Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alai Magaley Varuga Iswaryam Tharuga
Alai Magaley Varuga Iswaryam Tharuga
Alai Magaley Varuga Iswaryam Tharuga
Ebook107 pages32 minutes

Alai Magaley Varuga Iswaryam Tharuga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்பது ஆன்றோர் வாக்கு. மானிடப்பிறப்பெடுத்த நம் அனைவருக்குமே அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றம் முதல் ஆசை அபிலாஷைகள் பூர்த்தியாவது வரை அனைத்துக்குமே ஆதாரம் செல்வம் தான். அதற்காக நாம் மேற்கொள்ளும் நியாயமான முயற்சிகள் வெற்றியடைந்து செல்வம் சேர்வதற்கும், சேர்ந்த செல்வம் நிலையாக இருந்து பெருகுவதற்கும் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் மிகவும் தேவை. அந்தத் தாயாரின் தனிப்பெரும் சிறப்புக்களை இந்தக் கலியுகத்தில் அவள் நடத்திய திருவிளையாடல்கள் எளிய தமிழில் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580164509720
Alai Magaley Varuga Iswaryam Tharuga

Related to Alai Magaley Varuga Iswaryam Tharuga

Related ebooks

Related categories

Reviews for Alai Magaley Varuga Iswaryam Tharuga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alai Magaley Varuga Iswaryam Tharuga - P.G.S. Manian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அலை மகளே வருக ஐஸ்வர்யம் தருக

    Alai Magaley Varuga Iswaryam Tharuga

    Author:

    பி.ஜி.எஸ். மணியன்

    P.G.S. Manian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pgs-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கோபுர வாசல்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    கோபுர வாசல்

    E:\Priya\Book Generation\Alai Magaley Vaeruga\1-min.jpg

    பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.

    மானிடப்பிறப்பெடுத்த நம் அனைவருக்குமே அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றம் முதல் ஆசை அபிலாஷைகள் பூர்த்தியாவது வரை அனைத்துக்குமே ஆதாரம் செல்வம்தான். அதற்காக நாம் மேற்கொள்ளும் நியாயமான முயற்சிகள் வெற்றியடைந்து செல்வம் சேர்வதற்கும், சேர்ந்த செல்வம் நிலையாக இருந்து பெருகுவதற்கும் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் மிகவும் தேவை.

    அம்மா! உன் கடைக்கண் பார்வை எந்தத் திசையில் விழுகிறதோ அந்த இடத்தை நோக்கி அஷ்ட ஐஸ்வரியங்களும் போட்டி போட்டுக்கொண்டு போய்ச் சேருகின்றன என்று ஸ்ரீ ஸ்துதியில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தாயாரைப் போற்றுகின்றார்.

    அந்தத் தாயாரின் தனிப்பெரும் சிறப்புக்களை இந்தக் கலியுகத்தில் அவள் நடத்திய திருவிளையாடல்களை எளிமையாகத் தொகுத்து ஒரு சிறு புத்தகமாக வாசக அன்பர்களின் பார்வைக்கு இந்த எளியவன் கொண்டு வந்திருக்கிறேன்.

    இதனைப் படிக்கும் நேரத்தில் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி மனம் கனிந்தருளிய சம்பவங்கள் கண்டிப்பாக உங்கள் மனக்கண் முன் நிழலாடும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.

    பின்னூட்டமாக செல்வத்திற்கு அதிபதியான அன்னை தனிப்பெரும் கோயில் கொண்டிருக்கும் சில ஆலயங்களை பற்றிய சிறு குறிப்புகளையும் கொடுத்திருக்கிறேன். அன்னையின் அருள் உங்கள் அனைவரையும் இந்த ஆலயங்களுக்கு நேரில் வரவழைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    செல்வ மங்கள ஸ்ரீதேவியான மஹாலக்ஷ்மி தாயாரின் தனிப்பெரும் கருணை அனைவரின் இல்லங்களிலும் நிறைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அன்னையின் அருளால் இந்த எளியவன் செய்த தீந்தமிழ் மொழியில் இயற்றிய தினசரி பாராயணத்திற்கான சிறு துதிப் பாடல்களையும் வைகுண்ட வாசன் திருமார்பை விட்டு அகலாத மங்கையற்கரசியான ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் பொற்பாத கமலங்களில் மிகுந்த மனநிறைவுடன் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன்.

    இந்தப் பாடல்களை தினசரி படிப்பவர், கேட்பவர் யாவரும் குறையொன்றும் இல்லாத பெருவாழ்வை அடைந்து நீங்காத செல்வத்தோடு நிறைவாழ்வு வாழ அந்த அன்னையின் பதமலரை நெஞ்சம் உருகப் பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.

    மிகச் சிறந்த முறையில் இந்த புத்தகத்தை உருவாக்கி வெளிக்கொண்டு வந்திருக்கும் புஸ்தகா டிஜிட்டல் மீடியா நிறுவனத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளோடு ஜெகன்மாதா மஹாலக்ஷ்மித் தாயாரின் இன்னருள் சேர மனமார பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    "யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மீ ரூபேண ஸம்ஸ்திதா

    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    அன்புடன்

    பி.ஜி.எஸ். மணியன்

    கோவை

    7708226541

    12. 03. 2023.

    1

    "திருவிளக்கை ஏற்றிவைத்தோம் திருமகளே வருக.

    குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக"

    - கல்பனாதாசன்.

    E:\Priya\Book Generation\Alai Magaley Vaeruga\2-min.jpg

    லக்ஷ்மி - திருவுக்கெல்லாம் திருவாகப் பொலியும் திருமகளாம் எம் தாயாரின் இந்தத் திருநாமம் அற்புதமானது. தனி மகத்துவம் வாய்ந்தது.

    புதிதாகத் திருமணமாகி மருமகள் வீட்டுக்கு வந்ததும், திருமணம் விசாரிக்க வருபவர்கள் மணமகனின் தாயாரிடம் கேட்பதே என்ன? வீட்டுக்கு லக்ஷ்மி வந்தாயிற்றா? என்பதுதான்.

    இன்னும் சொல்லப்போனால் ஒரு வீட்டில் திருமண வயதில் மகனும், மகளும் இருந்தால் - முதலில் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து மருமகள் இல்லத்துக்கு வந்த பிறகே மகளுக்குத் திருமணம் பேசும் வழக்கம் நம் நாட்டில் உண்டு.

    ஏன் தெரியுமா?

    வீடு விளங்க லக்ஷ்மி வந்த பிறகே வீட்டு லக்ஷ்மியை இன்னொரு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கம்.

    இப்படி மனை விளங்க வரும் மருமகளை மஹாலக்ஷ்மியாகவே - ஸ்ரீதேவித் தாயாரின் அம்சமாகவே போற்றி வருவதுதான் நமது பாரத மண்ணின் தனிச் சிறப்பு.

    முப்பெரும் தேவியரின் இப்படி ஒரு தனித்துவச் சிறப்பு அன்னை மகாலட்சுமிக்கு மட்டும்தான்.

    அதுதான் அவளது திருநாமத்தின் சிறப்பு.

    லக்ஷ்மி

    Enjoying the preview?
    Page 1 of 1