Siriyavar Periyavar Sirithu Magizha Geetha
5/5
()
About this ebook
என்னை எல்லோரும் கேட்பார்கள் ‘இந்தப் புத்தகம் சிறியவர்களுக்காகவா?’ நான் சொல்வேன் ‘சிறியவர் பெரியவர் அனைவருக்காகவும் தான்!’ என்று. பகவத் கீதாவுக்கு அனைவரும் அறிமுகமாவது நல்லது தானே? எல்லா புத்தக ஆசிரியர்களுமே தங்கள் புத்தகத்தை எல்லோரும் படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள், ஆனால், இங்கே ஒரு சின்ன வித்தியாசம். இந்தப் புத்தகத்தின் மூலம், மக்கள் கொஞ்சமாவது ஆன்மீகத்துக்குள் எட்டிப்பார்க்க முடிந்தால் நல்லது என்பது தான் என் ஆசை. பகவத் கீதாவின் அர்த்தங்கள் எளியதாக இருந்து, அவற்றிற்கு, கிருஷ்ணரின் சிறப்புக்கு, சிரிப்பு என்று ஒரு பூச்சுக் கொடுத்து நாட்டின் எல்லா மொழி-வழி மக்களும், ஆங்கிலம் தெரிந்தோரும் கிருஷ்ணர் என்ன தான் சொன்னார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்” என்பது தான் இந்தப் புத்தகத்தின் முழு நோக்கம்.
Read more from Dr. Hare Krishna Chandrasekaran
Akila Ulagathin Siriya Geethai Rating: 0 out of 5 stars0 ratingsManaiviyo Kanavano Handle with Care Rating: 0 out of 5 stars0 ratingsKrishna-Geetha-Kural - Oru Alasal Rating: 0 out of 5 stars0 ratingsKrishnarin Vakku Uruthi Rating: 0 out of 5 stars0 ratingsMaanavargalai Thalaivargalaga Uruvakkuvathu Eppadi? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Siriyavar Periyavar Sirithu Magizha Geetha
Related ebooks
Mahangalin Saritham Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsBagavath Geethai - Eliya Vilakkam Rating: 0 out of 5 stars0 ratingsMannil Theriyuthu Vanam Rating: 0 out of 5 stars0 ratingsKadhalaagi Kanindhu... Rating: 0 out of 5 stars0 ratingsஸ்ரீ விஜயேந்திர வாணி Rating: 0 out of 5 stars0 ratingsArockiya Vazhvirku Pranayamam Rating: 0 out of 5 stars0 ratingsSiruvan Pragalathanum, Narasimharum Rating: 0 out of 5 stars0 ratingsThelivu Peru Om Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kanda Mahangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsKaliyuga Deivam shirdi Sai Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Leelai Rating: 0 out of 5 stars0 ratingsSri Ramana Maharishi Rating: 0 out of 5 stars0 ratingsChandhira Sekaram! Rating: 0 out of 5 stars0 ratingsPyramidgalum Avai Patriya Athisayangalum Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Oppattra Nool Yoga Vasishtam! Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Pothum Rating: 0 out of 5 stars0 ratingsJaya Jaya Shankara Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsMahangalin Vaazhvil... Rating: 0 out of 5 stars0 ratingsKandavar Vindilar! Vindavar Kandilar!! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Kanda Periyavargal Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kaanungal Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Jaalam Rating: 5 out of 5 stars5/5Garuda Puranam Rating: 0 out of 5 stars0 ratingsSaranagadhi Rating: 0 out of 5 stars0 ratingsSri Kanchi Mahanin Padhugai Mahimaigal Rating: 0 out of 5 stars0 ratingsJeyippatharkku Mattumey Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsShri Siradi Saibabavin Satya Charitram Rating: 0 out of 5 stars0 ratingsBhagavan Baba Rating: 0 out of 5 stars0 ratingsKutty Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Siriyavar Periyavar Sirithu Magizha Geetha
1 rating0 reviews
Book preview
Siriyavar Periyavar Sirithu Magizha Geetha - Dr. Hare Krishna Chandrasekaran
https://www.pustaka.co.in
சிறியவர் பெரியவர் சிரித்து மகிழ கீதா
Siriyavar Periyavar Sirithu Magizha Geetha
Author:
ஹரே கிருஷ்ணா சந்திரசேகரன்
Dr. Hare Krishna Chandrasekaran
For more books
https://www.pustaka.co.in/home/author/dr-hare-krishna-chandrasekaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முகவுரை
முன்னுரை
அத்தியாயம் 1 ஸ்லோகம் 1
சிசுபாலனின் வதம்
அத்தியாயம் 1 ஸ்லோகம் 37
ஜாம்பவானுடன் சண்டை
அத்தியாயம் 2 ஸ்லோகம் 23
ரிஷி உத்தங்கர்
அத்தியாயம் 2 ஸ்லோகம் 37
கிருஷ்ணரும் ஏழு காளைகளும்
அத்தியாயம் 3 ஸ்லோகம் 13
பூதனா
அத்தியாயம் 3 ஸ்லோகம் 21
சுதாமா
அத்தியாயம் 4 ஸ்லோகம் 7
கிருஷ்ணர் பிறந்தார்
அத்தியாயம் 4 ஸ்லோகம் 34
ராஜசூய யாகம் - கிருஷ்ணர் எடுத்துக் கொண்ட கடமை
அத்தியாயம் 5 ஸ்லோகம் 18
மிருகங்களிடம் அன்பு
அத்தியாயம் 5 ஸ்லோகம் 29
பாண்டவ வனவாசம்
அத்தியாயம் 6 ஸ்லோகம் 17
அர்ஜுனனும் துரியோதனனும்
அத்தியாயம் 6 ஸ்லோகம் 26
ராதாவும் ‘ஹோலி’யும்
அத்தியாயம் 7 ஸ்லோகம் 8
கோவர்தன மலையைத் தூக்குதல்
அத்தியாயம் 7 ஸ்லோகம் 25
கோபர்களுடன் நட்பு
அத்தியாயம் 8 ஸ்லோகம் 5
அஜாமிளன் கதை
அத்தியாயம் 8 ஸ்லோகம் 9
யசோதையும் கிருஷ்ணரும்
அத்தியாயம் 9 ஸ்லோகம் 22
திரெளபதியும் சத்யபாமாவும்
அத்தியாயம் 9 ஸ்லோகம் 27
பாலகிருஷ்ணனும் பழக்காரியும்
அத்தியாயம் 10 ஸ்லோகம் 12
விஸ்வரூபம்
அத்தியாயம் 10 ஸ்லோகம் 42
வடபத்ரசாயி - பாலகிருஷ்ணர்
அத்தியாயம் 11 ஸ்லோகம் 15
மதுரா விஜயம்
அத்தியாயம் 11 ஸ்லோகம் 43
மோகினி அவதாரம்
அத்தியாயம் 12 ஸ்லோகம் 13-14
மிருகங்களுடன் நட்பு
அத்தியாயம் 12 ஸ்லோகம் 15
தடைகளை விலக்குதல்
அத்தியாயம் 13 ஸ்லோகம் 8
காலயவனன்
அத்தியாயம் 13 ஸ்லோகம் 14
கோவர்தன பிரசாதம்
அத்தியாயம் 14 ஸ்லோகம் 1
உத்தவ கீதை
அத்தியாயம் 14 ஸ்லோகம் 2
அசுரர்களைக் கொல்லுதல்
அத்தியாயம் 15 ஸ்லோகம் 13
வெண்ணெய்த் திருடர்
அத்தியாயம் 15 ஸ்லோகம் 14
நன்றாக சாப்பிடுதல்
அத்தியாயம் 16 ஸ்லோகம் 1
காட்டுத் தீயை விழுங்குதல்
அத்தியாயம் 16 ஸ்லோகம் 4
உக்ரசேனருக்கு முடி சூட்டுதல்
அத்தியாயம் 17 ஸ்லோகம் 8
குரங்குக்கு வெண்ணை அளித்தல்
அத்தியாயம் 17 ஸ்லோகம் 20
ஜராசந்தனைக் கொல்வது
அத்தியாயம் 18 ஸ்லோகம் 68-69
கிருஷ்ணரைப் பற்றி விவரித்தல்
அத்தியாயம் 18 ஸ்லோகம் 70
கீதையை ஏன் படிக்க வேண்டும்?
புத்தக ஆசிரியரைப் பற்றி
ஆசிரியரின் விரைவில் வர இருக்கும் பதிப்புகள்:
முகவுரை
இன்றைய சிறியவர் நாளைய இளைஞர். அவர்களே சர்வ தேச அரங்கில் நாட்டின் பெயரை நிலை நாட்டப் போகிறவர்கள். நாளைய அவர்களின் நிலைமை என்ன என்பது இன்று நாம் அவர்களை மெருகேற்றும் விதத்தில் இருக்கிறது.
பகவத் கீதையை ரிட்டையர் ஆனபின் படித்துக் கொள்ளலாம் என்பது இன்றைய உலகுக்குப் பொருந்தாது. ஆன்மீக வளர்ச்சியை ஒரு நிமிடம் மறப்போம். நீங்கள் உங்கள் குழந்தைகள் வளர்ந்து, சமூகத்தில் பெரியவர்களிடம் மரியாதையும், பிறரிடம் அன்பும் கருணையும் கொண்ட, கடமை உணர்ச்சி நிறைந்த நல்ல குடி மக்களாக ஆக வேண்டும் என்று எண்ணினால், எங்கே இருந்து ஆரம்பிப்பீர்கள்?
என் எண்ணம் என்னவென்றால், ஒரு வலுவான ஆன்மீக அடித்தளம் இருந்தால், அது குழந்தைகளிடம் இந்த குணங்கள் எல்லாவற்றையுமே இருக்கும்படி செய்து, அவர்கள் வாழ்வில் சரியான முடிவுகளையே எப்போதும் எடுப்பதற்கு உதவும்.
சில பெற்றோர்களுக்கு, பகவத் கீதையிலிருந்து, சில ஸ்லோகங்கள் கூடத் தெரியாத நிலைமை. பலருக்கு, கிருஷ்ணரின் கதைகளில் பல கதைகள் தெரியா நிலை. பிறகு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப் போவது யார்? ஆன்மீகத்தில் உங்கள் சிறார்கள் ஏதேனும் கேள்வி கேட்டால் உங்களுக்கு பதிலளிக்கத் தெரிய வேண்டாமா? சிறியவர் பெரியவர் சிரித்து மகிழ கீதா
புத்தகம், பெற்றோர்கள், தாங்கள் அடிப்படையில் வலுவாகி, குழந்தைகளுக்கும் சொல்லித்தர உதவும் ஒரு அருமையான ஆரம்ப முயற்சி.
சிரிப்பு என்பது வாழ்வில் மிக முக்கியமானது. மிகக் கடினமான சூழ்நிலைகள் கூட, சிறிது நகைச் சுவை உணர்வு கலந்து எதிர் கொண்டால், சமாளிப்பது மிக எளிதாகி விடுகிறது. இந்தப் புத்தகத்தில், நூலாசிரியர், ஸ்லோகத்தின் அர்த்தத்தில் ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டு, அதற்குப் பொருத்தமான ஒரு ஜோக் கொடுப்பதன் மூலம், படிக்கும் ஒவ்வொரு கணமும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார்.
இதை எப்படிப் படித்தல் நல்லது என்று என் வழியில். சம்ஸ்கிருதத்திலோ இல்லை, ஆங்கிலத்திலோ, முதலில் ஒரு ஸ்லோகத்தைப் படியுங்கள். பிறகு, அதன் அர்த்தத்தையோ எளிய அர்த்தத்தையோ (குழந்தைகளுக்கும் புரியும்) மனதில் வாங்கிக் கொண்டு, ஜோக்கைப் படிக்கவும்.