Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velai Ungalukkey!
Velai Ungalukkey!
Velai Ungalukkey!
Ebook171 pages53 minutes

Velai Ungalukkey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெரும்பாலும் வழிகாட்டல் விஷயங்களை மையமாக வைத்து வெளிவரும் நூல்களில் ரிஸ்க் உண்டு. பல விஷயங்கள் நடைமுறைச் சாத்தியமானதா என்று பார்க்காமலேயே அட்வைஸ் வழங்கும் ரீதியில் எழுதப்பட்டு விடுவதுண்டு. நம் ஊரில் மிகச் சுலபமாக, அதுவும் இலவசமாகக் கிடைக்கும் ஒரே விஷயம் அறிவுரைதான். பலரும் தனக்கு அதிகப் பரிச்சயமில்லாத விஷயங்களில்கூட அறிவுரைகளை வாரி வழங்குவது உண்டு. தனது பிரச்னையைத் தீர்க்க யாராவது வழிகாட்ட மாட்டார்களா எனத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு யாருடைய அறிவுரையைக் கேட்பது எனத் தீர்மானிப்பதும் அவ்வளவு சுலபமல்ல. அந்த வகையில் வேலை தேடும் இளைஞர்கள் எனது இந்த நூலை அறிவுரையாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு அனுபவஸ்தனின் வழிகாட்டலாகத் தைரியமாக ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த நூலைப் படித்த பின்பு இதனுடைய வழிகாட்டலின் உதவியோடு உங்களுக்கு ஒரு வேலை கிடைத்தது என்ற மகிழ்ச்சியை பெறுவீர்கள்

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580149707655
Velai Ungalukkey!

Read more from Dr. Ramesh Prabbha

Related to Velai Ungalukkey!

Related ebooks

Reviews for Velai Ungalukkey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velai Ungalukkey! - Dr. Ramesh Prabbha

    https://www.pustaka.co.in

    வேலை உங்களுக்கே!

    Velai Ungalukkey!

    Author:

    ரமேஷ் பிரபா

    Dr. Ramesh Prabbha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-ramesh-prabbha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ரமேஷ் பிரபா

    B.Sc., B.Tech.(MIT), MBA(IIMC)

    Academic Council Member, Anna University, Chennai

    Advisory Member, University Stakeholders Forum,

    Anna University Of Technology, Chennai

    Planning and Development Committee Member, University of Madras

    Board of Studies Member, EMRC, Anna University

    Board of Studies Member, Mass Communication & Journalism, Madurai Kamaraj University

    Academic Council Member, Centre for Social Initiative and Management

    என்னுரை

    ஆனந்த விகடன் நிறுவனத்திலிருந்து வெளிவந்த ‘ஜூனியர் போஸ்ட்’ பத்திரிகையில் நான் எழுதிய தொடரான ‘வேலை உங்களுக்கே!’ இப்போது உங்கள் கையில் நூல் வடிவில்!

    பெரும்பாலும் வழிகாட்டல் விஷயங்களை மையமாக வைத்து வெளிவரும் நூல்களில் ரிஸ்க் உண்டு. பல விஷயங்கள் நடைமுறைச் சாத்தியமானதா என்று பார்க்காமலேயே அட்வைஸ் வழங்கும் ரீதியில் எழுதப்பட்டு விடுவதுண்டு. நம் ஊரில் மிகச் சுலபமாக, அதுவும் இலவசமாகக் கிடைக்கும் ஒரே விஷயம் அறிவுரைதான். பலரும் தனக்கு அதிகப் பரிச்சயமில்லாத விஷயங்களில்கூட அறிவுரைகளை வாரி வழங்குவது உண்டு. தனது பிரச்னையைத் தீர்க்க யாராவது வழிகாட்ட மாட்டார்களா எனத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு யாருடைய அறிவுரையைக் கேட்பது எனத் தீர்மானிப்பதும் அவ்வளவு சுலபமல்ல. அந்த வகையில் வேலை தேடும் இளைஞர்கள் எனது இந்த நூலை அறிவுரையாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு அனுபவஸ்தனின் வழிகாட்டலாகத் தைரியமாக ஏற்றுக்கொள்ளலாம்.

    இப்புத்தகத்தில் வரும் அத்தனை விஷயங்களும் இன்று நம்மிடையே சர்வ சாதாரணமாக நடக்கும், நாம் ஆங்காங்கே சந்திக்கும் நடைமுறை உதாரணங்கள்தான். நீங்கள் இன்று சந்திக்கும் அத்தனை சிரமங்களையும் அத்தனை தடைகளையும், ஏற்கனவே சந்தித்து அத்தனையையும் தனது சொந்த முயற்சியாலேயே கடந்து வந்திருக்கும் ஒரு சகோதரன் நீங்களும் அவற்றை கடக்க வேண்டும் என்ற ஆசையில் எழுதும் நூல்தான் இது. அந்த வகையில் நீங்கள் உங்கள் வெற்றிக்கு எடுக்கும் பலதரப்பட்ட முயற்சிகளில் இந்த நூலும் ஒரு பங்காக அமையும் என்கிற அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு.

    இந்த நூலைப் படித்த பின்பு இதனுடைய வழிகாட்டலின் உதவியோடு உங்களுக்கு ஒரு வேலை கிடைத்தது என்கிற மகிழ்வான செய்தியை மட்டும் மறக்காமல் எனக்கு ஒரு வரியில் எழுதிப் போடுங்கள். நான் மகிழ்ச்சியடைவேன். நீங்கள் இந்தப் புத்தகத்தால் பயனடைந்த செய்தியை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அனைவரும் பயன் அடையட்டும்.

    அன்புடன்

    முகவரி:

    கேலக்ஸி,

    18, நான்காவது தெரு,

    கற்பகம் அவென்யூ,

    சென்னை - 600 028.

    போன்: 24956277, 24956299

    இ-மெயில்: galaxyrp@mantraonline.com

    உள்ளே...

    1. எப்போது எப்படி?

    2. நம்மைப் பற்றி...

    3. சுருக்கமான சுயசரிதை!

    4. தேவை - நகைச்சுவை உணர்வு!

    5. மேலும் என்ன படிக்க வேண்டும்?

    6. கம்ப்யூட்டர் கோர்ஸ்

    7. சேல்ஸ் & மார்க்கெட்டிங்

    8. என்ன வேண்டும்?

    9. தகவல்கள் எங்கு கிடைக்கும்?

    10. தனியார் வேலை வாய்ப்பு

    நிறுவனங்கள்!

    11. எதற்கெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

    12. பயோடேட்டா (Bio-Data)

    எழுதுவது எப்படி?

    13. இண்டர்வியூவுக்குப் போகும் முன்...

    14. டென்ஷன்... டென்ஷன்...

    15. ஆள் கால்... ஆடை முக்கால்!

    16. தவிர்க்க வேண்டிய தர்மசங்கடங்கள்!

    17. என்னவெல்லாம் செய்யக் கூடாது...

    18. தேவை கம்யூனிகேஷன் ஸ்கில்!

    19. இண்டர்வியூ எத்தனை வகை?

    20. கலந்துரையாடல்!

    21. இண்டர்வியூவில் என்ன

    கேட்பார்கள்?

    22. எதையும் சமாளிப்பது எப்படி?

    23. இண்டர்வியூவை முடிப்பது எப்படி?

    24. இண்டர்வியூ முடிந்த பின்...

    25. சுந்தருக்கு வேலை கிடைத்ததா?

    26. ராஜாவின் முதல் இண்டர்வியூ

    27. மாறட்டும் மனோபாவம்!

    1. எப்போது எப்படி?

    பி.காம். பட்டதாரியான திருச்சி சுந்தர், கடந்த நான்கு வருடங்களாக வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர் கிட்டத்தட்ட ஒன்பது கம்பெனிகளில் - ஒரேயொரு குறிப்பிட்ட காரணத்துக்காக வேலைவாய்ப்பை நழுவவிட்டவர். கல்லூரியில் படிக்கும்போதே பெற்றோர். சுந்தரை வலியுறுத்தியும்கூட, இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் வேண்டுமென்றே கவனம் செலுத்தவில்லை. அதுதான் இன்று வேலைக்குத் தடையாக நிற்கிறது. ஆம், ‘டைப்பிங்’ என்ற ஒரு விஷயத்தை சுந்தர் கற்றுக்கொள்ளாததாலேயே பல வாய்ப்புகள் அவருக்குக் கிட்டாமலேயே போய்க்கொண்டிருக்கின்றன. ‘டைப்பிங்’ என்ன ஒரு பெரிய வேலையா? நாம் படித்த பி.காம். படிப்புக்கு நேரடியாகப் பெரிய பதவியே கிடைக்கும் என்கிற தவறான எண்ணத்தில் டைப்பிங் பக்கமே போகாமல் இருந்துவிட்டார் சுந்தர்! பெற்றோருடைய அட்வைஸ் அவர் காதில் விழவே இல்லை. இன்று ஒன்பது இன்டர்வியூக்களில் அடிபட்டுத் திரும்பிய பக்குவம் வந்த நிலையில், தொடர்ந்து இன்டர்வியூக்களுக்குப் போகும் பணியைச் செய்து கொண்டே ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் தற்போது டைப்பிங் கற்கத் தொடங்கியிருக்கிறார்.

    பாளையங்கோட்டையைச் சேர்ந்த ராஜன் கென்னடி, பி.ஏ. (எகனாமிக்ஸ்) முடித்த சில மாதங்களில் தனது கிளாஸ்மேட் ரவியுடன் சேர்ந்து பிரபல கம்பெனி ஒன்றின் சேல்ஸ் ரெப்ரசென்டேடிவ் வேலைக்கு இன்டர்வியூவுக்குப் போனார். இருவருக்குமே அங்கு வேலை கிடைத்தது. ஒரு வாரத்தில் ரவி வேலையில் சேர்ந்து விட்டார். ஆனால், ராஜன் கென்னடி அந்த வேலையில் சேருவதை அவரது பெற்றோர் விரும்பவில்லை. வேலை என்று ஒன்றில் அவர் சேர்ந்தால், அது கவர்ன்மெண்ட் உத்தியோகமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் அவரது பெற்றோருக்கு அசையாத நம்பிக்கையும் பிடிவாதமும் உண்டு! எனவே, தொடர்ந்து ரயில்வே, பாங்க், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என ஒவ்வொரு டெஸ்ட்டாக எழுதிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் கென்னடி வீட்டுக்கு காரில் வந்து இறங்கிய ரவி, ஏரியா மானேஜராகத் தான் பதவி உயர்வு பெற்றுவிட்டதைத் தெரிவித்தபோது கென்னடியின் பெற்றோருக்குத் தங்கள் பிடிவாதத்தின் விளைவுகள் உறைக்க ஆரம்பித்தன! ஏம்பா ரவி, உன் கம்பெனியிலேயே ஏதாவது வேலை இருந்தா இவனை இழுத்துப் போட்டுக்கயேம்பா என்கிற லெவலுக்குக் கென்னடியின் பெற்றோர் இறங்கி வர, சமீபத்தில் ரவியின் கீழ் பணிபுரியும் சேல்ஸ் ரெப்ரசென்டேடிவ் ஆக கென்னடி அதே நிறுவனத்தில் சேர்ந்திருந்தார்!

    சென்னை வில்லிவாக்கம் ரஞ்சனி பி.எஸ்.ஸி. படிக்கும்போதே டைப்ரைட்டிங் தமிழ், இங்கிலீஷ் இரண்டிலும் ஹையர் கிரேடு பாஸ் செய்துவிட்டதோடு சுருக்கெழுத்தும் கூட தெரியும். ஆனாலும் பேப்பர்களில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரங்களைப் படித்துவிட்டு அதில் பெரும்பாலானவற்றுக்குத் தான் தகுதியற்றவர் என்று தானே முடிவு செய்து கொண்டு விண்ணப்பிப்பதே கிடையாது. அவருடன் படித்து தற்போது பல்வேறு நிறுவனங்களில் வேலையில் இருக்கும் அவரது சிநேகிதிகள், ரஞ்சனிக்கு உதவ வேண்டுமென நினைத்து, தங்கள் நிறுவனங்களில் வேலைக்குச் சிபாரிசு செய்தால் கூட, இல்லடி... எனக்கென்ன தெரியும்? அங்க வந்து சேர்ந்தா அநாவசியமா நான் உங்க பேரையும் கெடுத்துடுவேன் என்று சொல்லி உதறிவிடும் ஒரு குணம் ரஞ்சனிக்கு. தன்னம்பிக்கை சிறிதும் இல்லாத ரஞ்சனிக்குக் கொஞ்சமாவது நம்பிக்கையை வரவழைக்க வேண்டுமென்கிற நோக்கத்தில் அவரது தந்தை ரஞ்சனியைத் தனது நண்பரின் நிறுவனம் ஒன்றுக்கு டிரெய்னிங் மாதிரி போய்விட்டு வா. சம்பளம் வேண்டாம் என்று அனுப்பி வைத்திருக்கிறார்.

    ஆத்தூர் ஜமால் பாஷா ஐ.டி.ஐ. படிக்கிற காலத்திலேயே காலையிலும் மாலையிலும் கிரீஸ் டப்பா ஒன்றை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கடையிலும் உள்ள ஷட்டர்களுக்கு கிரீஸ்போட்டு ஐந்து, பத்து என வசூலித்து மாசம் 500 ரூபாய் வரை சம்பாதிப்பார். படிப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1