Aagamiya Karma Part - 2
By Shyam
()
About this ebook
வீராவின் வேட்டை ஆரம்பம்.....
Read more from Shyam
Aagamiya Karma Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsThoovanam Rating: 0 out of 5 stars0 ratingsSparishangal Puthithu Rating: 0 out of 5 stars0 ratingsErithazhal Rating: 0 out of 5 stars0 ratingsMee Yaazh Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Saaral Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aagamiya Karma Part - 2
Related ebooks
Nathi Engey Pogirathu...? Rating: 4 out of 5 stars4/5Mullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsNeengatha Ninaivugal... Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Saaral Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen... Kaatriniley... Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Miss. Preethi, 545, Beach Road, Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Ottraiyadi.. Paathaiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsVilagava Pazhaginom? Rating: 0 out of 5 stars0 ratingsEn Manathu Ondruthaan..! Rating: 4 out of 5 stars4/5இரும்பு கனவுகள் Rating: 0 out of 5 stars0 ratingsUnmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kanavugal Rating: 5 out of 5 stars5/5Vasanthathil Or Naal... Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAmmamma.. Keladi Thozhi...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsTheansindhum Pooncholai... Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsThapithey Theeruven Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagi Kasinthurugi... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalukku Oru(th)thee Rating: 0 out of 5 stars0 ratingsMupparimanam Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Ammavukku... Rating: 0 out of 5 stars0 ratingsEthirukal Thevai Rating: 5 out of 5 stars5/5எதிரிகள் தேவை Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Aasaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsRosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Aagamiya Karma Part - 2
0 ratings0 reviews
Book preview
Aagamiya Karma Part - 2 - Shyam
https://www.pustaka.co.in
ஆகாமிய கர்மா - 2
Aagamiya Karma Part – 2
Author:
ஷ்யாம்
Shyam
For more books
https://www.pustaka.co.in/home/author/shyam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 1
பால்கனியில் நின்று... தெருமுனையை பார்த்த போது... 5,6 வீடுகளே இருந்தன... மின்விளக்குகள் இல்லாமல்... நிலவின் வெளிச்சத்தில் ஜொலித்தது அதன் ஆடம்பரம்....
ஆனால்...
எதிர்பார்த்த அந்த ஸ்கூட்டி இன்னும் வரவில்லை... வழக்கத்தை விட... இது 20 நிமிட தாமதம்... உலாவிக்கொண்டிருந்தார் மனம் இருப்பு கொள்ளவில்லை...
அறைக்குள் சென்று… மிதமான வெளிச்சத்தை கடந்து... உள் அறைக்கு சென்றவர்... தன் டேபிளில் சற்று முன்பு ஊற்றி வைத்திருந்த ஸ்காட்ச்ல் இரண்டு ஐஸ் துண்டுகளை போட்டு... க்ளாஸை பார்த்தார்... ஐஸ் தங்க திரவத்தில் மிதந்தது... எதும் கலக்காமல்... உதட்டில் வைத்து இதமாய் உள் இழுத்துக்கொண்டார்... தொண்டையை... எரித்து கொண்டே... இறைப்பையை நோக்கி சென்றது... இது நான்காவது ரௌண்ட்...
பக்கத்தில் இருந்த சீக்ரெட் பாக்கெட்டிலிருந்து ஒன்றை உருவி... உதட்டுக்கு கொடுத்தவர்... லைட்டரை தேடினார்... கண்கள் லேசான போதையில் தழும்ப... கடைசியாய்... எங்கே வைத்தோம் என்று நெற்றியை தேய்த்து கொண்டார்...
அணிந்திருந்த வெண்ணிற பைஜாமாவின் பாக்கெட்டில் ஏதோ தட்டுப்பட… ஆர்வமாய் எடுத்து... சிகரெட் முனையை பொசுக்கினார்... கசிந்த புகை முழுவதையும் நெஞ்சிக்கு அனுப்பியவர்... வேகமாக பால்கனிக்கு வந்தார்...
அவர் எட்டி பார்த்த கிழக்கு திசையிலிருந்தது வீசிய தென்றல்... வியர்வை பூத்த முகத்தை வருடிய போது... அது அவ்வளவு இதமாய் இல்லை...
திரும்பி அறைக்குள் எட்டி பார்த்தார்...
அரவம் இல்லாமல்... சுழன்று கொண்டிருந்த கடிகார முள் 9ஐ நெருங்கி கொண்டிருந்தது... சிகரட் சாம்பலை செடியின் தொட்டியில் சுண்டி விட்டவர்...
மொபைல் போனை எடுத்து... டயல் செய்தார்... சற்று ஆத்திரத்தில்... இன்னும் ஆத்திரம் கூடியது அவர் முகத்தில்... சுவிஸ்ட் ஆப்... என்ற பதில் வந்தது... மேகத்தினுள் நிலா ஊடுருவி கொண்டிருந்தது...
இனம்புரியா பதட்டம் தொற்றி கொள்ள... அலுவகத்தில் விசாரிக்கலாமே... மறுபடியும் போனை எடுத்து போது... அது கையிலேயே சிணுங்கியது... 5 இலக்க எண்கள்... நொடி பொழுது யோசித்தவர்... பச்சை பட்டனை தேய்த்து காதில் வைத்தார்... கனமான அமைதி...
சில நொடிக்கு பிறகு...
"ஹலோ...
ஹலோ... யார்... பேசுறது...?
வணக்கம் ஸார்...
எதிர்முனையில்..
கரகரபான குரலில் மரியாதை கலந்திருந்தது..
வணக்கம்... நீங்க யாரு..?
நீங்க தேடுறது உங்க பொண்ணை தானே...?
டேய்... யார்டா... நீ...?
கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்ல பழகுங்க... ஸார்...
"ஆமா என் பொண்ணு... தான்...
ஆனால்…
இன்னும் வீட்டுக்கு வரவில்லை…
நீ யார்...?"
பொண்ணு இன்றைக்கு வீட்டுக்கு வராது ஸார்...
அதை நீ ஏன் சொல்றே..?
"நான் தான் உங்க பொண்ணை கடத்தினேன்…
ஏதோ எனக்கு கடமையுணர்ச்சி... பொண்ணை காணோம் ன்னு தேடுவீங்க வேற அதான்..."
நீ யார் கிட்ட பேசுறே ன்னு தெரிஞ்சிதான் பேசுறியா...?
தெரியுமே...! என் மதிப்புக்குரிய... Mr. வாசுதேவ்… நேர்மையான அதிகாரி... தன்னை தானே நேர்மை ன்னு காட்டிக்கிறதில் பெரும் அக்கறை உள்ளவர்...
என் பொண்ணு எங்கேடா...?
வாசுதேவ்...! உங்கள் கோபம் என்னை ஒன்றும் செய்யாது... ஆனால்… உங்கள் ரத்தக்கொதிப்பு தான் இன்னும் அதிகமாகும்... இப்போதே 50 வயசு... ஸோ..
ஏன் என் பொண்னை கடத்தினாய்...? என்ன வேணும்... உனக்கு...?
கேட்டால் தர முடியுமா ஸார்...
சொல்லு தர்ரேன்...
ஹா ஹா ஹா...
எதிர்முனை சிரிக்க... ஆத்திரம் கொப்பளித்தது...
வாசு ஸார்... என்ன இவ்ளோ ஈஸியா தரேன்ன்னு சொல்லிடீங்க...? எனக்கு தெரியும் ஏன்னு… உங்கள் கடைசி வாரிசு இந்த பொண்ணு அப்டி தானே...?
டேய்... என்னை சோதிக்காதே...?
நான் சாத்தான் இல்லை... வாசு ஸார்... நான் எதிர்பார்க்கிறது வேற... அது அப்புறம் சொல்றேன்... சொல்லுங்க... உங்களை அடையாள படுத்த மிச்சமிருகிற ஒரே வாரிசு இந்த பொண்ணு... அப்டி தானே...?
வாசு பேசவில்லை... மற்றொரு சிகரெட் விரலை சுடும்... நிலையில் புகைந்து கொண்டிருந்தது...
"வாசு ஸார்...!
மனைவியை நோய்க்கு பலி குடுத்தாச்சி... முத்த பொண்ணை... மினிஸ்டர் பையனுக்கு இறையாகியாச்சி.... கடைசி பொண்ணை நான் தூக்கிட்டேன்... நான் சொல்ற தகவல் எல்லோமே சரி தானே... இன்னும் 5 மாதத்தில்... ரிடையர்ட்... அப்புறம் நீங்களும் உங்க பொண்ணும்... ஊட்டில உள்ள வீட்டில் மீதி வாழ்க்கையை அமைதியா வாழ திட்டம்... சரியா...?"
சரி தான்... சொல்லு நான் இப்போ என்ன பண்ணனும்...?
கார் சாவியை எடு...
எதுக்கு புரியல...?
சொல்றதை மட்டும் செய்யணும்... வாசு ஸார்... கேள்வி கேட்க கூடாது...
அவன் குரலில்... ஏதோ அதிகார தோனி இருந்தது... கண்கள் தனிச்சியாய் சாவியை தேடியது... அறையின் வலது கோடியில் தொங்கி கொண்டிருந்த... சாவியை பார்த்தார்... வேகமாக அதை நோக்கி நடந்தார்... எடுத்து பாக்கெட்டில் போட்டு கொண்டு... நின்றவர்...
மிதமான வெளிச்சத்தில் கருகருவென மின்னிய துப்பாக்கியை பார்த்தார்... கையில் எடுக்கும் போது எதிர்முனை கரகரத்தது...
வாசு ஸார்... புத்திசாலியா யோசிக்கும் நேரம் இது இல்லை...
நீ என்ன சொல்றே... புரியல...?
துப்பாக்கியை அங்கே வை... மிஸ்டர் வாசுதேவ்...
அவன் குரலில் ஆத்திரம்...
லேசான தடுமாற்றத்தோடு... சுற்றிலும் பார்த்தார்...
வாசு ஸார்... உன் மூளை என்ன யோசிக்கும்ன்னு எனக்கு புரியும்... நான் உன் அருகில் இல்லை... ஆனால்... உன் ஒவ்வொரு அசைவும்... என் கண் முன்னே தான் நடக்கும்... ஸோ... துப்பாக்கியை அங்கே வை... டார்ச் எடுத்துக்கோ... அது தான் உன் தேவை...
அவர் கண்களில் போதை கலந்த பீதி கலந்திருந்தது…
2 நாட்கள் முன்னே உன் வீடு புகுந்து... கேமராக்கள் பொறுத்திவிட்டேன்...
அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே... கண்கள் அலைபாய்ந்தது
வாசு... சுற்றிலும் தேட...
"ரொம்ப தேடாதே...
உன் உன் நெற்றி பொட்டின் எதிரில் பார்..."
வாசு... கண்களை கூர்மையாக்கி... பார்த்தார்... இரண்டு அடி தூரத்தில்... அலமாரியின் சிறுஇடைவெளியில்... சிகப்பு விளக்கு மின்ன... கேமரா தென்பட்டது...
ஸோ... வாசு ஸார்... இன்னும் இருபது செகண்ட் தான் டைம்... உங்கள் கார் ஸ்டார்ட் ஆகிருக்கணும்... அண்ட் அடுத்த 5 நிஷத்தில்... உங்கள் கார் மெய்ன்ரோட்டில் இருக்கணும்...
நீ என்ன சொல்றே...? மெய்ன் ரோட்டுக்கு 20 நிமிஷம் ஆகும்...
அது எனக்கும் தெரியும்... உன் பொண்ணு உயிர் என் கையில் இருக்கு... கொஞ்சம் லேட்டா வந்தால்... ஐ... ம்... ஸாரி வாசு ஸார் நான் பொறுப்பில்லை... 120 ஸ்பீட்ல வந்தால்... மெய்ன் ரோட்டை தொட முடியும்... ஸோ... கம் பாஸ்ட்...
வாசு... வேகமாக கதவை அடைத்து விட்டு... போர்டிகோவில் நின்றிருந்த காரினுள் அமர்ந்தார்... அதன் இரண்டு கண்கள் திறந்தது போல் காரின் முன் விளக்கு எரிந்தது...
காவலன் கேட்டை திறக்க... கார் சிறு குலுங்கலோடு... வெளியே வந்தது... தெருவில் யாரும் தென்பட வில்லை... காரின் வேகம் கூடியது... நாய் ஒன்று தெரித்து ஓடியது... போனை எதிரில் பொறுத்தினார்... அதில் நேரம் 12 நிமிடத்தை கடந்து ஓடிக்கொண்டிருந்தது... 10வது நிமிடத்தில் கார்... மெய்ன் ரோட்டில் நின்றது...
ஹலோ... நான் வந்துட்டேன்... சொல்லு... வலது பக்கமா இடது பக்கமா...
வெல்... மிஸ்டர் வாசுதேவ்... உங்கள் காரின் வேகத்தை வைத்து... பாசத்தை புரிந்து கொள்ள முடிகிறது...
எங்கே வரணும் அதை சொல்...
இடது பக்கம்... திரும்பு...
அண்ட்…
10 நிமிஷத்தில்... ஒரு காடு வரும்...