Kaalamellam Kaathirunthu...
By Vaasanthi
()
About this ebook
நளினி தனது இளம்வயதில் தாய் தந்தையை ஒரு விபத்தில் பறிக்கொடுத்துவிட்டு பாதுகாப்புக்காக மூன்று குழந்தைகளின் தந்தையான ஸ்ரீதரை திருமணம் செய்கிறாள். இரண்டு நாட்களில் அந்த ஸ்ரீதர் இறந்து விட என்ன முடிவு செய்யப் போகிறாள். அவளுக்கென்று தனி வாழ்க்கை பயணத்தையா? இல்லை அந்த பிள்ளைகளுடான வாழ்க்கைப் பயணத்தையா? காலமெல்லாம் காத்திருப்பவளின் நிலைதான் என்ன? வாங்க வாசிக்கலாம்...
Read more from Vaasanthi
Aasai Mugam Maranthu Pochey! Rating: 1 out of 5 stars1/5Vadikaal Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Moongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Maara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSontham Illatha Bandham Rating: 3 out of 5 stars3/5Naan Budhanillai Rating: 0 out of 5 stars0 ratingsThurathum Ninaivugal Azhaikkum Kanavugal Rating: 4 out of 5 stars4/5Sariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsPlum Marangal Poothuvittana Rating: 0 out of 5 stars0 ratingsJaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsOru Sangamathai Thedi… Rating: 5 out of 5 stars5/5Puriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Vittu Viduthalaiyagi… Rating: 0 out of 5 stars0 ratingsAakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsKizhakkey Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsIndre Nesiyungal Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsKarai Seratha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsAmerica Payana Diary Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Thunaivi Rating: 2 out of 5 stars2/5Pathaiyorathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsVer Pidikkum Mann Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Suriyargal Rating: 0 out of 5 stars0 ratingsNijangal Nizhalahumpothu… Rating: 0 out of 5 stars0 ratingsYugangal Marumpothu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaalamellam Kaathirunthu...
Related ebooks
Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Manoratham Rating: 4 out of 5 stars4/5மனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Vasantham Varumaa? Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Kappal Rating: 0 out of 5 stars0 ratingsNila Nesam Rating: 5 out of 5 stars5/5Mathamennum Vaanaththil Manamennum Pura Rating: 5 out of 5 stars5/5Yugangal Marumpothu Rating: 0 out of 5 stars0 ratingsPaavai Vilakkin Olichitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsRadhavin Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Payanangal Mudivathillai Rating: 3 out of 5 stars3/5Vanam Mannil Veezhvathillai Rating: 0 out of 5 stars0 ratingsAzhagin Muzhumathi Neeye...! - Part - 1 Rating: 5 out of 5 stars5/5Manathil Vizhuntha Mazhai Thuliye….! Rating: 5 out of 5 stars5/5Theeyai Theendiya Thendral Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Rating: 0 out of 5 stars0 ratingsThoongum Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsNaandhan Avan! Rating: 5 out of 5 stars5/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Nizhalai Thedupavan! Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsIndha Pookkal Unakkaga Rating: 4 out of 5 stars4/5Gopuramum Bommaigalum Rating: 0 out of 5 stars0 ratingsSevvanathil Oru Natchathiram Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaalamellam Kaathirunthu...
0 ratings0 reviews
Book preview
Kaalamellam Kaathirunthu... - Vaasanthi
https://www.pustaka.co.in
காலமெல்லாம் காத்திருந்து...
Kaalamellam Kaathirunthu...
Author:
வாஸந்தி
Vaasanthi
For more books
https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
1
நளினி ஸ்பீடா மீட்டரைப் பார்த்தாள். முள் ஒரே சீராக நாற்பதைத் தாண்டாமல் இருந்தது. ஸ்ரீதரின் கைகள் திடமாக ஸிடியரிங் வீலைப் பிடித்திருந்த மாதிரி இருந்தது. அவர் யோசனையுடன் காரை ஓட்டுகிற மாதிரி இருந்தது. அவள் பாதையில் பார்வையைச் செலுத்தியபடி இடையிடையே அவரைப் பார்த்த வண்ணம் இருந்தாள். தலையில் நரை வெளிப்படையாகத் தெரிந்தது. முகத்தில் ஒரு தீவிரம், ஓர் இறுக்கம் தெரிந்தது. இவர் தனக்கு அந்நியமானவர் என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்படும் உணர்வு இப்பவும் ஏற்பட்டது...
சட்டென்று அவள் தன்னைச் சமாளித்துக் கொண்டாள். இத்தகைய எண்ணங்களிலிருந்துதான் விடுபட்டே ஆக வேண்டும் என்று அவள் தீவிரமாக நினைத்துக் கொண்டாள். இருவருக்கும் நினைவுபடுத்திக் கொண்டாள். எத்தனை நினைவுபடுத்திக் கொண்டாலும் ஒரே எண்ணம் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. இவரைக் கல்யாணம் செய்துகொள்ள தனக்குச் சம்மதம் என்று தன்னால் எப்படி சொல்ல முடிந்தது?
கார் சடக்கென்று நின்றது. அவள் சுய நினைவுக்கு வந்தாள். ஏதோ ஒரு லெவல் க்ராஸிங். கதவு சாத்திருந்தது. ஒரு கட்டை மாட்டு வண்டியும் ஒரு டாக்ஸியும் காத்துக்கொண்டிருந்தன.
தன் தொடைமேல் ஒரு கை அமர்வதை அவள் உணர்ந்து திரும்பினாள். ஸ்ரீதர் அவளைப் பார்த்துச் சிரித்தார். மூக்குக் கண்ணாடி வழியாகப் பெரிய கண்கள் இன்னும் பெரியவையாகத் தெரிந்தது. பார்வையே மிருதுவாக அவளை வருடுகிற மாதிரி இருந்தது. அவள் லேசாகப் புன்னகைத்தாள். இந்தப் பார்வைதான் காரணம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அந்தப் பார்வையின் பரிவுதான் அவளைச் சம்மதிக்க வைத்திருக்க வேண்டும்... கல்யாணமே வேண்டாம் என்ற அவளுடைய வைராக்யத்தைக் குலைத்திருக்க வேண்டும்...
என்ன பெரிய யோசனை? அவசரப்பட்டுக் கல்யாணம் செய்து கொண்டுவிட்டோமோ என்று யோசனை பண்றியா?
அவள் திடுக்கிட்டாள்.
இல்லியே?
என்றவள் மெள்ளச் சொன்னாள். உங்களுக்கே அந்த மாதிரி ஏதேனும் சந்தேகம் இருக்கோ என்னமோ?
அவர் அவளை ஒரு வினாடி பார்த்தார். அவள் புன்னகையோடு பேசும்போது கன்னத்தில் கண்ணாமூச்சி விளையாடிய கன்னக் குழிகளை... காற்றில் அசையும் முன்னெற்றி சுருள்களை... பிறகு ஒரு ஆயாசத்துடன் தன் பார்வையைத் திருப்பி லெவல் க்ராஸிங்கில் பதிய விட்டபடியே சொன்னார்.
யெஸ், யூ ஆர் ரைட், எந்த ஒரு வேகத்திலே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தீர்மானிச்சேன்னு புரியல்லே. உன்னோட இளமையையும் அழகையும் பார்க்கும்போதெல்லாம் நான் எடுத்த முடிவு சரிதானா என்று என்னுள்ளே ஒரு சந்தேகம், பயம் தோணிண்டே இருக்கு. நீ நிர்க்கதியாப் போன நிலையிலே உன்னைச் சம்மதிக்க வெச்சுட்டேனோ என்று எனக்குள்ளேயே சந்தேகம் இருந்துண்டே இருக்கு.
அவள் மென்மையாகப் புன்னகைத்தாள். தன்னையறியாமல் அவர் கரத்தின்மீது தன் கரத்தை வைத்தாள்.
நீங்க அந்த மாதிரியெல்லாம் நினைக்கக் கூடாது. என்னுடைய சம்மதத்தோடுதான் இந்தக் கலியாணம் நடந்திருக்கு. இந்த மாதிரி சந்தேகத்தையெல்லாம் நீங்க மனசிலே வெச்சுக்கக் கூடாது. அதனாலே சஞ்சலம்தான் அதிகமாகுமே தவிர இட் இஸ் நாட் கோயிங் டு ஹெல்ப் அஸ்...
அவர் ஒன்றும் சொல்லாமல் எதிரில் க்ராஸிங்கில் ஓடும் அந்தச் சின்ன குட்ஸ் வண்டியைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.
அவருடைய கையை மறுபடி அழுத்தி ப்ளீஸ்!
என்று அவள் லேசாகச் சிரித்தாள்.
அவர் சட்டென்று அவள் பக்கம் திரும்பிச் சிரித்தார்.
ஓ.கே! நான் இனிமே இதெப்பத்தி பேசவே மாட்டேன்...
அது மாத்திரமில்லை. நீங்க இந்த மாதிரியெல்லாம் நினைக்கக்கூடாது.
அவர் பதில் ஏதும் பேசாமல் காரைக் கிளப்பினார். மாட்டு வண்டியைத் தாண்டி டாக்ஸியைத் தாண்டி கார் போய்க் கொண்டிருந்தபோது ‘இவர் நினைக்காமல் இருக்க மாட்டார்’ என்று அவள் நினைத்துக் கொண்டாள். அவர் அப்படி நினைப்பதில் ஏதேனும் நியாயமிருக்கிறதோ என்று அவள் திடீரென்று நினைத்துக் கொள்கையில் குழப்பமாக இருந்தது. சற்று பயமாகவும் இருந்தது... கார் மறுபடி சீராகப் போய்க் கொண்டிருந்தது.
குழந்தைகளுக்கெல்லாம் தகவல் தெரிவித்திருக்கிறீர்களா நாம் இன்னிக்கு வரோம்னு?"
ஓ யெஸ்... தந்தியடிச்சிருக்கேன். நமக்காகக் காத்திருப்பார்கள்...
நிச்சயம் ஆவலோடு காத்திருக்க மாட்டார்கள்
என்று அவள் நினைத்துக் கொண்டாள். அவளுக்கிருக்கும் பயம் சந்தேகம் அவர்களுக்கும் இருக்கும்...
என்ன யோசனை? குழந்தைகள் உன்னைக் கண்டதும் எப்படி வரவேற்பார்களோ என்று யோசனையாயிருக்கா?
அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் ஒரு லேசான கலவரம் முகத்தில் தெரிய உட்கார்ந்திருந்தாள்.
அப்பா இரண்டாம் கல்யாணம் பண்ணிண்டு அதுவும் உன்னைப் போல ஒரு இளம் பெண்ணைக் கல்யாணம் பண்ணிண்டு வரார்னா அவங்க மனசுலே ஒரு கலக்கம் இல்லாமெ இருக்காது. அவர்கள் கலக்கத்தைப் போக்கறது உன் கையிலேதான் இருக்கு.
தன்னால் முடிகிற காரியமா அது?
அது உனக்குக் கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன். அசோக்கும் கீதாவும் விவரம் தெரிஞ்சவர்கள். பாலுதான் கொஞ்சம் டிஃபிகல்ட் டைப். வயசு வித்தியாசத்தினாலே உடம்புக் கோளாறினாலே அவன் கொஞ்சம் மாறுபட்டவன்.
அவர் சொல்லியிருந்தது அவளுக்கு ஞாபகம் இருந்தது. அசோக் மூத்தவன். என்ஜினியரிங் கடைசி வருஷம் படிக்கிறான். கீதா பி.ஏ. இறுதியாண்டு. பாலு ஏழாவதில் இருக்கிறான். அவனுக்குத்தான் இருதயத்தில் ஏதோ கோளாறு. நோஞ்சான். யாருடனும் அதிகம் கலகலப்பாகப் பழக மாட்டான். அவனைப் பெறும்போதுதான் ஸ்ரீதரின் முதல் மனைவி இறந்து விட்டாள். பன்னிரண்டு வருஷம் பேசாமலிருந்த ஸ்ரீதர் இப்பொழுது ஏன் மறுமணம் செய்துகொண்டார் என்று அவள் யோசித்துப் பார்த்தாள். பிறகு இந்த மாதிரி யோசனைகளினால் தனக்கு ஏதும் லாபமில்லை என்று அவள் தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.
இன்னும் பத்து மைல் போகணும்
என்று கூறியவர் களைப்பாயிருக்கா
என்று கேட்டார்.
இல்லையே.
அவர் ஆசையுடன் அவளைப் பார்க்கிற மாதிரி இருந்தது. அவருக்கு இருக்கும் தீவிரம் தனக்கு இல்லை என்று அவள் நினைத்துக் கொண்டாள். ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தினால் அவரை மணம் செய்துகொண்ட மாதிரி இருந்தது. அவள் சட்டென்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள். இவருக்கு நான் மனைவி. இவர் நல்லவர். இவருக்கு நல்ல மனைவியாக இருக்க