Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kizhakku Thodarchi Kolaigal
Kizhakku Thodarchi Kolaigal
Kizhakku Thodarchi Kolaigal
Ebook107 pages46 minutes

Kizhakku Thodarchi Kolaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தொடர்ச்சியாக கொலைகள் மட்டுமே நடைபெறும் எஸ்டேட் பங்களா வீடு. குப்தாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் மரணம், எப்படி நடக்கிறது? யார் இதற்கு காரணம்? எதனால் இந்த தொடர் கொலைகள், என்று போலீசாருக்கே சவால்விடும் கொலையாளிகள். இறுதியில் கொலையாளிகளை பிடித்துவிட்ட போலீசாருக்கு அவர்கள் சொல்லிய பதில்கள் வியப்பை அளித்தன. அந்த வியப்பிற்கான காரணம் என்ன? எதற்காக தொடர் கொலைகள் நடந்தன? வாசித்து தெரிந்துகொள்வோம்…

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580100906670
Kizhakku Thodarchi Kolaigal

Read more from Pattukottai Prabakar

Related to Kizhakku Thodarchi Kolaigal

Related ebooks

Related categories

Reviews for Kizhakku Thodarchi Kolaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kizhakku Thodarchi Kolaigal - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    கிழக்குத் தொடர்ச்சி கொலைகள்

    Kizhakku Thodarchi Kolaigal

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    தொடர் நினைவுகள்

    அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். சுகம். சுகமா?

    தமிழகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பகுதி - நீலகிரி மலைப் பிரதேசம். அது சுமந்திருக்கும் அத்தனை சின்ன, பெரிய ஊர்களும் இஷ்டமே. கோயமுத்தூர் வரை சென்றுவிட்டால் நிச்சயமாக ஊட்டிப் பயணம் இருக்கும். என் பிரிய நண்பன் அங்கே இருப்பது பயணத்தின் இரண்டாம் காரணம்தான். பஸ்சில் ஜன்னலோர சீட் கிடைக்காவிட்டால் அந்த பஸ்ஸைத் தவறவிட்டு அடுத்த பஸ்சுக்குக் காத்திருப்பேன்.

    மனசில் எத்தனையோ பாரங்கள், பிரச்சனைகளை அடித்துத் துரத்திவிட்டு இனிமையை மட்டும் அமர்த்தி வைக்கும் மௌன இயற்கையின் வெவ்வேறு இதமான வடிவங்களைக் கண்டு, உணர்ந்து அறியாதவர்கள் உண்மையில் வருத்தப்பட வேண்டியவர்தான்.

    உயர்ந்த, உரமான மலைகளும், குன்றுகளும் எத்தனைப் பெரிய மனிதனின் ஈகோவையும் மண்டையில் சுத்தியல் வைத்தடித்துத் தகர்க்கும். பசுமை காட்டும் இதமும், பள்ளத்தாக்கு காட்டும் பயங்கரமும் முடிகளை சல்யூட் அடிக்கச் செய்யும்.

    அதனால்தான் எனக்கு நீலகிரி பிடிக்கும்.

    அதனால்தான் என் அதிகமான நாவல்களின் சம்பவங்கள் இங்கே நடக்கின்றன.

    கிழக்குத் தொடர்ச்சிக் கொலைகளும் - இங்கே இந்த மலைமேல் உள்ள ‘கேத்தி’யில்தான் நடக்கின்றன. ராணி முத்து இதழில் நாவலாக வெளிவந்து இப்போது மயிலவன் பதிப்பகத்தாரின் ஆர்வத்தில் உங்கள் கைகளில் படுத்திருக்கிறது - கிழக்குத் தொடர்ச்சிக் கொலைகள்.

    இனி... நீங்கள் தொடர்ந்து கொல்லலாம் - ஸாரி - கொள்ளலாம்.

    30, தலையாரித் தெரு,

    பட்டுக்கோட்டை.

    ஊட்டியிலிருந்து

    திரும்பிய தினம்,

    ஜுலை, 85.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    1

    மலர்கள் நனைந்திருந்தன.

    பனி, விதவைக்கான ஆடையை நெய்து கொண்டிருந்தது.

    தவளைகள் கச்சேரிக்கு முன்னால் கணைத்துக்கொண்டன.

    வெளிச்சம் தலைமறைவாகிவிட்டது.

    விரிக்கப்பட்ட கத்திரிக்கோல்போல கைகளையும், கால்களையும் பரப்பிக்கொண்டு அவன் கிடந்தான்.

    மண்டையிலிருந்து இன்னும் இரத்தம் புறப்பட்டு ஈரமான மண் தரையில் கொட்டி பரவிக்கொண்டிருந்தது.

    அவனிடம் முனகல் இல்லை. ஏனென்றால், வலி இல்லை. ஏனென்றால், மூச்சு இல்லை.

    ஐந்து நிமிடத்திற்கு முன்னால் அந்த தலையின் உள்ளே மூளை நாளைய திட்டம் ஒன்றை யோசித்திருக்கும். நாளைக்கு ஊருக்குப்பணம் அனுப்பணும். நாளைக்கு சவரம் செய்து கொள்ளணும். நாளைக்கு தையல் கடையலிருந்து சட்டை வாங்கணும். நாளைக்கு சர்ச்சுக்குப் போகணும். நாளைக்கு சினிமா பார்க்கணும். நாளைக்கு... நாளைக்கு...

    இப்போது...

    நீர்க்கொண்டை போட்ட அரையடி உயர புல் சுற்றிலும் சிணுங்க, அந்த பங்களாவின் பின்புறத்தில் அனாதையாய் கிடந்தான், அவன்.

    தவறு - கிடந்தது அது!

    2

    இப்போது உங்களின் ஐந்து பொன் நிமிடங்களை செலவு செய்து, சில குப்தாக்களை அறிந்து கொள்கிறீர்கள். அப்புறம் நாம் மலையேறுகிறோம். நம் தேசத்தை ஆண்ட குப்த வம்சத்து நபர்கள் இல்லை; இனி ஒரு நூறு பக்கம் நடமாடப்போகிற நம்மவர்கள். அழுக்கு இருந்தால் கழுவிவிட்டு கைகுலுக்கத் தயாராகுங்கள்.

    மோகன்ராம் குப்தா:

    இவர் பெயர் மட்டும்தான் அடிக்கடி வரும். புதைத்த இடத்தின் மேலே முக்காலடிக்குப் புல் இருக்கிறது. வாழ்ந்த போது இவரது கால்களை ஒரு குதிரையின் இந்தப் பக்கத்திலும், அந்தப் பக்கத்திலும்தான் அதிகமாகப்பார்க்க முடியும். துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு டொகடக், டொகடக் என்று குதிரையை விரட்டிப்போய்... எல்லா பறவைகளையும் சுட முயற்சி செய்து ஆண்டுக்கு இரண்டு தடவை வெற்றி பெற்றிருக்கிறார்.

    இவரது பங்களாவில் கூடத்தின் ஓரத்தில் மாடிப்படி தொடங்கி இரண்டு கிளைகளாகப் பிரிகிற இடத்தில் பத்தடிக்கு மூன்றடி அளவில் உங்களைப் பார்த்துச்சிரிப்பார். அப்புறமாக கதவைத் தட்டிவிட்டு பங்களா உள்ளே போகலாம்.

    கணேஷ் குப்தா:

    ஒட்டடை மாதிரி லேசாய் ஒரு தாடி இருக்கிறது. கண்களுக்கு அடியில் கருவளையங்கள் உண்டு. நீண்ட நாளாய் சீப்புக்கும், தலைக்கும் பேச்சுவார்த்தை இல்லை. பிடித்தபாடல், உலகே மாயம்... வாழ்வே மாயம்...

    போன ஆண்டு தீயைச் சுற்றிவந்து சேர்த்துக் கொண்ட... அய்யே, இவ்வளவா வெக்கப்படுவாங்க? என்று முகத்தை மூடின கரங்களைப் பிரித்து இதழ்களில் தொட்டுக்கொண்ட... மனைவியை நான்காம் மாதமே ரெயில்

    Enjoying the preview?
    Page 1 of 1