Thapu Thappai Oru Thappu
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thapu Thappai Oru Thappu
Related ebooks
Paathi Rajyam Rating: 0 out of 5 stars0 ratingsUyir Thirudargal Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Minnal Rating: 5 out of 5 stars5/5Kaagitha Iruthayangal Rating: 5 out of 5 stars5/5Aadatha Oonjalgal Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsIraval Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsMiss Devathai 1996 Rating: 0 out of 5 stars0 ratingsEthaiyum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsNinaithen Kondren! Rating: 0 out of 5 stars0 ratingsUdaintha Iravu Rating: 0 out of 5 stars0 ratingsOnpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsKarupu Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Inge Virkkapadum Rating: 0 out of 5 stars0 ratingsVellai Roja Karuppu Poonai Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Uyiradangu Utharavu Rating: 0 out of 5 stars0 ratingsEn Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsMaandavan Kattalai Rating: 0 out of 5 stars0 ratingsIruttuku Irandu Niram Rating: 0 out of 5 stars0 ratingsNooru Degree Thendral Rating: 0 out of 5 stars0 ratingsThaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsSandarpatthai Payanpaduthi Kol Rating: 0 out of 5 stars0 ratingsIndre Kadaisi! Rating: 0 out of 5 stars0 ratingsNillamal Odi vaa… Rating: 3 out of 5 stars3/5Uyirth Thirudargal Rating: 0 out of 5 stars0 ratingsPournamai Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsMudinthal Uyirodu Rating: 0 out of 5 stars0 ratings50kg Tajmahal Rating: 4 out of 5 stars4/5Iraththam Illatha Yuththam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Thapu Thappai Oru Thappu
0 ratings0 reviews
Book preview
Thapu Thappai Oru Thappu - Rajeshkumar
24
1
காயத்ரி...!
கோயிலினின்றும் வெளிப்பட்டு பஸ் கிடைக்குமோ... கிடைக்காதோ என்கிற கவலையோடு மயிலாப்பூர் தெப்பக்குளத்து ஓர பிளாட்பார்மில் இரண்டு பைகளைத் தூக்கிக் கொண்டு வேர்க்க வேர்க்க நடந்து கொண்டிருந்த அந்த அழகான, இருபத்து மூன்று வயதும், ஐம்பது கிலோ எடையும் கொண்ட காயத்ரி, தன் பெயரைச் சொல்லி யாரோ கூப்பிடுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.
பைக்கில் அந்த இளைஞன் தெரிந்தான். கண்களில் குளிர் கண்ணாடியும், காற்றில் சிலும்பிக் கொண்டிருந்த தலைக் கேசமும் அவனுடைய முகத்துக்கு அழகாக இருந்தது. மேலுதட்டில் கெட்டியான மீசை. காயத்ரி நின்று பார்த்ததும் அவன் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு குளிர் கண்ணாடியைக் கழற்றி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அவளை நெருங்கினான். உதட்டில் ஒரு 70 எம்.எம். புன்னகை.
நீங்க காயத்ரிதானே...?
ஆமா...
நான் யார்னு உங்களுக்குத் தெரியுதா?
ஸாரி... தெரியலை...!
கொஞ்சம் உன்னிப்பா என்னோட முகத்தைப் பார்த்து கெஸ் பண்ணி சொல்லக் கூடாதா?
காயத்ரி அவனுடைய முகத்தை தீர்க்கமாய் சில விநாடிகள் பார்த்துவிட்டு தலையாட்டினாள்.
வெரி ஸாரி... தெரியலை...!
நீங்க ரத்னசபாபதி ஹையர் செகண்டரி ஸ்கூல்ல ப்ளஸ்டூ வரைக்கும் படிச்சீங்கதானே...?
ஆமா...
நானும் அதே ஸ்கூல்லதான் படிச்சேன்... என் பெயர் சத்யநாராயணன். எல்லாரும் என்னை ‘சத்யம்... சத்யம்’ன்னு கூப்பிடுவாங்க. ஆனா நீங்க மட்டும் என்னை ‘சத்தி... சத்தி’ன்னு கூப்பிடுவீங்க. இப்ப உங்களுக்கு ஞாபகம் வந்திருக்குமே...
காயத்ரியின் கண்களில் இப்போது கூடுதல் பளபளப்பு. முகத்தில் பௌடர் பூசியது போன்ற மலர்ச்சி. உதடுகள் ஆர்வத்தில் துடித்தன.
நீங்க... அந்த ‘சத்தி’யா?
அதே... அதே...!
என்று சொல்லி அவன் வாய்விட்டுச் சிரித்தபோது கடைவாயின் மேல் வரிசையில் அதே தெற்றுப் பல் அவனை சத்யநாராயணன் என்று காட்டிக் கொடுத்தது.
காயத்ரிக்கு அவனைப் பார்க்கப் பார்க்க வியப்பில் மூச்சடைத்தது. ‘தலைக்கு நிறைய எண்ணெய் தடவிக் கொண்டு, ஈர்க்குச்சி உடம்பில், காக்கி அரை டிராயரும் வெள்ளை அரைக்கைச் சட்டையும் தொளதொளவென்று தொங்கிக் கொண்டிருந்த அந்த சத்யநாராயணனா இவன்...!’
காலம் நிச்சயம் ஒரு மந்திரக்கோல் தான். இல்லாவிட்டால் இப்படியொரு உருமாற்றம் நிகழுமா என்ன?
சத்யநாராயணன் கேட்டான்.
என்ன காயத்ரி... அப்படியே ஸ்டன் ஆயிட்டீங்க?
உங்களைப் பார்க்கப் பார்க்க எனக்கு பிரமிப்பா இருக்கு சத்தி.
உங்களைப் பார்க்கும் போதும் எனக்கும் அப்படித்தான் இருக்குது. ரெட்டை ஜடை போட்டு சின்னப்பொண்ணு மாதிரி நாலடி உயரத்தில இருந்தீங்க... இப்போ... சேலை கட்டி ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரி இருக்கீங்க... என்னால நம்பவே முடியலை...
காயத்ரி சிரித்தாள். சத்தி... எனக்கு இன்னும் கல்யாணமாகலை.
ஸாரி... சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். பை...த...பை, ஸ்கூல் ஃபைனலுக்கப்புறம் என்ன படிச்சீங்க?
படிப்புக்கு ஒரு முழுக்கு. மேற்கொண்டு நான் படிக்கலை. அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து வந்த வருஷங்களில் திடீர்னு இறந்துட்டாங்க.
சத்யநாராயணன் ஸாரி
சொல்லிவிட்டு மெல்லிய குரலில் கேட்டான்.
இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க?
காயத்ரி புன்னகைத்தாள். தன் கையில் வைத்திருந்த இரண்டு பெரிய பைகளையும் உயர்த்திக் காட்டினாள். சத்தி புருவங்களை உயர்த்தினான்.
என்ன இது...?
உள்ள என்ன இருக்குன்னு பாருங்க.
சத்தி எட்டிப் பார்த்தான். இரண்டு பைகளிலும் கட்டுக்கட்டாய் ஊதுவத்திப் பாக்கெட்டுகள். காற்றில் தாழம்பூ மணம்.
காயத்ரி! இது...?
இதுதான் என்னோட பிஸினஸ் ப்ராடக்ட். வீட்ல வெச்சு நானே தயார் பண்றேன். கோயில்களுக்கும் வீடுகளுக்கும் நேரடியாகப் போய் சப்ளை பண்றேன். இந்த பிஸினெஸ் இருக்கப் போய்தான் வயத்துப் பிரச்னை இல்லாமே நாள் சுலபமாய் ஓடுது...
சத்யநாராயணனின் முகம் மாறியிருந்தது.
காயத்ரி! நான் இதை எதிர்பார்க்கலை. பிளஸ் டூவில் நீங்க நல்ல மார்க் எடுத்திருந்தீங்க... ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சு நல்ல வேலைக்குப் போயிருக்கலாம்...
விதி சிரிக்கும் போது நாம் அழ வேண்டியிருக்கே?
சொல்லிவிட்டு வெறுமையாய்ப் புன்னகை பூத்த காயத்ரி அவனை ஏறிட்டாள்.
என்னை விடுங்க சத்தி. நீங்க எப்படி இருக்கீங்க? ஏதாவது வேலைக்குப் போயிட்டிருக்கீங்களா... இல்லை பிஸினஸா?
ரெண்டும் இல்லை...
பின்னே...?
போஸ்டிங்கை எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்...
என்ன போஸ்டிங்?
இன்ஸ்பெக்டர் போஸ்டிங். இன்டர்வியூவில் செலக்டாகி ஒரு மாசமாச்சு...
நான் இதை எதிர்பார்க்கலை சத்தி... நீங்க ஸ்கூல்ல படிக்கும் போதே ஸாஃப்ட் நேச்சர். உங்களுக்கு போலீஸ் உத்யோகம் பொருந்தாதே... ஏன்... புரொபஷனல் கோர்ஸ் படிக்கலையா?
பிடிக்கலை... போலீஸ் டிபார்ட்மென்டில் இப்போ ஒரு இன்ஸ்பெக்டரா நுழைஞ்சிருக்கேன். ரிடையராகும் போது ஐ.ஜி.யா இருப்பேன்.
காயத்ரி சேலைத் தலைப்பால் தன் நெற்றி வியர்வையை ஒற்றிக் கொண்டே கேட்டாள்.
வீட்ல அப்பா, அம்மா எல்லாரும் சௌக்கியம் தானே...?
சௌக்கியம் தான்... இப்ப அவங்க கோயமுத்தூர்ல என் பெரிய அண்ணனோடு இருக்காங்க.
உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தாளே... பேரு கூட ஹம்ஸவேணி...
கரெக்ட். ஹம்ஸவேணிக்குப் போன வருஷம் தான் கல்யாணம் நடந்தது. இப்ப கன்சீவ்ட். எட்டு மாசம். போன வாரம்தான் கோயமுத்தூர்ல சீமந்தம் நடந்தது.
கேட்கவே சந்தோஷமாயிருக்கு...
உங்களுக்கு எப்போ கல்யாணம் காயத்ரி... ஏதாவது ப்ரபோஸல் இருக்கா?
மிஸ்டர் பிரம்மாவைத்தான் கேட்கணும்...
ரொம்ப வெக்ஸா பேசறீங்க. இஃப் யூ டோண்ட் மைண்ட்... நாம ரெண்டு பேரும் அந்த ரெஸ்டாரண்டுக்குப் போய் கூல்டிரிங்ஸ் ஏதாவது சாப்பிடலாமா?
ஸாரி சத்தி... இன்னிக்கு ஸோமவாரம். நான் விரதம். ராத்திரி வீட்டுக்குப் போய்தான் தண்ணியே சாப்பிடுவேன்...
"வெய்யில்ல அலையற வேலை. இதுல விரதம் வேற இருக்கணுமா?
அம்மா கிட்டயிருந்து கத்துக்கிட்டது. விட முடியலை. சோமவாரம் மட்டும் இல்லை... பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் இது மாதிரியான நாட்களிலும் விரதம்தான்.
வீடு எங்கே?
கோகுலம் காலனியில்.
ராயப்பேட்டையில் இருக்கே... அந்த கோகுலம் காலனியா?
ஆமா.
உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா சரியான அட்ரஸைச் சொல்லலாமே... ஒரு நாளைக்கு வீட்டுக்கு வந்து பார்க்க வசதியாய் இருக்கும்.
காயத்ரி பதில் பேசாமல் மௌனிக்க... சத்யநாராயணன் படபடத்தான். உங்களுக்கு பிராப்ளம் இருந்தா வேண்டாம். நான் கொஞ்சம் அதிகப்படியா உரிமை எடுத்துக்கறேனா...?
நோ... நோ...! அப்படியில்லை. கோகுலம் காலனியில் வாட்டர் டேங்குக்குப் பக்கத்தில்தான் வீடு. ஊதுவத்தி காயத்ரியோட வீடு எதுன்னு கேட்டா காலனியில் இருக்கிற எல்லார்க்கும் தெரியும்.
ஏதாவது ஒருநாள் உங்க வீட்டுக்கு வரலாமில்லையா?
வரலாம்.
இந்தாங்க... என்னோட விசிட்டிங் கார்டு.
இது எதுக்கு?
நீங்களும் ஒரு நாளைக்கு என்னோட வீட்டுக்கு வரலாம் இல்லையா? அடையார் இந்திரா நகர்ல ஏழாவது தெரு முதல் வீடு.
அந்த ஏரியாவில் ஊதுவத்தி விக்க வந்தால் சேல்ஸ் எப்படியிருக்கும்?
நான் கான்வாஸ் பண்ணிக் கொடுக்கிறேன். நீங்க வாங்க...
காயத்ரி சிரித்தாள்.
ஓகே சத்தி... உங்களைப் பல வருஷம் கழிச்சு எதிர்பாராத விதமா சந்திச்சதுல எனக்கு பெரிய சந்தோஷம். உங்களுக்குச் சீக்கிரமே இன்ஸ்பெக்டர் உத்தியோகத்துக்கு போஸ்டிங் வர என்னுடைய வாழ்த்துக்கள். நான் வரட்டுமா? இன்னிக்கு மந்தவெளி ஏரியாவில் வீடு வீடாய் என் வியாபாரம்.
சொல்லிவிட்டு இரண்டு பைகளையும் கைக்கு ஒன்றாய் தூக்கிக் கொண்டு தளர்வாய் நடந்து போகும் காயத்ரியை இமைக்காமல் பார்த்தான் சத்யநாராயணன். அவனுடைய இருதயம் ஈயக் குண்டாய் கனத்தது.
உச்சந்தலையில் வெய்யில் பட்டு அமிலமாய்த் தகிக்க, காயத்ரி அதைப் பொருட்படுத்தாமல் ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத அந்தச் சாலையில் மெதுவாய் நடைபோட்டு மரங்கள் சூழ்ந்த பங்களாவுக்கு முன்பாய் வந்து நின்றாள்.
காம்பௌண்ட் கேட் வெறுமனே சாத்தியிருந்தது. கேட்டை எட்டிப் பார்த்து,ஸார்... ஸார்...
என்று குரல் கொடுத்தவள், பதிலுக்கு யாரும் வராமல் போகவே, கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனாள். சுற்றும் முற்றும் பார்த்தாள்.
‘நாய் ஏதாவது இருக்கிறதா?’
இல்லை.
போர்டிகோவை நோக்கி நடந்தாள். ஒரே பிரசவத்தில் பிறந்த மாதிரி இரண்டு மாருதி கார்கள் போர்டிகோவில் நின்றிருந்தன. கார்களைச் சுற்றிக் கொண்டு நிலைப்படிகளில் ஏறியவள், தேக்குமரக் கதவுக்கு இடப்பக்கமாய் இருந்த காலிங் பெல் ஸ்விட்ச் மேல் கையை வைத்தாள். அது உள்ளே ஒரு மியூசிக் நோட் பாடியது.
தொடர்ந்து கதவு திறக்கப்படும் சத்தம்.
நடுத்தர வயதுள்ள ஒரு நபர் லுங்கி, பனியனில் நின்றிருந்தார். மீசையும், கிருதாக்களும் டையில் குளித்து அதிகப்படியான கறுப்பைக் காட்டின. கேட்டார்: என்ன?
ஊதுவத்தி ஸார்... வீட்லயே தயார் பண்றோம்.
வேண்டாம்... போம்மா...
என்று சொன்னவர் சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டவர்- மெல்லிய குரலில் கேட்டார்.
வெளியே கடைகளில் விக்கிற ஊதுவத்திக்கும், நீ விக்கிற ஊதுவத்திக்கும் என்ன வித்தியாசம்...?
கடைகளில் விக்கிற ஊதுவத்திகளில் கெமிக்கல் கலந்து இருக்கும் ஸார். நாங்க தயார் பண்ற ஊதுவத்திகளில் கெமிக்கல் இருக்காது. ரெண்டு பத்தி கொளுத்தி வெச்சாலே போதும். பனிரெண்டு மணி நேரத்துக்கு வாசனை இருக்கும்.
அப்படியா... உள்ளே வந்து ரெண்டு பத்தி கொளுத்தி வை பார்க்கலாம். வாசனை நல்லா இருந்தா வாங்கிக்கறேன்.
வீட்ல லேடீஸ் இல்லையா ஸார்...?
உள்ளே சமையல் கட்டில் வேலையாய் இருக்காங்க.
காயத்ரி ஊதுவத்திப் பைகளோடு உள்ளே போனாள். பெரிய ஹால். இரண்டு ஊதுவத்திகளைக் கொளுத்தி ஃப்ளவர் வாஸுக்குக் கீழே வைத்தாள். புகை காற்று மண்டலத்தில் கலந்து வாசனையைப் பரப்பியது.
அந்த நபர் மூச்சை இழுத்தார்.
வாசனை நல்லாத் தான் இருக்கு... பாக்கெட் என்ன விலை?
ஒரு பாக்கெட் பத்து ரூபா ஸார்.
சரி... பாக்கெட்டுக்கு ரேட் சொல்லிட்டே... உனக்கும் ஒரு ரேட் இருக்குமே... அதைச் சொல்லு... ரெண்டு பிசினஸையும் முடிச்சுக்கலாம்...
ஸ... ஸார்!
பயப்படாதே... வீட்ல யாரும் கிடையாது.
காயத்ரி புன்னகைத்தாள்.
வீட்ல யாரும் இல்லைன்னு எனக்கும் தெரியும் ஸார். அதனால்தான் வந்தேன்...
சொன்ன காயத்ரி, ஊதுவத்திப் பாக்கெட்டுகள் நிரம்பிய பைக்குள் கையை நுழைத்து உள்ளேயிருந்து- இறுகிப் போன முகத்தோடு -ஸ்லோமோஷனில் கனமான அந்த ரிவால்வரை எடுத்தாள்.
2
காயத்ரியின் கையில் முளைத்த துப்பாக்கியைப் பார்த்ததும் அந்த நபரின் கண்கள் திகிலில் திகைத்து விரிந்தன. பதற்றமாய்ப் பின்வாங்கி நடந்து சுவர்க்குப் போய் முட்டிக் கொண்டு நின்றார்.
ஏ... ஏய்... என்ன இது...?
புன்னகையைப் பெரிதாக்கிய காயத்ரி, தன் கையில் இருந்த துப்பாக்கியை சுவர்க்கு உயர்த்திக் காட்டினாள். "இது ஜி -மேக் ரிவால்வர். ஜெர்மனி இதோட பிறந்த வீடு.