Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Joraana Jokes
Joraana Jokes
Joraana Jokes
Ebook44 pages16 minutes

Joraana Jokes

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

களிப்பு என்பது காயத்திற்கு களிம்பு பூசுவது போன்றதாகும். அந்த களிப்பை அளிப்பது சிரிப்பு! என்றால் மிகையாகாது. சிரிப்பு மனிதனுக்கு மட்டுமே கிடைத்த வரமாகும். நகைச்சுவை என்பது பஞ்சபூதங்களோடு தொடர்புடையது. எனவேதான் "பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்" என்றனர். சிரிப்பை ஜோக், நகைச்சுவை, ஹாஸ்யம் என பல்வேறு பெயர்களில் கூறுவர். நகைச்சுவை நடிகர் தங்கவேலு அவர்கள் ஒருமுறை வானொலி பேட்டியில் நகைச்சுவை என்பது "நகைத்து அதன் கருத்தை மனதில் வை" என்றார்.

மன அழுத்தம், நெருக்கடியில் இருந்து விடுபட அன்றாட வாழ்வில் சிரிப்பு தேவைப்படுகிறது. அத்தகைய சிரிப்புதான் மகிழ்ச்சியையும் மன பரவசத்தையும் அளிக்கிறது. உள்ளத்தை உவகை அடைய செய்யும் ஆற்றல்மிக்க சிரிப்பினை தொகுத்து, "ஜோரான ஜோக்ஸ்" என்ற படைப்பு உருவாக்கம் பெற்றுள்ளது. மகிழச் சிறந்த ஜோக்ஸ் இவை என்பதை படிக்கும் போதே உணர வைக்கும்.

Languageதமிழ்
Release dateDec 17, 2022
ISBN6580159509272
Joraana Jokes

Read more from Tamil Nayagi

Related to Joraana Jokes

Related ebooks

Related categories

Reviews for Joraana Jokes

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Joraana Jokes - Tamil Nayagi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜோரான ஜோக்ஸ்

    Joraana Jokes

    Author:

    தமிழ் நாயகி

    Tamil Nayagi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamil-nayagi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    தாய்: எல்லா பாடத்திலும் முட்டை வாங்கி இருக்கிறாயே, ஏன்?

    மகள்: உங்களுக்கு சத்தே இல்லைன்னு டாக்டர் சொன்னாரே!

    மிஸ்: ஸ்கேலை வைத்துக்கொண்டேதூங்குகிராயே ஏன்?

    சிறுமி: அளவோட தூங்கணும்னு சொன்னாங்க மிஸ்!

    ஒருவர்: நீச்சல் வீரர் மூழ்கிட்டாராமே எங்கே?

    மற்றவர்: கடன்ல!

    ஒருவன்: தலைவர் ஏன் கிளவுஸ் போட்டுக்கிட்டு பேசுகிறார்?

    மற்றவன்: கை சுத்தம்னு கூட்டத்துக்கு வந்தவங்களுக்கு தெரியனுமாம்!

    நிருபர்: பேய் படத்தை எப்படி ஓட்ட போறீங்க?

    தயாரிப்பாளர்: பூசாரியை வைத்துதான்!

    மன்னர்: அமைச்சரே! புலவர் ஏன் மது பாட்டிலோடு வருகிறார்?

    அமைச்சர்: சரக்கு உள்ள புலவராக அழைத்துவரச் சொன்னீர்களே மன்னா !

    போலீஸ்: ஹெல்மெட் ஏன் போடல?

    பெண்: பேன் கடிச்சா சொரிய முடியல!

    ஆசிரியர்: வாடைக்காற்று எப்போது வீசும்?

    மாணவன்: என்அப்பா குடித்து விட்டு வரும்போது சார்!

    ஒருவன்: இரண்டுபர் தலையுடன் போகிறாயே எங்கே?

    மற்றவன்: ஸ்டேஷன்ல தலை தீபாவளி கொண்டாட!

    சிறுவன்: கிளிகள் ஏன் பீச்சுக்கு வருது?

    சிறுமி: 'கிளி'ஞ்சல்கள் தேடி!

    ஒருவர்: ஏன்முதுகுக்கு பின்னால உண்டியல் வச்சிருக்கீங்க?

    மற்றவர்: 'உடலே ஆலயம்'என என் குருநாதர் சொல்லித் தந்தாரே!

    ஒருவன்: புலவர் ஏன் திடீர் தாண்டவம் ஆடுகிறார்?

    மற்றவன்: வறுமை தாண்டவம் ஆடுவதை பாட்டாக சொல்ல முடியவில்லையாம்!

    அமைச்சர்: மன்னரை ஏன் அடித்தாய்?

    காவலன்: 'அடி' முட்டாளே !என்றாரே....

    ஒருவன்: அரசர் உலக்கையோடு போகிறாரே ?

    மற்றவன்: எதிரி அரசனை தவிடுபொடி ஆக்கப் போறாராம்!

    தாய்: நண்பன் பிறந்தநாளுக்கு வெறும் கையோடா போனாய்?

    மகன்: இல்லை அம்மா, கிளவுஸ் போட்டுக்கொண்டு தான்

    Enjoying the preview?
    Page 1 of 1