Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Punnagai Minnalgal
Punnagai Minnalgal
Punnagai Minnalgal
Ebook280 pages21 minutes

Punnagai Minnalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நகைச் சுவை என்பது - மகிழ்ச்சியில் பிறப்பது மட்டுமல்ல. அது மகிழ்ச்சியையும் பிரசவிக்கிறது! சிரிக்கவே சிரிக்காத மனிதனும் உண்டோ வாசியுங்கள் புன்னகை மின்னலைக் காண...

Languageதமிழ்
Release dateAug 19, 2023
ISBN6580167409996
Punnagai Minnalgal

Related to Punnagai Minnalgal

Related ebooks

Related categories

Reviews for Punnagai Minnalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Punnagai Minnalgal - Karadikulam Jeyabharathypriya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புன்னகை மின்னல்கள்

    (நகைச்சுவைத் துணுக்குகள்)

    Punnagai Minnalgal

    Author:

    கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா

    Karadikulam Jeyabharathypriya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/karadikulam-jeyabharathypriya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    புன்னகை மின்னல்கள்

    1-min

    இந்தத் தெரு முழுக்க, திருடங்கதான் குடியிருக்காங்க போலிருக்கு...!

    எதை வச்சு சொல்றே...?

    பாரேன். கூடை நிரம்ப முகமூடிகளை குவிச்சு வச்சு ‘மூகமூடி வாங்கலையோ... முகமூடின்னு…’ ஒருத்தர் வித்துட்டுப் போறதை...!

    ***

    D:\pic\2-min (1).jpg

    நடிகை லண்டனுக்குப் போயிருக்காங்களே, என்ன விசேஷம்...?

    அங்கேயும் ஒரு ‘டைவர்ஸ் கேஸ்’...!

    ***

    3-min

    உங்க படம் ஓடற தியேட்டர்ல நூறு ரூபா லஞ்சம் கொடுத்தாதான் கேட்டைத் திறந்துவிடறாங்களாமே அவ்வளவு கூட்டமா...?

    ஊஹூம்… படத்தோட அறுவை தாங்காம வெளியில ஓ‌டி‌வர்றவங்க பத்து ரூபாய் கொடுத்தாதான் கேட்டை திறந்து விடறாங்களாம்..!

    ***

    4-min

    ஏன்யா இவ்வளவு லேட்டு...?

    ரயில் வரலை சார்...!

    ரயிலா... நம் ஊருக்கு ஏதுய்யா ரயில்...?

    அது தெரியாமத்தான் சார் ரொம்ப நேரமா காத்திருந்துட்டு, ரயில் இல்லேன்னு தெரிஞ்சதும் பஸ்ல வாரேன்...!

    ***

    5-min

    போலீஸ்காரங்களெல்லாம் பதறி அடிச்சுட்டு ஸ்டேஷனைவிட்டு வெளியில ஓடி வந்துட்டாங்களே... ஏன் சார்...?

    உள்ளே இருக்கிற துப்பாக்கிகளில் ‘வெடிகுண்டு’ வெச்சிருக்கிறதா யாரோ போனில் மிரட்டினாங்களாம்...!

    ***

    6-min

    நான் கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தியைக் காதலிச்சது என் சம்சாரத்துக்குத் தெரிஞ்சுபோச்சு...!"

    ஐயயோ... அப்புறம்...?

    ‘அவ அதிர்ஷ்டசாலின்னு’ அவ மேல இவளுக்கு ஒரே பொறாமை போ...!

    ***

    7-min

    அட, என் சம்சாரம் டீச்சருன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க...?

    ‘சாக்பீஸாலேயே’ வாசல்கோலம் போட்டு இருக்கிறதை வச்சுத்தான்.

    ***

    8-min

    இதுக்கு முன்னாடி உங்களுக்கு எப்பவாவது மயக்கம் வந்திருக்குதா...?

    ஆமாங்க டாக்டர், போன தடவை நீங்க ‘பில்’ தந்தீங்களே... அப்ப ஒரு தடவை நான் மயங்கி விழுந்துட்டேன்.

    ***

    44-min

    அந்த படத்தில் ‘கர்ப்பிணியா’ எப்படி அவ்வளவு இயற்கையா நடிச்சீங்க...?

    முதலிரவுக்காட்சியும் ரொம்ப இயற்கையா அமைஞ்சதுனாலதான்...!

    ***

    10-min

    வீட்டுக்காரன்: அடப்பாவீ... எல்லாத்தையும் கொள்ளை அடிச்சுட்டுப் போறியே... நீ உருப்படுவியா...?

    திருடன்: ஙே... இப்பிடித்தானே, எல்லாத்தையும் நீ அடிச்சுட்டு வரும்போது உன் மாமனாருக்கு இருந்திருக்கும்...!

    ***

    11-min

    ஆரோக்கியமான வாழ்வுக்கு குறைஞ்சது பத்து மணி நேரமாவது தூங்கணும் சார்...!

    அடடா… எனக்கு ஆபீஸ் எட்டு மணி நேரம்தானே... என்ன பண்றது...?

    ***

    12-min

    தினமும் ஒரு மனுவைத் தூக்கிக்கிட்டு கலெக்டர் ஆபீஸ் வந்துடறியே... உன் பேரென்ன...?

    ‘மனு’ சாமிங்க...!

    ***

    13-min

    இந்த வருஷம் தீபாவளியை எப்படிக் கொண்டாடப்போறீங்க...?

    போன வருஷம் மாதிரிதான்.

    போன வருஷம் எப்பிடி கொண்டாடினீங்க...?

    கடன் வாங்கித்தான்...

    ***

    14-min

    பேச்சாளர்: "ஆகவே காங்கிரஸ்,பாஜக, திமுக, அதிமுக ,கம்யூனிஸ்ட், பா.ம.க. ஆம்ஆத்மி, திரிணாமுல் ஆகிய எல்லாகட்சிகளும் ஒரேயணியில் திரண்டு தேர்தலில் நின்றால்தான் மத்தியில் நிலையானதொரு ஆட்சி அமையும் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1