Minmini Pookkal
By GA Prabha
5/5
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Aasai Veedu Rating: 5 out of 5 stars5/5Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsMaya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsPeiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratings
Related to Minmini Pookkal
Related ebooks
Minmini Pookkal Rating: 5 out of 5 stars5/5Nijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsUn Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsVennilavu Deepangal Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Ullamengum Alli Thelithean Rating: 0 out of 5 stars0 ratingsEppodhumalla, Eppodhavathu Rating: 0 out of 5 stars0 ratingsAayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Sorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Maatti Yosi Rating: 0 out of 5 stars0 ratingsUnnudane Naan Rating: 4 out of 5 stars4/5Karaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Mazhainaalil Oru Pitchaikkaran Rating: 0 out of 5 stars0 ratingsவானில் விழுந்த கோடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsAazhkadal Nesam Rating: 5 out of 5 stars5/5Anbin Veli Rating: 3 out of 5 stars3/5Irandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsNilavondru Kandean... Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Verillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Neer Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5Thulluvatho Ilamai Rating: 5 out of 5 stars5/5Andha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Enakkena Viriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Karaiyaangal Rating: 5 out of 5 stars5/5Ninaivellam Kokila Rating: 0 out of 5 stars0 ratingsMaarupadum Konangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Minmini Pookkal
1 rating0 reviews
Book preview
Minmini Pookkal - GA Prabha
http://www.pustaka.co.in
மின்மினி பூக்கள்
Minmini Pookkal
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
"மழை பெய்தால்தானே மண்வாசம்
உன்னை நினைத்தாலே பூவாசம்தான்"
விழிக்கும் போது மழை நின்றிருந்தது. இரவு முழுதும் ஓயாமல் அடித்த மழை, விடியலில் தான் சற்று நின்றிருந்தது. சடசடவென்று இடியும், மின்னலுமாய் கொட்டி முழக்கும் மழையை விட, இப்படி சன்னத் தூறல் மழை தான் ரம்யமாய் இருக்கிறது.
தாத்தா கட்டிலை விட்டு இறங்கினார். தரை ‘ஜில்’ என்று குளிர்ச்சியாய் விரல்களை நடுங்க வைத்தது. கீழே கிடந்த செருப்புக்குள் கால்களை நுழைத்துக் கொண்டார். கைவிரல்களை தேய்த்து சூடு ஏற்படுத்திக் கொண்டார். ஜன்னல் அருகில் சென்று ரோட்டை நோட்டமிட்டார்.
ரோடு ஆள் அரவமற்று இருந்தது. ஒரு பால்வண்டி போனது. எங்கிருந்தோ சன்னமாய் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே!’
மணி எத்தனை?
வெளியே ஹால் கடிகாரம் ஐந்து அடித்தது.
தாத்தா யோசித்தார். சாரல் தான். வாக்கிங் போக வேணுமா?’
‘போ’ என்று கட்டளையிட்டது உள் மனசு.
அது தான் விடுதலை. இந்த வீட்டின் இறுக்கத்திலிருந்து சற்று நேரம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நேரம். உள்ளே நுழைந்தால் அப்புறம் வீடு காஷ்மீர் பார்டர் தான். ராமஜென்ம பூமி தான்.
தாத்தா ஜிப்பாவை அணிந்து கொண்டார். தலையில் மப்ளரை கட்டிக் கொண்டு, ரூமை விட்டு வெளியில் வந்தார். ஹாலில் வாசு படுத்திருந்தான். அவனைத் தாண்டி கிச்சனுக்குள் போய், ஃபிரிஜ் திறந்து பாலை எடுத்து, சுட வைத்து காபி குடித்தார். பெட்ரோல் போட்டது போல் உடம்புக்குள் ஒரு சுறுசுறுப்பு. ஆ! தட்ஸ் குட்.
உற்சாகமாய் வெளியில் வந்தார்.
வீடே முழு உறக்கத்தில் இருந்தது. ஹால் சமையல்காரன் வாசுவின் ஏகபோகம். அடுத்து தாத்தா ரூம். அதனை ஒட்டி காயத்ரியின் ரூம். கிச்சன். பூஜையறை. மற்றபடி, தாத்தாவின் மூத்தமகன் சீனிவாசன், அவர் மனைவி விஜயம், இரண்டாவது பெண் டீனு, பையன் ஜிட்டு, டி.வி. விசிட்டர்ஸ் ரூம் எல்லாமே அங்கு தான். சாப்பாடும் மேலே போய் விடும்.
அது ஒரு தனி உலகம். ஆடம்பரமும், வீண் கௌரவமும், படாடோபமும் நிறைந்து, அதற்காகவே மனசாட்சியை மறந்து நடக்கும் குடும்பம். யாரையும், எவரையும் மதிக்காமல், ஆணவமும் அகங்காரமுமாய் மிதக்கும் குடும்பம் அது.
அதன் மிதிக்கும் வேகம் தாங்காமல், நொந்து, தனக்குள் முடங்கி, ஒடுங்கி விட்டாள் காயத்ரி. என்றோ செய்த தப்புக்கு, இன்றும் தண்டனை கொடுக்கிறது குடும்பம். மௌனமாய், இறுகிப்போய், முகம் முழுதும் சோகம் பூசி, தனக்கு தரும் தண்டனையை, சீண்டலை, அவமதிப்பை தாங்கி, ஜீரணித்து நடக்கிறாள் காயத்ரி.
அவளுக்குள் எத்தனை ஏக்கம், வேதனை இருக்கிறதோ?
விழித்திருப்பாளா?
தாத்தா, காயத்ரியின் ரூமுக்குள் எட்டிப் பார்த்தார். ஜன்னல் அருகில் நின்றிருந்தாள் காயத்ரி.
காயத்ரி
திரும்பினாள். ஏன் தாத்தா?
தூங்கலையாம்மா.
தூக்கம் வரலை தாத்தா. மழை அழகா இருக்கு
காலேஜ்ல தூங்கி வழியப் போறே.
கிளாஸ் நடக்காது தாத்தா.
ஏன்?
இன்னைக்கு நியூ ஸ்டூடன்ட்ஸ் வெல்கம் பார்ட்டி
அப்போ, டேன்ஸ், பாட்டு எல்லாம் இருக்குமா?
ஜோரா.
நீ என்ன தரே! பாட்டா? டேன்ஸா?
நானா? மூச்
ஏன்?
அப்பா கொன்னே போட்ருவார். அதெல்லாம் செய்ய மாட்டேன்னு பிராமிஸ் பண்ணின பிறகு தானே காலேஜிக்கு போகவே பர்மிஷன் தந்தார்.
எல்லாத்தையும் மறந்துட்டியா?
இல்ல தாத்தா.
பின்ன?
மனசிலேர்ந்து எப்படி தாத்தா விரட்ட முடியும்? போட்டு பூட்டி வச்சிருக்கேன். வெளில கொட்றதுக்கு வழியில்லை
உன் லைஃபுக்கு என்ன அர்த்தம் காயத்ரி.
தெரியலை தாத்தா.
கடவுளே! சரி, வாக்கிங் வரியா?
வரலாமா?
என்ன கேள்வி இது?
அப்பா திட்டினா, பயமா இருக்கு தாத்தா.
தாத்தாவுக்கு வழக்கமான கோபம் தொற்றிக் கொண்டது. என்ன வீடு? இப்படி பழைய காயத்ரியை உருத்தெரியாமல் மாற்றி விட்ட சீனிவாசனை என்னவென்று சொல்வது?
பழைய காயத்ரியா இது?
இளமைத் துள்ளலுடன், உற்சாகப் புயலாய், துறுதுறுப்பாய், கலகலப்பாய் வளைய வந்த காயத்ரி எங்கே? ஆர்ப்பரித்த அவள் எங்கே? அடங்கி, பயந்து ஒடுங்கும் இவள் எங்கே?
தாத்தா யோசனையாய் வெளியில் வந்தார்.
வெளியே மழைத்தூறல் நின்றிருந்தது. கழுவி விடப்பட்ட ரோடுகள். நகரம் சுறுசுறுப்பாகியிருந்தது. ராமர் கோவில் வழியே நடந்து, பஸ் ஸ்டாண்ட், லாலா கார்னர் போய், மார்க்கெட் வந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று முள்ளங்கி, கோஸ் வாங்கினார்.
நிதானமாய் நடந்து வீட்டுக்குள் நுழைந்த போது மணி ஏழு. வாசு டிபன் வேலையை ஆரம்பித்திருந்தான். உதவியாய் அவன் கூட சீர்காழியின் பாட்டு.
‘தணிகைமலைப் படிகளெல்லாம் திருப்புகழ் பாடும்...’
வாசுவுக்கு பாட்டு இருந்தால் தான் வேலை ஓடும். நாற்பது வயசுக்கு டீன் ஏஜ் பையன் போலத் தான் ஓட்டமும், வேலையும். நாலு அடி உயரம். வேப்பங்குச்சியாய் உடல். ஆதரவு இல்லாமல் அத்தை வீடு என்று வந்தவனை சீனிவாசன் தன் வீட்டு வேலைகளுக்காக இறுத்திக் கொண்டார். அவனுக்கு கல்யாணமும் நடந்தது. ஒரு வாரத்தில் மனைவி ஓடிப்போக, மூணு வேளை