Naangal Jaakkirathai
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Kalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsAmma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsAssai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsCharumma Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Manmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Vizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Azhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Poorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Unnai Kan Theduthe Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsSu(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Vidiyum Varai Rating: 5 out of 5 stars5/5
Related to Naangal Jaakkirathai
Related ebooks
Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsSollil Varuvathu Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kan Theduthe Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKolla Theriyavillai! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Pol Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsIthuvum Tajmahal Than Rating: 0 out of 5 stars0 ratingsElla Saalaikalum Kutrangalai Nokki Rating: 5 out of 5 stars5/5Enakkendru Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5Thulasi Rating: 0 out of 5 stars0 ratingsMogathirai Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsKankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Varuvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Nayakkar Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsThai Pirakkattum Rating: 0 out of 5 stars0 ratingsPanankaattu Annachi Rating: 0 out of 5 stars0 ratingsUruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Inikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Parijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsThendral Neethana? Rating: 3 out of 5 stars3/5Maanbumigu Maapillai Rating: 0 out of 5 stars0 ratingsPerapillai Rating: 5 out of 5 stars5/5Ellaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Suvaril Nuzhaintha Vergal Rating: 4 out of 5 stars4/5Muthamida Neramillai Rating: 0 out of 5 stars0 ratingsMalai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Poo Magal Rating: 5 out of 5 stars5/5Thottil Sugam Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Naangal Jaakkirathai
0 ratings0 reviews
Book preview
Naangal Jaakkirathai - Devibala
17
1
பிரசன்னாவை அந்தச் செய்தி கணிசமாகத் தாக்கிவிட்டது நம்ப முடியவில்லை. உடனே –
நிஜம்தானா நீங்க சொல்றது?
எதிர்முனை என்ன சொன்னதோ தெரியவில்லை. ரீஸீவரை வைத்து விட்டு அவசரமாக ஜர்கினை எடுத்து மாட்டிக் கொண்டான், பிரசன்னா.
ஜனனி வண்டிச் சாவி எங்கேம்மா?
தோ... கொண்டு வர்றேன் பாஸ்
அந்த நொடியின் முடிவில் வண்டிச் சாவியுடன் ஜனனி எதிரே நின்றாள்.
பிரசன்னா முகத்தில் கணிசமான பதட்டம் தடவப்பட்டிருந்தது.
என்ன ப்ராப்ளம் பாஸ்?
ஜனனி தயக்கமான குரலில் கேட்டாள்.
வந்து சொல்றேன். இந்த நேரம் பார்த்தா லதா ஊர்ல இல்லாம போகணும்? நான் வர்றேன். நவீன் வந்தா, அவனை வீட்ல இருக்கச் சொல்லு! அவசியம்னா, நான் ஃபோன் பண்றேன்!
சரி பாஸ்
பிரசன்னா வாசலில் இறங்கிய சமயம் மணி இரவு பத்தரை. தன் ராஜ்தூத்தை அணுகி, பூட்டு திறந்து ஸ்டாண்டை விடுவித்தான்.
இக்னிஷனை அழுத்தி வண்டியின் முதுகில் ஆரோகணித்தான்.
அசுர வேகத்தில் அவன் சீறி புறப்பட்டத்தைக் கொஞ்சம் கலவரத்தோடு பார்த்துக் கொண்டு நின்றாள், ஜனனி.
ஓரளவு போக்குவரத்து ஓயத் தொடங்கிவிட்டது.
பத்தே நிமிடங்களில் கடற்கரை சாலைக்கு வந்து விட்டான், பிரசன்னா. சாந்தோம் கடந்து, அடையாறை பின்னுக்குத் தள்ளி, திருவான்மியூர் பகுதியில் நுழைந்து வேகத்தைக் குறைத்துக் கொண்டான்.
அந்தப் புறநகர்ப் பகுதியில் இருந்த பணக்கார வீடுகளின் ஓரத்தில் இருந்தது, அந்தப் பங்களா.
எல்லா வீடுகளிலும் அந்தப் பிரதேசத்தில் விளக்கெரிந்தது. ஜன்னல்களில் தலைகள் முளைத்திருந்தன. அந்தப் பங்களாவை பிரசன்னாவின் வண்டி நெருங்க, சற்றே பதட்டம் தெரிந்தது.
வாசலில் வண்டியை நிறுத்திப் பூட்டிவிட்டு உள்ளே இறங்கி நடந்தான்.
போலீஸ் ஜீப்பில் சாய்ந்து ஒரு கான்ஸ்டபிள் உறங்கிக் கொண்டிருந்தான். உள்ளே கசமுசாவென ஓசை...
பிரசன்னா நுழைந்ததும், அந்தப் பெரிய ஹாலில் போலீஸ் பரிவாரங்கள்.
டி.எஸ்.பி. ஓடி வந்தார்.
நான்தான் உங்களை வரவழைச்சேன்!
மர்டர்தானா?
ஆமாம் பிரசன்னா. வாங்களேன்!
அவருடன் நடந்தான் பிரசன்னா. தலைகளை விலக்கிக் கொண்டு பிரசன்னா முன்னேறினான். அந்தக் கட்டிலின் மேல் மல்லாந்து கிடந்தது அந்த உருவம்.
பிரசன்னா பார்வை பதித்தான்.
போன நிமிடம் வரை லட்சக்கணக்கான ரசிகர்களைக் குதூகலிக்க வைத்த தமிழகத்தின் மிகப் பெரிய பிரபலமான கதாநாயகன் அவன். அவனை வைத்துப் பூஜை போட்டாலே கோடிக்கணக்கில் வியாபாரம் பேசப்படும் நிலை இப்போதும் இருக்கிறது இங்கே.
உறங்குவது போலக் கிடந்தான் இந்தர்ஜித்.
ஏதோ படப்பிடிப்புக்குப் புறப்பட்டது போல ஒப்பனை தெரிந்தது முகத்தில். கௌபாய் உடைகள் அணிந்து ஷூ கூட மாட்டியிருந்தான், காலில்.
உதட்டில் ஓரத்தில் அதே சுண்டியிருக்கும் சிரிப்பு உறைந்திருந்தது.
பிரசன்னா டி.எஸ்.பி.யைப் பார்த்தான்.
அவர் அந்தத் துண்டுக் காகிதத்தை சட்டைப் பையிலிருந்து எடுத்துப் பிரசன்னாவிடம் தந்தார்.
சமூகத்தைச் சீரழிக்கும் நால்வர்.
பிரபல நடிகன்
நீதிபதி
அரசியல்வாதி
பத்திரிகை ஆசிரியர்
ஒரு மாத காலத்துக்குள் உங்களில் பிரபலமான நால்வரை ஒழித்துவிட்டு, சமூகத்தில் படிந்துள்ள கறைகளை அகற்றுகிறோம் –
நாங்கள்.
அதில் நடிகனுக்கு எதிராக ‘டிக்’ செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கொலை எப்படி நடந்திருக்கு?
டாக்டர் எழுந்து வந்தார்.
ஏதோ ஒரு ரசாயனக் கலவை, காற்று ரூபத்துல உள்ளே செலுத்தப்பட்டிருக்கு. ஸ்ப்ரே செஞ்சிருக்கலாம். அது உள்ளே நுழைஞ்சதும் சுவாசம் தடுக்கப்பட்டிருக்கு. உடனே உயிர் பிரிஞ்சிருக்கு... ஆயுதம் இல்லை. ரத்தமில்லை. எந்தப் போராட்டமும் இல்லை. நொடில உயிர் பிரிஞ்சிருக்கு.
முதல்ல பார்த்தது யாரு?
அந்தப் பணியாளன் சீருடையோடு, அழுத கண்களும் வீங்கிய முகமுகமாக வந்தான்.
சொல்லு
ராத்திரி பதினொரு மணிக்கு சண்டைக்காட்சி ஒண்ணு கிண்டில படமாக்கறாங்க. அதுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். என்னை ஞாபகப்படுத்தச் சொன்னார். அரைமணி நேரம் முன்னால நான் இங்கே வந்தா இப்படி படுத்துக் கிடக்கார். பக்கத்துல இந்த லெட்டர்
வீட்ல வேற யாரும் இல்லையா?
வேறு சில பணியாளர்களும் வந்தார்கள்.
பி.ஆர்.ஓ. ஒருத்தர் உண்டு இல்லையா இந்தர்ஜித்துக்கு?
அவர் வெளியூர் போயிருக்காங்க. வாரக் கடைசில வருவார். அய்யாதான் அனுப்பி வச்சார் நாங்க உடனே டாக்டரை வரவழைச்சோம்.
டாக்டர் தொடர்ந்தார்.
இந்தர்ஜித்துக்கு உயிரில்லைனு தெரிஞ்சுப் போச்சு எனக்கு. இது சாதாரணப் மரணமாத் தோணலை. அதான் போலீஸை வரழைச்சிட்டேன், நான்
பணியாளர்கள், கூர்க்கா, இந்தர்ஜித்தின் பாதுகாவலன் என்று சகலரும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டிருந்தார்கள்.
புதிய நபர் யாரும் உள்ளே வந்ததாக தகவல் இல்லை. ஆனால், உறுதியாகச் சொல்ல யாராலும் முடியவில்லை.
எத்தனை மணிக்கு வெளிலேருந்து வீடு திரும்பினார், இந்தர்ஜித்?
ஒரு படப்பிடிபை முடிச்சிட்டு சாயங்காலம் ஆறரை மணிக்கு
கூட யாராவது வந்தாங்களா?
இல்லை. அவர் மட்டும்தான்
அப்புறம் அவரை வீட்டுக்குள்ள உயிரோட சந்திச்சது யாரெல்லாம்?
அவனுக்கு ஜூஸ் கொண்டு சென்ற வேலைக்காரன் முதல் நாலைந்து பணியாளர்கள் ஒவ்வொரு காரணம் சொல்லிக் கொண்டு வர,
செவிகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு பார்வையை அந்த அறையில் சுழலவிட்டான், பிரசன்னா.
அறை சீராக இருந்தது.
எந்த ஒரு போராட்டமோ, கை கலந்த அறிகுறியோ அங்கு தென்படவில்லை. வெகு இயல்பாக நடந்த கொலை...
வந்தவன் அலட்டிக் கொள்ளாமே அதைச் செய்துவிட்டு, விலகி விட்டான்.
ஓரளவு விவரம் தெரிந்து கூட்டம் சேர்ந்துவிட்டது. இன்னும் நாலைந்து உயர் அதிகாரிகளுடன் கமிஷனரே வந்துவிட்டார்.
நாளைக்கு நகரம் - நகரம் என்ன, தமிழகம் முழுக்க பலத்த போலீஸ் பந்தோபஸ்த்து இருக்கணும். ரொம்ப இடங்கள்ள இந்தச் செய்தி கலவரத்தை உண்டாக்கும்.
அதிகாரிகள் விவாதித்துக் கொண்டிருக்க, அந்தக் கடிதத்தை நாலாவது முறையாகப்