Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Naanalla...
Naan Naanalla...
Naan Naanalla...
Ebook292 pages1 hour

Naan Naanalla...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Naan Naanalla...

Read more from Rajeshkumar

Related to Naan Naanalla...

Related ebooks

Related categories

Reviews for Naan Naanalla...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Naanalla... - Rajeshkumar

    19

    1

    கமிஷனர் கணேசபாண்டியன் டெலிபோனில் கேட்டார்.

    ஜெயந்த்! நீங்க இப்போ எந்த ஏரியாவிலிருந்து பேசிட்டிருக்கீங்க...?

    நுங்கம்பாக்கம் ஏரியா... பைகிராப்ட்ஸ் கார்டன் ரோடு. கார்ல அந்த ஆட்டோவை ஃபாலோ பண்ணிகிட்டே செல்போன் மூலமா பேசிட்டிருக்கேன்...

    சரி... அந்த ஆட்டோவை க்ளோஸா ஃபாலோ அப் பண்ணுங்க. ஆட்டோ நம்பர் என்ன...?

    எம்.டி.எஸ். ஃபோர் சிக்ஸ் எய்ட் நைன்...

    ஆட்டோவில் வேற யார் இருக்காங்க...?

    அவன் மட்டும்தான்...

    கந்தர்வனை அன்னிக்கு கொலை செய்ய வந்தது அந்த நேப்பாளிதான்னு உங்களுக்கு நிச்சயமா தெரியுமா...?

    தெரியும் ஸார்... சம்பவம் நடந்த ஸ்பாட்ல அவனை துல்லியமா பார்த்துட்டேன். ஹண்ட்ரட் பர்ஸண்ட் அவன்தான்.

    நீங்க ஃபாலோபண்றதை அவன் ஸ்மெல் பண்ணிடப் போறான். அப்புறம் ஆளை பிடிக்கிறது கஷ்டமாயிடும்.

    இல்ல ஸார்... நான் பாதுகாப்பா கொஞ்சம் டிஸ்டன்ஸ் விட்டுத்தான் அவன் பயணம் பண்ணிட்டிருக்கிற ஆட்டோவை ஃபாலோ பண்ணிட்டிருக்கேன்.

    உங்க கார்ல வேற யாராவது இருக்காங்களா?

    இல்ல ஸார்...! நான் மட்டும்தான்.

    சரி... செல்போன்ல பேசிட்டே இருங்க. அவன் எங்கே, யார் வீட்டுக்குப் போறான்னு கன்ஃபர்மா தெரிஞ்சதும் நானும் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷும் புறப்பட்டு வர்றோம்...

    இப்போ ஆட்டோ... வசந்தி மெடிக்கல் சென்டரை கிராஸ் பண்ணி வலது பக்க ரோட்ல திரும்புது ஸார்...

    அது என்ன ரோடு...?

    கார்டன் அவென்யூ, ரெண்டாவது தெரு. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத தெரு. ஆட்டோ இப்போ வேகமா போயிட்டிருக்கு.

    நீங்க ஆட்டோவை மிஸ் பண்ணிடாதீங்க.

    டோண்ட் வொர்ரி ஸார்... ஆட்டோ என்னோட பார்வையிலிருந்து தப்பவழியே இல்லை... இது ஸ்ட்ரெயிட் ரோடு.

    நீங்க பேசிட்டே இருங்க ஜெயந்த். நாங்க இங்கே புறப்பட்டு வர்றதுக்கு ரெடியாயிடறோம்... சொன்ன கமிஷனர் இன்னொரு டெலிபோனின் ரிஸீவரை எடுத்து ஒரு பட்டனை தட்டிவிட்டு ஸ்க்வார்ட் போலீஸுக்கு பேசினார்.

    "ரெண்டு ஜீப்பை அலர்ட்ல வையுங்க. வித் ஆர்ம் ஒரு ஸ்க்வாட். வித்தவுட் ஆர்ம் ஒரு ஸ்க்வாட். அட் எனி செக்கண்ட் புறப்பட வேண்டியிருக்கும்.

    எஸ்... ஸார்...

    ஜெயந்தின் குரல் வலதுபக்க டெலிபோன் ரிஸீவரில் கேட்டது.

    ஆட்டோ இப்போ கவிதா நகர் எக்ஸ்டன்ஷன் ஏரியாவுக்குள்ளே போகுது ஸார்...

    அது ப்ளைண்ட் எண்ட் ஏரியாவாச்சே! அதுக்கு மேல ஆட்டோ போக முடியாது. ஸோ அங்கேதான் அவன் யாரையோ பார்க்கப் போறான்னு நினைக்கிறேன்...

    எனக்கும் அப்படித்தான் ஸார் தோணுது... ஆட்டோ இப்போ வேகம் குறையுது ஸார். நான் காரை நிறுத்திட்டேன்.

    மௌனம்.

    பத்து விநாடி இடைவெளிக்கு பிறகு ஜெயந்தின் குரல் கேட்டது.

    ஆட்டோ இப்போ ஒரு வீட்டுக்கு முன்னாடி போய் நிக்குது... வீடு பங்களா டைப்ல பெரிசாயிருக்கு. பழைய பங்களா.

    மௌனம்.

    மீண்டும் ஜெயந்தின் குரல்.

    அந்த நேப்பாளி இளைஞன் ஆட்டோவிலிருந்து இறங்கி காம்பௌண்ட் கேட்டை நோக்கிப் போறான் ஸார்...

    ஆட்டோ அங்கேயே நிக்குதா?

    ஆமா ஸார்!

    சரி... நாங்க இப்ப புறப்பட்டு வர்றோம் கமிஷனர் ரிஸீவரை வைத்துவிட்டு எதிரில் நின்றிருந்த இன்ஸ்பெக்டர் வெங்கடேஷை ஏறிட்டார்.

    வாங்க... ஆளை மடக்கிடலாம்...

    இரண்டு போலீஸ் ஜீப்புகளும் கவிதா நகர் எக்ஸ்டன்ஷன் போய்ச் சேர்ந்தபோது வெய்யில் அமிலமாய் தகித்துக் கொண்டிருந்தது. ஒரு மரத்துக்குக்கீழே காரை நிறுத்தியிருந்த ஜெயந்த் தவிப்பாய் சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்றிருந்தான்.

    கமிஷனர் ஜீப்பினின்றும் எட்டிப் பார்த்தார்.

    ஜெயந்த்... எந்த வீடு...!

    அதோ! இருநூறு மீட்டர் தூரத்தில் மரங்களுக்கு மத்தியில் தெரிந்த அந்த பங்களாவைக் காட்டினான் ஜெயந்த். பங்களாவுக்கு முன்னால் ஆட்டோ ஒன்று நின்றிருந்தது.

    ஜெயந்த்...! நீங்களும் ஜீப்பிலே ஏறிக்குங்க. ஆள் யார்ன்னு நீங்கதான் அடையாளம் காட்டணும். வாங்க.

    ஜெயந்த் கமிஷனர் இருந்த ஜீப்பில் தொற்றிக் கொள்ள இரண்டு ஜீப்களும் அந்த பங்களாவை நோக்கி புழுதி பறக்க புயல்வேகத்தில் போய் ஆட்டோவுக்கு முன்னும் பின்னும் போய் நின்றது.

    இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஜீப்பினின்றும் குதித்து ஆட்டோவை நோக்கிப் போக பின்சீட்டில் வெய்யிலுக்கு கண்மூடி படுத்திருந்த இளவயது டிரைவர் அரக்க பரக்க எழுந்து உட்கார்ந்தான். போலீஸைப் பார்த்ததும் கண்களில் கலக்கம் பரவி அப்படியே உறைந்து போயிற்று.

    ஸ... ஸ... ஸார்... என்று குழறியபடியே ஆட்டோலினின்றும் பதட்டமாய் கீழே இறங்கினான் அந்த டிரைவர்.

    வெங்கடேஷ் தன் கையில் வைத்திருந்த லாட்டியால் டிரைவரின் மோவாயை நிமிர்த்தினார்.

    ஆட்டோவில் வந்த ஆள் எங்கே...?

    உ... உள்ளே... போ... போயிருக்கார் ஸார்.

    யாரவன்...?

    எ... எனக்கு தெ... தெரியாது ஸார். அவர் ஒரு பாசஞ்சர். அவ்வளவுதான்... ஆட்டோ வெயிட்டிங்கில் இருக்கட்டும்னு சொல்லிட்டு உள்ளே போனார்...

    இரண்டு கான்ஸ்டபிள்களிடம் அந்த ஆட்டோ டிரைவரை ஒப்படைத்துவிட்டு கமிஷனரை ஏறிட்டார் வெங்கடேஷ்.

    ஸார்... மொதல்ல பங்களாவை ரவுண்ட் அப் பண்ணிட்டு அதுக்கப்புறமா நாம் உள்ளே போறது பெட்டர்.

    கமிஷனர் தலையசைக்க கையில் ஆயுதம் தாங்கிய போலீஸார் சத்தம் காட்டாமல் பங்களாவைச் சுற்றி பரவினார்கள்.

    வெங்கடேஷ் எச்சரிக்கையாய் கையில் ரிவால்வரை வைத்துக் கொண்டு காம்பௌண்ட் கேட்டைத் தள்ளியபடி உள்ளே போக கமிஷனரும் ஜெயந்தும் பின் தொடர்ந்தார்கள்.

    அந்த பழைய பங்களா அவ்வளவு சுத்தமாக இல்லை. போர்டிகோவில் குப்பை கூளம் சேர்ந்திருக்க மண் தொட்டிகளில் செடிகள் பராமரிப்பு இல்லாமல் துவண்டு போயிருந்தன.

    போர்டிகோவில் முதல் ஆளாய் ஏறிய வெங்கடேஷ் மூடிய கதவை நெருங்கி தள்ளிப் பார்த்தார். கதவு உட்பக்கமாய் தாழிடப்பட்டிருந்தது.

    அழைப்பு மணியின் பொத்தான் பார்வைக்கு கிடைக்க, வெங்கடேஷ் தன் இடது கையின் கட்டை விரலை அதற்குக் கொடுத்தார்.

    உள்ளே பத்து விநாடிகளுக்குள் கிளிக்கூட்டம் பறப்பது போல் கீச்கீச் என்று சத்தம்.

    கதவு திறக்கப்பட காத்திருந்தார்கள். இரண்டு நிமிஷ நேர அவகாசத்துக்குப் பிறகும் கதவு திறக்கப்படாமல் போகவே மீண்டும் அழைப்பு மணிக்கு வேலை கொடுத்தார் வெங்கடேஷ்.

    கிளிக்கூட்டம் உள்ளே பறந்தது.

    மேலும் இரண்டு நிமிஷம் மௌனத்தில் கரைய கமிஷனர் பொறுமையிழந்து போய் கதவை தடதடவென்று தட்டினார்.

    யார் உள்ளே...?

    உள்ளே மௌனம்.

    ஸார்...! நான் பின்பக்கமா போய் பார்க்கட்டுமா? வெங்கடேஷ் கேட்க கமிஷனர் தலையசைத்தார்.

    டேக் கேர் வெங்கடேஷ்... ரெண்டு கான்ஸ்டபிள்களையும் கூட்டிட்டு போங்க... ஆளை உயிரோட பிடிக்க வேண்டியது முக்கியம். ஷூட் பண்ணிடாதீங்க...

    எஸ்... ஸார்... சொன்ன வெங்கடேஷ் இரண்டு கான்ஸ்டபிள்கள் பின் தொடர பங்களாவைச் சுற்றிக் கொண்டு பின்பக்கம் நோக்கிப் போனார்.

    வழி பூராவும் சமீபத்திய மழைக்கு பார்த்தீனிய செடிகள் புஷ்டியாய் வளர்ந்து நின்றிருக்க, காம்பௌண்ட் சுவரின் வெடிப்புகளில் செங்கற்கள் சிதிலமாகி தெரிந்தன.

    வெங்கடேஷ் செடிகளை மிதித்துக் கொண்டு பங்களாவுக்கு பின்பக்கம் வந்தார். வயதுக்கு வராத இரண்டு தென்னை மரங்கள். தண்ணீர் இல்லாத ஒரு தொட்டி, துணி துவைக்கும் கல். பக்கத்திலேயே சில வேண்டாத சாமான்கள். உடைந்த நாற்காலி. வழுக்கை டயர்கள். நைந்து போன ஹோஸ் பைப். பிடியில்லாத துருவேறிய மண்வெட்டி.

    வெங்கடேஷ் பின்பக்க கதவுக்கு வந்து அதை பூட்ஸ் காலால் எத்திப் பார்த்தார். கதவு கனமாய் சாத்தப்பட்டிருந்தது.

    வெங்கடேஷ் ஜாக்கிரதையானார்.

    ‘இரண்டு பக்கமும் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு கமுக்கமாய் உள்ளே இருக்கிறார்கள்...!’

    கான்ஸ்டபிள்...!

    ஸார்...

    கதவை உடைக்க முடியுமான்னு பாரு...

    கான்ஸ்டபிள் தன் தோளால் கதவோடு மோதி பார்த்துவிட்டு வெங்கடேஷை ஏறிட்டார்.

    பழங்கால கதவு ஸார்... அவ்வளவு சுலபத்துல உடைக்க முடியும்னு தோணலை...

    கதவைவிட்டு விலகி இரண்டடி பின்னுக்கு வந்த வெங்கடேஷ் பங்களாவை அண்ணாந்து பார்த்துவிட்டு பின் ஒரு முடிவுக்கு வந்தவராய் ரிவால்வரை இடுப்புப் பகுதிக்குள் பத்திரப் படுத்திக் கொண்டு ஷூக்களை கழற்றி ஒரு ஓரமாய் வைத்தார்.

    கான்ஸ்டபிள்...!

    ஸார்...

    நீங்க ரெண்டு பேரும் அந்த கதவுக்குப் பக்கத்திலேயே இருங்க. நான் மொட்டை மாடிக்குப் போய் அங்கேயிருந்து பங்களாவுக்குள்ள போக வழியிருக்கான்னு பார்க்கிறேன்...

    ஸார்...! கான்ஸ்டபிள் தயக்கமாய் குரலை இழுத்தார்.

    என்ன...?

    நீங்க தனியா போறது அவ்வளவு அட்வைஸிபிளா மனசுக்குப் படலை ஸார்... உள்ளே நிலைமை எப்படியிருக்குமோ...?

    ஏதாவது பண்ணித்தான் ஆகணும். கையில் ரிவால்வர் இருக்கு... பயப்பட வேண்டியதில்லை. வெங்கடேஷ் சொல்லிக் கொண்டே அந்த ஜன்னல் திட்டின் மேல் ஏறி சன் ஷேடைப் பற்றிக் கொண்டு சுலபமாய் எம்பி மேலே வந்தார். கைக்கு எட்டும் தூரத்திலேயே மொட்டை மாடியின் பேராபட் சுவர் விளிம்பு கிடைத்தது. மூச்சை அடக்கிக்கொண்டு ஒரு ஜம்ப் செய்ய, மாடிச்சுவர் அவருடைய கட்டுப்பாட்டுக்கு வந்தது. மூச்சிரைத்துக் கொண்டு மேலே ஏறியவர் சத்தம் இல்லாமல் மொட்டை மாடி தளத்தில் குதித்தார்.

    வெய்யில் தகித்துக் கொண்டிருந்த மாடியின் சிமெண்ட் தள பரப்பில் மெதுவாய் நடந்தவர் அந்த கொலாப்ஸல் கேட்டுக்கு வந்து மெல்ல தள்ளிப் பார்த்தார்.

    திறந்து கொண்டது.

    கீழே மாடிப்படிகள் வளைந்து போயிற்று. இடுப்புப் பகுதியிலிருந்து ரிவால்வரை உருவி தயார் நிலையில் வைத்துக் கொண்ட வெங்கடேஷ் மெல்ல மாடிப்படிகளில் இறங்க ஆரம்பித்தார்.

    ஒவ்வொரு படியாய் இறங்க இறங்க வெளிச்சம் குறைந்து கொண்டே வந்தது.

    கடைசிப் படிக்கட்டில் காலை வைத்தபோது அரையிருட்டு.

    வெங்கடேஷ் நின்றார். ஒரு விஸ்தாரமான ஹால் பார்வைக்கு கிடைத்தது. அழுக்கான மார்பிள் தரை. பழங்கால சீலிங் ஃபேன் ஒன்று சோம்பலாய் சுழன்று கொண்டிருக்க ஹாலின் பிரதான சுவரில் பாடம் செய்யப்பட்ட காட்டெருமைத் தலையொன்று அப்பியிருந்தது.

    ரிவால்வரை அலர்ட்டில் வைத்துக் கொண்டு ஹாலில் கால் வைத்தார்.

    குதிகாலில் ஈரமாய் எதுவோ ‘ப்பச்சக்’கென்று ஒட்டிக் கொண்டது.

    வெங்கடேஷ் திடுக்கிட்டுப் போய் காலை உயர்த்திப் பார்க்க சிவப்பாய் ரத்தம்.

    அப்போதுதான் சிந்தப்பட்ட மாதிரியான தினுசில் உலராத ரத்தம்.

    ‘ஏதோ விபரீதம்...!’ வெங்கடேஷின் மூளைக்குள் அபாயச் சங்கு ஊதப்பட அவர் வாசல் கதவுக்கு வேக வேகமாய் போய் தாழ்ப்பாளை விலக்கி திறக்க முயன்றார்.

    முடியவில்லை.

    கதவு உட்பக்கமாக லாக் செய்யப்பட்டிருந்தது. ‘பின் பக்கக் கதவுக்குப் போய் பார்க்கலாமா?’

    ஹாலைக் கடந்து பிறகு எதிர்ப்பட்ட இரண்டு அறைகளைக் கடந்து பின்பக்கக் கதவுக்கு வந்தார் வெங்கடேஷ்.

    அறைக்குள் யாரும் இல்லை. அறையின் இடது பக்கம் அட்டாச்ட் பாத்ரூம் கதவு காற்றுக்கு லேசாய் ஆடிக் கொண்டிருக்க அதை நோககி மெல்லப் போனார் வெங்கடேஷ. உள்ளே குழாயில் தண்ணீர் சொட்டும் சத்தம் கேட்டது.

    ‘உள்ளே யாராவது இருக்கலாம்...!’

    மூளை எச்சரிக்கை செய்ய வெங்கடேஷ் கதவோரமாய் நின்று கொண்டு பூட்ஸ் காலால் பாத்ரூம் கதவை எட்டி உதைத்தார்.

    கதவு படீரென்று திறந்து கொள்ள -

    உள்ளே -

    இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகளுக்கு நடுவே அவன் விழித்திருந்தான். ரத்தத்தில் மெழுகப்பட்ட முகம். ரத்தம் தோய்ந்த ஒரு கனமான இரும்புக் கம்பியும் பக்கத்திலேயே கிடந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1