Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koottukkulle Sila Kaalam
Koottukkulle Sila Kaalam
Koottukkulle Sila Kaalam
Ebook81 pages28 minutes

Koottukkulle Sila Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Usha
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466978
Koottukkulle Sila Kaalam

Read more from V.Usha

Related to Koottukkulle Sila Kaalam

Related ebooks

Related categories

Reviews for Koottukkulle Sila Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koottukkulle Sila Kaalam - V.Usha

    கூட்டுக்குள்ளே சில காலம்

    1

    பொழுது விடிந்தது.

    கல்பனாவின் காதுகளில் வழக்கமான மாமரத்துக் கிளிகளின் கொஞ்சும் மொழி கேட்டது. காற்றும் உற்சாகமாக அதிகாலையிலேயே வீசிக் கொண்டிருந்தது. நுனி சிவந்த மாவிலைகளை அது ஆசையாக ஊஞ்சல் போல ஆட்டி மகிழ்வித்தது.

    மாவிலை... தோரணம்!

    கல்பனாவுக்கு அப்போதுதான் அது ஒரு வித்தியாசமான நாள் என்கிற நினைவே வந்தது.

    வேணு என்கிற ஒருவன் வரப்போகிறான், இருவரும் சந்திக்கிறார்கள், பிடித்திருந்தால் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், அன்று மாலை அவளைப் பெண் பார்க்க வரப் போகிறார்கள், அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும் பட்சத்தில் ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்.

    எழுந்துட்டியாம்மா?

    திரும்பினாள்.

    அம்மா எழுந்து குளித்து கூட முடித்து புன்னகை சுமந்திருந்தாள், பளிச்சென்றிருந்தாள். முகத்தில் உபரியான சந்தோஷம் தெரிந்தது.

    காபி கலக்கட்டுமா? பால் கூட வந்தாச்சு இன்னிக்கு சீக்கிரமாவே...

    இரு... ப்ரஷ் பண்ணிட்டு வரேன்...

    லேசான படபடப்பு இருப்பது புரிந்தது.

    எப்படி இருக்கப் போகிறான் அந்த வேணு கோபால் என்கிற எண்ணம் மெல்ல அரும்புவிட்டது. எல்லாம் சரியாக இருக்கிற பட்சத்தில் தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிட நிகழ்வுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இருக்கப் போகிறது என்கிற நினைப்பு இனம் தெரியாத ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. கல்யாணம் என்கிற ஒன்று தவிர்க்க முடியாத விஷயமாக பெண்களின் வாழ்க்கையோடு இணைந்து போன அதிசயத்தை வியந்தபடி அவள் பல் தேய்த்து முடித்தாள்.

    உண்மையிலேயே காபி பிரமாதமாக இருந்தது. மனதிற்கும் செயலுக்கும் இருக்கிற நெருங்கிய தொடர்பு இது என்று கல்பனா நினைத்துக் கொண்டாள், நெஞ்சம் உற்சாகத்தில் மிதக்கும் வண்ணம் இருக்கிறபோது செய்கிற காரியங்களுக்கும் தானாக அபார இனிமை ஏற்பட்டு விடுகிறது. அம்மா மிகுந்த மனக்கிளர்ச்சியில் இருக்கிறாள்.

    தானும் ஒரு கப் எடுத்துக்கொண்டு அம்மா எதிரில் வந்து உட்கார்ந்தாள், இன்னும் அகலமாகப் புன்னகைத்தாள்.

    காஃபி எஸ்டேட்ல இருந்து நேரா நம்ம வீட்டு கிச்சனுக்கு வந்துதா என்ன? அவ்வளவு ஃபிரஷ்ஷா இருக்கு? என்றாள் கல்பனா.

    நெஜமாவா? நல்லா இருக்கா? அம்மாவின் குரலில் சந்தோஷம் ரொம்ப வெளிப்படையாகத் தெரிந்தது.

    அற்புதம்... கல்பனா சிரித்தாள். அப்பா சொல்லுவார்னு சொல்லுவியேம்மா... இந்தக் காபிக்கே பாதி ராஜ்யத்தை எழுதிக் கொடுத்துடுவேன், ராஜாவா பொறக்கலியே... கரெக்டா?

    வெட்கத்துடன் சிரித்தபோது அம்மா இன்னும் அழகாகத் தெரிந்தாள்.

    அப்பா இருந்தா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் இன்னிக்கு? என்றபோது அம்மாவின் குரல் கம்மியிருந்தது. இப்படியா சாவகாசமா ஒக்காரவிடுவார் என்னை? தரை தொடைச்சியா, ஸோஃபா தட்டினியா, பஜ்ஜி மாவு கரைச்சியா, கோலத்துக்கு செம்மண் ரெடியான்னு விரட்டிகிட்டே இருப்பார். பையனைப் பத்தி நாலுக்கு எட்டு பேர்கிட்ட விசாரிச்சிருப்பார். என்ன செய்ய? தலையெழுத்துன்னு ஒண்ணு இருக்கே, அச்சாணில எழுதின மாதிரி அழுத்தமா? அனுபவிச்சுதானே தீரணும்?

    அம்மாவின் பரபரப்பான பேச்சை அவள் ரசித்துக் கேட்டாள், இந்த மாதிரி வித்தியாசமான சம்பவங்களின் போது தான் மனிதனின் நிஜமான தன்மை வெளியே வருகிறது என்று நினைத்துக் கொண்டாள். பொதுவாக அமைதியான பெண்மணியாகத் தோற்றமளித்தாலும், உண்மையில் அம்மா வேகமான உணர்ச்சிகள் நிறைந்தவள்தான் என்று தோன்றியது.

    கல்பனா.

    சொல்லும்மா...

    டென்ஷனா இருக்கா?

    டென்ஷனா? எதுக்கும்மா?

    என்னம்மா இப்படி கேக்கறே...! இது ஒரு முக்கியமான நாளில்லையா? பொண்ணு பாக்க ஒருத்தன் வரப்போற நாள்... டென்ஷன் இல்லாம எப்படி இருக்கும்? எனக்கே பரபரன்னு இருக்கே...

    டென்ஷன்னெல்லாம் ஒண்ணும் இல்லே... லேசா படபடப்பு இருக்கு... எ ஸ்மால் எக்ஸைட்மென்ட்...

    அதுக்குப் பேர்தான் டென்ஷன் ஒரே வார்த்தைல... அம்மா கலகலவென்று சிரித்தாள். சரி... ஒரு கேள்வி கேக்கணும் உன்னை... தப்பா நெனைக்கமாட்டியே?

    இந்தக் கேள்வியத்தான் தப்பா நெனைப்பேன்...

    சரி... அம்மா டம்ளரை வைத்து விட்டு முன் பக்கமாக சாய்ந்து கொண்டாள். "எல்லாப் பொண்ணுங்களையும் போல புடவை, நகை, சினிமான்னு இருக்கறவ இல்லே என் பொண்ணுன்னு தெரியும் எனக்கு... நெறைய படிக்கிறவ... அமைதியா சிந்திக்கிறவ... கருணையான மனசு இருக்கிறவ... எதைச் செஞ்சாலும் அர்த்தமும் அழகும் இருக்கணும்னு நினைக்கிறவ... ஆனா கல்பனா இந்த கல்யாணம்

    Enjoying the preview?
    Page 1 of 1