Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesam Marakkavillai Nenjam
Nesam Marakkavillai Nenjam
Nesam Marakkavillai Nenjam
Ebook101 pages35 minutes

Nesam Marakkavillai Nenjam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பகைவரே பொறாமைப்படும் அன்பும் பண்பும் கொண்டவள் மதுரா. பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறாள் சொத்தின் காரணமாக தன் தம்பியின் மகளை தன் மகளுக்கு திருமணம் செய்ய எண்ணினாள் பங்கஜம். ஆனால் ரகுவும் அவன் தந்தையும் மதுராவை சம்மதிக்க வைத்து இவ்வீட்டிற்கு மருமகள் ஆக்கினார்கள் வெறுக்கவோ எதிர்க்கவோ தெரியாத மதுரா வேண்டாத மருமகளாய் இவ்வீட்டில் பட்ட துன்பங்கள் என்ன? அவளை அதிரச் செய்த கணவனின் செயல் என்ன? அன்பை மட்டுமே கொடுக்க தெரிந்த மதுராவின் முடிவு என்ன? என்பதை கதையை படித்து அறியலாம்

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580101007910
Nesam Marakkavillai Nenjam

Read more from Ga Prabha

Related to Nesam Marakkavillai Nenjam

Related ebooks

Reviews for Nesam Marakkavillai Nenjam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nesam Marakkavillai Nenjam - GA Prabha

    https://www.pustaka.co.in

    நேசம் மறக்கவில்லை நெஞ்சம்

    Nesam Marakkavillai Nenjam

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    "வக்ர துண்ட மகாகாய சூர்யகோடி ஸமப்ரப

    நிர்விக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷீ ஸர்வதா"

    அலாரம் அழகாகப் பாடியது. கணகணவென்று பெண்ணின் குரலும் அமைதியான அந்த விடியலும், சூழ்நிலையை இன்னும் ரம்மியமாக்கியது.

    மதுரா ஐந்தரைக்கே விழித்து விட்டாள். ஆனால் எழாமல் கண்ணை மூடி, அலாரம் அடிக்கக் காத்திருந்து படுத்திருந்தாள். விடியலின் சுகமான ஜில்லிப்பில் இதமான குரலில் ஸ்லோகம் கேட்டபடி எழுந்தால் நாளெல்லாம் சுகம்தான். எந்த சோர்வும் அண்டாமல் சுறுசுறுப்பாய் இருக்கும். அதனால்தான் மணி அடிக்கும் அலாரம் வேண்டாம் என்று விநாயகர் ஸ்லோகம் சொல்லும் அலாரம் வாங்கினாள்.

    மெர்க்குரி விளக்கு வீட்டிற்குள் வீசிய அழகை ரசித்தபடி அப்படியே படுத்திருக்கலாம் போல் இருந்தது. வாழ்வின் ஒவ்வொரு நிமிஷமும் அழகானது, அதை ரசிக்க வேண்டும் என்று நினைப்பவள் மதுரா. நேசிப்பும் அன்பும் மட்டும் அர்த்தமுள்ள லைஃப்பை உருவாக்கும் என்று நினைப்பவள்.

    இன்னும் ஸ்லோகம் நிற்கவில்லை. இதேபோல் ஹாலில் நாள் முழுதும் ஓம் காயத்ரி ஜெபம் செல்லும் கேஸட் உண்டு. வீடு முழுதும் இதமான ஒலி நிறைந்து இருக்கவேண்டும் என்பார் அப்பா.

    நம்மைச் சுற்றி நல்ல தேவதைகள் நடமாடிக்கிட்டு இருக்காங்கம்மா. அவங்க இருக்கற இடத்துல அபசகுண வார்த்தைகள் ஒலிக்கக்கூடாது என்பார் அப்பா.

    இந்த வீடு இனிமையான கோவில். எந்நேரமும் இனிமையான சொற்கள். அன்பான செய்கைகள். உதவக் காத்திருக்கும் உள்ளங்கள். மதுரா தன் வீட்டை நினைக்கையில் சந்தோஷமாக உணர்ந்தாள். அதே உணர்வு சுறுசுறுப்பைத் தர, எழுந்து தியானமும் யோகாவும் செய்துவிட்டு வருகையில் முழு வெளிச்சம் வந்திருந்தது.

    வாசல் தெளிக்கும் ஒலி, கீரைக்காரியின் குரல். இந்த வீட்டுக்கு கீரை வேண்டியதில்லை. இங்கு தோட்டத்திலேயே கீரை விளைகிறது. சுத்தமான தண்ணீர், பசுமையான கீரை கூடவே ஒரு நர்சரியும் வைத்திருக்கிறார் அப்பா. குளித்துவிட்டு வந்ததும் ஒரு பட்டுரோஜாவை நீட்டினார்.

    ஏதுப்பா?

    நம்ம தோட்டத்துல பூத்ததும்மா.

    சாமிக்கு வைக்கலியா?

    எங்களுக்கு சாமி நீ தானே.

    போங்கப்பா...

    உண்மைதாம்மா. நீ பொறந்தாட்டுதான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வந்தது. தவமிருந்து பெத்த குழந்தையில்லையா நீ.

    ஆனா, ஒண்ணோட நிறுத்திட்டீங்களே.

    உனக்கு செலுத்தர அன்புல பங்கு போட வேண்டாமேன்னு! வழக்கம்போல் நெகிழ்ந்தார். பெற்றவர்களின் அன்புக்கும், பரிவுக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம். இன்னும் தன்னைக் குழந்தையாய் தாங்கும் இவர்களின் பிரியத்தை வேறுயாரிடம் பெறமுடியும்?

    இப்படி போட்டி போட்டு அன்பு செலுத்துவதால்தான் வீடே ஆனந்த மாளிகையைாய் இருக்கிறது.

    அம்மா எங்கப்பா?

    பக்கத்து வீட்டு நிர்மலாவுக்கு திடீர்னு பிரசவ வலி எடுத்திருச்சின்னு ராத்திரி மூணு மணிக்கு வந்து கூப்பிட்டாங்க அம்மா போயிருக்காங்க.

    வாசல் தெளிச்சு கோலம் போட்டிருக்கு?

    நான்தான் போட்டேன். அழகா இருக்கா?

    என்னப்பா இது? என்னை எழுப்பியிருக்கலாம்?

    ராத்திரி ரொம்ப நேரம் டெஸ்ட் பேப்பர் திருத்திட்டிருந்தே ஸ்கூல்லயும் திருத்திட்டு வரே. தூங்கட்டும்னு விட்டுட்டேன்.

    போங்கப்பா. சரி, சமையல் செஞ்சிடறேன்.

    வேணாம்மா நான் இன்னைக்கு வீட்ல சாப்பிடமாட்டேன். நீ இன்னைக்கு ஒரு நாள் கேண்டீன்ல் சாப்பிடேன்.

    நோ பிராப்ளம். எங்க போறீங்க?

    தெரிஞ்சவர் வீட்டு கல்யாணம் மதுரா, நான்தான் மொத்த காய்கறி சப்ளை செய்யறேன்.

    பெருமையாக இருந்தது.

    பத்து வருஷத்திற்கு முன், மில்லில் ஏற்பட்ட விபத்தொன்றில் அப்பாவின் இடது கை போனபோது குடும்பமே நிலை குலைந்தது. ஆனால் அப்பா தைரியமாய் நின்றார். வைத்தியம் பார்த்து நஷ்டஈடு தந்தது மில். அப்பாவுக்கு சொந்தமாய் இந்த வீடும் பக்கத்தில் காலி மனையும் மட்டுமே இருந்தது.

    அப்பா சிறிது பணத்தை முதலீடாகப் போட்டு, காய்கறித் தோட்டம் போட்டார். மீதிப் பணத்தில் மதுராவை பி.எஸ்.ஸி, பி.எட் படிக்க வைத்தார் ஒற்றைக் கையோடு, தெரிந்த கடைகளில் எல்லாம் கணக்கு எழுதினார்.

    நான்கு வருஷத்திற்கு முன் மதுராவுக்கு வேலை கிடைத்தது. அப்பாவின் மில் முதலாளிதான் பள்ளி தாளாளர் என்பதால் அவர் மதுராவின் படிப்பு முடிந்ததும் வேலை போட்டுத் தந்தார். காய்கறித் தோட்டம் நல்ல விளைச்சல் தந்தது. அப்பா, அம்மா அதில்

    Enjoying the preview?
    Page 1 of 1