Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chuttis Kathaigal
Chuttis Kathaigal
Chuttis Kathaigal
Ebook53 pages1 hour

Chuttis Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைகளுக்கு வாசிப்பின் மீதுள்ள ஆவலைத் தூண்டுவதற்காய் அவர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாய் எழுதப்பட்ட மூன்று குட்டிக் கதைகளைக் கொண்டது இந்தத் தொகுப்பு...

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134405759
Chuttis Kathaigal

Read more from Latha Baiju

Related to Chuttis Kathaigal

Related ebooks

Reviews for Chuttis Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chuttis Kathaigal - Latha Baiju

    http://www.pustaka.co.in

    சுட்டீஸ் கதைகள்

    Chuttis Kathaigal

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    http://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பறக்கும் பூனை பாகுபலி

    2. சுட்டிக் குரங்கு ராமு

    3. தேவகோட்டை இளவரசி

    முன்னுரை

    குழந்தைகளுக்கு வாசிப்பின் மீதுள்ள ஆவலைத் தூண்டுவதற்காய் அவர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாய் எழுதப்பட்ட மூன்று குட்டிக் கதைகளைக் கொண்டது இந்தத் தொகுப்பு...

    படித்து மகிழுங்கள் குட்டி சுட்டீஸ்...

    அன்புடன்,

    லதா பைஜூ

    1. பறக்கும் பூனை பாகுபலி

    அம்மா, நான் தோட்டத்தில் விளையாடப் போறேன்... பள்ளியிலிருந்து வந்த போலு சாப்பிட்டு முடித்து தனது தட்டைத் தானே கழுவி வைத்துக் கொண்டே அன்னையிடம் கூறினான்.

    சரி போலு... சீக்கிரம் விளையாடிட்டு வந்து வீட்டுப்பாடம் செய்யணும்... என்று அன்னையும் சம்மதித்து அனுப்பினாள்.

    நேராய் அடுத்த வீட்டில் இருந்த நண்பன் டோலுவின் வீட்டுக்கு சென்றான் போலு. அங்கு முன்னில் அமர்ந்திருந்த அவன் பாட்டியைக் கண்டவன், பாட்டி, டோலு எங்கே... தோட்டத்துக்குப் போயிட்டானா... என்றான்.

    ஆமா கண்ணு, இப்பதான் சாப்பிட்டு போனான்... பாட்டி சொல்லவும் அடுத்த நிமிடம் போலுவும் அவர்கள் இருவரின் வீட்டுக்குப் பின்னில் இருந்த தோட்டத்தை நோக்கிச் சென்றான். இரு நண்பர்களும் பள்ளி விட்டு வந்ததும் அந்தத் தோட்டத்துக்கு சென்று விடுவார்கள். ஒரு பெரிய மாமரமும், நான்கைந்து தென்னை மரமும், நிறைய வாழை மரங்களும், முருங்கை, வெண்டை, அவரை, கத்தரிக்காய் தக்காளி, கீரைகள் என்று சின்னச் செடி வகைகளும் அங்கு நிறைய இருந்தன.

    டோலு, போலு இருவரின் தந்தையரும் நண்பர்கள் என்பதால் அவர்கள் வேலைக்கு சென்ற நேரம் போக ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அந்தத் தோட்டத்தில் தங்கள் உழைப்பை முதலீடாக்கி வந்தனர். செயற்கை உரங்கள் இல்லாத இயற்கைக் காய்கறிகளை வீட்டுக்குத் தேவையான அளவு அங்கேயே விளைவித்தனர். அதைக் கண்ட டோலு போலுவிற்கும் செடி வளர்க்க ஆசை வரவே அவர்களுக்காய் சிறிது இடத்தை ஒதுக்கிக் கொடுத்தனர்.

    அந்த இடத்தில் ரோஜா, செம்பருத்தி, அரளி, மல்லி என்று பூச்செடிகளை நட்டு வைத்திருந்த இருவரும் தினமும் மாலை தவறாமல் தண்ணீர் விட்டு கவனமாய் பார்த்துக் கொண்டனர்.

    அந்தச் செடிகளில் புதியதாய் ஒவ்வொரு இலை துளிர்விடும் போதும், மொட்டு விட்டு பூ விரியும் போதும் ஆவலுடன் பார்த்துக் கொண்டே இருந்தனர். முதல் ரோஜா பூத்ததும் அவர்களின் குழந்தை மனது அத்தனை சந்தோஷித்தது.

    டோலு, போலு இருவரும் பேசிக் கொண்டே செடிக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருக்க சட்டென்று அந்தக்

    Enjoying the preview?
    Page 1 of 1