன் அண்ணி கல்பகத்துடன் இரண்டறக் கலந்தவள். பூமிநாதன் ஒவ்வொரு தங்கையாகக் கல்யாணம் முடித்து கடைசித் தங்கை விஜிக்கு முப்பத்தியொரு வயதாகியும் திருமணம் குதிராத நிலையில் பூமிநாதனின் பெண் பிரதிபா திருமணத்திற்குத் தயார் நிலையில் இருக்கிறாள்.
கர்னல் கோபாலின் இரண்டாவது மகன் சியாமின் போக்கு அறிந்து அவனின் மூத்த அண்ணன் இராம்குமார் பல திட்டங்கள் போட்டு அவனைக் கிடுக்கி போடுவதும் கடைசியில் அவன் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு ஆபத்தான நிலையில் நர்ஸிங்ஹோமில் சேர்க்கப்படுவ தும் பிறகு வீடு வருவதும் இதே சியாமை நர்ஸிங்ஹோம் சென்று விபரமறிந்து விஜி தானே திருமணம் செய்து கொள்ள விரும்புவதும் இதையறிந்த பூமி நாதன் தம்பதிகள் வியப்பிலாழ்வதும், 'அண்ணனுக்குப் பெண் திருமண வயதடைந்து தன்னால் அது தடைபடாமலிருக்கவே இந்தத் தீர்மானம்' என்று விஜி கூறுவதும் ஓர் குடும்பத்தில் நடக்கும் இயற்கையான சம்பவமாகவே தோன்றச் செய்கிறது.
Read more from Lakshmi Rajarathnam
En Anni - En Manaivi? Rating: 0 out of 5 stars0 ratingsMarakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsThiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNavagrahangal Rating: 1 out of 5 stars1/5Thalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Ezhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Vaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Kaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Aanmeega Amudham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 2 Rating: 5 out of 5 stars5/5Enakkul Nee! Rating: 5 out of 5 stars5/5Arputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5Lakshmi Rajarathnam Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhali… Ennai Kaadhali… Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thevai Oru Snegithi
Related ebooks
Kaadhal Kaithi Rating: 0 out of 5 stars0 ratingsJananamum Maranamum Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsவசந்தம் வருமா..? Rating: 0 out of 5 stars0 ratingsYaaradhu? Rating: 0 out of 5 stars0 ratingsVilaikku Vaangiya Kanavan Rating: 0 out of 5 stars0 ratingsNeruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsThevai Oru Snegithi Rating: 0 out of 5 stars0 ratingsAagaya Thottil Rating: 0 out of 5 stars0 ratingsUthama Thirudi Rating: 5 out of 5 stars5/5Nizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Uyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Veliyorathil Oru Vellai Poo Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Kannadi Konangal Rating: 4 out of 5 stars4/5Bommai Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsYasothaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Manam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaseegaram Rating: 4 out of 5 stars4/5Sandhippu Thodarum Rating: 0 out of 5 stars0 ratingsபெண்ணே, நீ வாழ்க! Rating: 0 out of 5 stars0 ratingsNijamai oru kanavu Rating: 4 out of 5 stars4/5Kadaisiyai Oru Muthaliravu Rating: 5 out of 5 stars5/5Arali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Avalukku Amutherdru Per Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Padikkalam Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thevai Oru Snegithi
0 ratings0 reviews
Book preview
Thevai Oru Snegithi - Lakshmi Rajarathnam
http://www.pustaka.co.in
தேவை ஒரு சினேகிதி
Thevai Oru Snegithi
Author:
லட்சுமி ராஜரத்னம்
Lakshmi Rajarathnam
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
பதிப்புரை
சமூக நாவல்கள் எழுதுவதில் தான் எத்தனை இடுகுகள், சிக்கல்கள்!
தேவை ஒரு சினேகிதி
பூமி நாதனின் உடன்பிறந்த சகோதரிகள் ஆறு பேர்களையும் பெற்று அத்தனை பளுவையும் அவன் தலையில் சுமத்திய தாயின் பக்கம் பரிந்து பேசும் நிலைக்கு மாறாக கடைசி தங்கை விஜி தன் அண்ணி கல்பகத்துடன் இரண்டறக் கலந்தவள்.
பூமிநாதன் ஒவ்வொரு தங்கையாகக் கல்யாணம் முடித்து கடைசித் தங்கை விஜிக்கு முப்பத்தியொரு வயதாகியும் திருமணம் குதிராத நிலையில் பூமிநாதனின் பெண் பிரதிபா திருமணத்திற்குத் தயார் நிலையில் இருக்கிறாள்.
கர்னல் கோபாலின் இரண்டாவது மகன் சியாமின் போக்கு அறிந்து அவனின் மூத்த அண்ணன் இராம்குமார் பல திட்டங்கள் போட்டு அவனைக் கிடுக்கி போடுவதும் கடைசியில் அவன் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு ஆபத்தான நிலையில் நர்ஸிங்ஹோமில் சேர்க்கப்படுவ தும் பிறகு வீடு வருவதும் இதே சியாமை நர்ஸிங்ஹோம் சென்று விபரமறிந்து விஜி தானே திருமணம் செய்து கொள்ள விரும்புவதும் இதையறிந்த பூமி நாதன் தம்பதிகள் வியப்பிலாழ்வதும்,
'அண்ணனுக்குப் பெண் திருமண வயதடைந்து தன்னால் அது தடைபடாமலிருக்கவே இந்தத் தீர்மானம்' என்று விஜி கூறுவதும் ஓர் குடும்பத்தில் நடக்கும் இயற்கையான சம்பவமாகவே தோன்றச் செய்கிறது.
1
விஜிக்கு வேற மாப்பிள்ளை பார்க்கலாம் கல்பகம். இந்த சம்பந்தம் வேண்டாம்...
பூமி நாதனின் இந்த வார்த்தைகளால் அந்த வீடே ரங்கராட்டினம் மாதிரி ஒருமுறை தலைகீழாகச் சுற்று கிறது.
முதலில் குரல் கொடுத்தவன் கிருபாகர் தான் பூமி நாதனின் சீமந்த புத்திரன்.
உங்களுக்கென்ன பைத்தியமாப் பிடிச்சிருக்கு. அந்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல், சொந்தமா பிசினஸ். இருக்கறதுக்கு வீடு பார்க்கவும் லட்சணமா இருக்கார். இதைவிட உங்க தங்கைக்கு என்ன, பெரிய கோடீஸ்வரனைக் கொண்டு வரணும்னு எதிர்பார்க்கறீங்களா
நீ சும்மாயிருடா கிருபா.
கல்பகம் மகனை சாடையாய் கண்டித்து, அடக்கப் பார்க்கிறாள்.
பக்கத்திலேயே - அதோ - ஐந்தடித் தொலைவில் விஜி உட்கார்ந்திருக்கிறாள். மெளனமாய். தன்னெதிரே அடுக்கி வைக்கப்பட்டிருந்த - பரிட்சை பேப்பர்களைத் திருத்தியபடி...
அவளை வைத்துக் கொண்டு பேசுகிற பேச்சு இது.
ஆத்திரம், அவசரம் என்று வந்தால் மனிதாபிமானம்கூட காற்றில் பறந்து விடுகிறதே...
அவள் கவலையோடு, கனவரைப் பார்க்கிறாள்.
அவளுக்குமே. கிருபாகருக்குத் தோன்றிய எண்ணம் தான் தோன்றுகிறது...
'இவருக்கென்ன பைத்தியமா...' முந்தா நாள் பாக்கு வெற்றிலை மாற்றியாகி விட்டது.
நிச்சயதார்த்தம்னு தனியா ஊரைக் கூட்டி அது வேற செலவு வேண்டாம். இதையே உறுதியாக்கிடலாம். இந்தாங்க. வெத்தலைப்பாக்கு தட்டைப் பிடிங்க முகூர்த்த தேதி பார்த்து சட்டுனு ஒரு சத்திரத்தை புக் செய்யுங்க.
பிள்ளையைப் பெற்றவர் எத்தனை யதார்த்தமாய் சொன்னார்.
இந்த காலத்தில் யார் அப்படி சொல்கிறார்கள்?
'ஊருக்குப் போய் கடிதம் போடுவதாக
'இல்லா விட்டால், 'என் அக்கா வந்து பார்க்க வேண்டும்; மாமா வந்து முடிவு செய்யணும்...' இப்படி தட்டிக் கழிக்க எத்தனை சாக்கு போக்குகள் - பிள்ளையைப் பெற்றவர்கள் வைத்திருக்கிறார்கள்....
'எல்லாம் இவருக்குத் தெரியாததா...’
'வேண்டியதை அனுபவிச்சிருக்காரே... அதெல்லாம் மறந்து போச்சா'
கல்பகம், கணவனையே இமைக்காமல் பார்க்கிறாள். அதில் தெரிந்த ஏக்கம், பூமி நாதனின் நெஞ்சையே பிளந்து விடுவதாய்....
அவர் மறுபடியும் தீர்மானமாக சொல்கிறார்:
"ஆமா கல்பகம். முப்பத்தியொரு வயசு வரைக்கும் நம்ம கூடவே இருந்துட்ட விஜி
இன்னும் ஆறு மாசமோ, ஒரு வருஷமோ நம்மகூட இருக்கறதுனால நமக்கொண்ணும் பாரமாயிடப் போறதில்லே. இந்த இடம் வேண்டாம்.'
கிருபாகர், 'சட்'டெனத் திரும்பி மாடிப்படிக் கட்டைப் பார்க்கிறான்.
அங்கே... இத்தனையையும் கேட்டுக் கொண்டு பிரதிபா.
கிருபாகருக்கு அடுத்தவள்...
‘இந்த அப்பா மனசுக்குள் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்...'
பிரதிபாவின் முகத்தில் ஒரு நிமிடத்தில் நிகழ்ந்த மாறுதலை அவன் கவனிக்கத் தவறவில்லை.
ச்சே... வயசுப்பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு
அவளுக்கு கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்கிற சிந்தனையே இல்லாமல் - இன்னமும், தன் தங்கை கல்யாணத்தையே முடிக்காமல்
எருமை மாட்டை, குட்டையில் போட்டு விலை பேசுகிறார் போல....
கிருபாகரனுக்கு - தன் அப்பாவைப் பெற்ற தாய் தந்தையின் மீது தான் அடக்கமாட்டாதக் கோபம்-பற்றிக் கொண்டு வருகிறது.
பூமி நாதனைப் பெற்றவர் - அதற்குப்பின் வரிசையாய் ஆறு பெண்களைப் பெற்றுவிட்டு கண்ணை மூடிவிட்டார்....
குடும்பப்