Charles Darwin
By Deepa Sriram
()
About this ebook
சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள். எம்.ஏ., தமிழ் இலக்கியம் எம்.பில் படித்துவிட்டு சிறுகதையில் ஒப்பீட்டாய்வியலில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பத்திரிகைத் துறையிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். இது மட்டுமின்றி வானொலியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எழுதி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் பின்னனி குரல் கொடுத்துள்ளார். முன்னனி பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
குழந்தைகளுக்கான சிறுகதைகள் ஆங்கிலத்திலும் திமிழிலும் வெளிவந்துள்ளன. டார்வின் குறித்த இந்நூல் இவரது 4-வது படைப்பு. சார்லஸ் டார்வினின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது ஆராய்ச்சிகள் குறித்து எழுதப்பட்டுள்ள்ளது.
Related to Charles Darwin
Related ebooks
Siruvargalukkana Greekka Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsSarithira Nayakan Irandaam Serfoji Rating: 0 out of 5 stars0 ratingsSevviyal Aringar Oriza Balu Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavugal... Un Kaaladiyil... Rating: 0 out of 5 stars0 ratingsDoris Lessing Rating: 0 out of 5 stars0 ratingsAdharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsKaramazov Sagotharargal Rating: 0 out of 5 stars0 ratingsSeppu Mozhi Ainooru + Rating: 0 out of 5 stars0 ratingsSiddha Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Paathai Thantha Payanigal Rating: 0 out of 5 stars0 ratingsEzhuchiyuttum Ulaga Thinangal! Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsMaruthuva vingyaanigal Rating: 0 out of 5 stars0 ratingsMu. Varatharasanar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsMaran Manamum Maranthu Pona Puratchiyum Rating: 0 out of 5 stars0 ratingsAazhkadalin Adiyil… Rating: 0 out of 5 stars0 ratingsIndiya Samudhaya Varalatril Penmai Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Pothumarai - Oru Oppaivu Rating: 0 out of 5 stars0 ratingsEnbathu Naatkalil Ulagai Sutri Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kandavargal Rating: 0 out of 5 stars0 ratingsJ.R.D. Tata Rating: 0 out of 5 stars0 ratingsஇராஜராஜ சோழன் பேசும் வரலாறு Rating: 3 out of 5 stars3/5Saarana Iyakka Thanthai Baden Powell Rating: 0 out of 5 stars0 ratingsMadha Sirasetham Rating: 0 out of 5 stars0 ratingsRishigal Bhoomi! Rating: 0 out of 5 stars0 ratingsHinduthvathin Adipadaigal Rating: 0 out of 5 stars0 ratingsOru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum Rating: 3 out of 5 stars3/5Arivukkum Appaal! Rating: 0 out of 5 stars0 ratingsDravidargal Yaar? Kumari Kandamum 3 Tamil Sangangalum Unmaiyaa? Rating: 5 out of 5 stars5/5Tamizhil Ariviyal Padaipilakkiyam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Charles Darwin
0 ratings0 reviews
Book preview
Charles Darwin - Deepa Sriram
http://www.pustaka.co.in
சார்லஸ் டார்வின்
Charles Darwin
Author:
தீபா ஸ்ரீராம்
Deepa Sriram
For more books
http://www.pustaka.co.in/home/author/deepa-sriram
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
2. டார்வினின் பிறப்பு
3. கப்பல் பயணம்
4. டார்வினின் திருமண வாழ்க்கை
5. டார்வினின் புத்தகம் செய்த புரட்சி
6. டார்வினின் மற்ற ஆர்வங்கள்
7. மனிதன் என்னும் பகுத்தறிவாளன்
8. ஜீவராசிகளின் மூலம்
9. மனிதனின் தேடல்
10. மனிதனின் உதயம்
11. மண்ணின் வளம் தேடும் மண்புழுக்கள்
12. டார்வினிஸம்
13. நினைவுச்சின்னங்கள்
14. டார்வினின் பொன்மொழிகள்:
சார்லஸ் டார்வின்
1. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
மனிதனைப் படைத்தது கடவுள் என்பதே ஆண்டாண்டுகளாய் மனிதனின் எண்ணமாக இருந்து வந்தது. ஆனால் பல அறிஞர்கள் தோன்றி அவற்றை மறுத்து வந்தனர். இயற்கையின் வளர்ச்சி நிலை தான் மனிதன் என்று அவர்கள் வலியுறுத்திக் கூறினர். தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்த இவர்கள் பல நூல்களையும் எழுதி வைத்துள்ளனர்.
"புல்லாகிப் பூண்டாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்"
என்று மாணிக்கவாசகர் தன்னுடைய பாடலில் பாடியுள்ளார். இதைப்போல மனிதனின் பிறப்பை பலரும் பலவிதமாகக் கூறியுள்ளனர். இவர்களெல்லாம் பலவிதமான கருத்துக்களை கூறிச் சென்றாலும், மனிதன் எப்படித் தோன்றினான்? ஜீவராசிகளின் மூலம் எது என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. இந்தக் கேள்விகளுக்கு மதகுருமார்கள் பலரும் பலவிதமான ஆறுதல் அளிக்கும் பதில்களை அளித்து வந்தாலும் மனிதனின் கேள்விக்கு சரியான விளக்கம் அளிப்பதற்கு யாரும் முன்வரவில்லை.
மதகுருமார்களின் பதிலும் விஞ்ஞானப்பூர்வமான முடிவைக் கொண்டதாக இல்லை. தற்போது மனிதன் எவ்வாறு இருக்கிறானோ அவ்வாறே கடவுளால் ஆதியில் படைக்கப் பட்டான். முதல் மனிதனும், மனுஷியும் இப்பொழுது இருப்பது போலவே இருந்தார்கள். மனிதன் மட்டுமல்லாமல் இன்றுள்ள மரம், செடி, கொடி, நாய், பூனை, மீன் மற்றும் பறவை இனங்கள் அனைத்தும் இப்பொழுது இருப்பதைப் போலவே கடவுளால் படைக்கப்பட்டன. தன்னுடைய இனத்தை அவை பெருக்கிக் கொள்வதற்கும் கடவுளே அருள் புரிகிறார் என்பன போன்ற வறட்டுத் தத்துவங்களை மதகுருமார்கள் பரப்பிக் கொண்டிருக்க வேறு வழியில்லாமல் மக்களும் அதை நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் இத்தகைய கருத்துக்களை தகர்க்க ஒருவர் பிறந்தார். மனிதன் இப்பொழுது இருப்பதைப் போல ஆதியில் இருக்கவில்லை. அவன் மட்டுமில்லாமல் எந்த உயிரினமும் இப்பொழுது இருப்பதைப் போல இருக்கவில்லை. அவை ஒவ்வொன்றும் மூலமான ஒன்றின் பரிணாம வளர்ச்சியால் பலபல உருவில் பல்கிப் பெருகின. இன்று பலவிதமான வளர்ச்சிகளைக் கண்டுள்ள மனிதனும் ஆரம்பத்தில் குரங்கிற்கும் மனிதனுக்கும் பொதுவான மூதாதையான ஓர் இனத்திலிருந்து பாரம்பரிய வாயிலாக தோன்றி வளர்ந்து வந்தவனே என்று கூறி மக்களின் மன இருளைப் போக்க ஒருவர் முன் வந்தார். அந்த மேதையின் பெயர் சார்லஸ் டார்வின்.
2. டார்வினின் பிறப்பு
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் இங்கிலாந்தில் வைத்தியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரது காலம் 1731 - 1802 ஆகும். இவருடைய பெயர் இராஸ்மஸ் டார்வின். புகழ்பெற்ற வைத்தியராக இருந்த இவர், இயற்கை விஞ்ஞானியாகவும், கவியாகவும், மூலதத்துவ ஆராய்ச்சியாளராகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும் இருந்தார். இவர் பாடிய சில கவிதைகளில் ஆகாய விமானம் எப்படிப் பறக்க வேண்டுமென்பதைப் பற்றிக் கூறியிருக்கிறார். தவிர இவர் தன்னுடைய ஓய்வு நேரங்களையும் பயனுள்ளதாக்கிக் கொண்டார். தந்திக்கருவி, பேசுகிற இயந்திரம், காற்று அடிககும் திசையைக் காட்டும் கருவி முதலியவற்றை தன்னுடைய வீட்டிலேயே இவர் செய்து வைத்திருந்தார்.
இராஸ்மஸ் டார்வின் மது அருந்த மாட்டார். சர்வகலா வல்லுநராக இவர் அறியப் படுகிறார். இவருடைய பலதுறை புகழைக் கேள்வியுற்ற இங்கிலாந்து நாட்டின் மன்னன் மூன்றாம் ஜார்ஜ் லண்டனுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இராஸ்மஸ் அப்போது, தன்னுடைய முதல் மனைவியை இழந்து இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணத்தில் இருந்ததால் அந்த அழைப்பை ஏற்க மறுத்து விட்டார்.
சிறந்த இயற்கை விஞ்ஞானியான இராஸ்மஸ் தான் கண்ட உண்மைகளை கவிதைகளாக எழுதி வைத்திருந்தார். அதாவது உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் பரிணாம வளர்ச்சி பெற்றே தற்போதைய நிலைக்கு வந்துள்ளன என்பன போன்று தான் கண்டறிந்த உண்மைகளை இவர் கவிதைகளாக எழுதி வைத்திருந்தார் இவரால் இயற்றப்பட்டக் கவிதைகள் இலக்கிய உலகிலும், கவிதை உலகிலும் இடம் பெறவில்லை என்றாலும், விஞ்ஞான உலகிற்கும், இயற்கைவாதிகளுக்கும் பெரிதும் பயன்பட்டன. எனிலும் இவருடைய இத்தகைய கருத்துக்களை யாராலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் தான் கண்டுணர்ந்த உண்மைகளை மற்றவர்களுக்கு புரியும் வகையில் விளக்கும் திறமையை இவர் பெற்றிருக்கவில்லை.
ஆயினும் இவருடைய தத்துவங்களை மூலமாகக் கொண்டு, பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற விலங்கியல் ஆய்வாளர் லாமார்க் என்பவர் 1809-ம் ஆண்டில் விலங்கு சாஸ்திரத் தத்துவம்
என்ற நூலையும், 1815-ம் ஆண்டில் முதுகெலும்பு விலங்குகளின் சரித்திரம்
என்ற நூலையும் எழுதினார். ஆனால் இந்த நூல்கள் எழுதப்படுவதற்கு முன்னரே இராஸ்மஸ் டார்வின் இயற்கை எய்தினார். லாமார்க் எழுதிய பரிணாமக் கொள்கைகள் பற்றிய நூல்களும் போதிய பலமின்மையால் வரவேற்பு பெறவில்லை.
ஆனால் உண்மையை அதிக காலத்திற்கு மூடி மறைக்க முடியாது என்பதை உலகம் அறியும் வண்ணம் பரிணாமக் கொள்கைகள் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்துவதற்கு டார்வின் பிறந்தார்.
டார்வினின் தாய்வழி பாட்டனார் ஜோசியா வெட்ஜ்வுட் (1730-1795). இவருடைய இளமைப் பருவம் இனிமையாக அமையவில்லை. அவர் தினசரி ஆறு மைல் தூரம் நடந்து சென்று படித்தார். ஒன்பது வயதில் தந்தையை இழந்த இவருக்கு 12 வயதில் சின்னம்மையால் வலது காலும் பாதிப்புக்குள்ளாகியது. எனினும் ஜோசியா தனது அசாதாரணமான படைப்புத் திறன், பொறுமையினால், இங்கிலாந்தின் மிகச் சிறந்த களிமண் பாதிதிர நிறுவனத்தை உறுவாக்கினார்.
ஜோசியா பல ஆய்வுகளைச் செய்து, கலைவண்ணம் மிக்க பானைகள், ஜாடிகளை உருவாக்குவதில் பல புதிய நுட்பங்களைக் கண்டுபிடித்தார். இவர் உருவாக்கிய 'ஜாஸ்பர்வேர்', இவரின் சிறந்த வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்தச் சிறப்பு வகை 'செராமிக்' பாத்திரம், நுண்ணிய தூளாகத் தூவப்பட்ட 'போர்சலைன்', வெண்ணிற அலங்காரங்களுடன் தனித்தன்மையாகத் திகழ்கிறது. புகழ்பெற்ற பழமையான ரோமானிய கண்ணாடி ஜாடியான 'போர்ட் லாண்ட் வாஸ்"-ஐப் போன்ற ஒன்றையும் ஜோசியா உருவாக்கினார்.
இங்கிலாந்து ராணி ஜோசியாவின் படைப்புகளைப் பார்த்து வியக்க, இவர் தன்னை 'மேதகு பானைக் கலைஞர்' என்று அழைத்துக் கொண்டார். அவரின் வெட்ஜ்வுட் நிறுவனம் தான் தயாரித்த காபி கோப்பைகள் மிகவும் உறுதியானவை என்று கூறுகிறது. அந்தக் காபி கோப்பைகள் மீது, 40 பேர் உள்ள பேருந்தை நிறுத்தினாலும் உடையாதாம். தற்போதும் இந்த நிறுவனம் நல்லமுறையில் செயலாற்றி வருகிறது.
இவ்வாறு சாதனையாளர்களின் வழித்தோன்றலாகப் பிறந்த டார்வின் தன்னுடைய வாழ்நாளில் தான் கண்டுபிடித்த ஆய்களினால் புகழின் உச்சிக்கு சென்றார்.
இராஸ்மஸின் மகன் ராபர்ட் டார்வினுக்கு ஆறு குழந்தைகள். அதில் ஐந்தாவது மகனாக சார்லஸ் டார்வின் பிறந்தார். தன்னுடைய தந்தையின் மருத்துவத் தொழிலையே ராபர்ட் டார்வின் தொடர்ந்தாலும், அவருடைய பரிணாமக் கொள்கைகள் இவரை ஈர்க்கவில்லை. ஆனால் இத்தகைய பரிணாமக் கொள்கைகளை உலகிற்கு பறைசாற்றப் பிறந்த சார்லஸ் டார்வினை உலகிற்கு அளித்த பெருமை ராபர்ட் டார்வினை சேரும். உலகின் உயிர்கள் அனைத்தும் கடவுளின் படைப்பு என்று கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த மதவாதிகளின் மூக்கை உடைக்கும் பொருட்டு 1809-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி ஷ்ரூஸ்பரி என்ற ஊரில் சார்லஸ் டார்வின் பிறந்தார்.
மனித இனத்தைப் பற்றியும், அதன் தோற்றம் பற்றியும் மேலும் மனோ தத்துவ இயலையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறிய டார்வின், சிறிய வயதில் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே இருந்தார். இவருடைய எட்டாவது வயதில் இவருடைய தாயார் இறந்துவிட்டார். அவரைப் பற்றி தனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்றும், கருப்பு அங்கி அணிந்து மரணத் தருவாயில் அவர் இருந்தது மட்டுமே தனக்கு ஞாபகம் இருக்கிறது என்றும் இவர் பிற்காலத்தில் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய தாயிடம் அதிக அன்பு கொண்டவராகவே டார்வின் இருந்தார். மிகச் சிறிய வயதிலேயே தன்னுடைய தாயை இழந்து விட்டதால் இவருக்கு வெகு விரைவிலேயே உலக அனுபவம் பெறக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. பிள்ளைகளின் அறிவு விரைவில் முதிராததற்கு அவர்களுடைய தாயின் அதீதமான அன்பே காரணம்
என்றும் அவர் பிற்காலத்தில் கூறி வந்தார்.
இவருடைய தாயார் இறந்த அடுத்த வருடமே இவர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஷ்ரூஸ்பரியில் உள்ள திருச்சபை