'Gopu'win Palli Vazhkai Anupavangal
()
About this ebook
திருச்சியில் இயங்கி வரும், பொதுத்துறையின் 'மஹாரத்னா' நிறுவனமாகிய B.H.E.L. (BHARAT HEAVY ELECTRICALS LIMITED) இல் நிதித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள V. Gopalakrishnan ஆகிய இவர், 'வை. கோபாலகிருஷ்ணன்'என்றும், 'கோபு' என்றும், 'VGK' என்றும் எழுத்துலகில் அறியப்பட்டுள்ளார்.
2005-இல் இவர் 'தாயுமானவள்' என்ற தலைப்பினில் எழுதிய முதல் சிறுகதை, தினமலர் நிறுவனர் அமரர் T.V.R. நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத்தேர்வாகி, தினமலர்-வாரமலரில் வெளியாகி, இவரை எழுத்துலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது.
அதன்பிறகு இதுவரை தமிழில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியுள்ளார். 2005 முதல் 2010 வரை இவரின் பல படைப்புகள் தமிழின், பல பிரபல வார / மாத இதழ்களில் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளன.
02.01.2011 முதல் தனக்கென்று ஓர் தனி வலைத்தளத்தினை [ gopu1949.blogspot.in ] ஏற்படுத்திக்கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 800 க்கும் மேற்பட்ட பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.
இவரின் வலைத்தளப் பதிவுகளையும், அவைகளுக்கு பிற வாசகர்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கைகளையும், அவை ஒவ்வொன்றுக்கும் இவர் பொறுமையாகக் கொடுத்துள்ள விரிவான பதில்களையும் பார்த்தாலே, இவரின் வாசகர் வட்டம் மிகப் பெரியது என்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது.
2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, பெரும் பொருட்செலவில், இவர் தனியொரு மனிதனாக முயன்று, தன் வலைத்தளத்தினில், தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு, மிகவும் வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ள 'சிறுகதை விமர்சனப் போட்டிகள்' http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html வலையுலக எழுத்தாளர்களிடையே இன்றும் மிகவும் புகழ்ந்து பாராட்டிப் பேசப்பட்டு வரும் மாபெரும் சரித்திர சாதனையாகும் என்பதில் ஐயமில்லை.
இது வரை இவர் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த மூன்று நூல்களுமே, வெவ்வேறு மிகச்சிறந்த இலக்கிய அமைப்புகளால், தேர்வு செய்யப்பட்டு, இவருக்குப் பொன்னாடை, பொற்கிழி, பரிசுகள், விருதுகள் என அளித்து கெளரவிக்கப் பட்டுள்ளன. http://gopu1949.blogspot.in/2011/07/4.html
மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருமான இவரின் தமிழ் ஆக்கங்களில் பலவும் கன்னடம், ஹிந்தி போன்ற வேற்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பிற மாநிலங்களிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்திகளாகும்.
சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வெளிநாட்டுப் பயணங்கள், வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள், ஆன்மிகம், நாடகங்கள், நகைச்சுவை, பிறரின் நூல் அறிமுகங்கள், தந்திரக் கணக்குகள், கைவேலைத் திறமைகள், ஓவியம் என அனைத்திலும் கலக்கி வரும் இவர் இருமுறை தேசிய விருது பெற்றுள்ளதுடன், அகில இந்திய அளவிலும், உலகளவிலும் நடைபெற்றுள்ள சில போட்டிகளிலும் கலந்துகொண்டு நிறைய பரிசுகளும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் படைப்புகளில் பலவற்றை மின்னூல் வடிவில் கொண்டுவர இருப்பதில், நம் 'புஸ்தகா மின்னூல் நிறுவனம்' மிகவும் பெருமை கொள்கிறது.
Read more from V. Gopalakrishnan
‘Gopu’win Sirapana Kathaigal Collection 5 Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 4 Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 3 Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Nadaka Aakkam Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Chinna Chinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 1 Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 2 Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win kuttiyondu Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings'Gopu'win Pokishangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to 'Gopu'win Palli Vazhkai Anupavangal
Related ebooks
Engey Naanendru Thedattum Ennai..! Rating: 0 out of 5 stars0 ratingsVichuvukku Kadithangal Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னை நானறிவேன்… Rating: 0 out of 5 stars0 ratingsYen Eppadi Rating: 5 out of 5 stars5/5Kaadhal Rosavey Rating: 0 out of 5 stars0 ratingsJeevan Rendum Sernthathey... Rating: 0 out of 5 stars0 ratingsNesathil Nanaintha Nenjangal Rating: 5 out of 5 stars5/5Ner Kaanalgal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsBhama Gopalanin Sinthanai Chitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Naan Santhithen Rating: 0 out of 5 stars0 ratingsஅழகே வா... அருகே வா... Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Kana Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsRayil Vandi Rating: 0 out of 5 stars0 ratingsNalla Manam Vaazhga Rating: 0 out of 5 stars0 ratingsThalaiyali Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Appavai Azhaithu Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsAppa Ennai Mannichuduppa Rating: 0 out of 5 stars0 ratingsUllean Amma Rating: 0 out of 5 stars0 ratingsKanavu En Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsIvvalavuthana Nee? Rating: 0 out of 5 stars0 ratingsOviyam Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Kutram Rating: 0 out of 5 stars0 ratingsUzhaithean Uyarnthean Rating: 4 out of 5 stars4/5Kal Vaazhai Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Thanga Thaamarai Penney! Rating: 0 out of 5 stars0 ratingsPesu Thendrale! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for 'Gopu'win Palli Vazhkai Anupavangal
0 ratings0 reviews
Book preview
'Gopu'win Palli Vazhkai Anupavangal - V. Gopalakrishnan
http://www.pustaka.co.in
‘கோபு’வின் பள்ளி வாழ்க்கை அனுபவங்கள்
‘Gopu’win Palli Vazhkai Anupavangal
Author:
வை. கோபாலகிருஷ்ணன்
V. Gopalakrishnan
For more books
http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-1
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-2
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-3
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-4
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-5
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-6
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-7
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-8
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-9
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-10
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-11
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-12
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-13
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-14
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-15
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பகுதி-1
பெருங்'குடி' மகன்களையும், 'குடி'வெறியர்களையும், அந்தக்குடிப்பழக்கம் மறக்க இப்போதெல்லாம் மன நோய் மருத்துவ மனைகளுக்குக் கூட்டிச் சென்று ஏதேதோ வைத்தியம் செய்கிறார்கள்.
அந்தக்காலத்தில் நான் என் குடியை மறக்கவே என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்களாம்.
ஆமாங்க, நாலு வயது வரை நான் குடித்துக்கொண்டே இருப்பேனாம், தாய்ப்பாலை.
நாலு வயது முடிந்ததும், ஐந்து வயது முடிந்து விட்டதாகச் சொல்லி என்னை முதல் வகுப்பில் [First Standard] கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்களாம், மிகமுக்கியமாகத் 'தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தவே'.
இப்போது போல பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். LKG UKG எல்லாம் வராத காலம் அது. மிகச்சுலபமாக ஆரம்பப்பள்ளிகளில் First Std. அட்மிஷன் கிடைத்த பொற்காலம். 5 வயது நிரம்பி விட்டதாக வாயால் சொன்னால் போதும். உடனே பள்ளிகளில் முதலாம் வகுப்பில் மிகச் சுலபமாகச் சேர்த்துக் கொள்வார்கள்.
வாத்யாராகப் பார்த்து உத்தேசமாக நமக்கென ஓர் பிறந்த தேதியை நிர்ணயித்து அதை பள்ளி ரிஜிஸ்டர்களில் பதிவு செய்து விடுவார். அதற்கும் நாம் பிறந்த சரியான தேதிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருக்காது.
அந்த வாத்யாரோ அல்லது தலைமை ஆசிரியரோ நிர்ணயிக்கும் தேதியே கடைசிவரை நம் தலையெழுத்தை நிர்ணயிக்க எல்லா இடங்களிலும் உதவும். என் வயது இது போல 10 மாதங்கள் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது நாலு வயதும் இரண்டு மாதங்களும் மட்டுமே முடிந்திருந்த எனக்கு ஐந்து வயது முடிந்து விட்டதாக பதிவு செய்து விட்டனர். 10 மாதங்கள் என் வயதைக் கூட்டி விட்டனர்.
அவர்களாகவே என் பிறந்த நாள் என்று முடிவு செய்த நாள், என் தாயாரின் கர்பத்தில் நான் ஜனித்த நாளாக இருக்கலாம் என பிற்காலத்தில் நானே என்னை சமாதானம் செய்து கொண்டேன்.
அதன் பலனாக 10 மாதங்கள் முன்பாகவே நான் பணி ஓய்வு பெற்று வரும்படியாக ஆகிவிட்டது. 10 மாதச்சம்பளம் + போனஸ் + மற்ற சலுகைகள் என சுமார் ஆறு லட்சங்களுக்கு மேல் நஷ்டமானது ...... சமீபத்தில் 2009-ம் ஆண்டில்.
பெரும்பாலும் நவராத்திரி சமயம் 'விஜயதஸமி' என்ற நல்ல நாளில் நெல்லைப்பரப்பி அதில் பள்ளி ஆசிரியர் குழந்தையின் விரலைப் பிடித்துக்கொண்டு 'ஓம் நமோ நாராயணாய நம:' என்று ஏதோ வாயால் சொல்லச் சொல்லி, நெல்லின் மேல் எழுத வைப்பார்கள். பிள்ளயார் சுழி போட வைத்து, பிறகு முதல் எழுத்தான 'அ' என்பதை ஒரு பத்து முறை எழுத வைப்பார்கள். அத்தோடு சரி.
சிலேட் என்று ஒரு சிறிய கரும்பலகை அதன் இரண்டு பக்கங்களிலும் பாடங்கள் எழுதுவதற்கு தோதாக இருக்கும். அதில் எழுத 'பல்பம்' எனப்படும் 'சிலேட்டுக்குச்சி' என்று ஒன்று உண்டு.
அதாவது சாக்பீஸ் என்ற தடித்த எழுதுகோல் குட்டி போட்டது போல இருக்கும் இந்த பல்பம் என்கிற சிலேட்டுக்குச்சி. சாக்பீஸ் போல பட்டை அடிக்காது. கூர்மையாக சிலேட்டில் எழுத செளகர்யமாக இருக்கும்.
இந்த சிலேட் என்ற கரும்பலகையில் இரண்டு விதமானவைகள் உண்டு. ஒன்று கல்லு சிலேட், மற்றொன்று தகர சிலேட்டு. கல் சிலேட் கனமாக இருக்கும். காலில் தப்பித்தவறி விழுந்து விட்டால், கால் நகம் பெயர்ந்தோ கருரத்தம் குழம்பியோ போய் விடும். அதே நேரம் கீழே தப்பித்தவறி விழுந்த, கல் சிலேட்டும் உடைந்து போகும்.
தகர சிலேட் அது போல இல்லாது Weightless ஆக இருக்கும். எவ்வளவு முறை கீழே போட்டாலும் தகர சிலேட்டின் எழுதும் பகுதி மட்டும் உடையவே உடையாது. ஆனால் இதில் எழுதியவற்றை தண்ணீரில் ஊறிய துணி இல்லாமல் அழிக்க முடியாமல் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இரண்டு சிலேட்டுகளிலுமே கீழே போடப்போட, சிலேட்டைச்சுற்றி போடப்பட்டிருக்கும் மரச்சட்டம் [FRAME] தனியாக பிரிந்து வந்து விடுவதும் உண்டு.