Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வாசமுள்ள ரோஜா
வாசமுள்ள ரோஜா
வாசமுள்ள ரோஜா
Ebook120 pages46 minutes

வாசமுள்ள ரோஜா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மீனாட்சி தன் தோழியைப் பற்றி நினைத்துப் பார்த்தார். அப்போது மீனாட்சி ஆறாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அப்போதுதான் வேறு ஊரிலிருந்து அவள் அப்பா மாற்றலாகி சென்னைக்கு வர, புதியதாய், தன் வகுப்புக்கு வந்து சேர்ந்தாள். அப்போது தொடங்கிய நட்பு, இன்று வரை தொடர்கிறது. அவள் நல்ல மனசுக்கு ஏற்றாற்போல், கணவனும் நல்லவனாக அமைந்துவிட, அவளின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றது. 'என் வாழ்க்கைதான் எப்படியோ போயிற்று. அவளாவது நன்றாக இருக்கட்டும்' என மனதார வாழ்த்தினாள்.
 மற்ற வேலைகள் குறுக்கிடவே, தன் தோழியைப் பற்றிய நினைவைத் தவிர்த்து வேலைகளில் கவனம் செலுத்தினாள். சில மாதங்கள் செல்ல, பெங்களூரிலிருந்து ஒரு தம்பதியினர், அந்த இல்லத்திற்கு வந்து, "நாங்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க எண்ணியுள்ளோம். உங்கள் இல்லத்தைப் பற்றி கேள்விப்பட்டு வந்தோம். குழந்தைகளைப் பார்க்கலாமா...?" எனக் கேட்க, மீனாட்சியும் சம்மதித்தாள். குழந்தைகளைப் பார்வையிட்டனர்.
 ரோஜா அவர்களை மிகவும் கவர்ந்தாள். அவளைக் கேட்க, திகைத்துப்போன மீனாட்சி, "இல்லிங்க. அதை வேறொருவர் தத்தெடுத்துள்ளார். இன்னும் சில நாட்களில் வந்து வாங்கிச் சென்றுவிடுவார்" என பொய் சொல்ல, அவர்களும், "ஓ... கே..." என்று கூறிவிட்டு, வேறொரு பெண் குழந்தையைச் சட்டப்படி தத்தெடுத்துச் சென்றனர். அவர்கள் சென்றதும் மீனாட்சி மனம் குழம்பினாள்.
 'நான் தப்பு செய்துவிட்டேனா? அவளுக்கு வரவிருந்த வளமான வாழ்க்கையைக் கெடுத்துவிட்டேனா' என்று குழம்பியவர், 'இல்லை. அவளை என் சொந்த மகளாகவே வளர்க்க ஆசைப்படுகிறேன். இதில் என்ன தப்பு இருக்கு?' என்று தெளிந்தாள்வருடங்கள் சில சென்றன. குழந்தைகள் எல்லாம் பள்ளிக்குச் சென்றனர். உடன் ரோஜாவும் சென்றாள். ஒருநாள் பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வந்தாள் ரோஜா.
 அவளைப் பார்த்த மீனாட்சி, "ஏன் அழுவுறே...?" என்று கேட்டாள்.
 "என்னை எல்லாரும் கிண்டல் பண்றாங்க. உனக்கு பெத்தவங்க இல்லையா? யார்ன்னு தெரியாதான்னு கேட்கிறாங்க..." என்றாள்.
 மீனாட்சி கண்டிப்புடன், "இங்கே பார். இங்கே இருக்கறவங்களுக்கு எல்லாமே அப்படித்தான். அவங்கள்ளலாம் அமைதியா இருக்காங்க. உனக்கு மட்டும் என்ன? இனிமேல் இது மாதிரி பேசி அழக்கூடாது. தைரியமா இருக்கணும்..." என்று கூறி குரலை உயர்த்திச் சொல்ல,
 ரோஜா அழுகையை நிறுத்தினாள். அதன் பின் ரோஜா அந்தப் பேச்சை எடுக்கவே இல்லை.
 அன்று இரவு மீனாட்சி யோசித்துப் பார்த்தாள். 'பெற்றவர்கள் தவறிவிடுவதாலோ, ஒழுக்கம் தவறுவதாலோ அவர்களுடைய குழந்தைகள் சமூகத்தில் கேலிக்கும், அவமரியாதைக்கும் ஆளாகிறார்கள். எளியவர்களை, வலியவர்கள் அடிப்பதென்பது என்றுதான் மாறுமோ? ஆண் பெண் இருபாலருமே ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தன்னுடைய சுகத்துக்காக வருங்கால சந்ததிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக வேண்டுமா?' இப்படியே சிந்தித்தவளுக்கு அந்த நாள் தன் கணவன், தன் வீட்டின் சொத்தையும், கம்பெனியையும் பற்றி பேசியது நினைவு வர, கண்களில் கண்ணீர் வந்தது.
 அன்று மாடிக்கு வந்து கீழே பேசியது எதுவும் தெரியாதது போல் படுத்திருந்த மீனாட்சி உறுதியான ஒரு முடிவு எடுத்து, மறுநாள் தன் பெற்றோர்களைத் தேடிச் சென்றாள். தன் குடும்பத்தினர் பேசிய பேச்சு முழுவதையும் கூறினாள். பெற்றவர்கள் வருத்தப்பட்டார்கள்.
 "அப்பா, அம்மா... நான் ஒன்று சொல்கிறேன் கேட்பீர்களா...?"
 "என்னம்மா? சொல். உன் விருப்பத்துக்கு மாறா நாங்கள் என்றாவது நடந்திருக்கிறோமா?"நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சியடையக்கூடாது..." என்றவள், "என்றைக்கு விவாகரத்து செய்யலாம் என்று பேச்சு வந்தபிறகு எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. மேலும் நீங்க கஷ்டப்பட்டு உழைத்து, என் எதிர்காலத்திற்காக சேர்ந்த சொத்தை, இந்த பேராசைக்காரர்களுக்கு விட்டுக் கொடுப்பதா? அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அவர்கள் கேட்கும் முன்பே, நானே விவாகரத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். அதன்பின் அந்த வீட்டையே ஆதரவற்ற குழந்தைகள் இல்லமாக மாற்றி அமைக்கப்போகிறேன். எனக்கென்று குழந்தை இல்லையே என்ற ஏக்கம் மற்ற குழந்தைகளின் வளர்ச்சியில் மறைந்துவிடும். என்கணவரும் அவரிஷ்டம் போல் வேறொரு பெண்ணை மணந்து மகிழ்ச்சியுடன் வாழலாம்" என்று முடித்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 16, 2023
ISBN9798223214946
வாசமுள்ள ரோஜா

Read more from Prema Rathnavel

Related to வாசமுள்ள ரோஜா

Related ebooks

Related categories

Reviews for வாசமுள்ள ரோஜா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வாசமுள்ள ரோஜா - Prema Rathnavel

    1

    கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. காலையிலே சூரியனின் கதிர்கள் தகிக்க ஆரம்பிக்க, வெயில் உக்கிரம் அடைய ஆரம்பித்தது. சென்னை நகரின் மக்கள் வெள்ளத்தின் வெப்பமும், சூரியனின் தகிப்பும் பத்தாது என்று ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள், வேன்கள், பேருந்துகள் என்று அது கக்கும் புகையும் சேர்ந்து மக்களைச் சோர்வடையச் செய்தது.

    வருடம் தோறும் இதே புலம்பல்தான். போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் அதிகமாக இருக்குன்னு சொல்லியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்றும் அப்படித்தான். வெயில் காய்ந்து கொண்டிருந்தது. தேவலோகத்தில் வருண பகவான், சூரியனைப் பார்த்து உனக்கு மட்டும்தான் மக்களைத் துன்புறுத்தத் தெரியுமா? இதோ பார், என் வேலையை... என்று செயலாற்ற, வானத்தைப் பிய்த்துக்கொண்டு மழை கொட்ட ஆரம்பித்தது. மக்கள் மிக சந்தோஷமாக மழையை வரவேற்றனர். எல்லாவற்றையும் சமன் செய்வது இயற்கையின் நியதியன்றோ!

    சுமார் ஒரு மணி நேரமா கொட்டித் தீர்த்ததது மழை. அதன் பின் ஒன்றுமே தெரியாத அப்பாவி மனிதனைப் போன்று சாதுவாக தூறிக்கொண்டிருந்தது. மழைத்துளி ஒன்று விழுந்தாலே, பவர் கட் ஏற்பட்டுவிடும் சென்னை மாநகரில், அன்றும் பவர் கட்தான்.

    பெரியப்பெரிய கடைகளில் எல்லாம் ஜெனரேட்டர்கள் இயங்க, சின்னக்கடைகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு சிறிதளவு வெளிச்சம் சாலைகளில் தெரிந்தது. மெயின்ரோட்டிலிருந்து அந்தத் தெரு பிரிந்திருக்க, அங்கிருந்த வீடுகளில் இன்வெர்ட்டரின் உதவியால் சில வீடுகளில், ஒருசில விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

    அந்தத் தெருவின் கோடியிலிருந்த ‘அரும்புகள் இல்லம்’ என்று பெயரிடப்பட்டிருந்த அந்த ஆதரவற்றோர் குழந்தைகளின் இல்லத்தில், சில விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, முன்பக்கம் சற்று இருட்டாகவே இருந்தது. அந்த இல்லத்தின் நிர்வாகி மீனாட்சி அம்மாள்தான் அதை நடத்தி வந்தார். அந்த லேசான தூறலையும் இருட்டையும் பொருட்படுத்தாத ஒரு பெண் உருவம் தன் கையில் கனமான துணிச் சுருளில் பொத்து வைத்திருந்த பெண் குழந்தையை, பிறந்து ஒரு வாரமே ஆன அந்தப் பச்சிளம் சிசுவை, அந்த இல்லத்தின் முன் பக்கத்திலிருந்த வராண்டாவில் வைத்துவிட்டு இருளில் மறைந்து கொண்டது.

    தாயின் கதகதப்பில், துணிச் சுருளில் அமைதியாய் இருந்த குழந்தையின் மீது இப்போது குளிர் காற்று படவே, அந்தக் குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தது. குழந்தை அழும் சத்தம் கேட்டு வெளிவந்த மீனாட்சி அம்மாளும், வேறு சில பெண்களும் கையிலிருந்த டார்ச் விளக்கை அடித்துப் பார்க்க, அந்தக் குழந்தை கண்ணில் பட்டது.

    அதை அப்படியே எடுத்தவர்கள், வெளியே டார்ச் அடித்துப் பார்க்க, யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இருள் வேறு இருந்ததால், எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை. ப்ச்... யார் பெற்ற பிள்ளையோ... நல்ல இருக்கட்டும்... என்று சொல்லியவாறே, குழந்தையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று விளக்கு வெளிச்சத்தில் பார்த்தபோது, குழந்தைக்கு சமீபத்தில்தான் தொப்புள்கொடி விழுந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்தக் குழந்தையை அணைத்தபோது மீனாட்சி அம்மாளின் மனதில் ஓர் இதமான உணர்வு தோன்றியது.

    வெளியே இருளில் மறைந்திருந்த அந்தப் பெண், அங்கு நடந்த பேச்சுவார்த்தைகளைக் கேட்டு, தன் மகளைப் பற்றிய கவலை இனி தேவையில்லை என எண்ண, எங்கோ சென்றுவிட்டாள்.

    குழந்தைக்குப் பாலை தயார் பண்ணுங்கள்... என்று மீனாட்சி அம்மாள் குரல் கொடுக்க, அடுத்த நிமிடம் பவர் வந்துவிட, எல்லா விளக்குகளும் பளிச்சென எரிந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தில் குழந்தையை நன்கு உற்றுப் பார்க்க, நல்ல இள மஞ்சள் நிறத்தில் குழந்தை மூக்கும் முழியுமாக, களையுடன் இருந்தது.

    ‘இந்தக் குழந்தையை இங்கு வந்து போடுவதென்றால், பாவம், இவளின் தாய்க்கு என்ன துன்பமோ...?’ என்று நினைத்தவாறே, அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மற்றவர்களிடம் கேட்க, ஆளுக்கொரு பெயரைச் சொன்னார்கள். கடைசியில் திருவிளச்சீட்டுப் போட்டுப் பார்க்க, ரோஜா என்ற பெயர் வரவே, அந்தப் பெயரையும் அன்றைய தேதியையும், நேரத்தையும் பதிவேட்டில் எழுதி வைத்தார்கள்.

    மீனாட்சி அம்மாளே, அந்தக் குழந்தையை தன் மடி மீது வைத்துக்கொண்டு, அதற்கு பாட்டிலில் உள்ள பாலை புகட்டினார்கள். குழந்தைக்கு நல்ல பசி போலும். தன் சின்னஞ்சிறிய வாயில் பாலை உறிஞ்சிக் குடித்தது. பச்சிளங் குழந்தையாதலால் இரவில் அடிக்கடி எழும் என எண்ணி, பிளாஸ்க்கில் அரை சூட்டில் பாலை ஊற்றி வைத்தார்கள். அதற்குள் குழந்தை ஈரம் பண்ணிவிட, அதை மாற்றி, குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்ட, அந்தக் குழந்தை எவ்வித கவலையுமின்றி தூங்க ஆரம்பித்தது.

    அந்த இல்லத்தில், ஆணும், பெண்ணுமாய் மொத்தம் 70 குழந்தைகள் இருந்தனர். அதில் பெண் குழந்தைகளே அதிகம். இன்றும் பெண் குழந்தைகளைப் பாரமென்று நினைக்கும் பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அங்கு இருக்கும் குழந்தைகளில், இரண்டு முதல் 10 வயது வரை உள்ளவர்கள் இருந்தனர். எல்லோரும் இன்றைக்கு வந்த அந்த சின்னஞ்சிறு சிசுவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

    நேர்வழியில் பெற்றெடுத்த குழந்தையோ, அல்லது கல்யாணமாகுமுன்னே கர்ப்பம் தரித்து, முறைகேடாக பிறந்த பிள்ளையோ, யாருக்குத் தெரியும்? உம்... பாவம். இந்தக் குழந்தை. பெற்றவர்கள் யாரென்றே தெரியாத கொடுமை! என்று அங்கிருந்த உதவியாளர்களும், சமையல் செய்பவர்களும் பேசிக் கொண்டிருக்க, மீனாட்சி அம்மாள் அங்கே வந்து, என்ன, நேரமாகுது. தூங்கப் போங்க... என்று சொல்ல, அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    ரோஜா என்று பெயர் சூட்டப்பெற்ற அந்தக் குழந்தையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி அம்மாள். அவர் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

    *மீனாட்சி அம்மாள் என்றதும் வயது முதிர்ந்த பெண்மணி என்று நினைக்க வேண்டாம். மரியாதையின் பொருட்டு அப்படி அழைக்கப்படுகிறார். இன்றைக்கெல்லாம் வயது 35க்குள்தான் இருக்கும். மீனாட்சி அப்போது எம்.எஸ்சி. இரசாயனம், கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். அவரது அப்பா செண்பகராமன், அம்மா சுபத்ரா. செண்பகராமனுக்குப் பூர்வீகம் மதுரை. பிழைப்புக்காக சென்னை வந்தவர். சின்னச்சின்ன கம்பெனிகளில் வேலை பார்த்தார். அவருடைய கடின உழைப்பையும், நேர்மையையும் கண்ட கணேஷ் பேட்டரி ஒர்க்ஸ்ஸின் முதலாளி, தன்னுடைய ஒரே மகளான சுபத்ராவை அவருக்கு மணமுடித்து வைத்தார். அதன்பின் மேலும் கடுமையாக உழைத்து, கம்பெனியை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தார். சுபத்ராவும் தன் கணவனின் முன்னேற்றத்தில் பங்கு கொண்டு, அவரின் மனம் போல் வாழ்ந்து வந்தார். அவர்களின் அன்புக்கு ஈடாக, பெண் குழந்தை பிறக்கவே, அந்தக் குழந்தைக்கு மீனாட்சி என்று பெயர் வைத்தனர்.

    மீனாட்சியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள். எம்.எஸ்சி. கடைசி ஆண்டு படிக்கும்போது அவளைப் பெண் கேட்டு சிலர் வந்தனர். அப்படி வந்தவர்களில் இவர்களுக்குச் சமமான அந்தஸ்தும், நல்ல குணமும், படிப்பும் கொண்டு, நல்ல வேலையில் இருந்த சுரேந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். சுரேந்திரனது குடும்பம் சிறு

    Enjoying the preview?
    Page 1 of 1